Advertisement
உன்னை நினைத்து 10.2
லண்டன் ஃபேஷன் வீக்
நவின நவ நாகரீக உடைகளும், அதற்கு தோதாக துணை ஆபரணங்களும் புதுமாதிரி காலணிகளன்களும், கை பைகளும் என்று அந்த லண்டன் மாநகரமே
புதிய பாணியில் ஆண் பெண் என்று இருபாலாராலும் மக்களாலும் பல நிறுவனங்களும் நிறைந்து காணப்பட!
அங்கே ராபர்ட்,சீத்தா, ஜானவி மூவரும் வடிவமைத்த ஆடையை அணிந்தபடி மாடல்ஸ் ஒருவர் பின் ஒருவராக உடையணிந்து வர, கடைசியாக எல்லாம் மாடல்ஸ்ஸுடன் ராபர்ட் சீத்தா ஜானவி வந்தவர்கள் அதனை நிறைவு செய்ய!
நிறைவு செய்த சந்தோஷத்துடன் தங்களுடன் வேலை பார்த்த அசிஸ்டன்ட் ஒர்கேர் மற்றும் வொர்கர்ஸ் அனைவருக்கும் அன்று பார்ட்டி தந்தவர்கள்!
அப்போது கையில் கோப்பையுடன் சீயர்ஸ் என்று சொன்ன ஜானவி சரவணன்,”மது அருந்துவியா என்று அதிர்ந்து பார்த்த கணவனிடம், “அரேன்ஜ் ஜூஸ் காட்டியவள், அடுத்து பத்து நிமிடங்களில் கணவன் மற்றும் குழந்தையை காண வந்திருந்தவள் கண்டது அழும் குழந்தையை சமாதானம் படுத்தும் கணவனை தான்!”
என்ன ஆச்சு என்னோட பூஜ்ஜி குட்டிக்கு என்று குழந்தையை கணவனிடமிருந்து வாங்கியவள,அழும் குழந்தையை தன்னை நோக்கி பார்க்க வைத்து சமாதானம் செய்தவள், தன் முன்னே இருக்கும் கண்ணாடியில் அவள் முதுகிற்கு பின்னே தெரியும் கோரமான உருவத்தை கண்டு மனதில் மிரண்டவள், வெளியே அதனைக் காட்டி கொள்ளாது கணவனையும் மகனையும் பேசியபடியே அங்கிருந்து நகர்த்தி காரில் ரோம்ப தூரம் சென்றவர்கள் அழுகையை நிப்பாட்டி இப்போது சிரித்து கொண்டு இருக்கும் மகனை யோசனையுடன் பார்த்த ஜானவிக்கு நவிலனுக்கும் நம்மை போல ஆத்மா தெரியுமா!?
அப்போது தான் லோலிட்டா சொன்னது ஞாபகம் வர!
அருகில் ஜன்னலை பார்த்து கொண்டு இருக்கும் சரவணனிற்கு கூட கேட்காதுபடி ஜானவி லோலிட்டா என்று உச்சரிக்க,ஈபெல் கோபுரத்தில் உட்கார்ந்து காலாட்டி இயற்கையை ரசித்து கொண்டு இருந்த லோலிட்டா, ஜானவி கூப்பிட்டவுடன் சட்டென்று அவள் காரின் பின்சீட்டில் நவிலன் அருகில் அமர்ந்தவள் சொல்லு ஜானு என்று சொல்ல!
அதே நேரம் ஜன்னலை பார்த்து கொண்டு இருந்த சரவணன் இந்த குரலை வைத்து மிரட்சியுடன் பின்னே நோக்க! நவிலன் லோலிட்டாவை பார்த்து சிரிக்க!
இங்கே நடப்பதை வைத்து ஓரளவுக்கு ஜானவி யூகித்தவள் , அமைதியாக குடும்பத்துடன் ரூம் சென்றவர்கள் லோலிட்டா நீ நவிலன பார்த்துக்கோ நான் சரவணனுடன் பேசனும் என்று சொன்னவள் சரவணனை அலைத்து கொண்டு அங்கிருந்த மற்றோரு அறைக்கு அலைத்து சென்றவள்!
உங்க கண்ணுக்கு ஆன்மா தெரியுமா இல்லை அது பேசுறது மட்டும் கேட்குமா?
ஏய் அதை விடு முதலில் நீ யார்கிட்ட பேசுன , நவிலன் அங்கே தனியா வேற இருக்கான் சொல்லு டி ,அது நீ யார் கூட பேசுன!
நீ பதில் சொன்னா தான் நான் பதில் சொல்லுவேன் சரவணா!
நான் பேய் பார்க்கலாம் மாட்டேன் பேசுறது கேட்கும் அதுக்கு கூட எனக்கு கேக்காம இருகனும் என்று லாக்கட் போட்டு இருந்தேன் ஆனால் அது தவறி எங்கேயோ போச்சு , இப்போ நீ சொல்லு நீ யார்க்கூட பேசுன!
அது லோலிட்டா ராபர்ட் சிஸ்டர் அவளோட இதயம் தான் இங்கே துடிச்சி என்ன வாழவைக்குது, அப்போ இருந்து அவ என்னுடன் தான் இருக்கா!
அய்யோ அப்போ நம்ம பர்ஸ்ட் நைட்ட பார்த்துடாளா என்று அவன் மனைவியை பார்த்து கத்த!
அவசரமாக அவன் கத்திய வாயை பொற்றியவள்,ச்சீ…….. அசிங்கமா பேசாதடா, அதெல்லாம் அவளுக்கே அது எல்லாம் பார்க்க ஷை,அதனால மறுநாள் தான் அவளை நம்ம ரூம் வெளியே பார்த்தேன்!
பிராமிஸ்…….
பின்கி பிராமிஸ்!
சரி வா நவிலனை பேய்கிட்ட விட்டு வந்து இருக்கியே அவன் பயந்துட போறான்! என்று சரவணன் வெளியே செல்ல!
அவன் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள் கணவனை கவலையுடன் பார்க்க!
அவனோ அவளை ரொமான்டிக் லுக் விட்டவன் , என்ன டி இந்த ரணகலத்திலயும் உனக்கு ஹக் வேணும்னா கேக்க வேண்டியது தானே மாமன் கிட்ட என்றவன் ஜானவியை இறுக்கி பிடித்து அனைத்தவன் கண்ணத்தில் உம்மா கொடுக்க!
அடேய் மங்குனி புருஷா, எப்போடா சான்ஸ் கிடைக்கும் அனைகலாம்ன்னு இருந்தியா, என்றவள் அவன் விடாமல் கண்ணத்தை ஈரம் பண்ண!
இந்த நவி குட்டி கண்ணத்த ஈரம் பண்ணுறது அவங்க அப்பா போல என்று மனதில் நினைத்தவள் கணவனிடம் நவிலன் கண்ணுக்கு ஆன்மா பேய் எல்லாம் தெரியுது சரவணா என்று தன்னை பிடித்து இருந்த கணவனின் காதில் கூற!
என்ன என்று அதிர்ந்து உனக்கு எப்படி தெரியும் என்று தன் கண் கொண்டு அவள் கண்களில் கேள்வி எழுப்ப!
பாப்பா விடாமல் அழுதான்ல அப்போ பார்த்தேன் என்றவள் அது வேற இவில் ஸ்பிரிட்டா அதான் நமக்கு அது தெரியுதுன்னு காமிக்காம உங்களை கூட்டிட்டு எஸ் ஆகிட்டேன்!
இது பெரிய பிரச்சினையா இருக்கும் போலயே நவிலன் வாழ்க்கையில என்று தந்தையாக கவலை கொண்டவன் மனைவியின் தோழில் சாயா!
நாம எந்த பேயையும் ஆன்மாவையும் நமக்கு தெரியாது என்கின்ற ரிதியில் கடந்து சென்றால் எந்த பிரச்சனையும் இல்லை! அதாவது நம்மை சுற்றி சாதாரண மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ அப்படி நாம் வாழ்ந்தால் நோ பிராப்ளம் நம்ம பையனுக்கு நாம இதைச் சொல்லி வளர்களாம் சரியா என்று சரவணனை பார்த்து ஜானவி கேட்க!
ஜானம்மா இப்பயும் என் மேலே உனக்கு கோபம் போச்சா போகலையா என்று சரவணன் தன் பதியை பார்த்து கேட்க!
ம்….. உன் மேலே கோபமும் இருக்கு ஆனால் ஏதோ ஒரு வகையிலும் உன் தங்கச்சியோட பலிவாங்குற கோலாறுனாலும் உன்னோட விந்தனுவும் விளையாட்டுக்கு நண்பர்களோடு என்னோட உயிர் அனுவ டோனேட் பன்னதுல பரிசாக கடவுள் நமக்கு மகன் அளித்ததினாலும் ,உன் மேலே கொஞ்சமே கொஞ்சம் கோபம் இருக்கு புருஷா!
ஏதோ அந்த அரை லூசு பைத்தியம் காவ்யா குழந்தையோட டிடீயல் பைலை இங்கே வந்து கொடுத்துட்டு உன்கிட்ட சாரி அண்ணினு சொல்லிட்டு போச்சு, இல்லைனா என் கதி அதோ கதி தான்!
இதை போய் முதலில் நம்ம அப்பா அம்மாட்ட இந்தியா போய் சொல்லனும் சரவணா!
ம்……… என்ற சரவணன் மனைவியை அழைத்து கொண்டு வரவேற்பு அறைக்கு வர !
அய்யயோ என் குழந்தை என்று சரவணன் காற்றில் மிதந்து கொண்டு இருந்த குழந்தை பிடித்தவன் மனைவியை முறைக்க
ஏய் ஏன் டி நீ வேற இவன் முன்னாடி இப்படி தூக்குற என்று லோலிட்டாவை பார்த்து கேட்க!
ஹோ………. அப்போ நான் இல்லாத நேரம் இப்படி தூக்குனா பரவாயில்லையா டி உனக்கு! என்று மனைவியை சரவணன் கடிந்தவன்,
டேய் நவிலா உன்னை உங்க அம்மா பேய்கிட்ட கோத்து விடுறா, நீயும் அந்த பேய்க்கூட விளையாடுறீயா?வேண்டாம் டா மாகனே நமக்கு பேய் சங்காத்தம்லாம் வேண்டாம் என்று சரவணன் கத்த!
ஏய் ஜானவி பாரு உன் புருஷன் என்னை பேய்ன்னு சொல்லுறாறு இது எல்லாம் ஞாயமே இல்லை சொல்லிட்டேன் என்று கோபமாக லோலிட்டா சொல்ல!
அட பாருடா ஒரு பேய் தன்னை பேய்ன்னு சொல்லக்கூடாது சண்டை போடுது அதுக்கு சப்போர்ட் என் போடேடோ பொண்டாட்டி,”சரவணன்”
“ஜானவி “,அவ சாதுவான பேய்னு இப்படி சவுண்ட் உடுற சரவணா நீ,இதே இதைவிட அப்பாடக்கர் பேயை பார்த்தா துண்டை காணோம் துணிய கனோம் ஓடுவ அமைதியாக இருடா என் டோமேடோ என்க!
பார்த்தியா நீயும் என்னை பேய்ன்னு சொல்லிட்ட நான் போறேன் என்று லோலிட்டா கண்ணை கசக்கி கொண்டு வெளியே செல்ல!
ஜானவி கணவனை முறைக்க
என்ன முறைப்பு, எல்லாம் பேக்கேஜ் பண்ணியாச்சு காலை ஐந்து மணிக்கு பிளையிட் போய் தூங்கு என்று சிடு மூஞ்சி சரவணன் ஜானவியின் மேவாயில் கடிச்சி போ டி போ என்க!
இந்தியாவுக்கு போனதும் இருக்குடா புருஷா உனக்கு என்று மனதுக்குள் கருவியவள் ஈ….. அவனை பார்த்து இழித்தவள் போய் உறங்க செல்ல!
மனைவியிடம் பேசிவிட்டு கையிலிருக்கும் மகனை பார்க்க அவனோ விடாமல் தந்தையவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க!
மகனை பார்த்து கொஞ்சம் ஜெர்க் ஆனவன் தனக்கு பின்னாடி திரும்பி பார்க்க அங்கே எதுவும் இல்லை என்று திரும்பி மகனை பார்க்க , நவிலன் தந்தையின் பயத்தை அறிந்தனினால் கேக்க பிக்க வென்று அந்த நிசப்தமான அறையில் மகனின் சிரிப்போலியே பயம் புருத்த அங்கிருந்து ஓடி சென்று மனைவியின் அருகில் படுத்தவன் மகனை மார்ப்பதில் போட்டு பயத்தில் ஜானவியை அனைத்தபடி உறங்கி இருந்தான் சரவணன்.
Advertisement