Advertisement

22.

அவன் அருகே அமர்ந்து பரிமாறியவளை பார்த்தவாறே அவன் உணவை எடுத்து உண்ண ஏதோ உணர்வு பொங்கி எழுந்தது ஆதிக்குள்.. அவனை பார்க்காமல் குனிந்து மேஜையில் நகத்தால் கீறீக்கொண்டு இருந்தவள் நீ சாப்பிட்டியா?” என்ற குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

 

 வேதனையுடன் விழி மூடியவள் ஏதோ துக்கத்தை விழுங்குவது போல ரியாக்ட் செய்யவும் பதறியவன் ஆரா.. ஸாரி ஆதி..ஆர் யு ஓகே?” என்று வினவினான்,..

 

இல்லை என்பதாக தலை அசைத்தவள்மூன்று வருஷத்துக்கும் மேல கவின் என்னை சாப்பிட்டிங்களானு ஒருத்தங்க கேட்டு.. ஸ்ரீயையும் பாவனாவையும் நான் தான் பார்த்துப்பேன்..அவங்களுக்கு தெரியாதே இந்த கேள்வியை என்னோட மனசும் எதிர் பார்க்கும் என்றுஎன்று வேதனையுடன் சொன்னவள்

 

பச்..அழ கூடாது என்று இருந்தேன்..இன்றைக்கு முடியல.. ஸாரி..நீங்க சாப்பிடுங்கஎன்றவள் அவனது தட்டில் இன்னொரு சப்பாத்தியை வைக்கவும் அதில் சிறிய துண்டை எடுத்து அவள் உதட்டருகே எடுத்து சென்றான்..

 

திடுக்கிட்டு அவள் பார்க்கவும் விழிகளை மூடி திறந்து வாங்க சொல்லவும் மெல்ல உதடு பிரித்து அதை உட்கொண்டாள்.. அப்படியே இருவரும் உண்டு முடிக்கவும் இருவரும் ஒன்றாக மேலே அறைக்கு சென்று கட்டிலில் தூங்கி கொண்டிருந்த ஸ்ரீயின் இருபுறமும் அவளை பார்த்தவாறு படுத்தனர்..

 

ஸ்ரீயின் கூந்தலை கோதிவிட்டவாறே ஆதி

கவின்என்று அழைக்கவும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் திடுக்கிட்டு

ஹ்ம்ம்.. சொல்லுஎன்றான்..

 

தாங்க்ஸ் அன்ட் ஸாரி

 

எதுக்கு?”

 

தாங்க்ஸ் என்னை புரிஞ்சுகிட்டதுக்கு..ஸாரி உங்கள ஹர்ட் பண்ணதுக்கு

 

ஹ்ம்ம்ம்.. இப்போ என்னை புரிஞ்சுகிட்டியா என்ன??”

 

வேணாம் கவின்.. நீங்க நீங்களாவே இருங்க.. ” என்று கூறியவள் மறு புறம் திரும்பி படுக்கவும் தலையில் அடித்து கொண்டவன் போடி என்று உதட்டை அசைத்து விட்டு ஸ்ரீயை அணைத்தவாறு உறங்க தொடங்கினான்..

 

மறுநாளில் இருந்து ஆதி சந்தித்த கவின் முற்றிலும் வேறாக இருந்தான்..

காலை எழுந்து சோம்பல் முறித்தவள் தூங்கும் ஸ்ரீயை பார்த்து புன்னகைத்து அவள் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு நிமிர அவள் முன்னே கவின் தனது முகத்தை குனிந்து காட்டியபடி நின்றிருந்தான்..அவனின் ஆர்ம் கட் டீஷர்ட்டும் இறக்கத்தில் இருந்த ஷர்ட்ஸும் என அவன் நின்ற கோலம் வெட்கமூட்ட விழிகளை மூடியவள்

என்என்ன கவின்?” என்று வினவினாள்..

சிவந்து போன அவளின் முகத்தை பார்த்து மனதிற்குள் சிரித்தவன்

எனக்கும் குடுஎன்றான்..விழிகளை சற்று திறந்து

என்..என்ன..என்ன குடுக்கனும்?” என்று வினவினாள் ஆதிரா.. அவளின் சிவந்த இதழை பார்த்தவாறே

ஸ்ரீக்கு குடுத்தியே அதுஎனவும் பட்டென்று விழிகளை விரித்து அவனை முறைக்கவும்

அம்மாடியோவ்..இதுக்கேன் மா இந்த முறை முறைக்கிற? நீ குடுக்கலனா போ..நான் குடுத்துக்கிறேன்என்றவன் ஆதி உணரும் முன்னமே பட்டென்று அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு குளியலறைக்குள் ஓடி மறைந்தான்..

திடீரென நடந்த அந்த நிகழ்வில் திகைத்து விழித்தவள் கோபம் தலைக்கேற அருகில் இருந்த தலையணையை எடுத்து குளியலறை கதவில் படும் படி வீசி விட்டு தனது உடைகளை எடுத்து கொண்டு கீழுள்ள குளியலறைக்குள் விரைந்தாள்.. பின்னர் வழமையான கடமைகளில் ஈடுப்ட்டவள் அனைவரும் உணவறைக்கு வந்தவுடன் தயாரான உணவு வகைகளை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்..

அப்பொழுது

ஆரா.ஆராஎன அழைத்த கவினின் குரல் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவள் பார்த்தாள்..பார்த்தாள்..பார்வையை விலக்காமல் கவினையே நோக்கி கொண்டு இருந்தாள்..

தூய வெண்ணிற கார்ட்டன் ஷர்ட் கருநீல டெனிம் அணிந்து கையில் ஸ்ரீயுடன் இறங்கி கொண்டிருந்த கவினை பார்க்கும் போது அவளது பழைய காதல் மனது வெளிவர தொடங்கியது.. அவள் கற்பனையில் கானும் கவினின் உருவம்.. அதே தோற்றத்தில் கவின் வரவும் அப்படியே அசையாமல் நின்றவளை

ம்மாஎன்ற ஸ்ரீயின் குரல் கலைக்க நிமிர்ந்தவள் அருகில் நின்ற கவினை நோக்க முடியாமல் ஸ்ரீயை கைகளில் ஏந்தி கொண்டாள்..

ம்மா..ஸ்ரீ ஸ்கூத் போவாஎன்று கூறவும் குழப்பமாக கவினை நிமிர்ந்து பார்த்தவள் அவன் புன்னகைக்கவும் மீண்டும் மயங்கிய மனதினை அடக்க வழி தெரியாமல் மீண்டும் ஸ்ரீயையே நோக்கினாள்..

அப்பிடியா?? ஸ்ரீ குட்டி எப்போ ஸ்கூல் போக போறாங்க??”

துதே

இன்றைக்கா?” என்று இழுக்கவும்

இன்றைக்கு ஜஸ்ட் இன்ட்ரோ தான் ஆரா.. ஒரு பத்து மணி போல நீயும் ஸ்ரீயும் ரெடியா இருங்க நான் வந்து கூட்டிடு போறேன்என்றவன் அனைவரும் வர தொடங்கவும் போய் உணவு மேஜையில் அமர்ந்தான்..

அப்பொழுது அங்கு வந்து ஆதிராவை கண்ட சிந்து

குட்மார்னிங்க் அண்ணிஎன்று கூறவும்

குட்மார்னிங்க் சிந்து..” என்று கூறி புன்னகைத்தாள்..

என்ன அண்ணி .. காலேஜ் வாற ஐடியாவே இல்லையா?” என்று வினவவும் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் கவினை நோக்கினாள்.. அவளை பார்த்து விழி மூடி திறந்த கவின்

சிந்து அண்ணி கொஞ்ச நாள் வீட்ட இருக்கட்டும்.. அப்புறமா அதை முடிவு பண்ணலாம்என்று கூறவும்

சரி அண்ணாஎன்று தலையாட்டியபடி அமைதியானாள்..

பின்னர் தனம் சுமதி ஆதி பறிமாற அனைவரும் உணவு உண்ண தொடங்கவும்

அம்மா,அத்தை,ஆரா எல்லாரும் உட்காருங்க ஒன்றாவே சாப்பிடலாம்என்று கூறிய கவின் ஆதியை பார்த்து தன்னருகில் இருந்த இருக்கையை கண்காட்ட அதை காணாதது போலவே தனலக்ஷ்மியுடன் அமர போனாள்..

எங்க ஆதி என்னோட வாற? கவினுக்கு பக்கத்துல உட்காரு..” என்று தனம் மறிக்கவும் திருதிருவென விழித்தபடி

கடவுளே என்ன செய்ய போறானோஎன்ற பயத்துடனே மெல்ல சென்று அவனருகில் அமர்ந்து ஸ்ரீயை தன் மடியில் வைத்துக்கொண்டாள்.. அவள் எதிர்பார்த்தது போலவே தனது தட்டிலிருந்த உணவை எடுத்து ஆதியின் வாயருகே நீட்டினான் கவின்..

அங்கிருந்த அனைவருமே அதை கண்டும் காணாதது போல தமது உணவில் கவனமாக இருக்க ஆதி தான் தவித்து போனாள்..

ஒரு இயலாத பார்வையை கவினின் மேல் வீசியவள் உணவை ஸ்ரீக்கு ஊட்டுவதில் கவனமாகவும் கவினோ நீட்டிய கைகளை இறக்கமல் அவள் உதட்டருகே பிடித்த படியே இருந்தான்..

அவன் உணவு உண்ணாமல் கையை நீண்ட நேரம் நீட்டிக்கொண்டிருந்ததில் மீண்டும் மனம் வருத்தியவள் அந்த உணவை வாங்கி கொண்டாள்.. அவளை நோக்கி பளிச் புன்னகையை வீசியவன் கையை தேய்த்துவிட்டவாறே உண்ணவும் அதை கடைக்கண்ணால் நோக்கியபடியே ஸ்ரீக்கு உணவு ஊட்டினாள்..

கவின் ஆபிஸ் சென்ற பின்னர் ஹாலில் அமர்ந்து டீவியை ஆன் செய்து ஆனால் அதில் கவனம் செல்லாமல் இருந்தவள் அருகில் யாரோ அமர்வது தெரிந்ததும் திரும்பி பார்த்தாள்..அருகில் அமர்ந்திருந்த தனம் அவளை பார்த்து புன்னகைக்கவும் தானும் புன்னகைத்தவள்

என்ன அம்மா?” என்று கேட்கவும் அவள் தலையை வருடியவர்

உன் கூட கொஞ்சம் பேசனும் ஆதிஎன்றார்..

சொல்லுங்க மா?”

உனக்கும் கவினுக்கும் என்ன பிரச்சனை ஆதி?”

அம்..அம்மா

அம்மாவா தான் பேச வந்தேன்..கவினோட அம்மாவா இல்லை.. உன்னோட அம்மாவா

“…..”

ஆதி.. உன்னை பற்றி எல்லாம் இப்போ எனக்கு தெரியும்..உன்னோட கடந்த காலம் உன்னை கஷ்டப்படுத்தி இருக்கு.. அதுக்காக அதை நினைச்சு நிகழ்காலத்தை பாழாக்க போறியோ நு தோணுது

அப்பிடி எல்லாம்

நான் சொல்லுறதை கேளு ஆதி..கவினோட அம்மா நான்..எனக்கு அவனை நல்லாவே தெரியும்.. அவன் உன்னை விரும்புறான் நு தோணுது.. அது உனக்கும் தெரியும்..அப்பிடித்தானே?”

ம்ம்ம்

ஆனா உன்னை எதுவோ ஒன்று தடுக்குது இல்லையா?”

“……”

உனக்கு சொல்ல முடியும்னா சொல்லுமா

அய்யோ அம்மா.. உங்களோட ஷேர் பண்ணாம.. யார் கூட நான்..ஆனா அம்மா.. நான் கொஞ்சம் யோசிக்கனும்..என் மனசுல இருக்கிறது எனக்கே இன்னும் தெளிவாகல..ப்ளீஸ் மா..நான் தெளிவானப்புறம் உங்களோட பேசுறேனே

ஏன்டா அதுக்கு ப்ளீஸ் லாம்..ஆனா கவினை காயப்படுத்திடாத டா..அவன் உன்னை பார்த்த பிறகு தான் மாறி இருக்கிறான்என்றவர் எழுந்து உள்ளே சென்றார்..

சிறிது நேரம் சிந்தனைக்குள்ளேயே சிதைந்து போய் இருந்தவள் கவின் பத்து மணிக்கு தயாராக சொன்னது நினைவு வர ஸ்ரீயையும் தயாராக்கி அவளும் தயாரானாள்..பின்னர் கூறியபடி கவின் வரவும் மூவரும் அந்த பிரபல பாடசாலையின் அதிபரை சந்திக்க சென்றனர்..

ஹல்லோ மிஸ்டர் கவின்..வெல்கம்வாங்க மிஸஸ்.கவின்..ப்ளீஸ் சிட்டவுன்என்று ஆர்பாட்டமாக வரவேற்ற அந்த பாடசாலை அதிபர் ஸ்ரீயின் விபரங்கள் அடங்கிய ஃபைலை தனது மூக்குக்கண்ணாடியினூடாக நோட்டமிட்டு விட்டு நிமிர்ந்து கவினை சந்தேகமாக பார்த்தார்..

அதை எதிபார்த்தது போல கவின் சிரிக்கவும்

எனி ஹௌ..உங்க பொண்ணை எங்க ஸ்கூல்ல்ல சேர்க்கிறதுல வீ ஆர் ஹப்பி மிஸ்டர் கவின்.. நெக்ஸ்ட் மந்த் இருந்து உங்க டாட்டர் வரலாம்என்று கூறவும் கவின் எழுந்து கைகுலுக்க ஆதி எழுந்து வணங்கினாள்.. தாயை பின்பற்றி ஸ்ரீயும் அவரை வணங்க அவளின் தலையை தடவியவர் மகிழ்வுடனே அவர்களுக்கு விடைகொடுத்தார்..

வெளியே கவினின் அருகில் ஸ்ரீயின் கைகளை பற்றி அவளை நடத்தி அழைத்து வந்து கொண்டிருந்த ஆதி

ஏன் அவர் உங்களை ஒரு மாதிரி பார்த்தார்..நீங்களும் சிரிச்சு சமாளிச்சிங்க?” என்று வினவவும் அவளை திரும்பி பார்த்தவன்

அது சும்மஎன்று கூறி கண்ணடிக்கவும் வாயை சுழித்தவள்

சொல்லலனா போங்கஎன்று விட்டு விறு விறுவென முன்னே சென்றாள்..

ஹேய் ஆராஎன்று அவளை தொடர்ந்து சென்றவன் காரிற்குள்ளும் அவள் உம் என்று இருக்க ஸ்ரீயின் ஃபைலை எடுத்து அவளிடம் கொடுத்து பார்க்க சொன்னான்..

அதனுள் இருந்த ஸ்ரீயின் பர்த் சர்டிபிக்கெட்டில் தந்தை கவின் சக்கரவர்த்தி தாய் ஆதிரா என்று இருக்கவும் அதிர்ச்சியும் மகிழ்சியுமாக கவினை நோக்கினாள்..

அவள் புறம் பார்க்காமலே காரை ஸ்டார்ட் செய்தவன்

அவர் நம்ம வெடிங்க் கு வரல.. அது தான் அவருக்கு ஸ்ரீ பத்தி தெரியல..ஸோ ஒரு மாதிரி பார்த்தார்..நானும் சிரிச்சு சமாளிச்சேன்என்று கூறவும்

ஆனா..இது..இது எப்படிஎன்றூ அவள் திக்கவும் அவளை திரும்பி உறுதியாக நோக்கியவன்

ஸ்ரீ நம்மளோட பொண்ணு ஆதிரா.. அவ அப்பா அம்மா யாரோ அது சரியா தான் இருக்குது..புரியுதா?” என்று அழுத்தி கூறவும் அவனது அழுத்தத்திற்கு ஏற்ப அவளது தலை சம்மதமாக ஆடியது..

இவ்வாறே கவினின் சீண்டல்களுடன் நாட்கள் தான் நகர்ந்ததே ஒழிய ஆதியின் மனது எள்ளளவும் மாறவில்லை..எத்தனை சாதித்தும் அந்த பெண் மனது புரியாமல் தவித்து தான் போனது கவினின் மனது.. ஆயிரம் ஆயிரம் கற்பனைகளுக்கு விருந்தாக தனது சீண்டல்களை மட்டும் வழங்கி கொண்டிருந்தவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் வேறு வரிசையில் நின்று அழுத்தத்தை கூட்டிக்கொண்டு இருந்தன..

 

அது புரியாமல் ஆதியும் தன்னிலையிலேயே நிற்க அதிரடியாக களத்தில் இறங்கும் முடிவுக்கு வந்து நின்றான் கவின் சக்கரவர்த்தி..யாருக்கும் அடங்காத காளை தனக்கு அடிபணிவது உணர்ந்தும் உணராமல் இருந்த ஆதியின் மனதை வெளிக்கொணர தக்க தருணம் பார்த்து இருந்தவனுக்கு விருந்தாக வந்தது அவர்களின் உறவினர்வீட்டு திருமண வைபவம்.. ஸ்ரீ இப்பொழுது பாலர் பாடசாலைக்கு போவதாலும் ஏனையோர் ஒவ்வொரு காரணங்கள் கூறியதாலும் கவினும் ஆதியுமே அந்த திருமணத்துக்கு செல்வதாக முடிவெடுக்கப்பட்டது..

 

காலையில் வழமையான சீண்டல்களுடன் தன் நாளை தொடங்கிய கவின் பட்டு வேஷ்டியும் கடும் நீல நிறத்தில் முழுக்கைச்சட்டை அணிந்து கண்ணாடியின் முன்னின்று அதன் கையை முக்கால் அளவிற்கு மடித்து விட்டுக்கொண்டிருக்க அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது..ஆதி தான் என்பதை அவளது பிரத்தியேக நறுமணமே அவனுக்கு உணர்த்த புன்னகையுடன் திரும்பியவன் அங்கு நின்ற ஆதிராவின் தோற்றத்தில் இலயித்து சிலையென உறைந்து நின்றான்..

 

இளநீலத்தில் பொன்னிறக்கரையிட்ட புடவையில் பொன்னிறத்திலேயே பூக்கள் சிதறீக்கிடக்க முடியை விரித்து ஒரு புறமாக எடுத்துவிட்டு கைகளில் இளநீலமும் பொன்னிறமும் கலந்த வளையல்கள் குலுங்க கழுத்தில் சேலைக்கு மேட்சான நீலநிறக்கல் பதித்த நெக்லஸ் ஒன்றை மாட்டிக்கொண்டிருந்தவளை பூனை போல மெல்ல பின்னால் நெருங்கி நின்றான்..

 

கழுத்தடியில் உணர்ந்த சூடான சுவாசம் அறிந்து கரத்தில் இருந்த நெகலஸை தவறவிட அவளின் முன்புறமாக தனது கையை நீட்டி அதனை தாங்கி பிடித்தவன் மறு கையையும் முன்புறமாக எடுத்து சென்று அதன் இரு முனைகளையும் பற்றி அவள் கழுத்திற்கு கொண்டு சென்றான்..பெருமூச்சுக்கள் விட்டவாறே ஆதி உறைந்து நிற்க நெக்லஸை அணிந்த கையோடு அவனது விரல்கள் அவளது வெற்று முதுகில் விளையாட தொடங்கவும் தன்னவனின் தீண்டலில் தேகம் கூசி சிலிர்க்க ஒரு புற தோளை உயர்த்தி கழுத்தை சற்று சாய்த்தாள்..

 

அவளின் செய்கையில் தெரிந்த இணக்கம் கவினை மேலும் முன்னேற வைக்க ஆராஎன்று தாபமாக அழைத்தபடி அவளை இறுக்க போகவும் கீழே ஆதிஎன்ற தனலக்ஷ்மியின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.. அவரின் குரலில் அத்தனை நேரம் இருந்த மோனநிலை கலைய சட்டென்று கவினை விலக்கி தள்ளியவள் கீழே விறுவிறுவென ஓடி சென்றாள்..

 

அவள் சென்றதும் அம்மாஆஆஆஆஎன்று கூறி கையை காற்றில் குத்தியவன்  இன்றைக்கு எப்படியும் ஆதியிடம் மனம் திறப்பது என்று முடிவு செய்து கொண்டான்.திருமணம் சற்று தொலைவில் என்பதால் காரை ட்ரைவர் செலுத்தி செல்ல காரிலும் ஆதியிடம் பேச முடியாமல் போனது கவினுக்கு..

 

ஆதிக்கோ தன்னிலை தவறி அவனுடன் இழைந்ததை எண்ணி எண்ணி அய்யோ என்று இருந்தது..ஆதியின் அமைதியை கவின் இயல்பான நாணம் என எண்ணி அவளின் கைகளை அமைதியாக பற்றியபடி வர அவன் கையில் இருந்து தன் கையை பிரிக்க முயன்று தோற்று சீட்டில் தலை சாய்த்து கொண்டாள்..

Advertisement