உன்னை நினைத்து 17.2

இங்கே கனவில் கங்கை இறந்த பின் ஜானவி மூச்சுக்கு தடுமாறி உடல் மேலே தூக்கி தூக்கி போட!

லோலிட்டா நவிலனுக்கு விளையாட்டு காட்டிய படியே உட்கார்ந்து இருந்தவள் நவிலன் உறங்கியதை அடுத்து,ஜானவியின்  மொபைலில் கேம் விளையாடிய படி இருந்தவள், ஜானவி உடல் மேலே தூக்கி தூக்கி போடுவதை கண்டு லோலிட்டா கஷ்டப்பட்டு அவளை விழிக்க செய்ய!

விழித்த ஜானவிக்கு முதலில் தான் இங்கு தான் இருக்கிறோமா என்ற சந்தேகம்? அடுத்து அவள் தன்னை தானே உயிரோடு இருக்கிறோமா என்று ஆராய்ந்தவள் ஓடி சென்று கண்ணாடியில் தன்னை தானே பார்த்தவளுக்கு, கனவில் வந்த கங்கைக்கும்,

தனக்கும் உருவ ஒற்றுமை  ஒன்று  என்று இல்லாமல் அனைத்தும் தனக்கும் அவளுக்கும் இருக்க,ஆனால் நான் ஏன் கங்கையாக இருந்தேன்? அந்த பார்த்தசாரதியை பார்க்கும் போது,எனக்கு ஏன் சரவணனுடன் இருக்கும் அந்த உணர்வு எனக்கு கனவில் வந்தது, அடுத்து இன்னிக்கு பார்த்த அந்த ஐபிஎஸ் அதிகாரி ஆதிசேஷன் ஏன் என் கனவில் வந்த சீரஞ்சீவி போல இருந்தாரு?

இது கனவா இல்லை எனக்கு இருக்குற

ஸ்ரேஸ்னால இப்படி கணவு கண்டேனா? என்று தனக்குள் புலம்பி கொண்டும் லோலிட்டா கூப்பிடுவது கூட காதில் வாங்காமல் தன்னிலை மறந்து அமர்ந்து

இருந்தவள்,விடாமல் வந்த லோலிட்டாவின்  அழைப்பில் அவளை என்னவேன்று  ஜானவி பார்க்க!

என்னாச்சு தீடீரென நீ ஒரு மாதிரி உயிருக்கு போராடியது போல பிகேவ் பண்ண என்ன ஆச்சு ஜானவி உனக்கு?

ஜானவி ஏதோ கனவு கண்டு பயந்திட்டேன் லோலிட்டா, ஆனால் அது நிஜம் போல தத்துருபமாக இருந்தது! எனக்கு முழிப்பு வந்த பிறகு கூட எது நிஜம், எது கனவு என்று தெரியாமல் இருக்கேன்!

நீ உன்னோட புருஷனுடன் சண்டை போட்டதனாலே நல்லா குழம்பி போய் கேட்ட கனவு கண்டு இருக்க!

இருக்கலாம் என்று கூறிய ஜானவி மணி என்ன கேட்க!

அதிகாலை நான்கு  மணி!”லோலிட்டா”

அச்சோ நவிலன் எழுந்து இருந்திருப்பானே குழந்தைக்கு நையிட் சாப்பிட கூட கொடுக்கலை என்று ஜானவி காவையுடன் கூற!

உங்க அம்மா இடையில் வந்து நவிலனை  எழுப்பி உணவு கொடுத்து அவங்க ரும்லையே நவிலனை படுக்க வெச்சிட்டாங்க! “லோலிட்டா”

ம்………… என்றவள் மறுபடியும் படுக்க சென்றவள் பின்பு திரும்பி லோலிட்டா அந்தரத்தில் வைத்து விளையாடி இருந்த போனில் சரவணன் அழைத்தான என்பதை பார்க்க அவள் தொலைபேசியை எடுப்பதற்கு செல்ல!

அதே நேரம் அவள் எதற்காக மோபைலை எடுக்க செல்கிறாள் என்பதை ஊகித்த லோலிட்டா அது எல்லாம் உன்னோட வீட்டுக்காரரு ஓரு போன் கூட போடலை உனக்கு என்பதை சொல்ல!

இங்கே கர்ப்பிணி பெண்னை அடிச்சிட்டு சாரி கூட சொல்லலை,செரி என் மேலேயே தப்பு இருந்து இருக்கட்டுமே, ஒரு போன் பண்ணி குட்டிம்மா சாப்பிட்டியா டான்னு கேட்க கூட மாட்டானா, இருக்கு டா உனக்கு பம்பரை கட்டை மண்டையா, இங்கே நான் தூங்காமல் இருக்க நீ மட்டும் தூங்குவியா,இருடா என்றவள் அந்த அதிகாலை நான்கு அரை மணிக்கு ஜானவி சரவணனுக்கு கால்  செய்ய!

அதே நேரம் சரவணன் மோபைலோ நீங்கள் தொடர்பு கொல்லும் வாடிக்கையாளர் தற்போது சுவிட்ச் ஆப் செய்ய பட்டுள்ளது என்று அறிவிப்பு வர!

ஜானவி,பாத்தியா சுவிட்ச் ஆப் பண்ணி வெச்சு இருக்கான் படுபாவி என்றவள் பத்து நிமிடம் அங்கும் இங்கும் நடந்தவள் மனது கேட்காமல் தன்னுடைய மாமியார் பார்வதிக்கு அழைப்பு விடுக்க!

அந்த பக்கம் தூக்க கலக்கத்தில் இருந்த பார்வதி என்னம்மா ஜானவி என்ன இந்த நேரத்தில கூப்பிட்டு இருக்க,நீ நல்லா தானே இருக்க என்று பதட்டத்துடன் கேட்க!

ச்சே என்னோட பதட்டத்தனால அத்தைக்கு இவ்வளவு அதிகாலையில் அழைப்பு விடுச்சிருக்கேனே என்று தன்னையே கடிந்தவள், நான் நல்லா இருக்கேன் அத்தை, அவரோட போன்க்கு அழைப்பு விடுச்சா சுவிட்ச் ஆப்ன்னு வருது அத்தை, அதான் அவரு வீட்டில் இருக்காரான்னு கேட்க கால் பண்ண!

நீ கிளம்பிய பிறகு உன்னை அடிச்சதுக்கு உங்க மாமனார் ரோம்ப சத்தம் போட்டார்ம்மா அதுல கோபிச்சிட்டு போனவன் இன்னும் வீட்டுக்கு வரலைம்மா!

ஜானவி அப்படியா அத்தை,, நான் அவர் எங்கே இருக்கார்னு பாக்குறேன் அத்தை , நீங்கள் தூக்குங்கள்  என்றவள் அழைப்பை துண்டித்து,தனது பாடிகார்ட்ஸ்க்கு அழைத்தவள் சரவணன் தற்போது எங்கே இருக்கிறான் என்று கேட்க!

மேம் சார் இந்த ஹோட்டலில் நல்லா குடிச்சிட்டு இருக்குறாரு மேம் சார் என்று பாடிகார்ட்ஸ் சொல்ல!

நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ இன்னும் 15 நிமிடத்தில் எங்க வீட்டில் சரவணன் வந்து இருக்கனும் என்று கட்டளை இட்டவள்,காலை கடன்களை முடித்து விட்டு தோட்டத்தில் போய் ஜானவி அமர!

அது இன்னும் விடியாத அதிகாலைப் பொழுது இன்னும் இருட்டாக இருக்க, மறுபக்கம் சில்லென்ற  காற்று வீச!

அப்போது பாடிகார்ட்ஸ் உதவியுடன் சரவணன் தள்ளாடியபடியே வர!

ஜானவி மேலே  தனது அறையில் அவனை விடச் சொல்லியவள், பாடிகார்ட்ஸ் அவனை அறையில் விட்டு சென்ற பின் லிஃப்ட்டில் தனது அறைக்கு வந்தவள், அங்கே சோஃபாவில் உட்கார்ந்து அழுதபடி புலம்பிய சரவணனை கண்டவள் கோபத்துடன் அவன் அருகே வர!

ஏய் என்ன ஏன்டி  இங்கே கடத்தி வந்த கடன் காரி!

ஆ……….ன்………. உனக்கு தக்க சன்மானம் கொடுக்க தான்டா கொய்யாக்கா!

என்ன சன்மானம்!

என்னை அடிச்சதுக்கு இடியட்!

ஏய் அடிச்சேன் அடிச்சேன் சொல்லுறியே நான் உன்னை ஒரு தடவை தான டி அடிச்சேன், ஆனால் நீ உனக்கு கோபம் வரும் போது எல்லாம் என்னை மொத்துவியே, நான் யாருகிட்டயாவது சொல்லி இருக்கேனா, ஆனால் உன்னை அடிச்சதுக்கு உன் மாமனார் மாமியார் என்ன சண்டை போடுறாங்க, அது என்ன ஆணுக்கு ஒரு ஞாயம், பொண்ணுக்கு ஒரு ஞாயம் என்று வாய் குழறியபடி சரவணன் கேட்க!

போதை தெளிஞ்ச பிறகு உன் ஞாயத்தை சொல்லுறேன் இப்போ அமைதியாக தூங்கு!

மாட்டேன் டி! என்னோட கஷ்டம் உனக்கு என்னிக்கு தெரிஞ்சு இருக்கு, மறுபடியும் அந்த ஆதிசேஷன் கூப்பிட்டால் நீ என்ன விட்டு போயிட போறே தானே!

டேய் நான் எதுக்கு ஆதிசேஷன் கூப்பிட்டால் போகனும் குடிச்சிட்டு ஏதாவது புலம்பாதே, நான் எங்க அம்மா வீட்டுக்கு வந்தது உனக்கு ஒரு குற்றம்மா என்று இவள் பேச!

சோபாவில் சரவணனோ மல்லாக்க போதையில் தூங்க ஆரம்பித்திருந்தாள்.

இங்கே இப்படி இருக்க ஆதிசேஷன் வீட்டில் காலை ஒன்பது மணிக்கு தான் ஊர்மிளாவை திருமணம் செய்ய மாட்டேன் என்று ஆதிசேஷன் கூறியவன் திருமணத்தை நிறுத்த சொல்லி கேட்க!

சீகாமணி மகனை அறைய சென்றவர், உன்னிடம் சம்மதம் கேட்டு தானே நான் திருமணம் முடிவு செய்தேன், திருமணத்துக்கு இன்னும் சிறிது நாட்கள் இருக்கும் நேரத்தில் திருமணம் நிப்பாட்டலாமா என் தங்கைக்கு அவள் பெண்ணுக்கும் நான் என்ன பதில் சொல்வேன் என்று கோபத்துடன் கத்த!

எனக்கு பிடிக்கலை என்று ஆதிசேஷன் கோபத்துடன் கத்த!

பாரு வள்ளி, இவனுக்கு நேரம் சரி இல்லை சீக்கிரமா திருமணம் முடிக்கனும் சொன்னேன்ல அதன் படியே நேரமும் நகருது பாரு, நம்ம குலதெய்வம் கோவிலில் சின்னதாக பூஜை பண்ணா எல்லாம் சரியாகிவிடும் என்று சீகாமணி கூற!

நிறுத்துங்க இன்னும் எத்தனை நாளைக்கு என்னையும் அம்மாவையும் ஏமாத்துவீங்க, ஜாதகம் ராசியேன்று அந்த வீடே அதிரும் படி ஆதிசேஷன் கத்த!

சீகாமணி பூஜை அறைக்கு சென்று அங்கு மஞ்சள் பையில் வைத்து இருந்த ஜாதகத்தையும் சுவடியும்,சேஷனின் கையில் திணித்தார், உனக்கு நான் ஜாதகம் கணிக்க படிக்க கற்று கொடுத்துள்ளேனே எல்லாவற்றையும் படி,பொய்யேன்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன்!

நீங்கள் சொல்வது உன்மையாகவே இருக்கட்டும், எதற்கு உங்கள் தங்கையிடம் ஐம்பது லட்சம் ரூபாய் செலவில் ஃப்ளாட் வாங்குனிகற்கள், இன்னும் பலவும் வாங்கினிர்கள் எதற்கு இந்த லஞ்சம்?

வரதட்சணையா இது அனைத்தும் என் தங்கை அவள் மருமகனுக்கு கொடுக்கும் பரிசு,அதற்காக திருமணம் நிப்பாட்டுவது  எல்லாம் முட்டாள்தனம்!

என்னது பரிசு, அந்த பரிசாக அவள் வயிற்றில் உதிக்கும் குழந்தையுமா என்று தந்தையை அர்த்த பார்வையுடன் பார்க்க!

என்னங்க இவன் என்ன என்னவோ சொல்லுறான், சொல்லுங்க உன்மையாகவே ஊர்மிளா முழுகாமல் இருக்க்காலா?,அது தெரிந்தும் நீங்கள் நம்ம பிள்ளைக்கு அவளை திருமணம் செய்து வைப்பது அநியாயம்!

சீகாமணி அமைதியாக இருக்க!

எப்படி சொல்லுவாறு அம்மா இதுல முழுக்க முழுக்க ஜாதி வெறி பிடித்த பேய் இவரையும் இவரது தங்கை குடும்பத்தையும் தலைவிரித்து ஆட்டுது, அதற்கு சொந்த மகன் வாழ்க்கை என்றும் பார்க்காமல்  என்னையே இதில் பங்கு பெற வைத்துள்ளார்!

சம்மந்தப்பட்ட அந்த பெண் ஊர்மிளா எனக்கு வீடியோ கால் பண்ணி கண்ணீருடன் என்னை பார்த்து என்னை திருமணம் செய்ய வேண்டாம் என்று கேட்கும் போது, நான் எப்படி அம்மா ஒரு உயர் அதிகாரியாக எல்லோருக்கும் எடுத்து காட்டாக இருக்க வேண்டியவன் சாதி வெறி பிடித்த எனது தந்தைக்கு ஆதரவாக இருக்க முடியும்!

தம்பி நான் தான் சொன்னேனே அந்த பிள்ளை ஊர்மிளா நல்ல பெண் என்று தான், நான் உனக்கு உங்க அப்பா சொன்ன போது கூட அதனால் தான் நான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன், நான் கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை உன்னோட வாழ்க்கை  காப்பாற்ற பட்டது கண்ணா!

இப்போ அம்மா சொல்லுறேன் கண்ணா, இந்த திருமணம் நடக்காது, உனக்கு யாரை பிடிச்சி சரி சொல்லி அம்மாட்ட அந்த பெண்ணை காமிக்கிறியோ உனக்கு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைக்கிறேன் என்றவர்! கணவரிடம் பேசாமல் அறைக்கு சென்றார் வள்ளியம்மா.

ஊர்மிளா வீடு!

அதே நேரம் ஊர்மிளா ஆதிசேஷனிடம் பேசியதை அறியாத அமிதாஷ்  போலிஸ் மற்றும் மீடியா துணையுடன் ஊர்மிளா வீட்டிற்கு வர!

அங்கு ஏற்கனவே உயர் அதிகாரியாக இருக்கும் ஆதிசேஷனை, கண்ட சப் இன்ஸ்பெக்டர் ராஜா, சார் நீங்க எங்கே இங்கே என்று கேட்க!

என்ன பிரச்சினை ராஜா!

சார் ஒரு காதல் சாதி பிரிவு கேஸ் சார் கம்பளையின்ட் விஷயமாக இன்ஸ்பெக்டர்  உடனே பார்த்து வர சொன்னார் என்க!

சோ நீ தான் அமிதாஷா  என்றவன் அவன் கண்ணத்தில் அறை ஒன்று விட்டவன், காதலிப்பது தப்பில்லை ஆனால் அந்த காதல்  எல்லை மீற கூடாது, என்றவன் சப் இன்ஸ்பெக்டரிடம் அந்த பெண் ஊர்மிளாவை அரசு பெண்கள் காப்பகத்தில் அனுப்பி இருக்கிறேன்,இங்கிருந்தால் அவளுக்கும் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை என்று நான் அனுப்பி உள்ளேன் என்று பேசி கொண்டு இருக்க!

அதே நேரம் ஊர்மிளாவின் தாய் ரேவதி அடேய் நீ என்னுடைய அண்ணண் பையன், ஐபிஎஸ் அதிகாரி என்னுடைய சாதி சனம் என்ற ஒரு காரணத்துக்காக, என் மகளை உனக்கு திருமணம் முடிக்கலாம் என்று வந்த என் மடத்தனத்தை  என்ன  வென்று சொல்லுவது, இதில் இதோ நிற்கிறானே இந்த வேற்று சாதி காரனுக்கு நீ மட்டும் என் மகளை திருமணம் முடித்து பாருடா, நீயும் சரி அந்த ஊர்மிளாவும் அவள் வயிற்றில் வளரும் கரு என்று எல்லோரையும் அழிப்பேன் என்று ஆதிசேஷனை அதிகாரி என்றும் பார்க்காமல் அடிக்க வர!

அவரை தன் கையால் அடிக்காமல் இருக்க பிடித்த ஆதிசேஷன் போலிஸால்  அவரை அரஸ்ட் பண்ண சொல்லியவன், திரும்பி அமிதாஷை பார்த்தவன் அவனை அழைத்து கொண்டு அந்த அரசு பெண்கள் காப்பகத்தில் இருக்கும் ஊர்மிளாவை சந்தித்தவன், அவள் அம்மாவை அரஸ்ட் செய்ததாகவும் கூறியவன்,நாளை காலை ரிஜிஸ்டர் ஆபிஸில் அமிதாஷிற்கும் ஊர்மிளா விற்கும் திருமணம் என்று கூறியவன், அவர்கள் இருவரையும் பேச  தனியாக தள்ளி வர!

அமிதாஷ், ஊர்மிளா சாரிம்மா என்னால தானே நீ இவ்வளவு துன்பத்தையும் அனுபவித்தாய், நான் அப்பா அம்மாட்ட சொல்லி சம்மதம் வாங்கியாச்சு,இனி நீ எந்த பிரச்சனையும் இல்லாமல் நம்ம வீட்டுக்கு உரிமையாக வரலாம்!

என்ன உங்கள் வீட்டில் மருமகளாக ஏத்துப்பாங்களா என்று பயத்துடன் ஊர்மிளா கேட்க!

இந்த மாதிரி கன்சிவ்வாக இருக்கும் சமயத்தில் நீ இப்படி பயப்படலாமா, அதான் நான் இருக்கேன்ல உன்னை எந்த துன்பமும் தீண்டாமல் என் வாழ்வு உள்ளவரை பார்த்துப்பேன், சோ ஹாப்பியா நாளைக்கு  திருமணத்துக்கு ரேடி ஆகுங்க ஊர்மி!

ஊர்மிளா சிரித்தபடி அமிதாஷிற்கும் விடைதற!

அதே நேரம் ஊர்மிளாவை வேண்டாம் என்ற காரணத்திற்கு உன்மை காரணம் அவள் மாதமாக இருப்பதினாலோ அல்லது அவள் காதல் செய்வதினாலோ அல்ல அவள் பூர்வ ஜென்ம ரேணுகாவின் தோற்றத்தில் இருப்பதால்!

 மறுநாள்

அமிதாஷின் பெற்றோர் முன்னிலையில்  அமிதாஷ் ஊர்மிளாவிர்கு ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு திருமணம்  செய்தவர்கள் ,அதே கையோடு ஏர்போர்ட் சென்றவர்கள் ஜெர்மனிக்கு பயணம் செய்ய ஆரம்பித்திருந்தனர் தனது குடும்பத்தோடு, விமானம் ஏறுவதற்கு விடைபெறும்போது

ஆதிசேஷன் கால்களில் விழுந்து ஊர்மிளா மண்ணிப்பு கோரியவள், அவன் என்ன ஏது என்று உணரும் முன் கண்களை துடைத்தபடி அமிதாஷுடன் அவன் தாய் தந்தையுரடன் தன் தாய் நாட்டிற்கு விடை பெற்று செல்ல.

அவள் நினைவுகளோ…….அவள் பூர்வ ஜென்ம ஞாபகம்  எப்போதோ நினைவு வந்து விட, ஆதிசேஷனை வேணும் என்றே தன் இந்த ஜென்ம வாழ்கையில் தவிர்த்தவள், அமிதாஷுடன் தன் வாழ்கையை தொடங்கி விட்டால் பெண்ணவள்!