Advertisement

கவினுக்கு கருணின் நடவடிக்கைகள் தெரிந்தாலும் அவனை எதிலுமே தடுக்க முயற்சிக்கவில்லை..அவன் வாழ்க்கை அவனாகவே பார்த்துக்கொள வேண்டும் என்று எதிர்பார்த்தாலும் கூடியவரை வெளியூர் பிஸ்னஸ்களிற்கு சஞ்சயை அனுப்பி வைத்தான்..

அன்றும் அப்படிதான் இரவு உணவிற்காக அனைவரும் மேஜையில் ஒன்று கூடி இருந்தனர்..அப்பொழுது இரவு உணவுகளை எடுத்து வைத்த தாயின் கையில் இருந்த அன்னாசி பச்சடியை பார்த்த சிந்து

அம்மா..பாவனா அக்காக்கு நீங்க செய்து தந்த பச்சடியை குடுத்தேனா..ஆனா அவங்களுக்கு அன்னாசியே ஒத்துவராதாம்..அதனால அவங்க ஃப்ரெண்ட்ஸ் கு குடுத்திட்டாங்க..பச்என்று சலித்தவாறே தன் தட்டில் உணவுவகைகளை அடுக்க தொடங்கினாள்..

அப்பொழுது தான் ஆசையாக அன்னாசிபச்சடியை தூக்கிய கருண் சிந்து கூறியதை கேட்டவுடன் அதை அப்படியே வைத்து விட்டு மற்றயவற்றை எடுக்கலானான்..இதை பிறர் கவனிக்காவிடினும் கவினின் கண்களுக்கு இது தப்பவில்லை..தனக்குள்ளேயே சிரித்து கொண்டவன் சீக்கிரம் கருணின் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கவேண்டும் என எண்ணினான்..

அதற்கான சந்தர்ப்பமும் சிந்துவின் பிறந்தநாள் வடிவில் சீக்கிரமே அமைந்தது.

அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக பாவனாவையும் ஸ்ரீயையும் கிளப்பி வருவதற்குள் ஆதிராவிற்கு முழிபிதுங்கி போய்விட்டது.கோயில் வாசலில் பாதணிகளை கழற்றி விட்டு  அண்ணாந்து கோயில் கோபுரத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்ட தாயையும் கைகூப்பி வணங்கிய அத்தையையும் பின்பற்றி கோபுரத்தை பார்த்து வணங்கிய ஸ்ரீ

ம்ம..தாமி ..ஏன் கும்பிதுதா?”  என்று வழக்கமாக கேட்கும் கேள்வியை ஆதிராவை பார்த்து கேட்கவும் அண்ணியை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தாள் பாவனா..

அவளை புன்னகையுடனே விழிகளால் அதட்டி அடக்கியவள் ஸ்ரீயை பார்த்து

அம்முக்குட்டி..கோபுரத்தை பார்த்து ஏன் கும்பிடனும்னா இனி வரும்  இடம் எல்லாம் வேற சிந்தனை இருக்க கூடாது..பக்க்தி மட்டும் தான் மனசுல இருக்கனும் என்றதுக்கு தான்என்றாள்..

பின்னர் கால் கழுவும் பொழுது ஸ்ரீயை ஆதிரா இறக்கிவிட தன் பட்டு பாவாடையை சற்று தூக்கி பிடித்தவள் ஆதிரா நீர் ஊற்றவும் தன் காலை அவளுக்கு ஏதுவாக உயர்த்தி பின் குதிக்காலையும் காட்டினாள்..ஆதிராவின் வழிநடத்தலை அச்சுபிசகாமல் செய்தவளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்ட பாவனாவை நோக்கி பாய்ந்தது அடுத்த கேள்விக்கணை..

பானா ஏன் கால் கதுவனும்?”

ஆங்..அது..அது..கால் அழுக்கா இருந்தா சாமி கோவிச்சிடும் அதான்என்று அவளுக்கு தகுந்த பதிலை கூறி பெருமூச்சிட்டவாறே கோயிலுக்குள் நுழைய இருந்த பாவனாவை தடுத்து நிறுத்தியது

பாவனா அக்காஎன்ற அழைப்பு..

எவடா அவ இவ்வளோ மரியாதையா நம்மள கூப்பிடுறது?’ என்றபடி திரும்பிய பாவனா தன்னை நோக்கி ஓடி வந்த சிந்துவை கண்டு புன்னகைத்தாள்.

ஹப்பா என்ன ஸ்பீடுல ஓடுற சிந்து..பேசாம இன்டர் காலேஜ் ரேஸ்ல நீ பார்டிசிபேட் பண்ணிடேன்என்று கிண்டலாக கூறி சிரித்தவளை கண்டு அசடு வழிய புன்னகைத்து மூச்சுவாங்கியவள் அப்பொழுது தான் அவள் கையில் இருந்த ஸ்ரீயை கண்டு

ஸ்ரீ?” என்று கேள்வியாக விரல் நீட்டியவளை பார்த்து ஆம் என்பதாக தலையசைத்த பாவனா அருகில் நின்ற ஆதிராவை காட்டி

இவங்க தான் என்னோட அண்ணிஎன்று கூறவும் ஆதிராவை பார்த்து புன்னகைத்த சிந்து

ஹாய் அக்கா..நான்என்று கூறி அவள் முடிக்கமுன்

சிந்து..சிந்து பைரவிகூறி பாவனாவை பார்த்து சிரித்தாள்.

எப்படி என்றதாக விழிகளில் வினாவை தாங்கி பார்த்த சிந்துவை பார்த்து கண்சிமிட்டிய பாவனாநான் என் அண்ணிக்கிட்ட எதையுமே மறைச்சதில்ல சிந்துஎனவும் சிந்துவின் பின்னால் இருந்து

எந்த ட்ரெய்ன் பிடிக்க கழுதை  இந்த ஓட்டம் ஓடி வந்த?” என்ற குரல் கேட்கவும் தலையில் குட்டிய படியே தன் பின்னால் வந்து நின்ற  தன் அன்னையையும் அத்தையையும் பார்த்து மன்னிப்பு கோரும் விதமாக புன்னகைத்தாள்.

பின்னர் அவர்களுக்கிடையிலான அறிமுகப்படலம் முடிந்த பின்னர் அனைவரும் உள்ளே சென்று ஒன்றாக வணங்கிவிட்டு பிரகாரத்தில் சென்று அமர்ந்தனர். அமைதியாக கழிந்த சில நிமிடங்கள் வரை ஸ்ரீயின் குரல் மட்டும் தான் அங்கு ஒலித்து கொண்டிருந்தது.அவளின் குரல் உயரும் பொழுது மட்டும் ஆதிரா சிறுகுரலில் அமைதியாக இருக்கும் படி வலியுறுத்தி கொண்டு இருந்தாள்..ஒரு கட்டத்தில் ஸ்ரீ

ஏன் மா?” என்றூ கேட்கவும் அருகில் சம்மணம் இட்டு அமர்ந்திருந்தவளை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டவள்

அம்முக்குட்டி..நாம சாமி கும்பிடுறப்போ சத்தமா இருந்தா கோவம் வரும் ? அப்போ மத்தவங்க கும்பிடுறப்போ நாம என்ன செய்யனும்?” என்று கேடவும்

தனது வாயில் கையை வைத்து உஷ்என்று கூறி சிரித்தவளை சமத்து என்று கொஞ்சிக்கொண்டாள்..பாந்தமாக பொருந்தி போன ஆதிராவையும் ஸ்ரீயையும் பார்த்த தனலக்ஷ்மி

ரெண்டு பேருக்கும் எங்க கண்ணே பட்டுடும் போல இருக்குமா..போய் ஒருக்கா திருஷ்டி சுத்திபொட்டு விடுமாஎனவும் புன்னகைத்த ஆதிரா

இல்லமா..நீங்க பெரியவங்க ..உங்களை எதிர்த்து பேசுறன் என்று நினைக்காதிங்க..உங்கள போல நல்ல மனசு உள்ளவங்க தான் எப்பிடியும் எதையும் ரசிக்கிறவங்களா இருப்பாங்க.உங்களோட கண்ணேல்லாம் எங்களுக்கு மேல பட்டிச்சுதுனா அது எங்களுக்கு நல்லது தான் செய்யும்..நீங்க யோசிக்காதிங்கமாஎன்றவளின் பேச்சை கண்டு மனதுக்குள் மகிழ்ந்து போனவர் சற்று எக்கி தன்முன் அமர்ந்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டார்.

இந்த வயசில என்ன பக்குவம் டா? நல்லா இருப்ப..சரி டா..எங்களுக்கு நேரமாகுது..வீட்டுக்கு கிளம்புறொம்

நாங்களும் கிளம்பனும்..போகலாமா அண்ணி?” என்று கேட்ட பாவனாவை பார்த்து புன்னகைத்து தலை அசைத்தவள் ஸ்ரீயையும் தூக்கி கொண்டு வெளியேற அவளுடன் மற்றைய அனைவரும் வெளியேறினர்.

தங்களுடன் காரில் வரும்படி சிந்துவின் குடும்பத்தினர் வற்புறுத்தியும் நாசூக்காக அதை மறுத்த ஆதிராவின் கைகளை பற்றி கொண்ட சிந்து

அக்கா பாவனாஅக்கா ஏன் அடிக்கடி அண்ணி அண்ணி என்று சொல்லுறாங்க என்று இப்போ விளங்குது..உங்கள ஸ்ரீகுட்டிய பாவனா அக்காவை எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..அடுத்த புதன்கிழமை எனக்கு பர்த்டே வருது..வெளியில யாருக்கும் சொல்லமாட்டோம்..எங்க குடும்பமும் கொஞ்ச ரிலேஷன்ஸும் தான்..ஸோ அதுக்கு நீங்க கண்டிப்பா வரனும்

இல்ல சிந்துஎன்று மறுத்து பேசவந்த பாவனாவின் வாயில் கைவைத்த சிந்து

ப்ளீஸ் காஎன்று கூறவும் அதுவரை சிந்து அவர்களை அழைப்பதை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த சுமதியும்

அட என்னமா இது?இவ்வளவு பழகி இருக்கிங்க? நீங்க வராமலா? கண்டிப்பா வரனும்..சரியா? என்ன அண்ணி ?”எனவும் தனலக்ஷ்மியும் ஆதிராவின் கைகளை பற்றி

வாம்மா..எங்க வீட்டுக்கு இந்த ரெண்டு மகாலக்ஷ்மியும் இந்த குட்டி மகாலக்ஷ்மியும் வரணும்..அதுக்கு நாங்க எல்லோரும் காத்து இருப்போம்எனவும் பாவனா ஆதிராவை நோக்கினாள்..

அவளை பார்த்து இமை மூடி திறந்த ஆதிரா தனலக்ஷ்மியின் கைகளை சற்று அழுத்திகண்டிப்பா மாஎன்று உறுதி அளித்தாள்..

இந்த உறுதி அவர்களின் வாழ்க்கையையே மாற்றி போட  போவதை அறிவாளா??                                                                                                                  

அன்று சிந்துவினுடைய பிறந்தநாள்..வழமை போல இரவு பன்னிரண்டு மணிக்கே அனைவரின் வாழ்த்துக்களை பெற்று வழமைபோல கல்லூரிக்கு சென்றவள் இடைவேளையின் போது பாவனாவை தேடி சென்று வீட்டிற்கு வருவதை உறுதிப்படுத்துவதையும் மறக்கவில்லை.

மாலை சிந்துவின் பிறந்தநாளையொட்டி அனைவரும் நேரத்துக்கே வந்துவிட்டாலும் கவினுக்கு ஏதோ வேலை இருப்பதால் சற்று தாமதமாக தான் வர முடியும் என்று அறிவித்து இருந்தான்.

சிந்து பாவனாவை வீட்டிற்கு அழைத்த விடயம் கருணுக்கு தெரியவில்லை.ஆதலால் அவன் வழமைபோல அனைவரையும் கலாய்த்தபடி அந்த இடத்தில் கலகலப்பை உருவாக்கி கொண்டு இருந்தான்..

கரும்சிவப்பு அனார்க்கலி சுடிதாரில் வந்து தன்னருகில் அமர்ந்த சிந்துவை பார்த்தவன்

ஏன் சிந்து சுவரோட போய் தேய்ச்சுக்கிட்டியா என்ன?” என்று கேட்டபடி கையில் அன்னை தந்து சென்ற வடையை எடுத்து வாயில் வைத்தான்.

அவன் கேட்கவும் குழப்பமாக புருவம் சுருக்கியவள்

இல்லையேணா ஏன் கேட்கிற?” என்று வினவவும்

இல்ல..உன் முகத்துல ஒரு லோடு சுண்ணாம்பு இருக்குது அதான் கேட்டேன்என்றவுடன் அவன் கையில் செல்லமாக அடித்தவள்

போடா குரங்கு..பொறு இன்றைக்கு பாவனா அக்கா வந்ததும் அவங்கள விட்டு உன்னை அடிக்க சொல்லுறன்என்றதும்

போடிஎன்று அடுத்த வடையை வாயில் வைத்தவன் அப்பொழுது தான் அவள் கூறியதன் சாராம்சம் விளங்க வாயில் வைத்த வடையுடன் பேஎன்று முழித்த படி ஃப்ரீஸாகி அமர்ந்திருந்தான்.

ஹேய் குரங்கு..எருமைஎன்று சிந்து உலுக்கவும் தன் சித்தம் தெளிந்த கருண் வாயில் இருந்த வடையை தட்டில் வைத்துவிட்டு சிந்துவை பார்த்து

ஏன்டி என்கிட்ட முன்னமே இதை சொல்லல?” என்று வினவவும்

எதைடா?” என்று கேட்டாள்

அப்பொழுது தான் அவள் ஏன் சொல்லவேண்டும் என்ற கேள்வி தோன்ற ஹி..ஹி.. என்று அசடு வழிந்தவன்

இல்ல..வீட்ட விஸிட்டர்ஸ் வாறாங்க என்று தான்

லூஸாடா நீ..ஏதோ இவர் தானே அவங்களுக்கு சமைச்சு போட போறார்..இல்ல வாசலில நின்று கும்பிட போறார்..இவருக்கு சொல்லனுமாமே..சரி தான் போடாஎன்று எழுந்து சென்றாள்..

அவளை பார்த்து பழிப்பு காட்டியவன் செல்ஃபோனை எடுத்து செல்ஃபீ கமராவை ஆன் செய்து தான் எப்படி இருக்கிறோம் என்று பார்த்துக்கொண்டிருக்கவும்

என்ன மச்சான் செல்ஃபீ எடுக்கிறியாஎன்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தான் சஞ்சய்..

ஹீ..ஹீ..ஆமா..வாயேன் ஒரு ஃபோட்டோ கப்ஷர் பண்ணுவோம்எனவும் கமரா முன் விரல்கள் இரண்டை விரித்தபடி என்றபடி போஸ் குடுத்தவனை கடைக்கண்ணால் முறைத்தபடி கடனே என்று கமராவை க்ளிக் செய்தான்.

ஆதிராவின் வீட்டில்

அண்ணி ரெடியா?” என்று மூன்றாவது முறையாக ஆதிராவின் அறைவாசலில் நின்று குரல் கொடுத்த பாவனாவை கதவை இலேசாக திறந்து முறைத்த ஆதிரா

ஏன்டி..இவ்வளோ நேரம் உன்னையும் உன் மருமகளையும் ரெடியாக்கிற நேரம் மூச்சுவிட்டியா நீ? இப்போ நான் ரூமுக்குள்ள போய் பத்து நிமிஷம் இல்ல..முன்னாடி நின்று குதிக்கிறத பாரு..போடி..போய் ஸ்ரீயோட இரு..வாரேன்

எனவும்

ஹீ..ஹீ..சீக்கிரம் அண்ணி.” என்று கூறி கண்ணடித்தவள் ஆதிரா அடுத்த அர்ச்சனையை தொடங்கும் முன் ஓடி சென்று ஸ்ரீயுடன் அமர்ந்து விளயாட தொடங்கினாள்..அவளின் செயலை பார்த்து தலையை ஆட்டி சிரித்தவள் உள்ளே சென்று தயாராக சென்றாள்..

பின்னர் மூவரும் தயாராகி ஆட்டோ ஒன்றை பிடித்து சிந்துவின் வீட்டை அடைந்தனர்.. மாளிகையாக விரிந்து கிடந்த அந்த வீட்டை கல்லோ மண்ணோ என்பதை போல பார்வையிட்ட படி பாவனா ஸ்ரீயுடன் பிரவேசித்தாள் ஆதிரா. அவள் வாசலுக்கு வரவும் சிந்து ஓடிவந்து அவர்கள் அருகில் நின்று மூச்சு வாங்கவும் சரியாக இருந்தது.

மூச்சுவாங்க நின்றவளை பார்த்து கிண்டலாக சிரித்த பாவனா

ஏன் சிந்து எப்பவும் நீ நடந்து வர மாட்டியா?” என்று வினவவும் சற்று நெளிந்தவள்

இல்ல அக்கா.உங்களை மேல இருந்தே கண்டேனா..அதான் நானே வந்து உங்கள வெல்கம் பண்ணலாம் என்று தான் என்றூ கூறி சிரிக்கவும்

ச்சு..சும்மா இரு பாவனா..” என்று அதட்டியபடி சிந்துவை சற்று அணைத்து

ஹப்பி பர்த்டே மாஎன்று கூறினாள்.. தன் அன்னை சிந்துவை அணைப்பதை பார்த்ததும் ஸ்ரீயும்

ம்மா தூக்குஎன்றாள்..

ஆதிரா அவளை தூக்கவும் தன் பிஞ்சு கைகளை சிந்துவின் கழுத்தில் போட்டு இழுத்தவள்

ஹப்பி பத்தேஎன்று கூறினாள்.

ஐயோ தேங்க்ஸ் குட்டி..சரி அக்கா வாங்க உள்ள..பாவனா அக்கா வாங்கஎன்று உள்ளே அழைத்து சென்றவள் அங்கு இருந்த சோபாவில் அவர்களை அமர்த்தியவள்

கொஞ்சம் இருங்க அக்கா..இதோ அம்மாவையும் அத்தையையும் கூப்பிட்டு வாரேன்என்று சிட்டாக உள்ளே பறந்து சென்றாள்..

ஹாலில் சிலர் அமர்ந்து இருந்தாலும் அவர்கள் இவர்கள் யாரையுமே கணக்கில் எடுக்கவில்லை..சிந்துவின் உறவினர்கள் போலும்என்று எண்ணிய ஆதிராவும் அவர்களை ஒதுக்கிவிட்டு பாவனாவுடன் மெல்லிய குரலில் கதைக்க தொடங்கினாள்..

அவர்கள் உள்ளே நுழைந்ததில் இருந்து நடந்த அனைத்தையும் பார்வையிட்டு கொண்டு தான் இருந்தான் கருண். மேல் மாடியில் வளைவில் சஞ்சயுடன் நின்றபடி கீழே ஹாலை நோட்டமிட்டு கொண்டிருந்தவன் முதலில் பார்த்தது சிந்து கைபற்றிய படி அழைத்து இல்லை இல்லை இழுத்து கொண்டு வந்த ஆதிராவை தான்..

அட இவங்களா இவங்க எப்படி இங்க கருண்?” என்று தன் மனதில் எழுந்த கேள்வியையே கேட்ட சஞ்சயை பார்த்து முறைத்தவன்

ஆஹ்..நாளைக்கு நியூஸ் பேப்பர்ல போடுவாங்க அப்போ பாருநானும் உன் கூட தானே இருக்கன்..வந்துட்டான் கேள்வி கேட்டு கொண்டுஎன்றவனை விசித்திரமாக பார்த்தவன்

போச்சுடா..உனக்கும் வந்திட்டுதா?”என்றவுடன் தான் காதலிப்பது தெரிந்து விட்டதோ என்ற பதட்டத்துடன்

எதுடா?” என்றவனை பார்த்து உர்ர்ர் என்று முகத்தை வைத்து கொண்ட சஞ்சய்

அதான் கவினோட குணம் தான்..எப்போ பாரு வள்ளு வள்ளு என்று கொண்டு

டேய் என்ன பார்த்து நாய் என்றியா?” என்றபடி வாசலை நோக்கியவன் நோக்கினான் நோக்கினான் நோக்கி கொண்டே இருந்தான்..

அருகில் சஞ்சய் கேட்ட கேள்விகளோ அவன் அசிங்கமாக திட்டியதோ அவனை பார்த்து தலையிலடித்தவாறு நகர்ந்ததோ எதுவுமே அவன் கருத்தில் பதியவில்லை..

கண்களுக்கு மையிட்டு நெற்றியில் சிறிய பொட்டு அதன் மேல் குங்குமக்கீற்று வெண்ணிற ஷல்வார் அணிந்து இளநீல ஷாலை தூக்கி தோள்களில் வழிய விட்டவாறு முகத்தில் உறைந்த புன்னகையுடன் ஆதிராவின் பின்னே வந்த பாவனாவை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை கருணுக்கு.. அய்யோ கொல்லுறாளே என்று உடல் சிலிர்த்தவன் தலையை ஒரு முறை உலுக்கியவாறு ஒரு ஆழ மூச்சை வெளியிட்டவாறே கீழே இறங்கி சென்றான்.

இறங்கும் போது அவள் ஆதிராவை அண்ணி என்று அழைப்பதை கேட்டவுடன் அடடே அதான் ஸ்ரீ குட்டியில யாரோடயோ தெரிஞ்ச ஜாடை இருக்கிறப்போல தோன்றியதா? என்று எண்ணியபடியே இறங்கி வந்தவன் ஆதிராவின் அருகில் சென்று

ஹல்லோ சிஸ்டர்என்று அழைக்கவும் பாவனாவுடன் கதைத்துக்கொண்டு இருந்த ஆதிரா அருகில் நின்ற கருணை வியப்பாக நோக்கினாள்..

கருண் சார்..நீங்க எங்க இங்க?” என்று அவள் ஆச்சரியமாக கேட்கவும்

என்ன சிஸ் இது எங்க வீட்டுக்கு வந்து ஏன் இங்க இருக்கிற என்று கேட்டா நான் என்ன சொல்ல?”

அவனின் பதிலில் இன்னும் ஆச்சர்யமானவள்

அப்போ இது..இது

ஆமாமா..என்னோட வீடு தான்என்றபடி அவர்கள் அமர்ந்திருந்த சோபாவில் வந்து அமர்ந்தார் மனோகர்..

ஸாரி சார்..எனக்கு சிந்து உங்க பொண்ணு என்று தெரியாது

இல்ல மா..சிந்து என் தங்கையோட பெண்..நாங்க எல்லாம் கூட்டு குடும்பம் என்றூ சொல்லி இருக்கேன் ..இதோ இவன் கருண்..என் மகன் கவினை தான் இன்னும் காணோம் என்றவுடன் ஆதிராவிற்கு தன்னிடம் மல்லுக்கு நின்றவனின் முகம் அப்பொழுது தான் மனதில் வந்தது..

Advertisement