Advertisement
உன்னை நினைத்து 3
பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த இருவருமோ இப்போது ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க அதில் ஜானவி கோபமாக பதிலை எதிர்பார்த்த படி கணவனை பார்க்க!
சரவணனோ குற்றம் செய்த மனம் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தொண்டையில் வார்த்தை அடைபட்டு மனைவியை பார்க்க!
ஜானவியின் பொறுமை சிறிது சிறிதாக இறங்கி கொண்டிருப்பதை அறிந்தவன் மெல்ல வாயை திறந்தான் சரவணன்
அது வந்து ஜானு எனக்கு குட்டி பையன் நவிலன் இருக்கிறது தெரியாது, நம்ம திருமணம் முடிஞ்சு ஒரு இருபது நாள் கழித்து காவ்யா இது என்னோட குழந்தைன்னு சொல்லி கொடுத்துட்டு போயிட்டா!
ஹொ…….. உன்னோட எக்ஸ் தானே!நான் நம்ம ரிசப்ஷன்ல பார்த்து இருக்கேன்!
ம்…..ஆமா…..அச்சோ… இது அவ இல்லை …..அவ லிசா….ஆனால் ஒரு ஒன் மன்த் லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருந்தேன் என்று தலை குனிந்தபடி சொல்ல!
அவ்ளோ நேரம் அமைதியாக இருந்த ஜானவி வேகமாக வந்து அவன் சட்டையை பிடித்து கண்ணத்திலே இரண்டு அடி கொடுத்தவள் அப்போ எந்த டாஷ்க்கு என்ன மேரேஜ் பண்ண டா நாயே! உனக்கு என்னோட வாழ்க்கை என்ன கிள்ளு கீரையா, நீ யாரோ எவளோடயோ கூட இருந்து பெத்த குழந்தைக்கு நான் ஆயா வேலை பார்கனுமா! சொல்லு!
ச்சு…..ஜானு நான் தான் சொல்லுறேனே எனக்கு அவ குழந்தை உருவானதேயே சொல்லல!
மண்ணாங்கட்டி…..நீ அப்படியே ஒன்னும் தெரியாத பாப்பா குழந்தை உருவானதே தெரியலையாமே தெரியலை……விட்டா மதுரையும் மைசூரும் எங்க இருக்குன்னு கேட்ப!
ச்…… ஜானும்மா சாரி பாப்பா நம்ம பாப்பா என்ன பண்றது கொஞ்சம் மனசு வெச்சு என்னையும் பாப்பாவையும் ஏத்துக்கோம்மா! என்றவன் அப்படியே ஜானவியை ஹக் (கட்டி பிடிக்க வர) பண்ண வர!
என்னை தொட்ட கையை வெட்டிடுவேன்! ரஸ்கல்,இரு இப்போவே எங்க அப்பா அம்மாகிட்டயும் உங்க அப்பா அம்மாகிட்டயும் சொல்லுறேன்!
என்றவள் போன் எடுத்து இந்தியாவில் இருக்கும் தனது பெற்றவர்களுக்கு டயல் செய்ய!
ஜானவி போனை பிடுங்கிய சரவணன் வீட்ல யாருக்கும் குழந்தையை பற்றி தெரியாது, இப்போ நீ எல்லாருக்கும் சொல்லிட்டனா உன்னை என் கிட்ட இருந்து பிரிச்சுடுவாங்க டி புரிஞ்சுக்கோ ஜானவி என்று கலங்கியபடி கூற!
நான் அவன் மேல் வைத்த பாசத்தை இந்த நிலையிலும் பயன் படுத்த நினைகிறானே படுபாவி,அதே நேரம் காதல் கொண்ட மனதிற்கு அவன் கலங்கிய முகம் என் மனதை போட்டு பிசைய தலையை பிடித்து உட்கார்ந்து விட்ட எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தப்போது அந்த கல்லம் கபடம் இல்லாத பிஞ்சு குழந்தையின் மேல் கோபமும் இல்லை அதே நேரம் அந்த குழந்தை நவிலனை என்னால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது!
குழந்தை நவிலன் விடயம் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்தால் இந்த வாழதா திருமணத்தை முறித்து விடுவார்கள்!
தன்னையே பார்த்து கொண்டு நின்றிருந்த கணவனை கண்களில் நீர் வழிய பார்த்து கொண்டு இருந்தவள் மனதின் வேதனை தாங்காது ஏன் நீ எனக்கு மட்டும் கணவனாக இல்லை, எதுக்கு என்னை ஏமாத்தின, நான் உன்னை நினைத்ததை தவிர வேறு எந்த பாவமும் செய்யலையே ஏன் சரவணா! கடைசில எல்லாம் பொண்ணுங்க போல என்னையும் நினைச்சியா! கண்களில் வலியுடன் கணவனை நிமிர்ந்து கேட்க!
ஜானும்மா…….. நீ என்னோட உயிர் டி, எதுக்கு உன்னை அடுத்தவங்களோட கம்பெர் பண்ணாத நீ என்னோட விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று சொன்னவன் அவள் நெற்றியில் இதழ் பதிக்க!
அந்த இதழ் முத்தத்தில் தன்னிலை வந்தவளோ வேகமாக அவனிடம் இருந்து பிரிந்தவள்!
ம்….. மாட்டேன் உன்னோட எந்த பேச்சுக்கும் நான் மயங்கமாட்டேன், நீ இப்போவே அந்த குழந்தைய எடுத்துட்டு எங்கயாவது போ!
என்றவள் தன்னறைக்கு புகுந்து கொண்டவள் அறையை லாக் செய்தவள் கட்டிலில் டோம் என்று விழுந்தவள் எவ்வளவு நேரம் அழுதாலோ, அப்படியே உறங்கவும் செய்தாள்.
இங்கே குழந்தை நவிலனோ அழுதபடி தந்தைக்கு தன் பசி உனர்த்த!
அவ்வளவு நேரம் யோசனையுடனே அமர்ந்திருந்த சரவணன் நிகழ்வு உலகத்திற்கு வந்தவன் மகனிற்கு பால் பவுடரை சுடு தண்ணீரில் சேர்த்து அதனை நன்றாக குழுக்கியவன் மிதமான சூட்டில் குழந்தை குடிப்பது போல் இருக்கா என்று தன் கைகளில் ஊற்றி செக் செய்தபின் அதனை அழுது கொண்டு இருந்த மகனிற்கு புகட்ட!
அவனோ அந்த பாலை சப் சப் என்று பசியில் சப்கொட்டி குடிக்க!
ஏன்டா நவிலா ஏன்டா பொயும் பொயும் அந்த பிசாசு காவ்யா உன்னை யாருனு தெரியாத ஒருத்தி வயிற்றில் பிறக்க வைத்து விளையாடினா ,நீ ஜானவி அம்மா வயித்துல நீ பிறந்து இருந்தா தாத்தா பாட்டி எல்லோருக்கும் நீ தான் ராஜா, இப்போது பாரு அப்பா எப்படி இவங்க எல்லார்க்கிட்டயுயம் திட்டு வாங்குறது இருக்கட்டும்,ஆனால் உன்னால் ஜானவிம்மா அப்பாவிட்டு போகாம நீ தான் அம்மாவ என் கூட சேர்த்து வைக்கனும் மகனே என்று பால் குடிக்கும் மகனிடம் புலம்பி கொண்டு இருக்க!
நவிலனோ பால் குடித்தபடி கையையும் காலையும் ஆட்டியபடி கேட்ட குழந்தையோ தந்தையின் கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவது என்று தெரியாமல் அப்படியே உறங்க!
அவனை பார்த்தபடி சரவணனும் உறங்க!
அந்த இரவு முடிந்து காலையில் விழிப்பு தட்டி ஜானவி எழ இரவில் நடந்தது எல்லாம் கணவாக இருக்குமோ என்று குழம்பியள் தனது காலை கடன்களை முடித்து கிழே வர அங்கு சோஃபாவில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விட போகிறேன் என்கின்ற நிலையில் நவிலன் குப்பிற படுத்தபடி கையையும் காலையும் ஆட்டியபடி நகர்ந்து கொண்டு இருக்க பக்கத்திலே சரவணன் தூங்கி கொண்டு இருக்க இருவரையும் பார்த்தவளுக்கு இது அனைத்தும் கனவு அல்ல நிஜம் என்று எடுத்துரைக்க, மீண்டும் அடங்கி இருந்த கோபம் எழ இருவரையும் கண்டு கொள்ளாமல் சமையல் அறை சென்றவள் அங்கு தனக்கு காப்பி கலகியவள் பக்கத்திலே குழந்தைக்கான பால் பவுடரை பார்த்தபடி வெளியே வந்தவளுக்கோ இவளைப் பார்த்துத் பார்த்து குழந்தை வருவதற்கு முயற்சி செய்ய!
அச்சச்சோ குழந்தை விழ போகுது என்று கையில் இருந்த காபியை மேஜையில் வைத்தவள் குழந்தையை தூக்க!
நவிலனோ கண்ணத்தை பிடிப்பதும் முத்தாவைப்பதும் என்று எச்சில் பண்ண!
ஹெ …..ச்சு…… குட்டி பையா நான் தான் உங்களை போக சொன்னேன்ல ஏன் போகலை,நான் மட்டும் வரலானா கீழே விழுந்து இருப்ப!
குழந்தையோ மீண்டும் ஜொல்லு வழிந்த படி அவள் பேசுவதை பார்க்க!
பாரு உங்க அப்பாவ என்னோட நிம்மதிய கெடுத்துட்டு எப்படி தூங்குறான் பாரு என்று குழந்தையிடம் சொன்னவள், அசந்து உறங்கும் அவன் கண்ணத்தில் சப் என்று அடிக்க!
அவனோ வழியில் கத்தி கொண்டு எழுந்தவன் பக்கத்தில் இருந்த பொருளை தூக்கி ஏறிய அதுவோ சில்லு சில்லாக உடைய கோபத்துடன் மனைவியை பார்க்க!
அவன் உடைத்தில் கோபம் கொண்டவள் இந்தா உன் பிள்ளைய பார்த்துக்கோ,பிள்ளையை பெத்தா மட்டும் போதாது அதை பார்க்கவும் செய்யனும், அப்படியே எனக்கு என்னன்னு தூங்க கூடாது,இதோ உடைச்சியே இதை க்ளீன் பண்ணிட்டு அப்பாவும் பிள்ளையும் இந்த விட்டுலயே இருக்க கூடாது முத இங்கே இருந்து போங்க என்றவள், கணவனின் கையில் குழந்தையை தினித்து நகர போனவள் கீழே விழுந்த பொருள் தடுக்கி கையில் இருந்த குழந்தையுடன் தீடீரென சரவணனின் மேல் விழ போக அய்யோ குழந்தை என்று கத்தியபடி கணவனின் மேல் வந்து விழ!
தன் மேல் விழுந்த மனைவியையும் குழந்தையையும் தாங்கியவன்,அச்சோ கண்ணம்மா நான் திருமணம் முன்னாடியே நிச்சயதார்த்திலே நான் சொல்லியாச்சு நீ என்னுடையவள்,நீயே என்னை விட்டு போகனும் நினைச்சாலும் நான் உன்னை போகவிடமாட்டேன் என்று,நான் வெற பொண்ணுங்க கூட இருந்து இருக்கலாம், ஆனால் என்னோட காதல் அனைத்தும் என்னோட மனைவி உன்னை தவிர இந்த ஜென்மத்தில் வேறு யாருக்கும் இல்லை!
அப்புறம் தூங்கிட்டு இருக்கும் போது நீ என்னை தானே அடிச்ச,சோ அடிச்ச கைக்கு தண்டனை கொடுக்க வேண்டும் தானே, நீ எனக்கு கொடுக்குறது போல என்று யோசனை செய்வது போல் அவளை பார்க்க!
அவளோ தன்னுடைய இடுப்பை இறுக்கமாக பிடித்து கொண்டு இருந்தவனை விளக்க பார்க்க முடியாமல் இன்னும் அவன் பேசுவதை எல்லாம் கேட்க கேட்க கோபம் வர, அவனை திட்டுவதற்கு வாயை திறந்தவளுக்கு, அவன் இதழ் அவள் வாயை அடைக்க, அதில் அதிர்ச்சி அடைந்தவள் அவனிடம் இருந்து விடுபட போறாட !
சரவணனோ தன் காதல் மனைவிக்கு முன்றாம் இதழ் முத்தம் கொடுப்பதை நீடித்து செல்ல அவன் மனைவி ஜானவியோ விடுபட போறாட அதில் ஆத்திரம் கொண்ட அவன் அவள் இதழ்களை கடிக்க!
ஜானவியோ அவள் கைக்களைகொண்டு விடாமல் சரவணனை அடிக்க அதில் அவன் விட்டதும் அவனிடம் இருந்து தூரம் விலகியவள் உதட்டை கைகளால் மறைத்த படி அவனை அரக்கா………. என்றவள் அங்கிருந்து வேகமாக நகர!
ம்…… அரக்கன் தான் ஆனால் நான் உனக்கு மட்டும் அரக்கன் மை டியர் பொண்டாட்டி என்று கத்தி சொன்னவன் அவன் இதழை தொட்டு தொட்டு சிரித்து கொண்டு இருந்தான்!
நவிலனோ என்னடா நடக்குது இங்கே என்று பெந்த முழித்தபடி பார்த்து கொண்டு இருந்தது குழந்தை!
ச்ச…. பல்லைக்கூட கழுவாம கிஸ் கொடுத்துட்டான் உவ்வ… உவ்வ… வாயை கொப்பளித்தவள் அவன் உதட்டை கடித்த இடத்தில் இரத்தம் கசிய ச்சீ……. எப்படி உதட பண்ணி வெச்சுருக்கான் லூசு , நான் இப்போ எப்படி ஆபிஸ் போகுறது, ஏதாச்சும் லிப் மேக்கப் போட்டு போட்டு அட்ஜஸ்ட் தான் பண்ணணும்!
அச்சோ என்ன இந்த பொண்ணு அந்த பையன் சரவணன் பேச்சோட பேச்சா காதலை சொல்லிட்டான், ஆனால் இந்த மக்கு பொண்ணு அதை உனராமல் அவன் பல்லு தெய்காமல் முத்தம் கொடுத்துட்டான்னு கவலை படுது? இது தான் 90’ஸ் கிட்ஸ் எல்லாரையும் நான் சிங்கிள் ஆகாவே சுத்த விடுறது நான்! என்ற காதல் தேவன் வருத்த பட்டபடி வேறு ஒரு அடாவடி ஜோடியை சேர்த்து வைக்க சென்றார்!
——————————
நான்கு நாள் வெளியூர் பயணத்தை முடித்து வீட்டுக்கு திரும்பிய சீத்தா வீட்டினில் குழந்தையின் சத்தம் கேட்க,என்னடா இது புருஷன் வர போறான்னு சொன்ன ஆனால் வந்த மறுநாளே குழந்தையா இவ்ளோ பாஸ்ட்டா எங்க அக்கா!ஜாலியோ ஜிம்கான தான் போலயே ஜானவி, ஆனாலும் இந்த குழந்தை சத்தம் ரொம்ப கேக்குதே என்னவாக இருக்கும்! என்று கீழே இருக்கும் அறையில் எட்டி பார்க்க அங்கே மகனை தூக்கி கொண்டு விளையாட்டு காட்டியபடி இருந்த சரவணனை பார்த்தவள் ஹாய் மாம்ஸ் என்ன அதுக்குள்ள கையில குழந்தை என்று புருவம் உயர்த்தி பல்லை இழித்தபடி சீதா வினாவ!
சீத்தாவை பார்த்து சற்று மிரண்ட சரவணனோ ஹெ வாயாடி எப்படி இருக்க! என்று அவனும் மொத்த பல்லும் தெரிய கேட்க!
அதுவா இப்போ தான் வந்தேன் ,கைல என்ன குழந்தை யாரோடது, பப்ளி பெயர் என்ன, எங்க என்னோட அக்காரிய இன்னும் காணும், என்ன பண்ணிங்க அவளை! என்று சிரித்தபடி கேட்க!
ஜானவி அதுவா நான் இங்கே இருக்கேன் சீத்தா, அந்த குழந்தை ஐயாவுக்கும் அவரோட எக்ஸ்க்கும் பிறந்ததாம் இப்போ அந்த குழந்தைக்கு நான் ஆயா வேலை பார்கனுமா!சாரு சொல்லுறாறு.
என்னது என்று அதிர்ச்சி அடைந்த சீதா! இவ்ளோ தெரிஞ்சும் எதுக்கு இவரை வீட்டில் வைச்சுருக்க வெளியே தொறத்த வேண்டியது தானே, இரு இதை இப்பவே பெரியப்பா பெரியம்மாகிட்ட சொல்லுறேன்!
சீத்தா வேண்டாம் இதுக்கு முதலில் நான் ஒரு வழி கண்டுபிடிச்ச பிறகு பேசலாம்! என்ற ஜானவி நான் ஸ்டுடியோ போறேன் நீ அங்கே வா! என்றவள் கணவனையும் இவளிடம் வர துடித்த குழந்தையும் பார்க்காமல் வேகமாக வெளியேறினாள் ஜானவி!
யூ சீட்டர்! எங்க அக்காவுக்காக தான் உன்னை என்னோட மாமாவா ஏத்துகிட்டேன் பட் அப்போவே ஒரு கிளாஸ் பால் பதிலாக ரெண்டு கிளாஸ் பால்ல நிறைய தூக்கு மாத்திரை கொடுத்து கல்யாணத்த நிப்பாட்டி இருக்கனும், அப்போவும் சரி இப்போதும் எங்க அக்காவால தான் நீ தப்பிக்குற!
ஓ……. அப்போ நல்லா இருந்த என்னோட மனைவி மனசுல நீ தான் அந்த விசத்தை விதச்ச கல்லியா!
கல்லியோ வில்லியோ இப்போவே இந்த குட்டிய தூக்கிட்டு போகிறிங்க!
அதுவரை விளையாட்டை கைவிட்டவன் வேண்டாம் சீதா நீ எங்களுக்குள்ளே வராதே அது நியாக இருந்தாலும் சரி,உன் குடும்பம் என் குடும்பம் என்று யாராக இருந்தாலும் இந்த குழந்தை பிரச்சினை காரணம் காட்டி என்னிடம் இருந்து ஜானவிய பிரிக்க முடியாது!
இல்லை நீ இன்னும் இது போல எதிர்மறையா பேசுனா நான் கொல்லவும் தயங்கமாட்டேன், உனக்கு புரிந்து இருக்கும் நினைக்கிறேன் என்று கோபமாக பேசிய சரவணன் அங்கிருந்து செல்ல!
போகும் அவனை அய்யோ எவ்வளவு ஈசியா கொல்லவும் தயங்கமாட்டேன் சொல்லுறான் கொலைகார மாமான்! இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும் நான் என்ற சீத்தா வேகமாக குளித்து முடித்து கிளம்பி ஸ்டுடியோ சென்றாள்.
Advertisement