Advertisement

உன்னை நினைத்து 13.2

நாட்கள் வாரங்களாக வாரங்கள் மாதங்களாக குழந்தை நவிலனுக்கு ஒனறை வயது ஆகி இருக்க தாத்தா பாட்டி அப்பா அம்மா என்று சுற்றங்கள் சூழ சந்தோஷமா வளர்ந்து கொண்டு  இருந்தான் நவிலன்.

இதில் ஜானவி சரவணனுக்கு அவ்வப்போது கறுத்து வேறுபாடுகள் வருவதும் போவதுமாக இருந்து வாழ்க்கை அவர்களுக்கே தெரியாமல் விரிசல் விட்டு இருக்க!

 இப்போ நான் உன்னை என்ன தப்பா சொன்னேன் நீ இப்படி கோபப்படுற சரவணா!

ஓ………. நீ என்னேறேமும் என்ன சந்தேகப் படுறது  உனக்கு தப்பா தெரியலையா டி , ஏதாச்சும் வேலையாக வெளியூர் போகுறதுல யார்க்குட ஸ்டே பண்ணுன நீ கேக்குறது தப்பு இல்லை, எப்பவுமே தப்பு தப்பா பேசுறது தப்பு இல்லை? சரியான சந்தேக பேய் டி நீ, உன்னை ஏன்டா காதலித்து கல்யாணம் பண்ணேன்னு  நினைக்க வெக்குற டி நீ சீ……..

என்ன சீ….. யா உனக்காகவும் பாப்பாவுக்காகவும் நான் என்னோட ஜாப்க்கூட போகாமல் உங்க கூட இருக்கேன் ல நான் சீ தான்………. அப்புறம் நான் உன்னை என்னை காதலிக்க சொல்லலை, நான் உன்னை கல்யாணம் பண்ண சொல்லலை ,நீ அண்ணிக்கு அந்த நிச்சயம் நிறுத்தாமல் இருந்திருந்தா இன்னேரம் நான்  அவனுக்கு மனைவி ஆகி குடும்பம் குழந்தை இருந்திருப்பேன்!

ஓ……….. அப்போ உன்னை தான் காதலிச்சேன்னு, கல்யாணம் ஆகி நீ சொன்னது எல்லாம் பொய்யா? இப்போ எப்படி அவன் வந்தான்!

ஏய் ஏதோ வாய் தவறி வந்திடுச்சு சரவணா, நான் வேணும் என்றே சொல்லலை என்று பதறியபடியே ஜானவி கூற!

சரி  நீ தெரியாமல் வாய் தவறி சொன்ன ஓகே ஆனால் நான் கேக்குறதுக்கு பதில் சொல்  டி,உன் பர்ஸ்ட்  கிஸ் நீ யாருக்கு கொடுத்த தெரியுமா!?

இப்போ எதுக்கு அது! என்று ஜானவி தடுமாற்றத்துடன் கூற!

அப்போ இப்போ வரை நான் தான் அந்த பர்ஸ்ட் கிஸ் கொடுத்தது தெரியலையா?

என்ன நீயா!

ஓ நான இருந்து இருக்க கூடாது திங் பண்ணுறியா? சரவணன்

“ஜானவி”,ச்ச அது இல்லை நிஜமாலுமே அது நீயா? எனக்கு  லண்டன்ல பர்ஸ்ட் கிஸ் கொடுத்தது சரவணா!

நான் சொல்ல மாட்டேன்!”சரவணா”

ச்சே சரவணா………….. சொல்லு என்னை கோபப்படுத்தாதே!

யாருனே தெரியாமல் எதுக்கு கொடுத்த?

ச்…… அது‌… அது…. அது‌…….  அன்னிக்கு ஹாலோவீன் நாள் அப்போ பாக்கவே கோரமான பேய் வேடமிட்ட ஒருவருக்கு கிஸ் பண்ணணும் டேர் விளையாட்டு ஃப்ரெண்ட்ஸ் வெச்சிட்டாங்க, நானும் அந்த விளையாட்டில் இருந்ததினால்….இருந்ததினால்….. கிஸ் பண்ணிட்டேன் என்று கண்ணை முடி ஜானவி பயத்துடன் சொல்ல!

ஓ…….. என்று ராகமிட்ட சரவணன்  திரும்பி நடந்தபடியே அப்படியே எதுவும் சொல்லாமல்  தனக்குள் சிரித்த படியே 123 என்று மனதில் கணக்கு இட்ட படியே ஐந்து வரை எண்ண!

சரவணா அது நிஜமாவே நீயா என்று ஜானவி சத்தமிட்படியே கேட்க!

சரவணன் அவளிடம் பதில் சொல்ல திரும்பியவன் கண்டதென்னவோ கிழே மயங்கி விழுந்திருந்த ஜானவியை தான்!

ஹே ஜானவி…. என்னாச்சு…… விளையாடாத ஜானும்மா எழுந்திரி……. நான் சொல்லுறேன் எழுந்திரி என்று எவ்வளவு தட்டியும் எழும்பாமல்  இருந்தவளை  அங்கிருந்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து அவளின் மேல் தெளிக்க!

 அதில் சுய உணர்வு வந்த ஜானவி,கணவனை பார்த்தவளுக்கு அவன் மங்களாக தெரிய, அவன் பிடிமான உதவியோடு ஈழுந்தவள்  கட்டிலில் அமர!

ஏய் என்ன ஆச்சு டி ஓழுங்கா ஹார்ட் டேப்ளட் எல்லாம் போடுறியா!

பச்………. சரவணா என்னால முடியல ஹாஸ்பிடல் போகலாம் வா என்று ஜானவி அலைக்க!

இரு ஜூஸ் எடுத்து வர சொல்லுறேன் குடிச்சிட்டு ஹாஸ்பிடல் போகலாம் என்றவன் தனது அறையில் லேண்ட் லைனில் கிச்சனில் இருக்கும் வோர்கருக்கு பேசியவன் ஜூஸ் எடுத்து வருமாறு கட்டளை இட்டவன் மனைவியை கவலையுடன் நோக்க!

ஒன்றுமில்லை சரவணா டேன்சனாக இருந்தேன் இல்லை ஆதனால் மயங்கி இருந்திருப்பேன் நீ கவலை படாதே!

தேவை இல்லாமல் டென்ஷன் ஆகுற டி நீ குட்டிம்மா, இந்த ஓரு மாதமா நீ என்கூட எவ்வளவு தேவை இல்லாத சண்டை போட்டு இருக்குற தெரியுமா,நீ உன் உடம்பில் அக்கறை செலுத்த மாட்டிங்குற, நான் சொன்னாலும் கேக்குறது இல்லை!

அதற்குள் பணிப்பெண் கதவை தட்டிவிட்டு ஜூஸ் எடுத்து வந்ததை தெரிவிக்க!

அவரிடம் ஜூஸ்  வாங்கி ஜானவிக்கு சரவணன் பருக கொடுக்க!

அதனை குடித்து முடித்தவழுக்கு இப்போது தான் தெம்பு வந்தது போல் இருக்க,கணவனை நன்றாக பார்க்க!

சரவணனோ குடித்து விட்டாயா வா ஹாஸ்பிடல் போகலாம் என்று மனைவியை அழைத்து கொண்டு கிழே வர!

ஹாலில் குழந்தையுடன் விளையாடி கொண்டு இருந்த பார்வதி மருமகள் தோளை பிடித்து கொண்டு வந்த மகனை பார்த்து என்னடா என்ன ஆச்சு என்று பார்வதி கேட்க!

ம்மா ஜானவிக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை, அதனால் நான் அவளை அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் போகிறேன் நீ நவிலன பார்த்துக்கோ என்று கூறிய சரவணன் மனைவியை அழைத்து கொண்டு மருத்துவமனை செல்ல!

என்ன உடம்பு சரியில்லை மருமகளுக்கு என்ன ஆச்சு டா என்று நவிலனை அழைத்து கொண்டு பதட்டமாக வாசல் வரை பார்வதி வர!

ம்மா நீ பதட்டபடதே  நான் என்னன்னு ஹாஸ்பிடல் போய் சொல்லுறேன் என்றவன், சோர்ந்த படி கார் இருக்கையில் அமர்ந்து இருந்த ஜானவியை பார்த்து தாமதபடுத்தாமல் அந்த பெரிய தனியார் மருத்துவமனைக்கு வந்தவன், ஜானவியை தவிர சிகிச்சை பிரிவில் ஜானவியை அட்மிட் செய்தவன் அவளுக்கு அனைத்து விதமான டேஸ்ட்களும்  எடுக்க!

ரிப்போர்ட்காக அன்று இரவு வரை ஹாஸ்பாடலே கதி என்று சரவணன் இருக்க, இதில் மகளுக்கு உடம்பு சரியில்லை என்று பார்வதி மூலம் கேள்வி பட்ட  கிரிதரன் தம்பதியர் மறுபக்கம் அமர்ந்து இருக்க!

அனைத்து ரிப்போர்ட் வந்த பின் சரவணனை அழைத்த டாக்டர் ஜானவிக்கு ஹார்ட்டில் எந்த ப்ராப்ளமும் இல்லை, ஷீ இஸ் கம்பிளிட்லி நார்மல் என்று சிரித்தபடி கூறியவர் அப்புறம் நீங்க பதட்டபட்டதுக்கு முக்கிய காரணம் அவங்க ஹார்ட் ப்ராப்ளம் இல்லை, என்றவர் இடைவெளி விட்டு சரவணன் முகத்தை பார்த்தவர் காங்கிரேடுலேஷன்  என்றவர் ஷீ இஸ் ப்ரெக்னன்ட்,நயிட் அவங்க ஹாஸ்பிட்டலில் இருக்கட்டும் மார்னிங் பேபிய ஸ்கேன் பண்ணி பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் என்றவர் ஜானவியை பார்க்க போகலாம் என்க!

ஜானவி பக்கத்தில் அமர்ந்து இருந்த லோலிட்டா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருக்க!

ஜானவியோ நமக்கு வேறு ஏதாவது இருக்குமோ என்று கவலை பட்டு கொண்டிருந்தவள் பிபியை அதிக படுத்த,

அதற்குள் ஜானவியின் அறைக்கு வந்த சரவணனோ கண்ணீருடன் மனைவியை அனைத்து கொண்டவனுக்கு மொத்த சந்தோஷத்தையும் தனது  அனைப்பில் கடத்தி விட முயன்றான்!

ஆனால் இது ஏதும் அரியா ஜானவி என்னாச்சு சரவணா எனக்கு என்னாச்சு எதுக்கு அழகுற என்று பதட்டத்துடன் கேட்க!

ஏய் உனக்கு நாள் தள்ளி போய் இருக்குறது தெரியுமா! தெரியாதா?

என்ன நாள் என்று ஜானவி பாவமாக முளிக்க!

அச்சோ என் அறிவு பொண்டாட்டியே,இந்த உன்னோட குட்டி வயித்துல குட்டியா பாப்பா வளருது தெரியுமா,யூ ஆர் பிரேக்ன்னட், மறுபடியும் நாம அம்மா அப்பா ஆக போகிறோம்  என் செல்ல பொண்டாட்டி!

என்ன என்று அதிர்ச்சியாகிய ஜானவி, உன்மையாவா சரவணா!

 சரவணன் கண்களில் கண்ணீர் சிரிப்புடன் ப்ராமிஸ் நீ நிஜமாவே ப்ரெக்னன்ட்  டி பொண்டாட்டி  நயிட் ஹாஸ்பிட்டலில் தான்  இன்னிக்கு ஸ்டே,மார்னிங் ஸ்கேன் பண்ணலாம் டாக்டர் சொன்னாங்க என்றவன்,இரு உங்க அப்பா அம்மா உன்னை பார்கனும் வெயிட்  பண்ணுறாங்க,நான் போய் அவங்கள அனுப்பிப்சிட்டு,அம்மா அப்பாவுக்கு போன் போட்டு சொல்லுறேன் என்றவன் வெளியேற!

கிரிதரன்,தான்யாலஷ்மி மகளுக்கு வாழ்த்து கூறியவர்கள் , நாள் தள்ளி போனது கூட தெரியாமல் இருந்த மகளை தான்யாலஷ்மி சிறிது வருத்தத்துடன் கடிந்து கொண்டு வெளியேற!

லோலிட்டா அமைதியாக ஜானவியை பார்க்க!

உனக்கு முன்னாடியே தெரியுமா லோலிட்டா நான் கன்சிவ்வாக இருக்கேன்  தெரியுமா!

நான் உணர்ந்தேன் ஜானவி, உன் வயிற்றில் சிசு உருவானதை நான் உணர்ந்தேன், ஆனால் நான் உணர்ந்ததை உன்னிடம் நான் சொல்லி இருந்தால் அதனை இப்படி நீ உணர்ந்து இருக்க மாட்டியே, சரவணன் உன்னிடம் சொன்னது உனக்கு எவ்வளவு பெரிய சந்தோஷத்தை தந்தது என்று நான் பார்க்கும் போது,அதனை நான் எப்படி தடுப்பேன் என்றவள்  லோலிட்டா ஆன்மா உணர்ச்சிவட்டு  பேசி அவளுக்கு சந்தோஷத்துடன் வாழ்த்து சொல்ல!

தேங்ஸ் லோலிட்டா உன்னாலே தான் நான் இந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்,உனக்கு நான் எத்தனை பிறவி எடுத்தாலும் இந்த பிறவில உன்னால் நான் வாழும் இந்த வாழ்க்கைக்கான நன்றி கடனை என்னால் அடைக்க முடியாது, நீ எனக்கு என்ன தந்து இருக்க தெரியுமா சாவிற்கு போறடியவளுக்கு தங்க புதையல் போல மறு வாழ்க்கை தந்து இருக்க என்று கண்ணீருடன் நன்றி கூற!

மறுபக்கம் சரவணன் அம்மா என்று சந்தோஷத்துடன் ஜானவி கன்சிவ்வாக இருப்பதை கூறியவன், அப்படியே தந்தைக்கும் கூறியவன் அந்த பக்கம் அழுதபடி இருந்த மகன் நவிலனை விடியோ காலில் பேசி சிரிக்க வைத்து அழைப்பை துண்டித்தவனுக்கு சொல்லில் ஆடங்கா மகிழ்ச்சி!

இரவு ஹாஸ்பிட்டலில் இருந்தவன் விடிகாலையில் வீட்டிற்கு வந்து குளித்து விட்டு  ஹாஸ்பிட்டலுக்கு சரவணன் வந்தவன் மார்னிங் 9.30க்கு ஜானவிக்கு ஸ்கேன் செய்ய அதில் ஆறு வாரம் கரு  ஆரோக்கியமாக  இருப்பதாக மருத்துவர் கூறியவர், குழந்தை பிறக்கும் மாதம் நாள் கணக்கிட்டு சொல்லியவர், ஜானவிக்கு சத்து மாத்திரைகள் எழுதி கொடுத்தவர் சிரித்தபடி கணவன் மனைவிக்கு விடை கொடுத்தார் மருத்துவர்!

காரில் அமர்ந்து இருந்த ஜானவி சொல்லு   சரவணா அது நீயா லண்டன்ல  என்னோட பர்ஸ்ட் கிஸ் உனக்கா? நான் கொடுத்தேன்!

ஆமாம் லண்டன்ல ஒரு விட்ச்(சூனியகாரி) பார்த்து  ஷாக்காக நான் நின்றிருக்க, அந்த விச் என்னை  டக்ன்னு லிப் லாக் பண்ணி டக்குன்னு வெளகி அங்கிருந்து காணமால் மறைந்து விட்டாள் என்ற சரவணன் ஜானவியை பார்க்க!

ஹே சரவணா அது  நீயா உண்மையா,ஏண்டா இத்தனை நாள் சொல்லலை!

இது மட்டும் இல்லை உன்னை  பார்க்க தான் நான் லண்டன் வந்தேன் வந்த இடத்தில் மேடம் விச் காஸ்ட்யூம்ல  சூன்யகாரி என் மனச   கொள்ளையடிச்சிட்ட, லண்டன்ல நான் இருந்த வரை உன்னை பின் தொடராத இடம் இல்லை, ஆனால் நீ கண்டு கிட்ட போல  தெரியலை!

ஏய் புருஷா நீ அப்பவே என் முன்னால வந்து லவ் சொல்லி இருக்கலாம்ல,எப்ப பாரு வில்லன போல சதி வேலை செஞ்சு செஞ்சே என்னை எப்ப பாரு கோபப்படுத்தியே வெக்குறது!

நான் காதல் சொல்லி இருந்தா, எல்லாரும் போல கண்ணே,மாணே,தேனே இது போல பாசம் காமிச்சுருப்ப நீ, நானும் உன்னை துறத்துல நீ செய்யுற சின்ன சின்ன விஷயத்தை ரசிக்குறதுபோல உன் பக்கத்தில் வரும்போது ரசிக்க நீ விடமாட்டே, அதனாலேயே  உன்னை கோபச்சீண்டல் பண்ணுவேன் தவிர என்னிக்கும் உன் மேலே கோபம் வராது!

சரவணா யூ ஆர் சோ சுவிட் என்று ஜானவி கியூடாக கூற!

சரவணன் அவள் கியூடில் மயங்கியவன் மனைவிக்கு மயக்கும் சிரிப்பை பரிசளித்தவன்  வீட்டிற்கு காரில் மனைவியுடன் பயனப்பட்டான்!

சிறு விரல்

அழுத்தத்தில்

கொட்டி விடுகிறாய்

உன் அத்தனை

நேசத்தையும்

என் ரசனையை

மறந்து

உன் ரசனையின்

ரசிகையாக

மாறினேன் நான்!

Advertisement