Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 18

“தேவா….ப்ளீஸ்….என்கிட்ட பேசுங்க….”என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.அவனோ அவளது பேச்சுக்களை காதில் வாங்காமல் மதிய வேளைக்கு சாதம் வைத்துக் கொண்டிருந்தான்.மருத்துவமனையில் இருந்து சுமித்ரா வந்து இரு தினங்கள் முடிந்திருந்தது.பிருத்திவி சூர்யாவின் பொறுப்பில் அலுவல் வேலைகளை விட்டுவிட்டு வீட்டில் இருக்கிறான்.ஆனால் சுமித்ராவிடம் தேவைக்கு அதிகாமான பேச்சுக்கள் இல்லை.அதனாலே சுமித்ரா அவனின் பின்னே சுற்றிக் கொண்டு திரிந்தாள்.

“தேவா….தேவா…இப்ப என்கிட்ட பேச போறீங்கலா இல்லையா….”என்று அவனது கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு கேட்க,அவனோ லாவகமாக அவளிடம் இருந்து கைகளை உருவிக் கொண்டு மீண்டும் தன் வேலைகளை தொடர,சுமித்ராவிற்கு கோபமாக வந்தது.அவளும் எவ்வளவு முறை தான் அவனிடம் சாரி என்று கேட்டுக் கொண்டு நிற்பாள்.

மருத்துவமனையில் இருந்து வந்ததில் இருந்து அவனின் பின்னே சுற்றுகிறாள்,அவனோ இவளை சட்டை செய்யாமல் அவனின் வேலைகளை செய்யவும் அவளுக்கு அதுவரை இருந்த பொறுமை அனைத்தும் பறந்தது.

“பேசமாட்டீங்க…அப்படி தான…நீங்க பேச வேண்டாம்….போங்க….நானும் பேசமாட்டேன்….”என்று மூக்கு விடைக்க அவனிடம் கத்திவிட்டு மெத்தையில் வந்து அமர்ந்து கொண்டாள்.

பிருத்திவிக்கு மனைவியின் செயல்கள் அனைத்தும் சிறுபிள்ளைதனமாக தான் தெரிந்தது.அவனுக்கு மனைவியிடம் பேச வேண்டும் என்று ஒரு மனது கூறினாலும் அன்றைய நாளின் தாக்கத்தை இன்றும் நினைக்கையில் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.அதோடு தன் பின்னே சுமித்ரா சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடித்திருக்க அவளை தன் பின்னே இரு தினங்களாக சுற்ற வைத்துக் கொண்டும் அதில் சுகம் கண்டு கொண்டும் இருக்கிறான்.அதுவும் இன்று தன் கைகளை பிடித்து அவள் கேட்ட விதம் அவளை அப்படியே அள்ளிக் கொள்ளலாம் போல் தான் இருந்தது முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க,இப்போது அவள் கத்திவிட்டு செல்லவும்,

“அச்சோ…நாம கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ….கோவிச்சிக்கிட்டாளே…”என்று யோசித்தவாறே மதியவேளை சமையலை முடித்துவிட்டு,

“சாப்பிட வா மித்து….”என்று அவளை கூப்பிட,

“எனக்கு வேண்டாம்….”என்ற ஒற்றை வார்த்தை பதிலாக வந்தது.பிருத்திவியின் முகம் இறுக்கம் கொள்ள,

“மித்து எழுந்து வா…உனக்கு கோபம் என்கிட்ட தான அதை என்கிட்ட காட்டு….அதை விட்டுவிட்டு இப்படி சாப்பாட்டுல காட்டுறது எனக்கு சுத்தமா பிடிக்காது….”என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து அவன் கூற,சுமித்ராவும் அவன் கூற்றில் உள்ள உண்மை உணர்ந்து சாப்பிட வந்து அமர்ந்தாள்.இருவரும் மௌனமாக சாப்பிட்டனர்.சாப்பிட்டு முடித்து பிருத்திவி அவளுக்கு மாத்திரைகளை தர அதை வாங்கி முழுங்கியவள்,சிறிது நேரம் அமர்ந்து இருந்துவிட்டு படுத்தாள்.

பிருத்திவியும் அவளை எந்த தொந்திரவும் செய்யாமல் உண்ட பாத்திரங்களை சுத்தப்படுத்திவிட்டு வந்தவன்,தனது மடிக்கணினி உடன் அமர்ந்துவிட்டான்.சூர்யா அலுவலகத்தில் இருந்து வேலை பார்க்க இவன் வீட்டில் இருந்து தன் பங்கு வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தான்.அதனால் வேலைகளில் எந்த தடங்கலும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.

படுக்கையில் விழுந்த சுமித்ரா சிறிது நேரம் கணவனை பார்ப்பதும் பின் கண்மூடுவதுமாக இருக்க,பிருத்திவியும் இதனை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.ஆனால் எதுவும் அவளிடம் கேட்க முற்படவில்லை.சிறிது நேரத்தில் மாத்திரையின் உபயத்தால் சுமித்ரா ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட,பிருத்திவி தனது மடிக்கணினையை வைத்து விட்டு அவளின் அருகே வந்து அவளது கூந்தலை ஒதுக்கியவாறே,

“எவ்வளவு கோபம் வருது என் மித்துக் குட்டிக்கு…இப்ப தூங்கு நைட் பேசிக்கிறேன் உன்னை….”என்று விஷமமாக கூறி புன்னகை புரிந்தவன்,மீண்டும் தனது வேலைகளில் கவனமாகிவிட்டான்.

சுமித்ரா கண்விழிக்கும் நேரம் மாலையை தாண்டி இருந்தது.வீடு முழுவதும் அரை வெளிச்சம் மட்டுமே இருக்க,பிருத்திவி இருப்பதற்கான அறிகுறி இல்லை.

“என்ன இவ்வளவு நேரமா தூங்கிட்டோம்…இவரு எங்க போனாரு…”என்று யோசித்தவாறே எழுந்தவள்,குளியல் அறை சென்று முகம் கழுவி,தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வர,அப்போது வாயில் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் பிருத்திவி.சாமான் வாங்க சென்றுருப்பான் போலும் கைகளில் பையுடன் வந்தான்.

“என்னையும் எழுப்பி இருக்கலாம்ல…நானும் உங்க கூட வந்திருப்பேன்….”என்று கேட்டவாறே அவனிடம் இருந்து ஒரு பையை வாங்கினாள்.

“உன்னை அழைச்சிக்கிட்டு போகலாம்னு தான் நினைச்சேன்…ஆனா நீ நல்ல தூங்கிட்டு இருந்த…அதான் எழுப்பலை….”என்று கூறிக் கொண்டே பைகளை சமையல் அறையில் வைத்தான்.

“தேவா…நீங்க….நீங்க…”என்று சுமித்ரா ஏதோ தடுமாற,

“என்ன மித்து…”என்று கனிவாக வந்தது பிருத்திவியின் குரல்,கேட்டுக் கொண்டே அவளை நெருங்க,சுமியின் கண்கள் கலங்கி இருந்தது.அவள் ஏதோ உணர்ச்சிவசப்படுகிறாள் என்று உணர்ந்தவன்,

“ஏய் மித்து….என்னடி…ஏன் அழற….”என்று கேட்டவாறே அவளுடன் தோள் அணைத்து கேட்க,சில நிமிடங்கள் மௌளனத்தில் கரைந்தது இருவருக்கும்.அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தவன் அவளை தன் மடியில் மீது அமர வைத்து கட்டிக் கொள்ள,சுமித்ராவும் அவனது அணைப்பிற்குள் வாக பொருந்தினாள்.மனைவி பேசுவாள் என்று இவன் பார்த்திருக்க அவளோ அமைதியாக இவனது சட்டை பட்டனை சுழற்றிக் கொண்டிருக்க,

“பட்டன் வேணும்னா சொல்லுடா சட்டையை கழட்டி தரேன்….”என்று கூற,

“ம்ம்…”என்பது மட்டுமே பதிலாக வர,

“என்ன சட்டையை கழட்டவா…”என்று சற்று நிமிர்ந்து உக்கார்ந்து கேட்க,அதில் தன்னிலை பெற்றவள்,

“என்ன….”என்று கேட்க,

“சுத்தம்….”என்றவன்,அவளை தன்னை நோக்கி இழுத்து முட்டிவிட்டு,

“என்ன ஆச்சுனு கேட்டா…நீ பட்டனை சுத்திக்கிட்டு இருக்க….”என்று கூறியாவறே அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட,அதை ஆழ்ந்து அனுபவித்தவள்,

“ஒண்ணுமில்ல…”என்று கூற,

“ஏய் சொல்லு…”என்று பிருத்திவி அவளது முகத்தை இரு கைகளிலும் ஏந்தி கேட்க,அவளது கலங்கிய கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் அவனது கைகளில் பட்டு தெரித்தது.என்னடி என்று கண்களால் அவன் வின,

“நீங்க….நீங்க….”என்று கூற வந்து தடுமாற,

“நான்….என்னடா சொல்லு சொன்னா தான தெரியும்….”என்று அவனும் கேட்க,

“நீங்க என்கிட்ட பேசிட்டீங்க தேவா….”என்றாள்.அவளது பதிலைக் கேட்டவன் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.அவனது சிரிப்பைக் கண்டு முறைத்தவள்,

“எதுக்கு இப்ப சிரிக்கிறீங்க….”என்று கேட்க,அவனோ,

“மித்து…மித்து…பட்டு டி நீ….”என்று கூறிக் கொண்டே அவளது இரு கன்னங்களையும் பிடித்து கிள்ள,வேகமாக அவனது கைகளை தட்டிவிட்டு அவனிடம் இருந்து எழ முற்பட,அவளாள் முடியாமல் போனதும் தன் கைகளால் அவனது மார்பில் குத்திக் கொண்டே,

“சிரிக்காதீங்க….எதுக்கு சிரிக்கிறீங்க….”என்று சிணுங்களுடன் கேட்க,தன் மார்பில் உள்ள அவளது கரங்களை பிடித்துக் கொண்டு,

“மித்து…அழகா சிணுங்குறடி….பட்டு…”என்றுவிட்டு அவளது முதுகில் அழுந்த முத்தமிட,கணவனின் அணைப்பிலும்,முத்ததிலும் உடல் சிலிர்ப்பதும் மீண்டும் விரைப்பதுமாக இருந்தாள்.

“ம்ம்…மித்தும்மா…என்ன கோபம் என் மேல ம்ம…”என்று கேட்டவாறே அவளது முதுகில் இதழலால் கோலம் போட,அதில் நெளிந்தவள்,

“சொல்ல மாட்டேன் போங்க….”என்று முகம் திருப்பிக் கொள்ள,

“என் செல்லக் குட்டி சொல்லுடி தங்கம்….”என்று அவளை கொஞ்சிக் கொண்டிருக்க,கணவனின் இந்த புதிய பரிமாணத்தில் வியந்த சுமித்ரா,

“என்ன இன்னைக்கு ரொம்ப கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க….”என்று கேட்க,

“ம்ம…என் பொண்டாட்டி நான் கொஞ்சுவேன்….”என்று அவளது இடை கிள்ளி கூற,அதில் துள்ளியவள்,

“இப்ப சும்மா இருக்க போறீங்கலா இல்லையா….”என்று இடையில் ஊர்வலம் வந்த கைகளை எடுத்தபடி கேட்க,

“சரி சரி…இப்ப எதுவும் செய்யமாட்டேன்…”என்று விட்டு அவளை விட்டவன் எதிரில் உள்ள நாற்காலியில் உட்கார சொன்னான்.அவள் அமர்ந்தவுடன்,

“இப்ப சொல்லு….என்ன சொல்லனும்….”என்றான்.இப்போது முகம் சற்று இறுக்கத்துடன் இருந்தது.

“ஏன் என் கிட்ட இரண்டு நாளா பேசலை….”என்று சுமித்ராவும் கேள்வி கேட்க,லேசாக சிரித்துக் கொண்டே,

“ம்ம் உன் மேல கோபம் அதான்…அதுமட்டும் இல்லை நீ என் பின்னாடி சுத்துனது எனக்கு பிடிச்சிருந்தது….”என்று கூற,அவனை நன்கு முறைத்தவள்,எழ முற்பட அவளது கைகளை பிடித்து அமர வைத்து,

“மித்து…உட்காரு…”என்று கூற,அவளோ அவன் முகம் பார்பதை தவிர்த்தவள் போல் திரும்பி நின்று கொள்ள,ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டவன்,

“சரி சாரி…நான் வேணும்னு பண்ணலை…ஏதோ ப்ச்….அதான் சாரி சொன்னேன்ல….”என்று அவளிடம் மன்னிப்பை வேண்ட,அவளோ திரும்பாமல் அதே நிலையில் இருந்தாள்.தனது நாற்காலியில் இருந்து வேகமாக எழுந்தவன் சமையல் அறையிலிருந்து ஏதோ எடுத்து வந்து அவளின் கைகளில் திணித்துவிட்டு,

“கோபமா இருந்தா…இந்த கரண்டியால வேணா அடிச்சுக்க….”என்று பொருந்தன்மையாக வேறு கூறிவிட்டு அவளின் பக்கத்தில் வந்து நின்று கொண்டான்.அவனது சேட்டைகளை மனதிற்குள் சுமித்ரா ரசித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாதவாறு முகத்தை வைத்துக் கொண்டு,

“ஏன் உங்களை அடிக்க மாட்டேனு…நினைச்சீங்களா….இருங்க…”என்று அவனை அடிக்க கைகளை ஓங்க,அவனோ அவளிடம் அகப்படாமல் ஓட துவங்கினான்.சிறிய இடத்தில் இருவரும் சிறிது நேரம் ஓடிபிடித்து விளையாடினார்கள்.ஒருகட்டத்தில் அவளை இடைவளைத்து இழுத்து தன் மீது போட்டுக் கொண்டு மெத்தையில் விழுந்தான் பிருத்திவி.ஓடிக்கொண்டிருந்த சுமித்ரா எப்போது கணவனின் கைகளில் மாட்டினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

“விடுங்க….விடுங்க தேவா….”என்று அவள் திமறிக் கொண்டிருக்க,அவளை மெத்தையில் போட்டு அவளின் மேல் விழிந்தவன்,

“உஷ்…இப்ப பேச்சே இருக்கக் கூடாது…”என்று ஹஸ்கி குரலில் கூற,அவனது செய்கையிலும்,பேச்சிலும் தன் போல் முகம் சிவந்தாள் சுமித்ரா.

சுமித்ராவிற்கு பிருத்திவியின் பார்வை மாற்றம் புரிய கன்னங்கள் இரண்டிலும் ரோஜாக்கள் பூத்தது.அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தியவன்,

“மித்து…என்னை பாரேன்….”என்று கேட்க,அவளோ கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு மாட்டேன் என்று தலையாட்ட,மூடிய இருவிழிகளிலும் முத்தமிட்டவாறே,

“மித்து உனக்கு ஓகே தான…”என்று கேட்டு அவளிடம் இரண்டு அடிகளை வாங்கினான்.அவளது சிணுங்கள் மொழிகளே அவளது சம்மத்தை தெரிவிக்க,பிருத்தவியின் விரல்கள் மனைவியின் இடையில் ஊர்வலம் வந்தது.கணவனின் தீண்டலில் அகமும்,புறமும் சிலிர்த்தவள்,

“தேவா…”என்று வெளிவராத குரலில் அழைக்க,அவனோ,

“மித்து…மித்து…”என்று கூறிக் கொண்டே அவளது மேனி முழுவதும் முத்தங்களை பதிக்க சுமித்ராவிற்கு உடல் சிலிர்த்து அடங்கியது.மனைவியின் முகம் முழுவதும் தனது முத்திரையை பதித்தவன்,இறுதியாக அவள் இதழ்களில் இளைப்பாறினான்.கணவனின் தீண்டலிலும்,முத்ததிலும் சுமித்ரா முழுவதுமாக தன்வசத்தை இழந்தாள்.தனது தீண்டலில் மயங்கும் மனைவியை மேலும் தனது முத்தங்களால் மயங்க செய்தவன் தன் காதலை செயல்களால் உணர்த்தினான்.

இரவு நேர ஏகந்தத்தில் அவர்களின் அறை முழுவதும் சுமித்ராவின் சிணுங்கள்களாளும்,பிருத்திவியின் பிதற்றல்களாலும் நிறைந்தன.பிருத்திவியும்,சுமித்ராவும் சிறுக சிறுக சேமித்த தங்கள் காதலை தங்களுக்கே உரித்தான முறையில் வெளிப்படுத்தினர்.இருவரும் களைத்து உறங்கும் நேரம் ஆதவன் பூமியில் தன் கதிர்களால் நிரப்பிக் கொண்டிருந்தான்.

Advertisement