Advertisement
இரு பெண்களும் அவனை குழப்பமாக நோக்கவும் சிரிப்பதை நிறுத்தியவன்
“ஆதி..பொண்ணுங்க எல்லாம் சென்டிமென்ட்டில வீக் என்றது சரியா தான் இருக்கு.. பாரு எவ்வளவு புத்திசாலி நீ..கவினில வைச்ச அன்பால யோசிக்கிறத விட்டுட்டு இப்பிடி பயந்து போய்..ஆதி..கவினை யாருனு நினைசுக்கிட்டு இருக்க?? அவனுக்கு இது மாதிரி எத்தனை மிரட்டல் வந்து இருக்கு?
“பிஸ்னஸ் உலகம் பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை.. முன்னேறுறவன் தங்களுக்கு தடையா இருந்தா போட்டு தள்ளிடுவாங்க.. அதையெல்லாம் தூசு போல சமாளிச்சவனுக்கு இந்த பொறுக்கி விஷாலை சமாளிக்க தெரியாதா?? அவன் கிட்ட சொல்லி இருந்தா எப்பயோ இது முடின்சு இருக்கும்..அதை விட்டுடு..அவனையும் கஷ்டபடுத்தி நீயும் கஷ்டப்பட்டு.. “
“இல்ல“
“என்ன இல்ல?? இங்க நீங்க வர முன்னமே அங்க ரிஷெப்ஷன் போனீங்களே? அங்க இருந்து அங்கிளுக்கு கால் பண்ணாங்க..உன்னை பத்தி தப்பா சொன்னதால கவின் யாரையோ அடிச்சானாமே? கவினை அவனை மன்னிச்சு விட சொன்னாங்க..ஏன்னா அவனோட குணம் அப்பிடி…”
‘எனக்காகவா அந்த பிரச்சனை‘ என்று எண்ணியவளுக்கு கவினை பார்க்க வேண்டும் போல இருந்தது ஆனாலும் மௌனமாகவே அமர்ந்து இருந்தாள்..அவளை சிறிது நேரம் பார்த்தவன்
“இவ்வளவு சொல்லியும் அசையாம இருக்க? கொஞ்சம் பொறு” என்றவன் உள்ளே சென்று ஒரு கவரை எடுத்து வந்தான்…
அதை அவளிடம் நீட்டி
“ஹ்ம்ம்..திறந்து பார்” என்றான்..
தயங்கியபடி அதை வாங்கி பிரித்தாள்..அதை திறந்து பார்த்தவள் ஆச்சர்யத்தில் விழி விரித்தாள்..
அது ஒரு புகைப்படம்..அபிராமியின் புகைப்படம்..அதில் என்ன விஷயம் என்றால் அதில் அபிராமியை அணைத்தபடி ஆதியும் நின்று கொண்டிருந்தாள்.. அவசரமாக பெண் பார்க்க கொடுக்கும் போது தேவன் இதையும் கொடுத்திருப்பார் போல.. அந்த புகைப்படத்தில் அபிராமியின் பகுதி அழிக்க பட்டு ஆதி தெளிவாக தெரியும் படி இருந்தது..
ஆச்சர்யமாக கருணை நோக்கவும்
“என்ன பார்க்கிற? போன வாரம் அவனோட ஆபிஸ் ட்ராயரில எடுத்தேன்..நானே ஷாக் ஆகிட்டேன்..பட்..இது.. உன்னை சந்திக்க முன்னம் இருந்தே அவன் கிட்ட இருந்திருக்கனும்.. இப்போ யோசி.. இன்னும் அவன் கஷ்டபடனுமா?” என்று அவன் வார்த்தையை முடிக்க முன்னரே ஆதியின் விழிகள் தனது செல்ஃபோனை தேடி அலைந்தது..
அவள் ஏதோ தீர்மாணம் எடுத்து விட்டதை அறிந்து கொண்ட கருண் பாவனாவிற்கு கண்ணை காட்டியபடி அறையிலிருந்து வெளியேறினான்.. அவனை தொடர்ந்து பாவனாவும் நழுவினாள்..
அவர்கள் சென்றதும் ஓடி சென்று தனது போனை தூக்கியவள் அவசரமாக கவினுக்கு அழைத்தாள்..அவளது மனதில் காதல் பொங்கி தளும்பிக்கொண்டு இருந்தது..ஒரு அழைப்பு அடித்து முழுதாக ஓய்ந்த பிறகு மறூபடியும் அழைத்தவள்
‘கவின் பிக் அப்..பிக் அப்” என்று மனதிற்குள் வேண்டியபடியே இருந்தாள்.. அவளது வேண்டுதல் கேட்டுவிட்டதோ என்னவோ கவினும் அழைப்பை எடுத்தான்..
ஏதோ ஆர்வத்தில் எடுத்துவிட்டாள் தான்..ஆனால் பேச தான் வார்த்தை வரமாட்டேன் என்றது.மறுபுறம் எடுத்த கவினும் எதுவுமே பேசவில்லை..அவனது கோவம் நியாயமானது தானே? என்னவெல்லாம் பேசிவிட்டாள்.. தான் தான் பேசவேண்டும் என்று உணர்ந்து தொண்டையை செறுமியவள்
“கவின்?” என்று அழைத்தாள். அவள் அழைத்தும் மறுபுறமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.. உதட்டை கடித்தவள் என்ன செய்வது என்று யோசித்தவாறே மீண்டும் ஒரு முறை
“கவின்? ஏதும் பேசுங்களேன்?” என்று இறைஞ்சலாக கேட்டாள்..
“………”
“இப்போ பேச போறிங்களா இல்லையா?”
“……..”
“கோவமா இருக்கிங்களா??”
“…….”
“பேசமாட்டிங்களா அப்போ சரி நான் வைச்சுடுறேன்” என்றவள் வைக்க போக
“ம்ம்” என்று கவினின் குரல் கேட்டது.. மனதிற்குள் சிரித்து கொண்டவள்
“என்னில கோவமா இருப்பீங்க என்று தெரியும்..அம் ஸாரி..நான் அப்பிடி பேசி இருக்க கூடாது“
“ம்ம்“
“அதான் மன்னிப்பு கேட்கிறேன் ல? ஏதாச்சும் பேசுங்களேன்“
“பயமா இருக்கு..”
“என்ன? பயமா?”
“ஆமா..பயமா இருக்கு..எங்க நான் பேச போய் திரும்பவும் என்னை காயப்படுத்திடுவியோ என்று பயமா இருக்கு“
“கவின்?”
“சரி..இப்போ மன்னிப்பு கேட்டாச்சு ல? நான் கொஞ்சம் தாமதமா வருவேன்.. நீ தூங்கு..”
“இருங்க இருங்க“
“என்ன?”
“இப்போ மன்னிப்பு கேட்க தான் நான் கால் பண்ணேன் என்று யார் சொன்னா?”
“அப்போ?”
“மன்னிப்பு கேட்க நான் எடுக்கல.. மன்னிப்பு கேட்டு பேச்சை தொடங்கினேன்“
“பச்..ஆதிரா..எனக்கு பொறுமை என்றது எப்போவும் இருந்தது இல்லை..இப்போ நீ என்ன சொல்ல வாற?”
“அது..அது“
“ம்ம்?”
“ஐ,,ஐ லவ் யூ கவின்.. எனக்கு நீங்க வேணும்.. வாழ்க்கை முழுக்க..உங்க கைக்குள்ளேயே இருக்கனும்..என்னை..என்னை ஏத்துப்பிங்களா?”
“ஹேய்..நீ..நீ?”
“யெஸ் ஐ லவ் யூ..இந்த உலகத்தில எனக்கு எதுவுமே உங்கள விட பெருசில்ல என்ற அளவுக்கு உங்கள காதலிக்கிறேன்..இப்போ..இப்போ.. எனக்கு உங்கள பார்க்கனும் கவின்“
“இங்க தான் நான் இருக்கேன் ஆரா“
“கவின்?!!”
“ஹ்ம்ம்ம்..திரும்பி பாரு உனக்கு பின்னால“
என்றவுடன் சட்டென திரும்பி பார்த்தவள் அங்கு புன்னகையுடன் கவின் நிற்பதை கண்டாள்..
“க..க..கவி..” என்று அவள் திக்கவும் புன்னகைத்தவன்
“உன்னோட கவின் தான்..ஐ நீட் யுவர் ஹக் ஆரா” என்று கூறீ இரு கைகளையும் விரிக்க எந்த யோசனையும் இன்றி பெருகிய புன்னகையுடன் ஓடி வந்து அவனது நெஞ்சிலே விழுந்தாள்..
ஆதி நெஞ்சில் விழுந்ததும் அவளை தன்னுள் புதைப்பது போல இறுக அணைத்த கவின் அவளது முகத்தை ஏந்தி தனது ஏக்கங்கள் தாபங்கள் அனைத்தையும் முத்தங்களால் ஒரு இடம் விடாமல் நிறைத்து இதழ்களை நெருங்கியதும் ஆதியின் முகத்தை நோக்கினான்..
விழிகளை இறுக மூடி இதழ்கள் துடிக்க விழிகளில் கண்ணீரும் உதட்டில் புன்னகையுடனும் இருந்தவளின் அழகு அவனை பித்தம் கொள்ள செய்ய இதழ்களை தனது பெருவிரலால் தடவியவன் மெல்ல அதன் மேல் தனது உதடுகளை பொருத்தினான்..
அவனின் இதழ்களின் முற்றுகையில் பட்டென்றூ விழிகளை திறந்த ஆதி பின்னர் மீண்டும் மயக்கத்தில் விழிகளை மூடிக்கொண்டாள்..மூடிய விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளின் சுவையை கவினின் உதடுகள் உணரவும் அவளின் முகத்தை விலக்கியவன் அவளை தன் தோளீல் சாய்த்து முதுகை ஆறுதலாக தடவிக்கொடுத்தான்..
பின்னர் அவளை அணைத்தபடியே சென்று கதவை அடைத்தவன் அவளுடனே மெல்ல நடந்து கட்டிலின் அருகே சென்று அவளை அங்கு அமர வைத்தான்.. அவள் கட்டிலில் அமர்ந்ததும் அவளை விலகி செல்ல திரும்பியவன் முகத்தை மட்டும் திருப்பி ஆதியின் முகத்தை நோக்கினான்..
உலகின் ஒட்டுமொத்த தவிப்பையும் தேக்கி அவனையே நோக்கி கொண்டிருந்தவளை கண்டதும் ஒரே பாய்ச்சலில் அவளருகே சென்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவளது முகத்தை ஏந்தினான்.
ஏந்திய முகத்தை தன்னருகே இழுத்து அவளது நெற்றியில் தனது நெற்றியை முட்டியவன் அவளது முகத்தை தாங்கியிருந்த தனது விரல்களை கொண்டு விழிகளை துடைத்து
“இன்னும் இந்த கண்ணீருக்கு இங்க என்ன வேலை ம்ம்?” என்று மென்மையாக வினவினான்..
“கவின்“
“ஆதி..உன்னோட கண்ணில தெரியுற தவிப்பு..உன்னை விட்டுட்டு நானும் போய்டுவேனோ என்ற பயம்..அதானே?”
அவன் தன்னை அறிந்து கொண்டதில் நெஞ்சில் நேசம் பொங்க தனது கைகளால் அவனது முகத்தை தடவியவள்
“ம்ம்” என்று கூறீனாள்..
“ஆதி..இப்போ உனக்கு ஒரு ப்ரொமிஸ் பண்றேன்.. நான் எப்போவுமே உன்னை விட்டுட்டு போகமாட்டேன்..தனிய எப்போவுமே என்னோட ஆதியை தவிக்க விடமாட்டேன்..உன்னோட கவினை நீ எப்போவுமே நம்பலாம்.. ப்ரொமிஸ்..சரியா?” என்று மீண்டும் வினவவும்
“ம்ம்” என்று தலை அசைத்தவள் நிமிர்ந்து அமர்ந்து அவனை பார்த்து புன்னகைத்தாள்..
“குட்” என்று அவளின் கன்னம் தட்டியவன் ஒரு நிமிஷம் ஆதி என்றவாறு எழுந்து சென்று தனது துணிகளுக்கு அடியில் இருந்து ஒரு நகைப்பெட்டியை எடுத்து வந்தான்.. அவனது கையில் இருந்தவற்றை ஆதி புருவம் சுருக்கி பார்க்கவும் சிரிப்புடன் அவளை நெருங்கியவன் அதனுள் இருந்த மோதிரத்தை எடுத்து அவள் முன்னே நீட்டி ஒரு காலை மடக்கி மண்டியிட்டு அமர்ந்து
“எனக்கு வசனம் எல்லாம் பேச வராது ஆரா.. என்னோட மனசுட ஆழத்தில இருந்து வாற வார்த்தைகள் தான் நான் இப்போ சொல்ல போறது..உன்னை பார்த்ததுமே பிடிச்சது என்று சொல்ல மாட்டேன்..உன்னை அணு அணுவா ரசிச்சு காதலிச்சிருக்கேன்..இனி நீ இல்லாம எதுவும் இல்லை என்று தெரிஞ்சு தான் உன் முன்னால இப்போ நிற்கிறேன்.. என்னோட வாழ்க்கை முழுக்க நீ வேணும் டி..நீ இல்ல நா நான் வெறும் கூடு தான் டி.. இனி என்னோட வாழ வருவியா ஆரா?” என்று வினவவும் கைகளால் வாயை மூடி விழிகளை சுருக்கி தலையை சம்மதமாக அசைத்தாள்..
அவள் சம்மதம் கூறியதும் அவளது விரல்களை பற்றி மென்மையாக மோதிரத்தை அணிவித்து விட்டவன் அவளை நெருங்கி அமர்ந்து அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். அப்படியே அவளை தன் தோளில் சாய்த்தவன் அவளின் தோள்களை வருடிக்கொடுத்தவாறே
“ஆரா..நம்ம இரண்டு பேருக்கிடையில இருக்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தை இதோட நிறுத்திக்கலாம்.. நம்ம மனசுக்குள்ள இனி ஒளிவு மறைவு எதுவும் இருக்க கூடாது..எல்லாத்தையும் சொல்லு..என்னை மறுபடியும் சந்திச்சதுல இருந்து சகலமும்..உன் மனதுல நீ என்ன நினைச்ச நு சொல்லு..ஆனா அதுக்கு முன்னம் நான் என்னோட சைட்டை க்ளியர் பண்ணீடுறேன்“ என்று அவன் கூறவும் தோளில் இருந்த முகத்தை உயர்த்தி அண்ணாந்து அவனை ஆர்வமாக பார்த்தாள் ஆதிரா..
அவள் பார்ப்பதை கண்டதும் அவளது மூக்கை பிடித்து ஆட்டியவன் அவள் சிணுங்கவும் அந்த அழகில் மயங்கி மூக்கின் நுனியில் ஒரு முத்தம் இட்டுவிட்டு
“ஏன் ஆரா நீ மூக்குத்தி குத்தல?” என்று தனது உலகமகா சந்தேகத்தை கேட்டான்..ஆர்வமாக அவனை பார்த்து கொண்டிருந்தவள் அவன் இப்படி கேட்கவும் ஞே என்று விழித்து விட்டு பட்டென்று அவன் நெஞ்சில் அடித்து “கவின்” என்று கடுப்பாக கூறவும்
“ஓகே..ஓகே… சொல்லுறேன்.. ஆரா உன்னோட அக்காவோட ஃபோட்டோவை என்கிட்ட தாறப்போ அதில இருந்த உன்னோட முகம் என்னை ஏதோ ஒரு விதத்துல தாக்கியிருந்திருக்கனும்..ஆனா நான் ஆர்வமில்லாம விட்டு அது மனசோட ஆழத்துக்குள்ள போய்டுச்சு.. அப்புறாம் உன்னோட அப்பா நிச்சயம் என்று சொல்லி அது நடக்காம நின்றப்போ என் முகத்தையே நிமிர்ந்து பார்க்க பயப்பிடுறவன் எல்லாம் என்னில ஏதோ குறை போல என்று பேச…“
“கவின்?”
“ஆமாடா..அப்போ எனக்கு கோவம் உன்னோட அப்பா மேல தான் திரும்பிச்சு.. என்னால தான் உன்னோட அப்பாவை திரும்ப என்னோட அப்பா கன்டாக்ட் பண்ணாம இருந்தார்…ஆனா ஆரா சத்தியமா அந்த நேரத்து கோவம்..உங்க அப்பாவோட பக்கம் யோசிச்சு பார்க்கவே இல்லை.. அப்பிடி பார்த்திருந்தா..என்னோட ஆரா இந்த மூன்று வருஷம் பட்ட கஷ்டம்..” என்று கூறி விழிகளை அழுந்த மூடவும் அவனது தோளை அழுத்தியவள்
“கவின்..வேணும் நே நீங்க பண்ணல..எல்லாம் விதி..ஆதான் கடைசியில உங்களோட ஆரா உங்க கிட்ட வந்தாச்சுல.. மேல சொல்லுங்க“என்றூ ஆறுதலாக கூறவும் புன்னகைத்தவன் அவளது கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்தவாறே
“ம்ம்.. அப்புறம்,,அப்புறம்..உன்னை என்னோட ஆபிஸ்ல கண்டேன். “ம்ம்“
“பார்த்ததும் உன்னை எங்கயோ பார்த்த நியாபகம்.. ஆனா அன்றைக்கு எனக்கு உண்மையிலேயே மூட் சரி இல்ல…நீயும் ஸ்ரீயும் ஓடி வரவும்.. ” என்று கூறி அசடு வழிந்தவன்
“என்..என்ன?”
“நான் கோவமா இருக்கேன்..இவங்க மட்டும் சந்தோஷமா இருக்காங்க என்று ஒரு சின்ன பிள்ள தனமான யோசனையில தான் உன்னை காய்ச்சி எடுத்தேன்“
“ஹா..ஹா..ஹ்ம்ம்ம் அப்புறம்?”
“அப்புறம் அந்த ஃபங்க்ஷன் ல அந்த பொண்ணு உன்னை பத்தி தப்பா சொல்ல எனக்கு வந்த கோவம்..அது உடம்பெல்லாம் பத்தி எரியுற போல..அபிடியே அவளை கொலை பண்ணனும் என்ற அளவு கோவம்” என்று அவன் கூறும் போதே அன்றைய நினைவில் அவன் முகம் ரௌத்திரமாக மாறதொடங்கியது..
அதை கண்ணுற்றவள் சற்று எக்கி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.. அவள் முத்தமிடவும் மீண்டும் மென்மையை தத்தெடுத்தவன் அவளை மீண்டும் அணைத்து
“அப்புறம் கருணோட லவ் அதுக்கு ஹெல்ப பண்ணுற என்ற பெயரில உன்னை திருமணம்..ஆனா ஆரா கருணோட லவ்வுக்காக எப்போவுமே என்னோட வாழ்க்கையை பணயம் வைச்சிருக்க மாட்டேன்..உன்னை என்னவளா மாற்ற தான் அந்த வழியை தேர்ந்தெடுத்தேன்“
“ம்ம்“
“அப்புறம்.. எனக்கு ஃபீவர் வந்து நீ என்னை கவனிச்சுக்கிட்டபோ தான்..என்னை முழுமையா உணர்ந்தேன்..எவ்வளவோ சந்தோஷமா ஆபிஸ் போனா அங்க நீ என்னை ஏமாற்றி இருக்க நு தெரின்ச்சதும் கண்மண் தெரியாத கோவம்..” என்றவன் சற்று தயங்கி
“ஸாரி டா” என்றான்..
“கவின்..என்னை அடிக்கிறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு“
“ம்ஹூம்.. அப்போ என்னை அடிக்கவும் உனக்கு உரிமை இருக்கு ல?”
“ஹா..ஹா..ஹ்ம்ம் ஆமா“
” ஆனா..அன்றைக்கு நான் செய்தது தப்பு தான்..அன்றைக்கு நீ சொன்னப்புறம் தான் எனக்கு உன்னோட முகம் அந்த ஃபோட்டோல நியாபகம் வந்துடுச்சு..அப்புறம் அந்த ஃபோட்டோவை எடுத்து உன்னோட முகம் மட்டும் தெரியுற போல மாற்றி வைச்சிருந்தேன்“
“ஹா..ஹா..ஹயோ..ஹையோ..ஹா.ஹா..” என்று ஆதிரா சிரிக்கவும் புரியாமல் பார்த்தவன்
“ஓய் ஏன் டி இப்போ சிரிக்கிற? நான் எவ்வளோ ஃபீல் பண்ணி சொல்லுறேன்..”
“ஹா..ஹா..அதில்லை கவின்..கருண்…ஹா..ஹா“
“கருண்?”
“கருண் அந்த ஃபோட்டொவை நீங்க வைச்சிருக்கிறதை பார்த்து..அக்காவோட ஃபோட்டோ தந்த டைம்மே என்னை லவ் பண்ண தொடங்கிட்டிங்க நு..ஹா…ஹா” என்று அவள் சிரிக்க அவள் முகத்தை அள்ளி பருகுவதை போல பார்க்கவும் சிரிப்பதை நிறுத்திவிட்டு அவன் பார்வையில் வெட்கம் மேலிட
“என்..என்ன?” என்று கேட்டாள்..
“அவன் சொன்னது பொய் இல்லை ஆரா.. ” என்று கூறி அவளை அதிர செய்தவன் அவள் அருகே சென்று மென்குரலில்
“கவின் உன்னை பார்த்தப்பவே இங்க வந்துட்ட..” என்று இதயத்தை சுட்டி காட்டியவன்
“ஆனா என்ன இந்த கவினுக்கு தான் அது புரியல” என்று கூறி மென்மையாக சிரித்தான்..
Advertisement