Advertisement
17
ஆதிரா நல்ல உறக்கத்தில் ஆழ்ந்ததை உறுதிப்படுத்தி கொண்டவன் ஒரு பெருமூச்சுடன் எழுந்து பால்கனி கதவை திறந்து அங்கிருந்த சாய்கதிரையில் அமர்த்து வானத்தை வெறிக்க தொடங்கினான்..அவனது மனதில் இதுவரை ஆதி–ஸ்ரீயை பற்றிய எண்ணங்கள் மெல்ல மெல்ல வலம் வர தொடங்கின.
முதன் முதலில் அவன் ஆதியை சந்தித்த போது மிகவும் டென்ஷனில் இருந்தான்.அவனது கம்பனி டீலர் ஒருவரின் குளறுபடியால் நேர்ந்த சிக்கலில் உச்சகட்டமாக கொதித்து கொண்டிருந்தவன் அதை பற்றிய விடயங்களுக்காக தான் ஆபிஸிற்ற்கு வந்தது..
அப்பொழுது மகிழ்வாக சிரிந்த படி தன்னில் வந்து மோதிய அந்த சின்ன மொட்டை பார்த்ததும் கோவம் கொள்ள முடியாமல் தவித்தவன் அவளின் பின்னே வந்தவளை கடிந்து கொண்டான்..அன்றூ அவள் தன்னுடன் எதிர்ந்து பேசும் போது எரிச்சலாக இருந்திருந்தாலும் சில சமயம் அவளுடனான வார்த்தையாடல்களை எண்ணி ரசித்தும் இருக்கிறான்..
அவனை பொறுத்த வரையில் ஒரு விளையாட்டாக ஆதியுடன் சீண்ட் விருப்பப்பட்டிருக்கிறானே ஒழிய அதற்கு மேல் அவர்கள் உறவுமுறையில் நெருங்கி இப்பொழுது ஒரே கட்டிலில் துயிலும் நாள் வரும் என்று கடுகளவும் எண்ணியதில்லை.
சிந்துவின் பிறந்தநாள் அன்று அந்த பெண் ஆதியை தவறாக சித்தரிக்கும் போது தான் ஆதி ஒரு கணவனை இழந்து தனித்து இருக்கிறாள் என்ற உண்மை அவனுக்கு உரைத்தது..அன்று உண்மையில் ஆதிராவிற்கு நல்ல வாழ்வு விரைவில் அமைய வேண்டும் என்றூ மிகவும் விரும்பினான்..ஆனால் அது தானாக இருப்பேன் என்று சிற்றளவும் சிந்திக்கவில்லை..
கருணின் காதல்,பாவனாவின் தற்கொலை,பாவனாவின் நிபந்தனை ,சிந்துவின் தூண்டல் இப்படி பல காரணங்களில் வலையில் சிக்குண்டே தான் ஆதிராவை திருமணம் செய்யும் முடிவை எடுத்திருந்தாலும் ஆதியுடனான திருமணத்தில் அவன் தயக்கம் எப்படி சொல்வது அன் கம்பர்ட்டபிள் என்பார்களே அதுபோல உணர்ந்ததில்லை.. இயல்பாக அவளுடன் இசைந்து போகவே மனம் விழைகிறது.. அது ஸ்ரீ மீது இவன் கொண்ட பாசத்தினாலும் இருக்கலாம்..
ஆயினும் ஆதி தற்போது அவன் மனைவி அல்லவா?? தி கிரேட் கவின் சக்கரவர்த்தியின் மனைவி நிம்மதியான தூக்கம் கூட இல்லாமல் தவிக்கிறாள்..அந்த அளவிற்கு ஏதோ ஒரு அழுத்தம் அவளுள் விளையாடுகிறது..நிச்சயம் அது பற்றி அறிய வேண்டும்..பார்க்கலாம் ஆதிராவின் பிடிவாதமா இல்லை இந்த கவின் சக்கரவர்த்தியின் பிடிவாதமா ஜெய்க்கிறது என்று..
இவ்வாறு பல எண்ணங்களில் உழன்றவன் அப்படியே உறங்கியும் போனான்..
காலையில் எழுந்த ஆதியின் விழிகள் அருகில் இருந்த மகளை நோக்கிவிட்டு பின்னர் அவளை தாண்டி சென்றது..கவின் இல்லை என்றதும் புருவங்கள் சுருங்க
‘இவ்வளோ நேரத்தோட எழும்பி எங்க போய் இருப்பார்‘ என்று எண்ணியவள் கட்டிலில் இருந்து இறங்கி இடையை தாண்டி வழிந்த கூந்தலை அள்ளி எடுத்து கொண்டையிட்டவாறே குளிப்பதற்காக ஆடையை எடுக்க நகர்ந்தாள்..அப்படி நகர்ந்தவளின் கண்களில் பட்டது திறந்திருந்த பல்கனி கதவு..
மெல்ல அங்கே சென்று எட்டி பார்த்தவள் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் சாய்ந்தவாறு உறங்கி கொண்டிருந்த கவினை பார்த்ததும் விரைந்து அவனருகில் சென்றவள் அவள் தோளை பற்றி உலுக்கி எழுப்பினாள்..இரவிலிருந்து அப்போது வரை கொட்டும் பனியில் தன்னை மறந்து அசதியில் உறங்கி இருந்தவன் ஆதி வந்து எழுப்பவும் சிரமத்துடன் விழிகளை திறந்து பார்த்து விட்டு மீண்டும் விழிகளை மூடிக்கொண்டான்.
மீண்டும் அவனை தட்டி எழுப்பியவள் அவளை உள்ளே சென்றூ கட்டிலில் உறங்க சொன்னாள்.. “பச்” என்று சலித்தபடி எழுந்தவன் தடுமாறவும் அவனருகே ஓடியவள் அவன் இடுப்பை பற்றி“ஹேய் கவின் பார்த்து பார்த்து” என்று பதறினாள்..அவளை பார்த்து புன்னகைத்தவன்
“அம்..அம்..ஓகே ஆதிரா..கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்..கருண் ஆபிஸ் போற நேரம் என்னை எழுப்பி விடு..முக்கியமான மீட்டிங் இருக்கு” என்ற கூறிவிட்டு தடுமாறியபடியே கட்டிலில் சென்று விழுந்தான்..
அவன் கட்டிலருகே சென்று படுக்கும் வரை அவனோடு சென்றவள் அவன் மீண்டும் அசதியில் உறங்கவும் விரைந்து சென்று தான் தயாராகி வந்து கவினின் தூக்கத்தை குழப்பாதவாறு ஸ்ரீயை தூக்கிக்கொண்டு கீழே சென்றாள்..
அங்கே உணவு மேஜையில் இருந்து உணவு உட்கொண்டு இருந்த கருண் ஹாலிற்கு வந்த ஆதிராவை நோக்கி விட்டு மேலும் தட்டில் உணவு போட வந்த பாவனாவை தடுத்து “போதும் டா” என்றவன் கைகளை கழுவி விட்டு நப்கினால் கையை துடைத்துவிட்டு ஆதியிடம் சென்றான்..
“ஸ்ரீ குட்டி எந்திரிச்சுட்டாங்களா?” என்றபடி சிந்து ஸ்ரீயை தூக்கி கொள்ளவும் புன்னகையுடன் அவளிடம் விட்டுவிட்டு திரும்பிய ஆதி கருண் தன்னை நோக்கி வருவதை கண்டதும் தேங்கி நின்றாள்..
“ஆதி குட்மார்னிங் மா“
“குட்மார்னிங்ணா“
“கவின் ஆபிஸ் போய்ட்டானாமா?”
“இல்லையேணா..இன்னும் தூங்குறார்..ஆபிஸ் நீங்க போற நேரம் எழுப்ப சொன்னார்.”
“என்னது?? அவன் அப்பிடி இருக்க மாட்டானே..இன்றைக்கு ஒரு முக்கியமான ப்ரொஜெக்ட் இருக்குமா. வெட்டிங் முடிஞ்சு ரெண்டு நாளாலேயே ஆபிஸ் ஓடுறோம் என்றால் எவ்வளவு முக்கியம் என்று யோசியேன்…அது சக்ஸஸ் ஆனா நம்ம கம்பனி இப்போ இருக்கிறதை விட டபுள் ப்ரொஃபிட் காட்டும்..கவின் தான் அந்த ப்ரொஜெக்ட் செய்தான்..அவன் கிட்ட தான் ஃபைலும் இருக்கு..ம்ம்” என்று யோசித்தவன்
“சரி மா..இப்போ நானும் பாவனாவும் கிளம்பி அங்க இருக்கிற மிச்ச அரேஞ்மன்ட்ஸ் அ பார்க்கிறோம்..நீ கவினை ரெடியாகி உடனே ஆபிஸுக்கு வர சொல்லு..” “சரிணா” என்றவள் அவர்கள் வெளியேறியவுடன் கவினை எழுப்ப விரைந்தாள்..
அறையில் வந்து பார்த்தவள் குழந்தை போல உறங்கும் கவினை பார்த்துவிட்டு அவனை எழுப்ப சற்று தயங்கினாள்,ஆயினும் கருண் கூறியதன் அவசியம் உரைக்க அவனை உலுக்க கையை அவன் கையில் வைத்தவள் தன் உடலில் பட்ட கவினின் உடல் சூட்டை உணர்ந்து பதறி போனாள்..சட்டென்று அவனது நெற்றியில் கை வைத்து பார்த்தவள் அதன் சூடு தாங்காமல் கையை எடுத்துவிட்டு கீழே தனலக்ஷ்மியை அழைத்தவாறே ஓடினாள்..
ஆதி அப்படி பதறி ஓடி வரவும் ஹாலில் ஸ்கூலிற்கு செல்ல தயாராகி இருந்த மனோகர் பதறி போய் அவளின் அருகே விரைந்தார்..“என்னமா ஆதி? என்ன ஆச்சு?” என்று அவர் கேட்கும் போதே தனமும் வர
“அப்பா..கவினுக்கு ரொம்ப உடம்பு கொதிக்குத்து..காய்ச்சல் போல இருக்கு..ஒ..ஒருக்கா..ஒருக்கா டாக்டர் யாரையும் கூப்பிடுறீங்களா?”
“என்னது காய்ச்சலா?” என்றபடி தனமும் சுமதியும் அவனது அறைக்கு விரைய
“நீ பதறாதமா.. நீ மேல போ..நான் டாக்டருக்கு கால் பண்றேன்” என்றபடி செல்ஃபோனுடன் வெளியேறினார் கவினின் தந்தை..
மேலே சென்ற ஆதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..தனமும் சுமதியும் கவினை விழுந்து விழுந்து கவனிக்க உரிமை இருந்தும் உரிமை இல்லாதவளாய் தயங்கி அவனருகே தவிப்புடன் நின்றிருந்தாள்..அப்பொழுது தான் அவளுக்கு கருணின் நியாபகம் வர அவனுக்கு கால் செய்தவாறே சற்று தள்ளி சென்றாள்.
“ஹலோ ஆதி,,கவின் கிளம்பியாச்சா?” என்று கருண் கேட்க நிலவரத்தை சொன்னவள் இப்போ என்ன அண்ணா செய்யட்டும் என்று அவனிடமே திரும்பி கேட்டாள்..அவனும் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறி விட்டு
“சரிமா..அவனுக்கு தான் டீடெய்ல்ஸ் தெரியும்..அந்த ஃபைல் உம் அங்க தான்..நான் அப்போ கஸ்டமர்ஸ் அ அனுப்பிடுறேன் மா..அவனோட ட்ரீம் ப்ரொஜெக்ட் எப்பிடி எடுக்க போறானோ தெரியல” என்று சலித்தபடி ஃபோனை வைக்க போகவும்
“அண்ணா..அண்ணா பொறுங்க. நீங்க யாரையும் அனுப்ப வேணாம்.. நா..நான் வேணும் நா அந்த ஃபைலோட வருகிறேன்.. ஒரு ட்ரை போடலாமே ணா” என்று கூறினாள்..
“இல்லமா எனக்கே அந்த ஃபைலை கவின் தந்தப்போ ஒன்றும் புரியல..நீ வேற ஃபீல்ட்ல இருக்கிறவ..உன்னால” என்று தயக்கமாக இழுத்தான்..
“இல்..இல்ல அண்ணா..எனக்கு ஒரு சான்ஸ் தாங்க” என்று அவனிடம் கெஞ்சி அனுமதி பெற்றவள் அவனிடம் அந்த ஃபைல் பற்றிய விபரம் கேட்டுவிட்டு
கப்பேர்ட்டில் இருந்ததை தேடி எடுத்து தனத்திடம் பார்த்துக்கொள்ளும் படி கூறி விட்டு ஆபிஸுக்கு வீட்டிலிருந்த காரை எடுத்துக்கொண்டு விரைந்தாள்..
ஆபிஸிற்கு விரைந்தவள் சற்று நேரம் கவினின் அறையில் அமர்ந்து அந்த ப்ரொஜெக்ட் விபரங்களை முழுதும் படித்தாள்..பின்பு குளிர்ந்த நீரை குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தியவள் “அண்ணி” என்று பாவனா அழைக்கவும் அழுத்தமான ஒரு தலை அசைப்புடன் அவளை பின் தொடர்ந்தாள்..
கன்பரன்ஸ் அறைக்குள் ஆதி நுழைந்தவுடன் ஆதியை கருண் அறிமுகப்படுத்தவும் முதலில் வந்தோரின் முகம் அதிருப்தியை தான் காட்டியது..அதை பார்த்து புன்னகைத்த ஆதி
“லேடிஸ் அன்ட் ஜென்டில்மேன்..திஸ் இஸ் ஆதிரா கவின் சக்கரவர்த்தி..ஐ நோ..என்னோட ஹஸ்பன்ட் இங்க வரலை என்றதும் ப்ரொஜெக்ட் பத்தின மதிப்பை உங்க மைன்ட் ல குறைச்சு இருப்பிங்க..பட் என்னோட ஹஸ்பன்ட் ..தி சக்ஸஸ் ஃபுள் பிஸ்னஸ் மேன் கவின் சக்கரவர்த்தி என்னை இங்க வர அனுமதிச்சிருக்கார் நா பிலீவ் மீ.. ஐ வில் நெவெர் அலவ் டு டிசப்பொய்ன்ட் யு..” என்று கூறி விட்டு மள மளவென ப்ரொஜெக்டை பற்றி விளக்க தொடங்கினாள்..
அவள் பேசும் போது யருடய விழியிலுமே அசைவில்லை..கருணோ ஆஆ என்று வெளிப்படையாக வாயை பிளந்தான்..சஞ்சய் அவளது பிரசன்டேஷனை வீடியோ எடுத்தான்..“ஓகே தட்ஸ் ஆல்” என்று கூறி அவள் முடிக்கவும் அனைவரும் கை தட்டி ஓசை எழுப்பினர்.. அதையும் புன்னகையுடன் கூடிய தலை அசைவில் அங்கீகரித்தவள் வந்தோரை அனுப்பி விட்டு கருண் சஞ்சயின் பாராட்டையும் பெற்றுவிட்டு வீட்டை நோக்கி விரைந்தாள்..
வீட்டிற்கு சென்றவள் ஸ்ரீயை கவனித்து கொண்டிருந்த சிந்துவை இன்னும் சற்று நேரம் பார்த்துக்கொள்ளும் படி வேண்டிவிட்டு தமது அறைக்கு சென்றாள் கவினை பார்க்க..
அவள் வந்ததை கண்டவுடன் புன்னகைத்த தனம்
“வந்திட்டியாமா..டாக்டர் வந்து பார்த்தார்..ஒரு ப்ரொப்ளமும் இல்லையாம்.பனியில் நின்றிருப்பான் போல.ஜஸ்ட் கோல்ட் அன்ட் டயர்ட்னஸ் தானாம். பயப்பிட வேண்டாம் என்றார்.. டேப்லட்ஸ் கொடுத்து விட்டிருக்கார்..அவன் இன்னும் முழிக்கல..இடையில எழும்பி உன்னை கேட்டவன் திரும்ப தூங்குறான்.. சுமதி கீழ கவினுக்கு சூப் செய்யுறது நு போய் இருக்கா..நீ இவனோட இருமா.. நான் போய் சூப் தயார் என்றால் போய் அனுப்பி விடுறேன்“
“சரிமா..நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்” என்றவுடன் அவளின் கன்னம் தடவியவர்“அவன் காய்ச்சல் வந்தா சின்ன பையன் போல பிஹேவ் பண்ணுவான் மா..அதான் அப்போத உன்னை மறந்திட்டு நாங்க ரெண்டு பேரும் உரிமை எடுத்துக்கிட்டோம்..தப்பு தான்” என்று அவர் இழுக்கவும்
“ஆமாமா தப்பு தான்” என்றவள் அவரது அதிர்ந்த முகத்தை பார்த்துவிட்டு சிரித்து
“அம்மாவோட உரிமையை யாராலயும் ஏன் மனைவியால கூட பறிக்க முடியாது மா..ஸோ இப்பிடி நீங்க பேசுறது தப்பு தான்” என்றாள்.. அவளை பார்த்து மகிழ்வாக சிரிந்தவர் பின் அறையை விட்டு வெளியேறினார்..
அவர் வெளியேறியதும் ஒரு பெருமூச்சுடன் கவினின் அருகில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்தவள் அவனையே பார்த்தபடி இருந்தாள்..
கண்முழித்த கவினுக்கு உடலெல்லாம் வலித்தது..கண்கள் ஏகத்துக்குக் எரிய அதை தேய்த்துவிட்டவாறே எழுந்தவன் அருகில் இருந்த ஆதிராவை கேள்வியாக நோக்கினான்.கவின் அசைந்து எழுந்ததில் கையில் இருந்த புத்தகத்தை வைத்துவிட்டு அவனருகில் விரைந்த ஆதிரா அவன் தன்னை பார்த்தவுடன்
“என்ன சார்?? பெயர் தான் பெரிய பிஸ்னஸ் மேன்..ஆனா ஒரு கோல்ட் ஃபீவருக்கே இந்த பாடு” என்று கிண்டலடித்தவள் “இப்போ எப்பிடி இருக்கு கவின்?” என்றூ வினவினாள்..
அவளது கிண்டலுக்கு லேசாக சிரித்தவன் தலையை ஆட்டியபடியே
“யா நவ் ஃபீலிங் பெட்டர்..ஆமா கருண் எங்க ஆபிஸ் போய்ட்டானா??” என்றபடி எழுந்தவன் முடியாமல் மீண்டும் அமர்ந்தான்..
“பச்” என்றபடி அவனை முறைத்த ஆதி “அதான் உடம்பு சரியில்லாம இருக்கு ல?? அதை கவனிக்காம இப்போ எதுக்கு உங்களுக்கு ஆபிஸ்?? பேசாம ரெஸ்ட் எடுங்க சரியா?” என்று மிரட்டியவளை இருமியபடியே பார்த்து சிரித்தவன்
“அப்பிடியே என் ஸ்கூல் மிஸ் போல மிரட்டுற? பழக்கதோஷம்? ம்ம்?? ஆனா மிஸ் நான் உங்க ஹஸ்பன்ட், ஸ்டுடன்ட் இல்ல“
“ஆஹா..ஐயாக்கு காய்ச்சலுலயும் காமெடிய பாரு..ஹலோ சார்..ஹஸ்பண்ட் சொல்லுற பேச்சை கேட்காட்டியும் பிரம்பெடுத்து விளாசிடுவோம் நாங்க ஆமா” என்று கூறினாள்.
“அம்மாடி பயமா இருகே” என்றபடி மீண்டும் அவன் எழவும்
“என்ன கவின் எங்க இப்போ மறுபடியும் எழுந்துக்கிறீங்க?” என்று சலிப்பாக வினவினாள்..
“வாஷ்ரூம் போகனும்” என்று கூறி எழுந்தவனின் கரங்களை சென்று பற்றி கொண்டாள்.. அவளை பார்த்து முறைத்தவன்
“நீ தான் இப்போ ஒன்றுமில்லாத காய்ச்சலை பெருசாக்கிற..நான் நடக்கிற அளவு தெம்பா இருக்கேன்..என்னை விடு“
“ஆஹ்..நீங்க நடக்குற அளவு தெம்பா இருக்கீங்க இல்ல? அப்போ என்னையும் அந்த வாஷ்ரூம் டோர் கிட்ட ட்ரொப் பண்ணிட்டு போங்க” என்று சொல்லி சிரித்தவளை பார்த்தவனது பார்வை வித்தியாசமாக மாறியது..
Advertisement