Advertisement

வழமையாக கவின் கருணை அங்கு விட்டு விட்டு சென்றால் வீடு முழுதும் ஒருவர் கூட விடாமல் புலம்பி திரிவான்.ஏன் லக்ஷ்மியிடம் கூட சென்று

அத்தை உங்க மகன் என்ன தைரியத்துல என்னை இங்க விட்டுட்டு போறான்.இங்க இருக்கிறதெல்லாம் ஒரு ஆபிஸா? ஒரு ஃபிகர் கூட பார்க்கிற மாதிரி இல்லை” என்று கூறி அவரிடம் செல்லமாக அடியை வாங்கி விட்டு தான் அகல்வான்.

அப்பொழுது தான் மாலை சிற்றுண்டியோடு வந்த கருணின் அன்னை சுமதியும் இதைக்கேட்டு ஆச்சர்யமாகி லக்ஷ்மியை பார்த்து கண்களால் என்ன இது என்று கேட்கவும் அவரும் தெரியாது என்ற பாவனையில் உதட்டை பிதுக்கி காட்டினார்.

நிலைமையை தன் கையில் எடுத்த கவின்

போதும்மா இந்த கதை..அப்புறமா பேசலாம்..ஆமா..டேய் கருண் சிந்து எங்க” என்று கேட்கவும் அவன் பதில் கூறும் முன் வாசலில் அப்பொழுது தான் நுழைந்து கொண்டிருந்த சிந்து

கவின்ணா” என்ற படி ஓடிவந்து அவன் அருகில் அமர்ந்து தோள் சாய்ந்தாள். அவளை தோளோடு அணைத்து கொண்ட கவினும்

சிந்து குட்டி..அண்ணாவை மிஸ் பண்ணியா?” எனவும் கண்களை விரித்து

ம்ம்..ரொம்ப “என்று சிரித்தவளை பார்த்து கருண் தலையில் அடித்து கொண்டான்.

கொக்கமக்கா..பெரிய வேலாயுதம் விஜயும் சரண்யாவும்..உங்க பாசத்தை பார்த்து நாங்க புல்லரிச்சு போய்டோம்பா..” என்று கிண்டலாக சொன்னாலும் அவன் முகத்தில் அதில் மகிழ்வு தான் என்பதை அவன் உதட்டோர புன்னகையே சொல்லும்..

இது தான் சக்கரவர்த்தி குடும்பம்.தொன்று தொட்டு சக்கரவர்த்தி குடும்பம் என்ற பரம்பரை பெயருடன் வலம் வரும் வம்சாவளி.அந்த பெயரை அவர்களின் ஊரில் பிரபலமாக்கி தம் பரம்பரையையே கௌரவப்படுத்திய குடும்பம்

சக்கரவர்த்தி குடும்பத்தில் இருந்து இந்த ஊருக்கு மனைவியுடன் வந்த இவர்களது பாட்டனார் சிபி சக்கரவர்த்தியின் சொந்த முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட சிறிய வியாபாரம் அவரது மகன் மனோகரால் இன்னும் ஓங்கி வளர்ந்தது. அவரது மகள் சுமதிக்கு தனது தங்கையின் மகன் மகாதேவனை திருமணம் முடித்துவைத்து தமது வியாபாரத்தினுள்ளே சேர்த்துக்கொண்டார். பின் மகாதேவன் மனோகரால் பராமரிக்க பட்ட வியாபாரம் என்று கவின் கருண் கைகளுக்கு சென்றதோ அன்றிலிருந்து அது அசுர வேகம் தான்..

மனோகர் லக்ஷ்மியின் புதல்வன் தான் கவின். மகாதேவன் சுமதியின் மகன் தான் கருண். கவினைவிட இரு மாதங்களே இளையவன். கருணுக்கு அடுத்து சிந்துபைரவி.அந்த வீட்டின் கடைக்குட்டி.கவினை அண்ணா என்று தான் அழைப்பாள்..கருணிலும் பார்க்க அதிக அக்கறையுடன் சிந்துவை பார்த்துக்கொண்டவன் கவின் தான்.அவள் அருகில் மட்டும் மென்மையாகவே நடந்து கொள்வான். இது தான் நம் கதையில் வலம் வர போகும் சக்கரவர்த்தி குடும்பம் பற்றிய விளக்கம்..

தனது அறையுடன் இணைந்து இருந்து பால்கனிப்பகுதியில் இருந்த சாய்வு நாற்காலியில் இருந்து வானத்தையே வெறித்தபடி அமர்ந்து இருந்தான் கருண்..

 

அவன் பின் ஓசைப்படாமல் வந்து நின்ற கவின்

என்ன பிரச்சனை கருண்?” என்றான்..

 

திடீரென்று கவினின் குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பியவன்

எனக்கா? என்..என்ன ? எனக்கு என்னடா பிரச்சனை நத்திங் கவின்

என்றவுடன் அவனுக்கு எதிரில் இருந்த கதிரையில் அமர்ந்தவன் அவனது விழிகளையே ஆழ நோக்கினான்..

 

சபா..பார்க்கிற பார்வையிலேயே எப்பிடி தான் அடுத்தவங்களை படிக்கிறானோஎன்று தனக்குள் முணகியவன் மெல்ல எழுந்து சென்று பால்கனியின் கம்பியை பற்றியவாறு ஆழ ஒரு மூச்சை இழுத்து விட்டான்.

 

தன் முதுகைத்துளைக்கும் கவினின் பார்வையை உணர்ந்தவன் மெல்ல தொண்டையை செறுமியவாறே

கவின்.. இந்த காதல் கல்யாணம் பற்றி நீ என்ன நினைக்கிற?”

 

வாட்?” என்று அதிர்ந்து கூவிய கவினுக்கு நடப்புக்கு திரும்ப சிறிது நேரம் எடுத்தது.

 

கவினை அவனின் அன்னை சாடும் போது அவனுக்கு சாதகமாக பேசிய கருணை பார்த்தே அவன் எதையோ தன்னிடம் எதிர்பார்க்கிறான் என அறிந்தே இருந்தான்.. பிஸ்னஸில் ஏதும் பிழை அல்லது நண்பர்களுடன் ஏதும் பிரச்சனை என்று எண்ணி அவனை சந்திக்க வந்தவனுக்கு அவன் கேட்ட கேள்வியே தலையினுள் மின்சாரத்தை பாய்ச்சிய உணர்வை ஏற்படுத்தியது..

 

அப்பொழுதும் அவனுக்கு சந்தேகம் தான் தான் ஏதும் பிழையாக கேட்டு விட்டோமோ என்று.எனவே மீண்டும் ஒருமுறை

என்ன கேட்ட? கம் எகெய்ன்என்றவுடன் தன் பின்னந்தலையை அழுந்த கோதிக்கொண்டவன் இப்பொழுது கவினை நேரே நோக்கி

 

காதல் கல்யாணத்தை பற்றி என்ன நினைக்கிற என்றூ கேட்டேன்என்றதும் ஒருமுறை கண்களை சுருக்கி கருணை நோக்கிவிட்டு பின் சாதாரணாமானவன்

நான் நினைக்கிறது இருக்கட்டும்..இப்போ இதை பத்தி கேக்கிறத்துக்கு என்ன அவசியம் வந்திச்சு கருண்?”

 

எனக்கு முதல் பதிலை சொல்லேன் கவின்?”

 

அதெல்லாம் ஒரு ஃபீலிங்க்ஸ்டா. அதை அனுபவிச்சவங்களை தான் கேட்கனும்..என்னை கேட்டா நான் என்ன சொல்ல?”

 

ஆனா நான் சொல்லுவேன் கவின்..அப்பிடியே நெஞ்சுக்குள்ள யாரோ கையை விட்டு பிசையுற மாதிரி ஒரு வலியும் உடம்பெல்லாம் ஏதோ போதை ஏத்தினாபோல பறக்கிற போல இருக்கிற அனுபவும் உனக்கு கிடைச்சிருக்கா கவின்?”

 

டேய் எனக்கு தெரியாம ஏதும் பார்ட்டிக்கு போனியா?” இன்னும் அவனது உளறல்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனால்..

 

இல்லை கவின்..ட்ரிங்க் பண்ணாமலே  தலையெல்லாம் சுத்துது டா

 

டேய் எருமை..என்னடா பண்ணுது?? ஒழுங்கா தான் சொல்லி தொலையேன்ஆயிரத்தெட்டு பிஸ்னஸ் டீலை விட்டுவிட்டு இவனுக்காக இங்கே வந்தால் இவன் புலம்புவதை சகிக்க முடியாமல் குரலை உயர்த்தினான்..

 

எனக்கே தெரியலை கவின்..என்னன்னமோலாம் பண்ணுது..ஆனா அதை சொல்லத்தான் முடியலை.... திங்க்..எனக்கு அவளை பிடிச்சிருக்கு போல கவின்முகம் சிவந்து போக அவன் முணுமுணுத்ததை கிரகித்து கொண்டவன்

 

ஹே....கருண்..ஆர் யு? ஆர் யு இன் லவ்?” என்று அதிர்ந்து கேட்கவும் தலையை மேலும் கீழும் அசைத்தான்..

 

கருண்..என்ன? ஏன்? பச்..யாருடா?”  எத்தனையோ பிஸ்னஸ் டீல்களை ஒற்றை விரலில் ஆட்டி வைக்கும் அவனுக்கே இதை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை..ஆனால் இது கருணின் வாழ்க்கை என்று மட்டும் புரிந்தது..

 

காலையில் கல்லூரியில் தான் பாவனாவை சந்தித்த தருணத்தை கனவில் இருப்பவனை போல பகிர்ந்தவன்

 

எனக்கு அந்த இடத்திலேயே தெரியும் கவின் எனக்கு அவளை பிடிச்சு இருக்கு என்று..பட்..இது அவசரப்படுற விஷயம் இல்லை என்று என் மனதை நானே அடக்கி வைத்து இருந்தேன்..ஆனா..ஆனா..சிந்துவை மறுபடியும் கூட்டிவர போனப்போ அவளை காணோம்.. அப்போ..அப்போ என்னமோ எல்லாமே ப்ளாங்க் ஆன மாதிரி ஒரு ஃபீலிங்க்ஸ்..அப்போ தான் தெரிஞ்சுது நான் யோசிக்கிற கட்டத்தை எல்லாம் தாண்டிட்டேன் என்று..”

 

அவன் கூறியதை அனைத்தையும் ஆழ உள்வாங்கியவன் ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறு

 

கருண்..உன்னை சின்ன வயசில இருந்து பார்த்து வளர்ந்தவன் நான்.. உன் முகத்தை பார்த்தே நீ ஒரு விஷயத்துல எவ்வளவு இன்வால்வ் ஆகி இருக்க என்று சொல்ல தெரியும்..இப்போ உன் லவ்வ பத்தி நீ சொல்றப்போ உன் முகத்துல தெரிஞ்ச பிரகாசம் நான் பார்த்தது இல்ல கருண்..இதுல ஒரு பொண்ணோட லைஃப்பும் இருக்கு..நமக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்றதை எப்போவும் மறந்துடாத..அதே நேரம் அந்த பொண்ணுக்கும் உன்னை பிடிச்சுதுனா கவலையே படாத உங்களை சேர்த்து வைக்கிறது என் பொறுப்பு.ஆனா எனக்கு ஒரே ஒரு ப்ரொமிஸ் மட்டும் செய்து தா போதும்

 

என்னடா

 

எந்த ஒரு நேரத்திலயும் நீ உடைஞ்சு போக கூடாது.. வெளி உலகத்துக்கு நான் எப்பிடியோ..ஆனா நம்ம வீட்ட பொறுத்த வரையும் அதோட சந்தோசம் ஒருநாளும் பாதிக்க படுறத என்னால அனுமதிக்க முடியாது..”

என்றவனை தாவி அணைத்து கொண்ட கருண்

 

நிச்சயமாடா நான் இதை எப்போவுமே நியாபகம் வைச்சிருப்பேன்என்றான்..

கருணால் அவன் வாக்கை காப்பாற்ற முடியுமா??

பொறுத்திருந்து பார்ப்போம்..

 

அவனும்..அவன்  திமிரும்.. ச்சே..இன்றைக்கு என்ன நாளோ தெரியல.. அவனுக்கெல்லாம் இருக்கு என் கையால தான்என்று தன் இயல்பையும் மீறி கோவத்தில் ஹாலில் இருந்த மேஜையில் சப்பாத்திக்கு மாவை உருட்டியபடி முணுமுணுத்து கொண்டிருந்த ஆதிராவை வினோதமாக பார்த்தாள் பாவனா..

 

மேஜையின் மேலே ஏறி இருந்து படம் வரைகிறேன் என்ற பெயரில் கோடுகளால் தாளை நிரப்பியபடி இருந்த ஸ்ரீயை ஒரு பார்வை பார்த்தவள்

 

அண்ணி.. ஏன் ஒரு மாதிரி இருக்குறீங்க?ஏதும் ப்ரொப்ளமா?”

ச்சே..ச்சே..அப்படி ஒன்றுமில்ல பாவனா..இன்றைக்கு ஒருத்தனை மீட் பண்ணேன்எனவும் கேள்வியாக ஆதிராவின் முகத்தை நோக்கினாள்.

 

அன்று அலுவலகத்தில் நடந்த கவினுடனான சந்திப்பை பற்றி கூறியவள்

வாறவங்களோட எப்படி பிஹேவ் பண்ணனும் என்றே தெரியல.. இவனெல்லாம் பெரிய இவனாட்டம் எனக்கு லெக்ஸர்ஸ் அடிக்க வந்திட்டான்..எனக்கு இன்னும் ஆறவே இல்ல பாவனா..இன்னும் நல்லா கேள்வி கேட்டு வந்திருக்கனும் அவனை.சின்னக்குழந்தை அவ ஏதோ தெரியாம மோதிட்டா.. அதுக்கு போய் தாம்தூம் என்று குதிக்கிறான்..பாத்திட்டே இரு..அவனுக்கெல்லாம் நல்ல கொடுமைக்கார வைஃப் தான் வாய்ப்பாஎன்று படபடவென பொரிந்தவளை ஆஆ வென பார்த்துக்கொண்டு இருந்தாள் பாவனா..

 

 

அவளின் பாவனையை கண்டுவிட்டு கையால் அவள் கன்னத்தை நிமிண்டியவள்

என்ன பார்வை டி இது? கதை கேட்க என்றதும் வந்திடுவ ஆஆ என்று வாயை பிளந்து கொண்டு

 

ஆஆ..அண்ணிஎன்று தன் கன்னத்தை தேய்த்துக்கொண்டவள்

 

பின்ன என்ன அண்ணி..இத்தனை நாளில நீங்க இப்படி புலம்பி நான் பார்த்தே இல்லை..அதான் ஆச்சர்யமா போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஆனாலும் அண்ணி உங்கட இயல்பையே மாத்தி இருக்கார் பாருங்க அவர மட்டும் நான் நேர்ல பார்த்தா கட்டாயம் கை குடுப்பேனாக்கும்

 

க்கும்..குடுப்ப..குடுப்ப.குடுக்கிற கையை உடைச்சு அடுப்பில வைச்சிட மாட்டேன்?”

என்று பாவனாவிடம் கூறிக்கொண்டு இருந்தவளின் கன்னத்தை பற்றி தன்புறமாக திருப்பிய ஸ்ரீ

 

ம்மா..அம்மு கீதுனாஎன்று தனது கிறுக்கல்களை காட்டவும்

 

சமத்து குட்டி..அம்மா கையெல்லாம் ஒரே மாவா இருக்குதுடா..போய் அடுத்த பக்கத்தில ஏபிசிடி எழுதுங்க அம்மா இதோ வாரேன்

எனவும் தலையை உருட்டிய ஸ்ரீ மறுபடியும் தனது இடத்தில் சென்று அமர்ந்தாள்.

 

அவர்களை புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த  பாவனா

அண்ணி நம்ம ஸ்ரீ பெரியவளானா எப்படி பிஹேவ் பண்ணுவாளோ அப்பிடியே ஒரு ஜூனியர் எனக்கு கிடைச்சிருக்கா தெரியுமா?”

 

என்னது?”

ஆமா அண்ணி..” என்று அன்று கல்லூரியில் நடந்த விடயங்களை பகிர்ந்தவளை கண்டிக்கும் பார்வை பார்த்த ஆதிரா

 

பாவனா..நான் உனக்கு தற்காப்புக்கலை படிப்பிச்சது உன்னை தற்காத்து கொள்ள தான்..எதுக்கெடுத்தாலும் மத்தவங்களை கைநீட்ட எங்க பழகுன?”

என்று அதட்டவும் தலையை கவிழ்த்து கொண்டவள்

 

தப்பு தான் அண்ணி ..ஆனாலும் அவ ஒரு அப்பாவிஎன்று கூறியவளின் பேச்சில் மனதில் அவளுக்கும் ஒரு அப்பாவியின் முகம் மின்னி மறைந்தது.

 

மறுநாள் ஜாக்கிங்க் போய்விட்டு வீட்டினுள்ளே நுழைந்த கவினும் கருணும் சிந்து அங்கும் இங்கும் ஓடுவதை கண்டு புருவம் சுருக்கி ஒருவரையொருவர் கேள்வியாக நோக்கி கொண்டனர்..கவின் சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமரவும் அவனை தொடர்ந்து கருணும் அவன் அருகில் அமர்ந்து அன்றைய தினசரியை வாசிக்க தொடங்கினான்..

அப்பொழுது மீண்டும் கையில் வாட்ச்சை கட்டியவாறே சமையலறையின் வாசலில் நின்று கொண்டு

அம்மா..அத்தைஎன்று கூப்பாடு போட்டவளை பார்த்து

சிந்துஎன்று கவின் அழுத்தமாக அழைக்கவும்

அண்ணாஎன்று தயங்கி தயங்கி அவன் அருகில் சென்றாள்..

இங்க வா..இப்படி வந்து உட்கார்என்று அவன் தன் முன்னே இருந்த சோபாவை காட்டவும் ஷல்வாரின் ஷாலை திருகியவாறே சமையலறையில் ஒரு கண்ணும் அவன் முகத்தில் ஒரு கண்ணுமாக இருந்தவளை விசித்திரமாக நோக்கியவாறே

எதுக்கு சிந்து இப்படி காலையிலேயே ஓடி ஓடி திரியுற?”

அண்ணா..அது..அது வந்து..”

ம்ம்?”

நான் காலேஜுக்கு பஸ்ல போறேன் அண்ணாஎனவும் கவின் அதற்கு பதில் கூற முன்னர்

என்னது?” என்று அதிர்ந்து கூவிய கருண்

இல்லலநீ என்னோட வா..நானே உன்னை ட்ராப் பண்றேன்என்றான்..அவனின் அவசரத்தை பார்த்து வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்ட கவின்

இல்ல அண்ணா..பாவனா அக்காவும், காலோஜ் பஸ்ல வாறாங்களாம்..அவங்கள எனக்கு ரொம்ப்ப பிடிச்சிருக்குது..அதான் அவங்க கூடவே காலேஜ் பஸ்ல போகலாம்னுஎன்று இழுத்தவளை தாடையை சொறிந்தவாறே பார்த்தவன்

பாவனாவா?? யாரது?” என்று வினவவும் அங்கு இருந்தவரின் செவிப்பறை கிழியும் படி அவள் பாடிய பாவனா புராணத்தில் இருந்து அவன் கண்டு கொண்டது ஒன்றே ஒன்று தான் கருண் சொன்ன பெண் தான் பாவனா.

கடைக்கண்ணால் கருணை பார்க்க அவனோ தன்னவளின் பெயரை கேட்ட சந்தோஷம் ஒரு புறம் இனி அவளை காண முடியாதோ என்ற தவிப்பு ஒரு புறமுமாக அமர்ந்திருந்தான்..

இருவரினது மனநிலையையும் நொடியில் கணக்கெடுத்தவன் சிந்துவை நோக்கி

நீ தனியா பஸ் எடுக்க வேணாம் சிந்து..” அவள் ஏதோ பேச வரவும் கைகாட்டி தடுத்தவன்

நான் என் முடிவை சொல்லிடுறேன்..நீ சொல்லுறத பார்த்தா பாவனா?? அந்த பொண்ணு நல்ல பொண்ணு போல தான் இருக்குது..நீ ஒன்று செய்..நம்ம கருண் கூட அவ பஸ் எடுக்கிற ஸ்டாப் கு போய் அவங்களோட சேர்ந்தே போய்டேன்..கருண் கொஞ்சம் தள்ளி நின்று உன்னை பார்த்து விடட்டும்..ம்ம்?”என்று கேட்கவும் சிந்து கருண் இருவரின் முகத்திலும் வெளிச்சம் பரவியது..

கவினின் பேச்சை கேட்டபடி அங்கு வந்தமர்ந்த மகாதேவனும் மனோகரும் அம்முடிவை ஆதரிக்க சிந்துவை கல்லூரிக்கு விடும் படலம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது..

கருண், சிந்துவை கொண்டு விடும் பொழுது தூரத்தில் நின்றே பாவனாவை ரசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாலும் பாவனாவின் குணநலங்கள் அனைத்தும் சிந்துவின் வாயிலாக அறிந்து கொண்டும் இருந்தான்.பாவனாவின் வீடு அவளின் உறவாக இருக்கும் அண்ணி மருமகள் அவளுக்கு பிடித்தது பிடிக்காதது என்று அனைத்தையும் அறிந்து வைத்திருந்தான்..

அவனை பொறுத்தவரை தனது காதலை தன் காதலியும் உணர வேண்டும் என்று எதிர்பார்த்தான்..அவள் தன்னை சந்திக்கும் சந்தர்ப்பம் இயல்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினான்..

Advertisement