Advertisement

உன்னை நினைத்து 12.2

சீகாமணி இருவராங்கள் சரவணன்  ஜானவி ஓலை சுவடியை தேடியவருக்கு  கிடைத்ததை படித்தவருக்கு சப்த நாடியும் நடிங்கியது அதில் ஜானவியின் முன் பிறப்பில் ஆதிசேஷன் கணவனாகவும் ஹரிகேசவன் மகனாகவும் , மீனாட்சி மகளாகவும் இருக்க இப்பிறப்பில் ஆதிசேஷனை கண்டாள் வாழ்வே மாயம் ஆகும் என்று இருக்க, மேலும் அவள் காதல் கணவன் சரவணன் மற்றும் நவிலன் பற்றியும் அவள் மகவை பற்றியும், அவள்  அமானுஷ்யம் நிறைந்தவள் என்று குறிப்பு இருக்க!

சரவணன் சுவடியில்  முற்பிறப்பு பெயரான பார்த்த சாரதி என்று இருக்க  இவர் அதில் இன்னும் குழம்பியவர் அதனை அவர் மேற்கொண்டு படிக்க, அதில் அவன் காதல் கொண்ட பெண் கங்கையும் அவளுகாவே அவன் உயிரை விட்டான் என்று உயிராணாவளை சேர மீண்டும் பிறப்பு எடுத்தவனுக்கு  மகனே அவன் அவளை சேர்த்து வைப்பான் என்று இருக்க, இவன் நேரமும் இவன் மனைவியின் நேரமும் இவன் மக்களை  யாருமே நெருங்க முடியாத அசாத்தியவர்களாக  இருக்க  வைக்கும், அதே நேரம்  சரவணன் ஆதிசேஷனை பார்த்தால் அவன் பூர்வ ஜென்ம ஞாபகம் வரும் என்று இருக்க!

இதனை படித்தவருக்கு வேர்த்து கொட்ட ஆரம்பித்தது   அப்போ ஆதிசேஷன் ஜாதகத்தில் முற்பிறவி கங்கையும் ஹரிகேசவனையும் பார்த்தால் அவன் பூர்வ ஜென்ம ஞாபகம் வரும் என்று இருந்ததே,   இதனால் இவர்கள் மூவருக்குமே பெரிய போரே நிகழுமே  என்று  நினைத்தவர், மகனை ருத்ரன் வீட்டிற்கு வர வைத்த மடத்தனத்தை நினைத்து கவலை கொள்ள ஆரம்பித்தார் சீகாமணி, இவர் இங்கே இப்படி யோசிக்க!

இவர் மகன் ஆதிசேஷனுக்கோ  அந்த ருத்ரன் வீட்டிற்கு போய் வந்ததில்  இருந்தே நெஞ்சில் ஏதோ அழுத்துவதை போல் இருக்க என்னவாக இருக்கும்!

ம்…….. அப்பா எப்போவோ சொல்லி இருக்காரே அந்த வீட்ட சுத்தி பேய் சுத்தும் சொன்னாறே அதுல எதாவது ஒரு பேய் தாக்கி இருக்குமோ……🤔 இருக்கும் இருக்கும் இனிமே அப்பாவே சொன்னாலும் இது போல அவருக்கு , அவர் சொல்லுற வேலை எல்லாம் செய்ய கூடாது என்றவன், ஐபிஎஸ் அதிகாரி டிரையின்ங்காக முசோரி செல்ல துணிகளை எல்லாம் பேக் செய்ய !

அப்போது தந்தையிடம் இருந்து ஆதிசேஷனிற்கு  தொலைப்பேசி அழைப்பு வர,சேஷா அப்பா வர தாமதமாகும் நீ மூசோரி போ நான் நேரா  அங்கே வந்து உன்னை பார்க்கிறேன் என்றவர் ஃபோனை கட் செய்ய!

ம்மா நான்  அப்பா மேலே எப்பவும்  போல கோபமாக இருக்குறேன் நான் கிளம்புறேன் என்று  பையை தூக்கி கொண்டு வெளியே செல்ல!

வள்ளி  நீ உங்க அப்பா மேலே எவ்ளோ கோபமா வேனா இரு , ஆனால் இப்போ இந்த  மதிய சாப்பாட்டை அம்மா கையில் சாப்பிட்டு  சாயந்திரம்  ஃப்ளைட்கு கிளம்பிவியாம் என் கோபக்கார மகனே என்று  வாசலில் இருந்த மகனை அழைக்க!

அவனோ அம்மா……. என்றவன் வள்ளியை கொஞ்சிய படி  டைனிங் டேபிள் அமர்ந்தவன் அவர் பாசமாக பரிமாறிய உணவை ருசி பார்த்த படி, ம்மா ஐ ம் மிஸ் யுவர் புட், என்றவன் உண்ண ஆரம்பித்திருக்க!

வள்ளியோ மகனை பாசமாக பார்த்தவர், கண்ணா எப்பவும் சொல்லுவது போலே தான் அம்மா திரும்ப சொல்லுவேன்,  கோபப்படாமல் நிதானமாக யோசித்து முடிவு எடுக்கனும், நீ இந்த டிரைனிங் முடிச்ச பிறகு உனக்கான பதவி ரோம்ப பெரிது அதை புரிந்து  நடந்து  புத்திசாலியாக யோசிச்சு இருடா மகனே என்று  மகனை பார்த்து இரண்டு கைகளையும் தூக்கி கலகலவேன சிரித்தபடி ஆசிர்வாதம் செய்ய!

அவனோ தாங்கள் சொல்வதே சாசனம் தாயே, தாங்கள் சொல் படியே  நடப்பேன் தாயே என்று தலை வணங்கி சொன்னவன்  கைகழுவி விட்டு  சாமி அறையின் முன் நிற்க!

வள்ளி  தான் நிதம் கும்பிடும் அந்த முருகனை நினைத்து   கண்களை மூடி வணங்கியவர்  மகனிற்கு  விபூதி குங்குமம் புசியவர் வெற்றி வாகை சுடிவா மகனே என்று  சொல்ல!

ஜெய் வள்ளியம்மா என்று சத்தமாக அன்னையை அனைத்து கூறிய ஆதிசேஷன் சிரித்தபடி  விடைபெற!

ஆதிசேஷன் காரில் ஏர்போர்ட் செல்ல, கார் சிக்னலில் நிற்க!

அதே நேரம் ஜானவி மகனை அழைத்து கொண்டு சீத்தாவை பார்க்க சென்று கொண்டு இருந்தவள்,ஆதிசேஷன் நின்றிருந்த சிக்னலில் அவன் பின்னே காரில் அமர்ந்திருந்தாள்!

தீடீரென ஆதிசேஷனுக்கு அன்று ருத்ரன் வீட்டிற்கு சென்றபோது  இருந்தது போல இப்போதும் மனது விடாமல் ஏதோ போட்டு பிசைய,  ஜானவி கார் அந்த சாலையில் நேராக செல்ல, ஆதிசேஷன் கார் டிரைவரோ யூ டர்ன் அடித்து ஏர்போர்ட் செல்ல என்ன தான் தன் வாழ்கையில் நடக்கிறது என்று   தெரியாமல் ஆதிசேஷன் மூசோரிக்கு பயனப்பட்டான்!

சீத்தாவை   மீனம்பாக்கம் season ஸ்டோரில் குழந்தை நவிலனுடன் சந்தித்த ஜானவி  தான்  ஐந்து வருடங்களாக சிலிபிங் பார்ட்னராக இருக்க போவதாக உறைக்க!

எதுக்கு இந்த ஷாக் நியூஸ் டி அக்கா, யாரு உன் புருஷன் தான் உன்னை வேலைக்கு போக கூடாது சொன்னாரா என்றவள் உடனே சரவணனுக்கு சீத்தா கால் செய்ய!

ஏய் ஏய்….. கட் பண்ணு டி இது அவருக்கு தெரியாது என்று ஜானவி இங்கே கூற, அந்த பக்கம் அழைப்பை ஏற்ற சரவணன் என்ன எனக்கு தெரியாது ஜானவி என்று அலைபேசியில் மறுபக்கம் கேட்க!

அதுவா உங்க பொண்டாட்டி சிலிபிங் பார்ட்னராக அவ  கஷ்டப்பட்டு உருவாக்குன இந்த கம்பெனியில் இருக்க போறாளாம் என்று சீத்தா சொல்ல!

ஏய்  குட்டி பிசாசு ஃபோனை என் பொண்டாட்டி கிட்ட கோடு என்று சரவணன் கூற!

ஹலோ………’ஜானவி’

ஹெய் என்ன டி  சீத்தா ஏதேதோ சொல்லுறா உன்மையா!

இல்லை டா பாப்பாவ பார்கனும்ல அம்மாவோட டேக் கேர்  பாப்பாவுக்கு இருகாகனும்ல, நான் இங்கே வந்தா எப்படி!

நீ இதை இஷ்டபட்டு உருவாக்குனல டி , அது எல்லாம் பாப்பாவையும் பார்த்துட்டு நீ உன்னோட பேஷனையும் பார்ப்ப டி அதுகான திறமை உனக்கு இருக்கு டி பொண்டாட்டி!

ஓ……………. அப்போ நான் வேலைக்கு போய்  சம்பாதிச்சா தான் சாருக்கு  நான் பொண்டாட்டியா தெரிவேனா, இப்படி வேலைக்கு போகாமல் வீட்டோட இருக்குற பொண்டாட்டி உனக்கு பாரமா சொல்லு என்று இவள் குரல் உயர்த்த!

யம்மாடி  நான் எதுவும் சொல்லல டி நீ  ஒரு முடிவோட இருக்குற நான் சொன்னாலும் நீ கேட்கமாட்டே நீ நினைச்ச போல செய்யு, ஆனால் எம் பொண்டாட்டிய சம்பாதிக்க வெச்சு அதுல குளிர் காயுர புருஷன் இல்லை ஜானவி நான் , உனக்கு இல்லை நம்ம தலைமுறையே கஷ்டபாடாம   இருக்க நான் உழைச்சு சேர்த்து வைப்பேன் டி என்றவன் வருத்தத்துடன் ஃபோனை கட் செய்ய!

ஜானவி சீத்தாவின் தலையில் கோட்டியவள் நல்லா கோலிமூட்டிவிட்டுட்ட என் புருஷன் கிட்ட,அவனை வேற நான் சமாதானம் படுத்தனும், ஏன்டி உனக்கு வேற வேலை இல்லையா!

நான் மாமா தான் ஏதாவது சொல்லி இருப்பாருனு நினைச்சேன்!

ப்ச்… இல்லை நானு வேலையினு இருக்குறதுனால என்னால அவருகூட டயம்கூட ஸ்பேன்ட் பண்ண முடியல, உங்க மாமா வேலை முடிந்து வர டயம்ல நான் டிசைன் பண்ணிட்டு வொர்க் பார்த்துவிட்டு தூங்கிடுறேன், ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு விட்டு பேச கூட நேரம் இல்லை!

ச்ச…. புரியுது  ஆனால் நீ முழுசா சிலிபிங் பார்ட்னராக இருக்க கூடாது அப்போ அப்போ வந்து கம்பேனி பார்கனும் ஓகே வா!

ம்……. என்று  ஜானவி தலை யசைக்க!

‘சீத்தா’, நீ ராபர்ட் அண்ணா கிட்ட பேசனும் இதை பற்றி!

நான் நேற்றே பேசிட்டேன் !

ஹோ………… அப்போ என்கிட்ட தான் கடைசியில் தகவல் சொல்லுறியா!

இப்போ இவளுக்கு என்ன தான் வேணுமாம் ஜானவி சும்மா   இப்படியே விதண்டாவாதம் பேசுறா என்று லோலிட்டா கேட்க!

ச்சு……. அமைதியாக இருடி என்று லோலிட்டாவை பார்த்து சொல்லியவள் கோபமாக தன்னை நோக்கி கொண்டு இருந்த தங்கையை பார்க்க!

நான் அமைதியா இருக்குறேன்,நீ வாடா நவி குட்டி என்று நவிலன் அழைத்து கொண்டு கோபத்துடன் செல்ல!

என்ன ஆச்சு ஜானவி,நீ ஒரு மாதிரி இருக்கே  “லோலிட்டா”

இல்லை அந்த ஜாதகம் கணிப்பவர் இரண்டு வாரம் முன்னாடி நவிகுட்டி, அப்புறம் என்னையும் அவரையும் பற்றி சொன்னது ஒரு போல இருக்கு!

அவர் சொல்லுறதுக்கு முன்னாடியே உனக்கு இது எல்லாமே தெரியுமே?

தெரியும்  ஆனால் இங்கே என்னையும் மீறி ஏதோ நடக்கிறது போல தோன்றுது! சரவணன் நவிலன் இவங்க இரண்டு பேரையும் பிரிஞ்சிடுவேனோ என்ற பயம் எனக்கே தெரியாமல் வருகிறது!

உனக்கு தெரியாம இந்த உலகத்தில் நிறைய அமானுஷ்யம் இருக்கு அதிசயமும் இருக்கு, அந்த அதிசயமும் அமானுஷ்யமும் உன் வாழ்க்கையில் நடக்கிறது கூட   உனக்கு பிரச்சினையா தெரியலாம்,சில நேரங்களில் சில விஷயம் நமக்கு தெரியாம இருப்பது  இயற்கை கொடுத்த வரம்!

ம்…………. ஆமாம் என்ன தீடிரென பிலாசபி லாம் கொடுக்குற லோலிட்டா!

ஏதோ வருத்தமா இருக்கிறாயே ஜிகிரி தோஸ்து சொல்லி கருத்து  சொன்ன என்னையே வாருரியா!

இல்லை சும்மா உலுலாயிக்கு தான் டி என் ஆவி பொண்ணே என்றவள்,காட்ராகி நின்றிருந்தவளை தட்டி விட்டு சிரித்தபடி மகனை நோக்கி செல்ல!

லோலிட்டா செல்லும் அவளை நோக்கியபடியே நின்றிருந்தவளுக்கு நவிலன்  அந்த கடவுளுக்கே நண்பன் என்று கூறியது இன்னும் ஆன்மாவாக இருப்பவள் அவளாளையே நம்பமுடியவில்லை!

ஆனால் நம்ப முடியாத சில பல காரணங்களுக்கு காரண கருத்தாவாக இருப்பதும், பலரின் ஜனனம் இவன் கைகளில் தான் பிறப்பெடுத்தது, இனியும் பிறக்க இருக்கிறது  என்பதை   காலம் அன்றி யார் இவர்களுக்கு கூறும்.

ஒரு புன்னகை பூவே…

சிறு பூக்களின் தீவே…

நீ என்னை மட்டும் காதல் பண்ணு…

என் வாலிப நெஞ்சம்…

உன் காலடி கெஞ்சும்…

சிறு காதல் பிச்சை போடு கண்ணு…

நா கெஞ்சி கேட்கும் நேரம்…

உன் நெஞ்சின் ஓரம் ஈரம்…

அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ…

என்று ஜானவி கணவன் சரவணனை சமாதானம் செய்ய பாட!

அவள் பாடிய பாடலில் மனதினில் சமாதானம் ஆனவன் வெளியே இன்னும் விரைப்பாக  இருக்க!

ஓ…….. இந்த பாட்டுக்கும் நீ சமாதானம் ஆகவில்லையா?,சரி இதை கேளு!

கண்ணால் பேசும் கண்ணா எனை மன்னிப்பாயா

கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா

சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடா கேளடா

உனது கோபங்களும் ஏனடா

உனது சில்லென்ற கண் பாரடா பாரடா

எனது சாபங்களை தீரடா

எதுக்கு உன்கிட்ட நான் பேசனும்,நீ தான் நான் உன்னை கம்பள்சரி வேலை செய்யனும் சொன்னது போல பேசுனுயே, அப்பவே எனக்கு தெரிந்தது உனக்கு இன்னும் என்மேல் நம்பிக்கை இல்லை என்று என்றவன் அங்கிருந்து பால்கனி செல்ல!

செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்

பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்

காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்

வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்

வாழ்க்கை கடக்குதடா நாட்கள் நரைக்குதடா

இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடா

O I’m Sorry I’m Sorry I’m Sorry என்று ஜானவி பாடியபடியே சரவணனை அனைக்க!

அவனோ திரும்பி அவள் சாரி சொல்லும் இதழை தன் இதழ் கொண்டு அனைத்து,இத்தனை நேரம் அவள் பாடிய பாடலுக்கு பதில் பாட்டு இதழை கொண்டு பாடிக்கொண்டு இருந்தான் சரவணன்!

நீண்ட இதழ் முத்தத்திற்கு பிறகு கோபம் போகிடிச்சா புருஷா என்று அழகாக தலை சாய்த்து கேட்ட மனைவியை பார்த்த சரவணன் தலையை சிழுப்பியவன், இப்படி கியூட்டா பாட்டு பாடி அவளோட செய்கையாலே மனிதனை கொள்ளுராளே பாவி, இன்னிக்கு உனக்கு கஷ்ட காலம் தான் டா சரவணா என்று மனதிற்குள் புலம்பியவன், வெளியில் மனைவியிடம் ஒரு மார்க்கமாக தலையசைத்தவன்  தூங்கபோவதாக  கைகளால் சைகையில் சொல்லியவன் விட்டால் போதும் என்று பேட்டிற்கு செல்ல !

ஜானவி நவிலன் எங்க டி என்று வாய் திறந்து மகனை கானோம் என்று சரவணன் கேள்வி எழுப்ப!

நவி குட்டிய அத்தை மாமா பார்த்துகுறேன் சொன்னாங்க சரவணா என்றவள்  இரவுடையில் அவன் அருகே படுக்க!

சரவணனோ  ஜானவி வேறு உடை மாத்தி படு என்க!

என்னாச்சு உனக்கு,   எனக்கு இந்த டிரஸ்  தான் கம்பர்டபளாக இருக்கு என்றவள் அவனை ஒட்டி படுக்க!

தள்ளி படுடி, ஜானவி அப்புறம் எதாவது இசக்கு பிசக்கா எதாவது ஆச்சுன்னா நான் பொருப்புபில்லை,

ஓ…….. அப்படி ஒன்னு இருக்கா!, என்ன எசகு பிசகு என்றவள் புருவம் உயர்த்த!

உடனே அவன் பார்வை அவள் உடல் மேல் மேய்து அவள் செலித்த பாகத்தை பார்க்க!

ஓய்….. அக்ரிமேட்ன்ட் போட்டு இருக்க புருஷா பார்த்து இருந்துக்கோ என்க!

ஏற்கனவே தன்னை தானே கட்டுப்பட்டு இருந்தவன், அவள் சொல்லில் அது எல்லாம் முடியாது போடி என்றவன் அதன் பிறகு அவன் அவளுடைய காதலனின்  வாக்குரிதியை கைவிட்டு கணவனாக அவள் உடலில் தனது அச்சாரத்தை செலுத்தி அவள் பேச்சுக்களின் தடையை தன் இதழ் கொண்டு  அடக்கியவன், அந்த படுக்கையில் இவள் கேஞ்ச அவன் மிஞ்ச என்று அவர்கள் இருவரும் தாம்பத்தியத்தில் இத்தனை நாள் பிரிவை இடுசெய்யும் விதமாக அந்த இரவை விடியா இரவாய் இருவரும் ஆழ்ந்து ரசித்து உறவு கொண்டு களிப்புடன் ஒருவரை ஒருவர் அனைத்தபடி துயில் கொள்ள ஆரம்பித்திருந்தனர்!

Advertisement