Advertisement

உன்னை நினைத்து 10

செய்தியில் ஒரு வாரம் என்று சொன்ன பனி ஒரு மாதம் நன்றாக பேய்து முடிக்க அந்த ஒரு மாதமும் நவிலன் குட்டி தன் தாயை சிரிப்பால் மயக்க!

வீட்டில் இருந்த படியே குழந்தையை பார்ப்பதும் தான் டிசைன் பன்னுவதும் என்று இருந்தவள் அவ்வப்போது சரவணன் குழந்தையை நன்றாக பார்க்கவில்லை என்று அவனை அடிக்கும் அலவிற்கும் சென்றாள் ஜானவி!

இதில் நொந்து நூடுல்ஸ் ஆவதும் சரவணன் மட்டும் தான், அப்பாவிடம் சிரித்து விளையாடும் குழந்தை தூரத்தில் ஜானவி அறையில் இருந்து வருவதை எப்படி அறிவானோ சுவிட்ச் போட்டது போல் வாட்டர் டேங்கை  கண்ணிலிருந்து திறந்து விடுவான்!

எதுக்குடி தங்கம் அழறிங்க,யாரு  நவிகுட்டிய அழவச்சது  என்று ஜானவி கேட்க!

 அப்பாவை  குழந்தை கைக்காட்ட!

ஏய் அவன் நடிகறான் டி பாரு  நீ என்ன பாக்கும் போது சிரிச்சான், அப்படியே நீ பார்க்கும் போது பாவமா முகத்தை வச்சு இருக்கான்,இது  எல்லாம் சுத்தமா நல்லாவே இல்லை டி ஜானவி  என்று சரவணன் பயத்தில் கத்த!

பச் ஒழுங்கா பிள்ளையை பார்க்கள,இதுல குழந்தையை  மேலயே பலி சொல்லுற இருக்குடா உனக்கு, எங்க அத்தை வந்ததும் இருக்கு இப்போ பிள்ளையை அழ வச்சதுக்கு  நீயா என்னோட பக்கத்திலே வந்தேனா  ஒரு கொட்டு ஓட முடியும் ,நானா வந்தேனா  கைள கிடைக்கறது எல்லாம் உனக்கு உதையா வரும்  வாடி  என் ராசாவே ரோசாப்பூ என்று தலையை வலபக்கமாக சாய்த்து பேச!

ஆனாலும் உனக்கு ரொம்ப கொழுப்பு கூடி போச்சு டி பொண்டாட்டி கட்டுன புருஷனு கூட பார்க்காமல் இப்படி சாத்து சாத்துனு சாத்திரியே இதை கேக்குறதுக்கு ஆழே இல்லையா  என்று நீலி கண்ணீர் வடிக்க!

இந்த டகால்டி வேலை எல்லாம் என்கிட்ட செல்லுபடி ஆகாது மீஸ்டர் சரவணன்,போயி நாளைக்கு குழந்தைக்கு தேவையானதை எடுத்து வைங்க, அப்புறம் ஏதோ யோசித்தவள் சரவணன் அருகே சென்று அவன் காதோடு வாய் உரசி, நவிலனுக்கு ஐந்து வயது ஆகுற வரைக்கும் சார் பிரம்மச்சாரி,நோ ஹக்,நோ கிஸ்,நத்திங் தேர் இன்பிட்வின் அஸ்  என்றவள் புயலை போல் அவனை விட்டு வேகமாக அகல!

நான் கல்யாணம் ஆகி ஒரு தடவை பர்ஸ்ட் நைட் கொண்டாடினேன் அதுக்கப்புறம் பிரம்மச்சாரியா தானே இருக்கேன் இன்னும் அஞ்சுவருசம் தானேடா, ஆனாலும் கடவுளே இப்படி வெச்சு மொத்தாமலாம் அடிக்க கூடாது மீ பாவம், என்று  மேலே பார்த்து புலம்ப!

அருகே இருந்த லோலிட்டா  கேட்டவள் கெக்க பிக்க வென்று சிரிக்க !

அதே நேரம் சரவணன் தீடீரென கேட்ட சிரிப்பு சத்தத்தில் ஜெர்க் ஆனவன்,முருகனை வேண்டியவன் கழுத்தில் இருந்த தாயத்தை பிடித்தபடி நகர!

என்ன இது நான் சிரிச்ச சத்தம் இவருக்கு கேக்குது? என்னவாக இருக்கும்? ஒரு வேலை இவங்க குடும்பத்துக்கே பேய்ங்க கிட்ட  பேச முடியுமோ?,அடச்சீ…… சந்தடி சாக்கில நான் என்னை போய் பேய்னு சொல்லிட்டேனே, நான் ஆன்மா தானே,ச்ச வர வர இதுங்க கூட சேர்ந்து நமக்கு அறிவே இல்லாமல் போகுதே என்று லோலிட்டா புலம்பியவள் ,இதனை ஜானவியிடம் சொல்ல காற்றில் கலந்தவள் ஜானவியின் முன் நிற்க!

லோலிட்டா ஐம் சோ பிஸி  எனக்கு  ரொம்ப வோர்க் இருக்கு நீ போய் உங்க அண்ணா ராபர்ட் அதோ அந்தா இருக்கான் பாரு , போய் பார்த்து உன்னோட பாச பயிர வலர் என்றவள் லண்டன் ஃபேஷன் வீக்கீர்காக செய்த ஆடைகளை சரி பார்த்தபடி  ஜானவி,சீதா, ராபர்ட்  மூவரும்  தங்கள் வேலைகளை பார்த்த படி இருக்க!

லோலிட்டாவோ அதில் அவளுடைய சகோதரன் ராபர்ட்டை  பார்த்து கொண்டு இருந்தாள்!

லோலிட்டா, ராபர்ட், இங்கிலாந்து தந்தை டேவிட்கும் , தமிழ் தாய் பிரின்சிக்கும் பிறந்தவர்கள்!

பிரின்சிக்கு தமிழ் தெரியும் என்பதால் குழந்தைக்கு தமிழ் பேச கற்றுக் கொடுக்க பிள்ளைகளுக்கும் தமிழ் அத்துப்படி ஆகிவிட்டது!

அதே நேரம்  பத்தாவது முடித்த ஜானவி தன் தாய் தந்தையுடன் லண்டன் வந்தாள்

கிரிதரன் தான்யலட்சுமி தம்பதியினர் லண்டன் வந்தது தன் தொழிலுக்கு என்பது ஒரு பங்கு  உன்மை என்றாலும், ஆனால் மீதி உன்மை தங்கள் மகள் ஜானவிக்கு  ஹார்ட் அறுவை சிகிச்சை செய்ய!

(இப்போது  இந்தியவில் இருக்கும் டெக்னாலஜி  90 ‘s காலகட்டத்தில் கம்மியாக இருந்த காரணத்தாலும் தன்னுடைய ஓரே மகள் பிழைக்க வேண்டும் என்ற காரணத்தால் இவர்கள் லண்டன் வர, அதே நேரம் தனக்கு இதய நோய் இருக்கு என்று தெரிந்ததில் இருந்து ஜானவி சரவணனிடம் பேசுவதை தவிர்த்து இருந்தாள்)

ஜானவி ஹாஸ்பிடலில் அட்மீட் செய்து இருந்த நேரம்,

லோலிட்டா பூட் பால்  விளையாடி கொண்டு இருந்தவள் பால் தவறி லோலிட்டா கிழே விழுந்தவள் கோமா ஸ்டேஜ் போனாவள்  கண்விழித்து பார்த்ததென்னவோ ஜானவியை தான் , தனக்கு என்ன ஆனது எங்கே தாய் தந்தை மற்றும் அண்ணன் என்று தெடியவளுக்கு தன்னவர்கள் கண்ணில்படமால் போக, யாரிடம் கேட்டாலும் யாரும் பதில் சொல்லாமல் தன்னை ஒரு பொருட்டாக கூட  கண்டுக்கொள்ளாமல் செல்பவர்களை பார்த்தவள் கலிவிறக்கத்தில்  கண்ணீர் சிந்த!

தன் வயதை இருந்த ஒருத்தி கண்ணீர் சிந்துவதை கண்ட ஜானவி  ஏய்  அழுகாதே  என்று சொன்னவளுக்கும் கண்ணீர்  தான் அவளுக்கு சிறிது நேரம் முன்பு தன் தாயிடம் யார் இந்த பெண் என்று கேட்க!

அவரோ ஜானும்மா  என்ன ஆச்சு, அங்கே யாரும் இல்லாடா குட்டி என்று சொல்ல !

என்ன யாரும் இல்லையா அப்போ எப்பவும் போல இப்பவும் நம்ம கண்ணுல தெரிஞ்சது ஆவியா?  என்ற கேள்விக்கு மனது ஆம் என்று விடையளிக்க!

அப்போது அறையின் உள்ளே வந்த லோலிட்டா தாய், தந்தை,ராபர்ட் ஜானவியை பார்த்து கண்ணீர் வடித்தவர்கள் அவள் தலையை தடவ!

ம்மா,ப்பா,பிரதர்  வந்துடீங்களா என்ன  பார்க்க, வாங்க  நாம நம்ம வீட்டுக்கு போகலாம் என்று அவள் அவர்கள் கையினை பிடிக்க அதில் அவள் கை சென்று வருவதை கண்டவள்,மருபடி பிடிக்க அப்படியே ஆக, என்னாச்சு எனக்கு, என்றவள் நான் பேசுறது உங்களுக்கு கேக்களையா இல்லை கேக்காத மாதிரி நடிக்கிரிங்களா என்று கத்த!

ஏய் கொஞ்சம் அமைதியாக இருக்கியா என்று ஜானவி கத்த !

என்னாச்சு ரெஸ்ட் எடுகட்டும் குழந்தை நாங்க போகிறோம் என்றவர்கள் அங்கிருந்து அனைவரும் செல்ல!

நர்ஸ் வந்தவள் மாத்திரைகளை கொடுக்க ஜானவி   அருந்தியவள், தன்னை சுற்றி யாரும்  இல்லை என்பதை உறுதி படுத்தியவள், பொறுமையாக அவளிடம் நீஜத்தை எடுத்து கூற!

அப்போ நான் உன்னோட உடம்புல  இதயமா இருக்குறத நால தான் உன் கண்ணுக்கு தெரியுறனா!

“ஜானவி”,தெரியலை அப்படியும் இருக்கலாம்!

அப்படியும் இருக்கலாம்னா என்ன ? என்னை போல நிறைய ஆன்மாவை பார்த்து இருக்கியா?

என் கண்ணுக்கு தெரிந்தாலும் தெரிந்தது போல காட்டி கொள்ள மாட்டேன், ஆனால் நீ அழுதது இங்கே என்று இதயத்தை காட்டியவள் ரோம்ப வலிச்சது என்க!

ஹேய் தமிழ் சினிமால நிறைய பாப்பேன,அதுல  வரது போல சொல்லுற!

என்றவள் அப்போதிருந்து ஜானவியின் உற்ற தோழியாகிருந்தால் லோலிட்டா!

இதனை அறியாத நவிலனோ எங்க அம்மாவை எதுவும் செய்யாதே என்று பயத்துடன் லோலிட்டாவிடம் வாக்கு கேட்டதை நினைத்து சிரித்தவள், அப்புறம் தான் சொல்ல வந்ததை மறந்துவிட்டு கடந்த காலத்தை நினைக்க வைத்த ஜானவியின் மீது கொள்ளை ஆத்திரம் வந்தாலும், ஆனால் அதையும் விட அவள் கணவனுக்கு பேய் பார்க்க கூடிய ஆற்றல் இருக்கா என்று கேட்க வேண்டும் என்று நினைத்தவள் அதனை அப்படியே ஜானவியிடம் கேட்க!

ஜானவியோ  வேலை இடைவெளியில் காபி அருந்தியபடி உனக்கு எதற்கு இந்த தீடீர் சந்தேகம் என்று லோலிட்டாவிடம் கேட்க!

 ஏனா நான் சிரிச்சது உன் ஹப்பிக்கு கேட்டுச்சு!

சம்திங் ராங்! , நான்  இந்த

 ஃபேஷன் வீக் முடிஞ்ச பிறகு அவன் வாயிலேயே எல்லாம் உன்மையும் வாமிட் பண்ண வெச்சுடுறேன் பட் நாங்க உள்ளே பேசிட்டு இருக்கும் போது நீ உள்ளே வரக்கூடாது ஓகே வா என்று லோலிட்டாவை பார்த்து ஜானவி கேட்க!

தலையேலுத்து கழுதைக்கு வாக்கு பட்டா சரி சொல்லாம என்ன பண்றது, என்றவள் அப்புறம் நான் இல்லை பக்கத்தில் சொல்லி நவிலனுக்கு  தம்பியோ தங்கச்சியோ ரேடி பண்ணிடாதே பேபி ஏன்னா நீ உன்னோட ஆத்துக்காரர் கூட கோபத்தில் இருக்க. என்று நக்கல் பண்ணிய லோலிட்டா சு……. என்று எஸ்கேப் ஆகியிருந்தாள்!

Advertisement