Advertisement
உன்னை நினைத்து 11
திருமணம் முடிந்து எழு மாதம் கழித்து இந்தியா வந்திறங்கிய ஜானவி தன் மகன்நவிலன், கணவன் சரவண், தங்கை சீதா மற்றும் ஆத்மா லோலிட்டாவுடன் சென்னை வந்திறங்கியர்கள் நேராக அண்ணாநகரில் இருக்கும் சரவணன் வீட்டிற்கு வர!
வாசலிலே சரவணன் குடும்பம் மற்றும் ஜானவி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாசலில் இவர்களுக்காக முறைத்தபடி தேவுடா காக்க!
ஒரு வழியாக வந்தவர்கள் காரினை விட்டு இறங்க அனைவரையும் பயபார்வை பார்த்தபடி மனைவியின் பின்னால் சரவணன் வர!
சீத்தா என்ன மாம்ஸ் என்ன இப்படி எல்லோரையும் பார்த்து இந்த பம்மு பம்முரிங்க , அன்னிக்கு என்னிடம் எனக்கும் ஜானவிக்கும் நடுவுல யாரு வந்தாலும் ஓருத்தரையும் சும்மா விடமாட்டேன் சொன்னிங்க , இப்போ என்னடான்னா இப்படி பயப்புடுரிங்க,
நானும் அதை தான் கேக்குறேன் சீத்தா நீயும் அதையே தான் சொல்லுற பேஸ்மெண்ட் ஸ்ட்ராங் பீல்டிங் வீக் என்று லோலிட்டா நக்கல் செய்ய!
சரவணனோ இன்னிக்கு எனக்கு பொங்கல் கண்பார்ம் , ஆனாலும் என் பொண்டாட்டி இருக்க பயமேன் என்று நினைத்தவன் இப்போது மனைவியை அனைத்தபடி வர!
என்ன ஆச்சு இப்படி தீடீரென பயமெல்லாம் விட்டு தைரியமாக வரானே நம்ம புருஷன் இது தப்பாச்சே என்று நினைத்த ஜானவி , அப்படியே பெற்றவர்களையும் மாமனார் மாமியார் கண்டு அழுதபடி ஆக்ட் பண்ண!
நல்லா தானே இருந்தா எதுக்கு இப்படி அழுகுறா என்று சீத்தாவை பார்த்து சரவணன் கேட்க!
எனக்கு எப்படி தெரியும் உங்க பொண்டாட்டி தானே என்று சொன்னவள் லேக்கேஜை நகர்த்தி கொண்டு முன்னாடி செல்ல!
ஏதாவது ஹெல்ப் வேணுமா என்று காதில் லோலிட்டா கேட்க!
பேய்கிட்டலாம் உதவி கேக்க முடியாது போடி அங்குட்டு சரவணன்!
அழாதம்மா அழாத ஜானவி என்று ஒவ்வொருவரும் கூவ!
நீ ஆழதடி தங்கம் அந்த நாய் உன்னை நம்ம எல்லோரையும் ஏமாற்றினதுக்கு இந்த தொடப்பை காட்டையாள சாத்து சாத்துனு சாத்துனா தான் என் மனசு ஆறும் என்ற பார்வதி சரவணனை குச்சிதொடப்பத்தால் வெலாச !
அய்யோ அம்மா வலிக்கிது அடிக்காத அடிக்காத ம்மா…. எல்லாரும் பார்க்கிறாங்க அசிங்கமா இருக்கு அடிக்காத ம்மா வலிக்குது,என்று துள்ளி குதித்து கொண்டு தொடப்பகட்டையாள் சரவணன் அடிவாங்க!
உன்னால் எங்களுக்கு மானம் போச்சு மரியாதை போச்சு, நாயே தீருட்டு தனமாக புள்ளை பெத்துட்டு அதை என்கிட்ட மறைஞ்சதும் இல்லாமல் கமுக்கமாக ஆறு மாதம் குழந்தை வளர்த்து நேராக லண்டன் போவிங்களாம் அங்கே இது நம்ம குழந்தை என்னோட மருமகள் கிட்ட சொல்லுவியாம் ,இதுலாம் தப்புன்னு தெரியலை என்று மேல்மூச்சு கிழ்மூச்சு வாங்க அவன் முடியை பிடித்து கண்ணத்தில் சப்பு சப்பு என்று பார்வதி அடி கொடுக்க!
அது வரை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த தான்யலட்சுமி விடுங்க சம்மந்தி விடுங்க அதான் அந்த பொண்ணு காவ்யா தான் இதை எல்லாம் செய்தாள் என்று ஜானவி தான் சொல்லிட்டாளே மருமகனை அடிக்காதிங்க சம்மந்தி !
மருமகப்பொண்ணு என்கிட்ட நடந்ததை அனைத்தும் சொன்னாள் ஆனா நான் பெத்த இந்த நாய் என்னையும் என் வீட்டு காரையும் மதிச்சு எதாவது சொன்னானா?, போயும் போயும் இவனுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க சம்மந்தி என்று வருத்தத்துடன் தான்யலட்சுமியிடம் பார்வதி கூற!
ருத்ரன் போதும் உன் பிள்ளையை அடிச்சது வந்து பேரப்பிள்ளைக்கு மருமகளுக்கும் ஆழம் சுத்து என்று ருத்ரன் கூற!
ச்ச……. இதை எப்படி மறந்தோம் என்று தன் தலையை பார்வதி தட்டியவர், உள்ளே சென்று அழம் கரைத்தவர் சந்தோஷமாக ஜானவியையும் நவிலனுக்கும் சுத்த ஆரம்பிக்க சரவணன் அவர்களுடன் தானும் நிர்க!
தான்யலட்சுமி பார்வதி இருவரும் ஊரு கண்ணு உறவு கண்ணு நாய் கண்ணு நரி கண்ணு பேய் கண்ணு பிசாசு கண்ணு கொள்ளிவாய் கண்ணு பக்கத்து வீட்டு காரி கண்ணு எதிர்த்த வீட்டு காரி கண்ணு எல்லாம் கண்ணும் கண்ட கண்ணும்,கேட்ட கண்ணும் பட்டு போக என்று இரு அம்மாக்களும் அழம் சுத்தி வெளியே கொட்டி விட்டு வர, சரவணன் ஜானவி நவிலன் சீத்தா மற்றும் உறவினர்கள் சூழ இவர்கள் வீட்டில் நுழைய,லோலிட்டாவோ வீட்டில் நுழைய முடியாமல் வாசலில் கதி என்று கிடக்க!
லோலிட்டா வீட்டை சுத்தி ஏதோ ஒன்னு இருக்கு அதான் நம்மளால போக முடியலை என்று புலம்பியவள் எவ்வளவு நேரம் தான் ஓரே இடத்தில் இருக்க அதனால் வெளியே சுத்தி பார்க்க சென்றுவிட்டாள்!
வீட்டில் அனைவரும் குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்க!
முகம் எல்லாம் சரவணன் தான் என்று இலங்கோ அம்மா வினிதா கூற!
ம்…ஆமா ஆனால் இந்த பால் நிறம் எல்லாம் அவங்க அம்மா ஜானவி போல என்று ருத்ரன் சொல்ல!
சிறிது நேரம் பார்வதி கைகளில் இருந்த நவிலன் தான்யலட்சுமியிடம் இடம் பெயர குழந்தையின் கைகளை தொட்டு தொட்டு பார்த்து சந்தோஷமடைந்த தான்யலட்சுமி அப்போதுதான் வலது கை மணிக்கட்டில் இருந்த மச்சத்தை பார்த்து அதிர்ந்தவர் கிரிதரனுக்கு மச்சத்தை கண்காட்ட அவரோ……. அதிர்ந்து மனைவியை பார்த்தவர் திரும்பி மகளை பார்க்க அவளோ தன் மாமா அத்தையிடம் ஏதோ சொல்லியபடி சிரித்தபடி இருக்க!
மாப்பிள்ளை பேரனுக்கு ஜாதகம் பார்த்து பேர் வச்சிங்களா, இல்லை சும்மா கூப்பிடுறதுக்காக நவிலன் வச்சிங்களா என்று கிரிதரன் கேள்வி எழுப்ப!
ஜாதகம் ஆன்லைன்ல பார்த்து பேர் வெச்சேன் ஏன் மாமா ஏதாவது தவறா என்ன என்று சரவணன் கேள்வி எழுப்ப?
போட கூறுகேட்டவனே பிள்ளை பிறந்த நேரம் சரியா பார்த்து வெச்சியா என்ன நீ பாட்டுக்கு ஆன்லைன்ல பார்த்தேன் சொல்லுற என்று ருத்ரன் திட்ட!
சரவணன் தந்தை அனைவரின் முன்னும் திட்டுவதில் கோபம் வந்தவன் அதை தன் கைக்கொண்டு மடக்கி அழுத்தி பிடித்தவன் முறைக்க முடியாமல் பார்க்க!
கணவனின் மாற்றத்தை அறிந்த ஜானவியோ மாமா அவருக்கு தெரிஞ்சது வெச்சு நவிலன் பெயர் வெச்சாரு அது தவறா என்னன்னு எங்களுக்கு தெரியாதுல, அப்படியே அது தவறா இருந்தாலும் நவி குட்டிக்கு ஜாதகப்படி பெயர் நீங்க வைங்க என்றவள் மகனை தூக்கி கொண்டு மாடியில் சரவணன் அறைக்கு கணவனிடம் வரும்படி கண்ஜாடை காட்டி விட்டு முன்னே செல்ல!
சரவணன் வீட்டின் வெளியே கார் பார்கிங் இடத்திற்கு வந்த கிரிதரன் தம்பி ,தங்கை ,மற்றும் மச்சான் குடும்பம் என எல்லாரும்,நாங்கள் இந்த தம்பி ஏதோ பெரிய தப்பு பண்ணிடிச்சு சொல்லி தான் நம்ம பொண்ணு வாழ்க்கை என்ன ஆகுமோன்னு வருத்தத்தில் வந்தோம் நல்ல வேலை அது போல எந்த கேட்டதும் நடக்காமல் நம்ம பிள்ளை வாழ்க்கையை கடவுள் காப்பாற்றி இருக்காரு , அதுவும் இல்லாமல் நம்ம மாப்பிள்ளை தம்பி ஜானவி மேல உசுரே வெச்சு இருக்கிறத போல இருக்கு,அதனால நீங்க கவலை படாதிங்க என்றவர்கள் விடைபெற்று கிளம்ப!
வீட்டின் உள்ளேயோ வினிதா அந்த பிள்ளை ஜானவியா இருக்க கண்டு இம்புட்டு பெரிய பிரச்சினை வரமா சுமூகமாக மூடிச்சிடிச்சு , இல்லை வேறயாறவது மருமகளாக வந்தாள் இவன் பண்ணுற தில்லாலங்கடி வேலைக்கு எப்பயோ வேண்டாம் என்று சொல்லி இருப்பாள், நான் உன்மையா சொல்லனும் என்றால் இந்த பிள்ளை ஜானவி மேல எனக்கு ரொம்ப கோபம் அண்ணி கல்யாணம் ஆன மறுநாளே வேலைன்னு சொல்லி புருஷன விட்டு போறாளேன்னு ,ஆனால் இப்போது எனக்கு அந்த வருத்தம் இல்லை அண்ணி, நீங்கள் பேரப்பிள்ளைக்கு ஜாதகம் பார்த்து என்ன சொல்லுறாங்கன்னு கேட்டு சொல்லுங்க என்றவர், சீத்தாவை பார்த்து கொண்டு இருந்த இலங்கோவை அலைத்து கொண்டு தன் இல்லம் நோக்கி அவர் செல்ல!
இப்போது வரவேற்பு அறையில் இருப்பது என்னவோ ருத்ரன்,கிரிதரன்,தான்யலட்சுமி பார்வதி தம்பதியினர் தான்
ருத்ரன் நான் இப்போவே நம்ம குடும்ப ஜோசியருக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்லுறேன் அவரு வந்து பிள்ளை ஜாதகம் பார்த்து பெயர் சொல்லட்டும் என்றவர் அதுவரை நீங்கள் இங்கேயே இருங்க சம்மந்தி
சீத்தா நான் ஏற்கனவே வீட்டுக்கு கூட போகாமல் நேரா இங்கே தான் வந்தேன் பெரியப்பா நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்றவள் ருத்ரன் பார்வதியிடம் கூறிவிட்டு சென்றவளுக்கு வினிதா மீது கோபம், எங்க காதல் தெரிஞ்சு அவங்க பையன் என்ன பார்கிறான் தெரிஞ்சு அப்படியே மகனை இழுத்துட்டு போறாங்க,இருங்க அத்தை நான் கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்த பிறகு இருக்கு உங்களுக்கு என்று சீத்தா புலம்பியபடியும் இலங்கோவை திட்டியபடியும் வீட்டுக்கு வந்து சேர்ந்தவள் தன்னவனுக்கு தொலைபேசியில் அடிச்சி அழைப்பு விடுக்க!
வினிதா கைகளில் இலங்கோ போன் இருக்க அதில் வைஃப் என்று பெயர் வர!
யாருடா வைஃப் என்று கேட்டவர் ஃபோனை அட்டென்ட் செய்ய!
மறுமுனையில் சீத்தா லண்டன்ல இருந்து நேரா வீட்டுக்கு கூட போகாமல் உன்னை பார்க்க வந்தா துறை பேசமாட்டீங்களோ , சரி எல்லாரும் இருக்காங்கன்னு கண்ணல கவிதை பாடுன சரி, ஆனால் ஒரு ஹாய் கூட சொல்லலாமல் அம்மா முந்தானை பிடிச்சுக்கிட்டு போயிட்டா இட்ஸ் டூ பெட் தெரியுமாட என்று சீத்தா கத்த!
அடி வாடி என் சீமை சிரீக்கி எவ்வளவு தைரியம் இருந்தா எம்பிள்ளை என்னோட முந்தானை பிடிச்சுக்கிட்டு வந்தான் சொல்லுவ,ஒரு சொந்தம்ன்னு மரியதை இல்லை , ஏன்டியம்மா நான் கேக்குறேன் என் பிள்ளை நான் கூப்பிட்டா என் பின்னாடி வரான் அதுல உனக்கு என்னடியம்மா வந்தது என்று கேள்வி எழுப்ப!
அத்தை நீங்களா நான் இலங்கோன்னு நினைச்சு பேசிட்டேன் !சாரி என்று சீத்தா பம்ம!
என்னது அத்தையா டேய் இலங்கோ என்னடா அத்தை சொல்லுறா இன்னும் எத்தனை பேருக்கு என்னை அத்தை ஆக்குவ, ஏற்கனவே பூர்ணிமா,மாலா, ஜெயந்தி எல்லாரும் அத்தை சொல்லி கூப்பிடுறாங்க இதுல இந்த பொண்ணு சீத்தா வேற அத்தை சொல்லுது, டேய் எல்லாம் பொண்ணை ஏமாத்துறத போல இந்த பொண்ண ஏமாத்தாத அப்புறம் பிரச்சினைனா நானும் அப்பாவும் வரமாட்டோம் சொல்லிட்டேன், ஒப்போசிட்டில் படுத்திருந்த மகனிடம் பேசியபடி கூறியவர் இந்தாம்மா சீத்தா அவன்டயே குடுக்குறேன் பேசிக்கோ என்றவர் பாட்டு பாடியபடியே தனதரைக்கு சென்றிருந்தார்.
ஹலோ பூஜ்ஜிமா சொல்லுடா என்று இலங்கோ பேச!
யூ சீட்டர் யாருடா அது மாலா, ஜெயந்தி, பூர்ணிமா எனக்கு தெரியாம இன்னும் யார் யார் கூட பலகுற!
யாருமா மாலா, ஜெயந்தி, பூர்ணிமா என்று இலங்கோ கேட்க!
விலக்கு எண்ணெய் யாருனு என்னை கேட்டால் நீ தான்டா என்னிடம் சொல்லனும் மாங்கா மடையா என்று இவள் திட்ட!
உன்மையாலே தெரியாது செல்லம் நீ ஏதோ தப்பாக புரிஞ்சு இருக்க என்று இலங்கோ கூற!
அப்போ அத்தை போய் சொல்லுறாங்களா!
யாரு அத்தை? ஓ….. அம்மாவ சொல்லுறீயா!
ஹோ….. அத்தை சொல்லுறேன் யாரு கேக்குற இதுலையே உன்னை எனக்கு புரிஞ்சுடுச்சுடா டைம் பாஸ்க்கு என்னை லவ் பண்ணுற மாதிரி நடிக்கிரியா சீட்டர் என்று சொல்லியவள் கோபத்துடன் ஃபோனை அனைக்க!
ஏய் அம்மா அம்மா என்று கத்தியபடி தாயின் அறைக்கு சென்றவன் ,என்ன சொன்னீங்க சீத்தாகிட்ட!
உன்மைய சொன்னேன் என்றவர் ஆடைகளை அடிக்கி கொண்டு இருக்க!
நீ தாயே கிடையாது சதி லீலாவதி மகனுக்கே சகுனி வேலை பார்த்து என்னோட லவ்வ புட்டுக்க வெச்சுடுவ போல தாய் கிளவி என்று பொறிய!
டேய் வார்த்தைய அளந்து பேசல உனக்கு அவளுக்கும் கல்யாணம் பண்ணி வெக்கமாட்டேன் கடைசி வரை பிரம்மச்சாரி தான்,தாயை பகைச்சிகாதே மகனே தாயோட தயவு உனக்கு தேவை பார்த்து இருந்துக்கோ!
அந்த ஒரு காரணத்துகாக தான் நான் அமைதியாகவே இருக்குறேன்,உன்னை லாம் எப்படி தான் எங்க அப்பா மெய்குறாறோ?
அது என் புருஷன் கவலை போட அங்குட்டு! என்றவர் அந்த பொண்ணு சீத்தா இங்க வந்துட்டா ஊர் சுத்தலாம் கடலை போடலாம் நினைச்சனா நான் சீத்தா வீட்டில் திருமணம் பத்தி பேசமாட்டேன், சமத்தா இருடா மகனே என்று வார்னிங் கொடுத்தவர்!
(ஒரு பெண்ணை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்று நினைக்கும் இந்த சமூதாயதில் தன் மகனை ஓழுக்க நெறிகளோடு வளர்க வேண்டும் என்பது வினிதாவின் கருத்து)
மறுநாள்
நேற்று மதியம் வருகிறேன் என்று சொன்ன ஜோதிடர் சிகாமணி மறுநாள் காலையில் வர!
பேரனை வைத்து கொஞ்சிய படி இருந்த பெரியவர்கள் நால்வரும் சீகாமணியை வரவேற்க
கீழே இருக்கும் போனில் மேலே இருக்கும் மகனுக்கு அழைத்தவர் ஜொதிடர் வந்திருக்கார் நீ கீழே வா என்று பார்வதி அழைத்தவர் பேரனின் பிறந்த நேரம் தேதி நாள் என்று சொல்ல!
அனைத்தையும் பொருமையாக கனித்தவர்
நவிலன் குழந்தையை அதிர்ச்சியுடன் நோக்கியவர் ஜாதகத்தை பிள்ளையார் சுழி போட்டு ஶ்ரீ ரங்கன் துணை என்று ஜாதகத்தை எழுத ஆரம்பித்தவர், எழுதி முடித்த பின்னர், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம் முதல் பாதம் சுபயோக சுபதினத்தில் வலர்பிறை செவ்வாய் கிழமையில் பிறந்த இந்த ஜாதகருக்கு பெயர் ந,நி,நீ,நே என்ற எழுத்துக்களில் ஆரம்பம் ஆகும் என்று சொன்னவர், இந்த ஜாதகருக்கு தெய்வீக ஆற்றலும், ஆன்மாவை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இருக்கு , இவன் விதிப்படி பார்த்தால் இதே ஆன்மாவை பார்க்கும் ஆற்றல் இக்குழந்தையின் பெற்றோருக்கும் இருக்கு என்றவர், இவன் தானம் அளிக்கும் குணம் கொண்டவன் , பெற்றோருடன் பிரியமாக இருப்பாள் கடின உழைப்பாளி என்றவர் ஜாதகத்தை முடி வைக்க!
என்ன சீகாமணி குட்டி பிள்ளைக்கு ஆன்மா பார்க்குற சக்தி ஆழப்போற சக்தினு ஏதேதோ சொல்லுறீங்க !
நான் பொய் சொல்லவில்லை ருத்ரன் இந்த சின்ன குழந்தை அப்பா அம்மா சரவணன் அவங்களிடமே கேளுங்கள்!
நம்ம சரவணனுக்கு சின்ன வயதில் பூஜை பண்ணி தாயத்து போட்ட பிறகு அவனுக்கு எந்த குரலும் கேட்கலைல சொல்லுங்க பார்வதியம்மா!
ஜானவி தயங்கியபடியே இல்லை ஆன்மாவை என்னால பார்க்க முடியும்!, ஆனால் எதனுடனும் நான் பேசியதில்லை என்று அப்பட்டமாக போய் சொல்ல!
சரவணன் அதிர்ச்சியாக மனைவியை பார்க்க!
இதை எல்லாம் கேட்டு இப்போது அதிர்வது ருத்ரன் பார்வதியிடம் தம்பதியினராக!
நீங்க உங்க இரண்டு பேர் ஜாதகத்தை எடுத்துக் வாங்க என்றவர், எக்காரணம் கொண்டும் இனி நவிலன் ஜாதகம் யாரிடமும் காட்டாதிங்க அவன் திருமணம் வயது வரும்போது உங்களுக்கே தெரியும் அப்போ திருமணம் பொருத்தம் பாருங்கோ என்றவர், ஜானவி சரவணன் ஜாதகத்தை பார்த்தவர் நான் எப்படி இதை கவனிக்காமல் விட்டேன்!
என்ன சாமி ஏதாவது தப்பா ஆகிட்டா பொருத்தம் சரி இல்லையா?
இல்லை இவங்க மகன் ஜாதகத்தை பார்க்கும் போது இது இவங்க ரெண்டு பேரையும் இனைக்குறதே இவன் தான் காட்டுதே,
பூர்வ புண்ணிய ஸ்தானம் இவங்க இரண்டு பேரையும் இனைக்குறதே என்றவர்!
தன் மகன் ஆதிசேஷனுக்கு அழைத்தவர் ஓலை சுவடி அறையில் ஜானவி சரவணன் நவிலன் பிறந்த நேரம் தேதி எல்லாவற்றையும் கூட்டி கழித்தவர் 290 என் ஓலை சுவடி எடுத்து வர சொல்ல!
அவனும் இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து வர அதனை மகனிடம் இருந்து வாங்கியவர், உள்ளே வந்து வீட்டில் வேலை செய்யும் நபர்களை வெளியேற சொல்லியவர் , அவர்கள் வெளியேறிய பின் அதனை வாசிக்க தொடங்கினார் தெய்வீக ஆற்றலும் ஆன்மாவை ஆழக்கூடிய ஆற்றலுடன் பிறந்த இவன் அனைத்தையும் அழப்பிறந்தவன் அமைதியானவன் 100 வருடங்கள் காத்திருந்து பிறந்தான் ஹரிகேசவன் முன்ஜென்ம சீரஞ்சீவி கங்கை மகன் ,தன்னை காப்பாற்றிய பார்த்தசாரதியை தந்தையாய் கருதியவன் , தனக்கான தந்தை சரவணன் அவதரித்க காத்திருந்து பதிலிதாய் வயிற்றில் பிறப்பான் இவன்,கங்கையாய் இருந்தவள் ஜனனம் கொடுப்பவளாக பிறப்பெடுக்க தாயை பார்க்கவும் காக்கவும் விரைந்து பிறப்பான் இவன் , பலபேர் வாழ்க்கையின் கருப்பொருள் இவன் , கர்மவினை காரகன் இவன் .
என்று அனைத்தையும் சீகாமணி வாசித்து முடித்தவர் ஓலைச் சுவடியை பார்வதியிடம் கொடுத்தவர் பாத்திரமாக வைக்கும் படி சொல்லியவர் அதன் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் தட்சனை வாங்கி கொண்டு வெளியேற முயன்றவர் பெருமாள் கோவிலில் இனி வரும் சனிக்கிழமைகளில் விளக்கு ஏற்றுமா என்று ஜானவியை பார்த்து கூறியவர் வெளியேற!
நான் இந்த கதை எல்லாம் நம்பமாட்டேன் என்ற சரவணன் தொழிலைப் பார்க்க செல்ல!
ஜானவி இதனை நம்பவும் முடியாமல் நம்பமுடியாமலும் இருந்தவள் தன்னையே பார்த்து கொண்டு இருந்த மகனை பார்த்தவள்! எதுவாக இருந்தாலும் நீ என் மகன் நான் உன் அம்மா அது மாறப் போறது இல்லை பின்னே எதுக்கு அம்மா கவலை படனும்!
சீகாமணி எப்படி இந்த பையன் ஓலைச் சுவடிள என்னோட பையன் ஆதிசேஷன் பிறந்த நேரம் பெயர் எழுதியிருக்கு என்று புரியாமல் முழித்தவர் வைத்தீஸ்வரன் கோவிலில் பயணப்பட ஆரம்பித்தார்!
ஏனோ நவிலன் சுவடியில் ஆதிசேஷன் பெயர் வந்தது தவறாகப் பட்டது , அவன் எதிரிகளுக்கு சிம்மசோப்பனமாக இருப்பான், இதில் மகன் அக்குழந்தையின் வாழ்கையில் நுழைவது இருவருக்கும் ஆபத்தாக முடியலாம் என்ற அந்த தந்தையின் உள்ளம் பரிதவித்தது.
Advertisement