Advertisement

                                 7

பாவனாவும் ஆதிராவின் அருகில் தொப்பென்று அமரவும் கருண் அவள் அருகில் நெருங்க போக கவின் அதையும் விழிகளால் அடக்கிவிட்டு சிந்துவை அழைத்து

சிந்து பாவனாவை உன் அறைக்கு அழைத்து செல்என்றான் சிந்துவும் பாவனாவை பற்றி எழுப்ப அவளோ ஆதிராவை பார்த்தவாறு தயங்கி நின்றாள்..அவள் கைகளில் ஸ்ரீயை தந்து தான் பார்த்துக்கொள்வதாக கண்களை மூடி திறந்தவன் பாவனாவை வலுக்கட்டாயமாக அனுப்பி விட்டு அருகில் நின்ற சஞ்சயையும் கருணையும் போக சொல்லி கண்காட்ட அவர்களும் விலகி சென்றனர்..

தன்னை சுற்றி இருந்த அனைவரும் நகர்ந்த பின்னரும் அதே பார்வையுடன் கதிரையில் அமர்ந்திருந்தவளின் கையை இறுகப்பற்றி அவளை எழுப்பியவன் தர தரவென கீழ்த்தளத்தில் அமைந்திருந்த விருந்தினர் அறைக்கு இழுத்து சென்றான்.. தன்னை கவின் இழுத்து செல்வதை உணர்ந்தவள் தன் கைகளை விலக்க போராட முரட்டு பிடியுடன் உள்ளே சென்று சோபா ஒன்றில் தள்ளி விட்டான்..அவன் அப்படி தள்ளவும் சுழன்றபடி சென்று சோபாவில் தொப்பென்று விழுந்தவள் சட்டென்று எழுந்து நிமிர்ந்து அமர்ந்து கவினை பார்த்து முறைத்தாள்.

என்ன முறைப்பு?”

இப்போ எதுக்கு என்னை இங்க இழுத்துக்கிட்டு வந்தீங்க?? யார் உங்களுக்கு என் கையை பிடிக்க அனுமதி தந்தா?? என்ன தைரியம் உங்களுக்கு? மத்தவங்க என்ன நினைப்பாங்க என்றொரு காமன்சென்ஸ் கூட வேணாம்?” என்று பட படவென அவள் பொரியவும் கை தட்டியபடி அவளை நெருங்கியவன்

ஏய் கொஞ்சம் மூச்சு விடு.. இவ்வளவு நேரமும் பேய் அடிச்ச போல பே என்று முழிச்சுக்கொண்டு இருந்த? இப்போ என்னடானா தாம் தூம் என்று குதிக்கிற?” என்றவுடன் தான் அங்கு சற்று முன் நடந்தவை எல்லாம் நினைவில் வர  தலையை தாங்கியபடி குனிந்து அமர்ந்தவள் சற்று நேரத்தின் பின்னர் நிமிர்ந்து கவினை அண்ணாந்து பார்த்து

இப்போ உங்களுக்கெல்லாம் என்ன தான் சார் வேணும்? நான் போறேன்..என்னை விடுங்கஎன்று கூறி எழபோனவளை கைகாட்டி தடுத்தவன்

எனக்கு இதுக்கான பதிலை மட்டும் சொல்லிட்டு போஎன்றான்..

கேள்வியாக அவன் முகம் அவள் நோக்கவும்

அந்த பொண்ணு அவ்வளவு கதைக்குது..என்னோட இவ்வளவு நேரம் வாய் கிழிய பேசுனியே?அப்பிடி திருப்பி ஒரு பதிலடி குடுக்க என்ன? என்கிட்ட மட்டும் தான் உன் வீரம் எல்லாமா?”என்று கேட்டவுடன்

ஹா..ஹா.” என்று சிரிக்க தொடங்கினாள்..அவள் சிரிக்கவும் கடுப்பானவன்

ஹேய் நிறுத்து..உனக்கு மூளை ஏதும் கலங்கிடுச்சா?? இப்படி கெகேபெக்கே நு சிரிக்கிற?” என்று பேசவும்

ஹா..வீ..வீரம்..ஹா..ஹா..என்னை பார்த்து வீரத்தை பற்றி கேட்டா நான் என்ன சொல்ல?” என்று மீண்டும் சிரிக்க தொடங்கியவளை அடக்காமல் பார்த்தபடியே நின்றான்.. சிறிது நேரத்தில் தானே சிரிப்பை விழுங்கியவள் விரக்தியாக சிரித்து

இப்படியான பேச்சை நான் கேக்கிறது முதல் தடவை இல்ல சார்.. ஆனா இன்றைக்கு ஏதோ கொஞ்சம் மனிதர்களை என்ன சுற்றி பார்த்ததும் மனசு லேசா இளகிட்டு போல..இனி இப்படி எல்லாம் நடக்காது..நீங்க கேட்டதுக்கு ஆன்ஸர் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்..அப்போ நான் கிளம்புறேன்என்றபடி அவள் எழுந்து செல்லவும் அவளை பார்த்த படியே சிந்தனை படிந்த முகத்துடன் அப்படியே நின்றவன் கண்களுக்கு அவளிடம் மீண்டிருந்த கம்பீரமும் படாமலில்லை.

பின்னர் ஸ்ரீயையும் பாவனாவையும் அழைத்துக்கொண்டு ஆதிரா கிளம்புவதாக கூறவும் அங்கு வந்த மனோகர் முதற்கொண்டு சிந்துவரை அனைவரும் மாறி மாறி ஆதிராவிடம் மன்னிப்பு கேட்டவாறு இருந்தனர்..

அவள் எவ்வளவு சொல்லியும் சமாதானமாகாமல் அவர்கள் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கவும் அவர்கள் மனசஞ்சலத்தில் இருப்பதை அறிந்து கொண்டவள் அங்கு தவிப்பாக நின்றுகொண்டிருந்த தனலக்ஷ்மியின் அருகில் சென்றாள்..அவரின் கைகளை பற்றியவள்

உங்களை பார்த்தா என் அம்மாவை போலவே இருக்கீங்க.நீங்க போய் என் மனசை காய படுத்துவீங்களா? அது தற்செயலா நடந்த சம்பவம்..ஏன் என்னை பார்த்து அப்படி கேட்ட பொண்ணு கூட வேணும்னே கேட்டிருக்க மாட்டாங்க..என்ன உங்க புள்ள தான் ஓவரா சீன் ஆக்கிட்டார்என்று கூறி கண்ணடித்தவளின் தலையை செல்லமாக கலைத்தவர்

போக்கிரி.ஆனா இங்க நடந்தத வைச்சு இனிமே இங்கா வராம மட்டும் இருந்திடாதமா

கண்டிப்பாமாஎன்று அவரை சமாதான படுத்தியவளுக்கு தெரியவில்லை தான் இங்கே வந்து வாழும் நிலை வரும் என்று.

ஆதிராவின் வீட்டில் அவர்களை இறக்கிவிட கருணை கவின் அனுப்பவும் அவன் கையை அழுத்தி தன் நன்றியை தெரிவித்துவிட்டு விரைந்து சென்று காரை ஸ்டார்ட் செய்தான்.ஆனால் கவின் நினைத்ததை போலவே ஆதிரா அதற்கு மறுப்பு தெரிவிக்கவும்  அவளை முறைத்தவாறே அருகில் சென்று

அடிக்கடி மற்றவங்க சொல்லுறதையும் கேட்டுக்கோ..கேட்டா நீ ஒன்றும் அரையடி குறைஞ்சிட போறதில்லைஎன்று கூறினான்..அதை கேட்டவள் அவனை முறைத்தாலும் அவனின் முடிவை றுக்காமல் ஸ்ரீயை தூக்கி கொண்டு பாவனாவுடன் காரினுள் சென்று அமர்ந்தாள்..

கருண் ஆதிராவின் வீட்டருகில் காரை நிறுத்தவும் ஸ்ரீயை தூக்கிக்கொண்டு முன்னே சென்ற ஆதிரா சற்று தயங்கி பாவனாவை பார்த்து

நீ போய் கருண் சாருக்கு தாங்க் பண்ணிட்டு வாஎனவும் இலேசாக தலை அசைத்துவிட்டு மென்னடை இட்டு கருணின் காரை நெருங்கினாள்.அவள் செல்வதை பார்த்து ஒரு பெருமூச்சை சத்தமின்றி வெளியிட்டவள்,மௌனமாக உள்ளே சென்றாள்.

பாவனாவை இறக்கிவிட்டு விட்டு அங்கிருந்து செல்ல பிடிக்காமல் ஸ்டியரிங்க் வீலை தட்டியபடி முன்னே பரந்து விரிந்திருந்த வீதியை இலக்கில்லாமல் வெறித்துக்கொண்டு இருந்தவன் அருகில் பாவனா செருமும் சத்தம் கேட்கவும் சட்டென்று திரும்பி பார்த்தான்.

அவளை கண்டதும் வேகமாக காரிலிருந்து இறங்கி அவளருகில் நெருங்கியவன் தவிப்பாக அவளை பாக்கவும் அவனின் பார்வை வீச்சை தாங்காமல் தலை குனிந்தவள் மறுபடியும் நிமிர்ந்து பார்க்க அப்பொழுதும் பார்வையை விலக்காமல் அப்படியே நின்றிருந்தான்..

இது சரி வராது என்று எண்ணியவளாக அவனை நேராக நோக்கி

எங்களை ட்ராப் செய்ததுக்கு தாங்க்ஸ்என்று கூறிவிட்டு திரும்பவும் கருண் மெல்லிய குரலில்

அவ்வளவு தானா?” என்று கேட்டான்.மெல்ல திரும்பி அவனை பார்த்தவள்

வேற என்னஎன்றாள்.

அப்போ வேற ஒன்றும் இல்ல ?”

“…”

சொல்லு பாவனா..என் மனசு உனக்கு புரியவே இல்லை இல்ல? அங்க உங்களை நாக்கு மேல பல்லை போட்டு ஒருத்தி தப்பா பேசுறப்போ நீ கலங்கி நின்றாயே அப்போது உன்னை அணைத்து ஆறுதல் படுத்துற உரிமை என் கிட்ட இருக்கல..ஆனா அந்த உரிமையை காலம் பூராவும் கிடைக்காம செய்ய போறியா பாவனா? சொல்லு பாவனா.. நான் கொஞ்சம் விளையாட்டு தனமானவன் தான்..ஆனா தப்பானவன் இல்ல பாவனா

இப்போ நீங்க தப்பானவர் என்று நான் எப்போ சொன்னேன்?”

நீ சொல்லல தான் ஆனா நீ நடந்து கொள்கிற விதம் அப்படி தான் இருக்கு

என்ன அப்படி தான் இருக்கு?” என்று குரல் உயர்த்தி கேட்டவளை பார்த்து அதிர்ச்சி அடைந்தவன்

பாவனாஎன்று முனகவும்

பாவனா தான்..இப்போ உங்க கண்ணு முன்னாடி இருக்கிற பாவனாவை தான் உங்களுக்கு தெரியும்..என்னோட கடந்த காலம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? என்ன சார் தெரியும் உங்களுக்கு என்னை பத்தி? சும்மா பார்த்தேன் ரசிச்சேன் காதலிச்சேன் என்று புலம்புறிங்களே,என்கிட்ட இருந்து எதை எதிர்பார்க்கிறிங்க நீங்க..உங்களை பார்த்தப்போ எனக்குள்ள ஒரு தடுமாற்றம் வந்தது உண்மை தான்..” என்றவுடன் கருணின் முகம் பிரகாசமானது..

உங்க கற்பனையை நிறுத்துங்க சார்..கணநேர தடுமாற்றத்துக்காக என் வாழ்க்கையை பணயம் வைப்பேன் என்று எப்படி நீங்க எதிர் பார்க்கலாம்? வேணாம் நான் உங்களுக்கு வேணாம்..இது ஜஸ்ட் இப்போ வந்த லவ் தானே..கொஞ்ச நாள் போனா மறந்திடுவீங்க.. என்னை விட்டுடுங்கஎன்று கூறி கை இரண்டையும் கூப்பியவள்

எல்லாத்துக்கும் தாங்க்ஸ்என்று விட்டு வாயை கையால் மூடி கேவலை அடக்கியவாறு வீட்டினுள் ஓடினாள்..

 

உற்சாகமாக போன கருண் சோர்ந்து வருவதை ஹாலில் அமர்ந்து இருந்து மடிக்கணணியில் மெயில் செக் செய்து கொண்டிருந்த கவின் கண்டான்..அவன் ஹாலில் அமர்ந்து இருப்பதை கூட உணராமல் பித்துப்பிடித்தவனை போல தட தட வென படிகளை கடந்து தன்னறைக்குள் நுழைந்ததை பார்த்ததும் ஒரு பெருமூச்சுடன் மடிக்கணணியை மூடி வைத்தவன் கருணை தொடர்ந்து சென்றான்.

 

அங்கே அறையில் இருந்த பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்து தலையை கைகளில் தாங்கி ஆடிக்கொண்டிருந்தவனை கண்டவுடன் பாவனாவை விடும் பொழுது ஏதோ நடந்துள்ளது என்று ஊகித்து கருணை நெருங்கி அவன் தோள்களில் கை பதித்தான்.

 

கவின் கைவைத்தவுடன் நிமிர்ந்தவனின் கண்கள் இரண்டும் கோவை பழம் போல சிவந்து இருந்தது.கவின் கருணை இந்த தோற்றத்தில் முதல்முறையாக பார்க்கிறான்..மற்றவர்களை கூட காயப்படுத்த அறியாத கருண் அழுதானா? உடல் விறைக்க கூர்மையாக அவனை நோக்கியவன்

 

என்னாச்சு கருண்?” என்று கேட்கவும் கவின் துணை வருவான் என்ற நம்பிக்கையில் நடந்த அனைத்தையும் மெல்லிய குரலில் பகிர்ந்தவன்

 

என்..எனக்கு என்ன செய்யனும் என்றே தெரியலடா..அவ முடியாது என்று சொல்லிட்டு போனதுமே எல்லாமே ப்ளாங்க் ஆன மாதிரி இருக்குடா. நான்..நான்

 

லூஸு தான்என்று கூறிய கவினை திடுக்கிட்டு பார்த்தான்..கருண் தன்னை பார்ப்பதை கண்டவுடன் நன்கு முறைத்தவன்

 

என்ன பார்க்கிற..நீ லூஸு தான்..இங்க நடந்ததின் தாக்கமே அவங்களுக்கு முழுசா போய் இருக்காது.. அதுக்குள்ள போய் இவர் ரொமான்ஸ் பண்ணி இருக்கிறார்..சரி பண்ணது தான் பண்ண அந்த பொண்ணு சொன்னதையாவது விளங்கி கொள்ள வேண்டாம்? அவள் நான் உங்களுக்கு வேண்டாம் என்றாளே தவிர நீங்க எனக்கு வேண்டாம் என்று சொல்லல மடையா..இதிலிருந்து என்ன தெரியுது?”

 

அவன் கேட்டவுடன் முகம் பிரகாசிக்க நிமிர்ந்தவன்அப்போ..அப்போ

 

ஆமாடா.. அவளுக்கு உன்னை தவிர வேற யாருமே துணையா வர முடியாது..அதை தான் சிம்பாலிக்கா சொல்லிட்டு போய் இருக்கா

ஹேய்.” என்று கூச்சலிட்டபடி கவினை அணைக்கவும் புன்னகையுடன் அவனை விலக்கியவன்

 

இனி வரும் ஒவ்வொரு கட்டத்தையும் நீ யோசிச்சு செய்யனும் கருண்என்று கூறி சில திட்டங்களை கூறவும் போதனை கேட்கும் சிஷ்யனாக மண்டையை உருட்டியபடி கேட்டுக்கொண்டு இருந்தான் கவினின் சிஷ்யன் கருண்..

 

அங்கு கருணை வார்த்தையால் தாக்கிவிட்டு அழுதபடியே ஓடிவந்த பாவனா வாசலில் கைகட்டியபடி தன்னை நோக்கிக்கொண்டு இருந்த ஆதிராவை கண்டவுடன் அழுகையை அடக்கி கண்களை துடைத்தவாறு வரவழைத்த புன்னகையுடன் அவளை நெருங்கி

என்ன அண்ணி? தூங்கலையா?” எனவும் இல்லை என்பதாக தலையாட்டி அவளை அழுத்தமாக நோக்கி கொண்டு இருந்தாள்..சிறிது நேரம் ஆதிராவின் பார்வையை தாங்கியவள் அதற்கு மேல் முடியாமல் உடைந்து போய்

அண்ணிஎன்ற சிறு கதறலுடன் அவளை அணைத்து கண்ணீர் விட தொடங்கினாள்.

அவளின் முதுகை சிறிது நேரம் தடவியபடி அசையாமல் நின்ற ஆதிரா பின் ஒரு பெருமூச்சுடன் அவளை விலக்கி அவள் முகத்தை அழுந்த துடைந்துவிட்டாள்..பின்னர் ஒரு வார்த்தையும் பேசாமல் அவளை அறைக்கு அழைத்து சென்று அவளை குளிக்க அனுப்பி விட்டு அங்கிருந்த கதிரையில் அமர்ந்து சிந்தனை வயப்பட்டாள்.

பின் இரவு உடையணிந்து வெளியே வந்த பாவனாவை பார்த்து புன்னகைத்தவள் அவளை படுக்க செய்து நெற்றியை வருடியபடி

எதையும் யோசிக்காம தூங்கு பாவனா.எல்லாம் நல்லதாவே நடக்கும்என்று தனக்கும் சேர்த்து கூறியவள்,பாவனா தூங்கியவுடன் அவளுக்கு பெட்ஷீட்டால் போர்த்திவிட்டு இரவு விளக்கையும் ஃபேனையும் போட்டுவிட்டு கதவை சாத்திவிட்டு தனது அறைக்கு சென்று தூங்கி கொண்டிருந்த ஸ்ரீயின் அருகில் சரிந்தாள்..

கைகள் ஸ்ரீயை வருடியபடி இருந்தாலும் சிந்தனைகள் எங்கெங்கோ சிறகடித்து பறந்துகொண்டு இருந்தன..

நடந்ததை பார்த்தால் கருண் சார் பாவனாவை விரும்புறாரா?’

பாவனாக்கும் அப்போ இதுல விருப்பம் இருக்கா?’

அவளுக்கு எப்படியும் நல்ல ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்க தானே வேணும்

எப்பயுமே என் கூடவே வைச்சிருக்க முடியாதே..என்னை விட ஒரு பாதுகாப்பான இடம் வேணும்..

அது மனோகர் சார் குடும்பம் என்றால் நல்லது தானே?’

ஆனா அவங்களுக்கெல்லாம் இது பிடிக்குமா

அதுக்காக பாவனாவின் ஆசையை நிறைவேற்றாமல் போனா இவ்வளவு நாள் நான் கஷ்டப்பட்டதுக்கெல்லாம் ஒரு பிரயோசனமும் இல்லாம போய்டாதா?’

பாவனா உறுதியா கருண் சாரை விரும்புறாளா?’

அதை உணர ஒரு நாள் எப்படி போதும்?’

கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்..எப்படியும் என் கிட்ட வரதானே வேணும்

என்றபடி யோசித்தபடி சாய்ந்திருந்தவள் அப்படியே உறங்கியும் போனாள்..

மறுநாள் காலையில் பாவனா இயல்பாக இருக்கவும் ஆதிராவே ஒரு நிமிடம் தன் கணிப்பில் சந்தேகப்பட்டு போனாள்.அவள் பிறந்ததில் இருந்து அவளின் கணிப்புக்கள் ஒரு போதுமே தவறியது இல்லை,.

பாவனாவின் உதட்டில் இருக்கும் புன்னகையில் உயிர்ப்பு இருக்காதது மட்டுமே அவளது கணிப்பை உறுதிப்படுத்தியது..அவளின் நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனவள் மனதினுள் புன்னகையுடன் சொல்லிக்கொண்டாள்

பாவனா..நீ வளர்ந்து விட்டாய்

பாவனாவும் முயன்றவரை இயல்பாக இருக்கத்தான் எண்ணினாள்..ஆனால் கருணை காணும் வரை தான் அதெல்லாம்..அவனின் நடவடிக்கைகளை பார்த்து அமைதியாக இருக்கவும் முடியாமல் தட்டி கேட்கவும் முடியாமல் தவித்து தான் போனாள்..அப்படி என்ன கருண் செய்திருப்பான்??

அன்றூ காலையிலேயே கவின் சிந்துவை தனதறைக்கு அழைத்தான்.

அவனது அறையில் கருணும் அமர்ந்து இருக்க சந்தேகமாக இருவரையும் நோக்கியபடி உள்ளே வந்தவள் கவினின் அருகே அமர்ந்து அவனை பார்த்து

என்னண்ணா?” என்று வினவினாள்..அவள் தலையை செல்லமாக கலைத்து விட்டவன்

தி ஃபேமஸ் பிஸ்னஸ் மக்னெட்ஸ் கவின் அன்ட் கருண் சக்கரவர்த்தி இருவருக்கும் உங்களது உதவி தேவை படுகிறது இளவரசியாரேஎன்று கூறி சிரித்தான்..

அவன் அவ்வாறு கூறியதும் அவனின் வலிய தோள்களில் அடித்தவாறு சிணுங்கியவள்

அண்ணா..விளையாடாதிங்கஎன்றாள்.. அவளின் கைகளை பற்றீ

சிந்து குட்டி நான் விளையாடி நீ பார்த்திருக்கிறியா? நான் எது சொன்னாலும் அதுல ஏதோ விஷயம் இருக்கும் என்று உனக்கு தெரியும் ?” என்று கேட்டு அவள் தலை அசைத்தவுடன் மெல்லிய குரலில் நடந்த அனைத்தையும் கூறியவன்

இதுக்கு உன் உதவி கருணுக்கு தேவைஎன்றதும் திக்பிரமை பிடித்து போய் அமர்ந்து இருந்தாள்..

Advertisement