Advertisement

16

புன்னகையுடன் கதவை திறந்த பாவனாவின் நெற்றியில் மகிழ்வுடன் முத்தமிட்ட ஆதிரா, முகம் சிவந்தவளை மேலும் எதுவும் துருவாமல் பாவனா நீ போய் குளிச்சு ரெடியாகிட்டு கருணும் நீயும் கீழ வாங்க.. இப்போ கோயிலுக்கு போகனும்.. ஈவ்னிங்க் ஃபங்ஷன் இருக்குல? ஸோ ஓடு ரெடியாகிட்டு வாஎன்று அறிவுறுத்திவிட்டு மறுபடியும் கீழே சென்று ஸ்ரீயை அழைத்துக்கொண்டு அறைக்கு விரைந்தாள்.

 

அங்கு கட்டிலில் கவின் இல்லாமல் போகவும் குளிக்கிறான் என்று அனுமானித்துக்கொண்டு ஸ்ரீக்கு கோயிலுக்கு செல்வதற்கு ஏற்ற ஆடை அணிவித்து விட்டவள் மறுபடியும் அவளை தனத்திடம் ஒப்படைத்துவிட்டு மேலே ஏறியவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது..சோர்ந்து போய் அறைக்கு வந்து அங்கிருந்த சோஃபாவின் சாய்ந்து விழி மூடினாள்..

அப்பொழுது குளியலறை கதவை திறக்கும் ஒலி கேட்கவும் விழிகளை திறந்து நோக்கியவள் அங்கு இடுப்பில் ஒரு டவலும் தோளை போர்த்து இருந்த இன்னொரு டவலால் தலையை துவட்டியபடி வந்த கவினை கண்டவுடன் என்றுமில்லாத புது தயக்கம் எழ பட்டென்று மீண்டும் விழிகளை மூடிக்கொண்டாள்..

 

குளியலறைக்கதவை சாத்திவிட்டு திரும்பிய கவின் நெற்றியில் பூத்திருந்த வியர்வையுடன் மூச்சுவாங்கியபடி சோபாவில் சாய்ந்திருந்த ஆதிராவை கண்டு புன்னகைத்தவன்,பின்னர் அவளை சீண்ட தோன்றவும் தனக்கு தானே பேசிக்கொள்வது போல

 

ச்சே காலங்காத்தால இந்த முகத்திலயா கவின் நீ முழிக்கனும்? பாரு மறுபடியும் தூங்குறத..இப்படி ஒரு சோம்பேறியோட காலம் தள்ள வேண்டியதா போய்ட்டுதே..ச்சு..ச்சுஎன்று கூறவும் பட்டென்று விழிகளை திறந்து முறைத்தாள்.

.

தலையை துவட்டியபடி ஏதோ வாயில் வந்த பாட்டை விசிலடித்தவாறு கண்ணாடியின் அருகே சென்று தலையை அப்படியும் இப்படியுமாக கலைத்தபடி அழகு பார்த்தவன் கண்ணாடிக்குள்ளாலேயே ஆதிரா தன்னை முறைப்பதை கண்டு நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டான்..

 

பின்னர் ஆதிரா இருப்பதை மறந்து பட்டென்று தோளில் இருந்த துண்டை கட்டிலில் தூக்கிபோட்டு விட்டு கப்பேர்ட்டை நோக்கி நகர்ந்தவன் அப்பொழுது தான்,ஆதிராவின் இருப்பு உரைக்கவும் பட்டென்று திரும்பி அவளை நோக்கினான்..அவன் துண்டு எறியும் பொழுதே பார்த்திருப்பாள் போலும்.. சிவந்து போன முகத்துடன் முன் மேஜையில் இருந்த ஃபோனை எடுத்து நோண்டி கொண்டிருந்தாள்..

 

அவள் இயல்பில் இல்லை என்பதை உணர்ந்தவன் பட்டென்று அங்கிருந்த பல்கனி கதவிற்கு இட்டிருந்த திரைசீலையின் பின்னால் ஒளிந்து கொண்டு

அய்யோ கடவுளே நீ முழிச்சா இருக்க?” என்று அதிர்ந்தது போல கூவினான்..

 

அவன் கத்தவும் நிமிர்ந்து பார்த்தவள் அவன் திரைசீலையின் பின்னிருந்து எட்டி எட்டி பார்ப்பதை கண்டவுடன் கடுப்பாகி

இப்போ எதுக்கு ஒளிஞ்சு இருக்கிங்க? யாரும் இங்க எதையும் பார்க்கல..வெளில வாங்க முதல் கத்தாமஎன்று கூறவும் தனது வாயில் அடித்து

 

அய்யயோ..என்ன ஆச்சா?? ஒரு வயசு பையன ட்ரெஸ் இல்லாம பாத்திட்டு?”

 

என்னது? ச்சே பேச்சை பாரு..நான் ஒன்றும் பார்க்கல

 

பொய் சொல்லாத..என்னை இப்போ நீ அரை நிர்வாணமா பார்கல?”

என்றதும் தன் காதுகளை மூடியவள் முகம் கன்றி சிவக்கசிவ..சிவா..நான் பார்க்கல பார்க்கல.” என்று கத்தவும்

 

நான் நம்பமாட்டேன்என்று பதிலுக்கு கத்தினான் கவின்..

 

ச்சேஎன்ற படி விழிகளை திறந்தவள் முகம் பிரகாசமுற கைகளை முன்னுக்கு கட்டி அவனை பார்த்து நக்கலாக சிரித்தாள்..கவின் விளங்காமல் பார்க்கவும்

 

ஆமா..நான் கண்ணை மூடி இருந்ததால எனக்கு எதுவுமே தெரியல..நான் இங்க இருந்தது உங்களுக்கு தெரியுமில்ல? அப்புறம் என்ன? ஏன் துண்டை தூக்கி போட்டீங்க?” என்று கேட்கவும்

 

அது..அது..” என்று தடுமாறியவன்நீ இருக்கிறத மறந்துட்டேன்என்றான்.பின்னர்  

சரி..சரி..இப்போ நீ வெளில போ..நான் கிளம்பனும்என்றான்..

 

ஆஹ்..அது எப்பிடி மறக்கும்? அதுக்கு முன்னாடி தானே என்னை பற்றி அப்பிடி புகழ்ந்தீங்க.. இதுக்கு பதிலை சொல்லுங்க சார்

 

இப்போ நீ போறியா இல்லையா?”

 

ஹூஹூம் எனக்கு பதில் வேணும்..அப்போ தான் போவேன்

 

இப்போ நீ போகலனா

 

போகலனா

 

அடுத்த துண்டையும் கட்டிலுல போடுடுவேன்..எப்பிடி வசதி

 

என்றவுடன்அய்யோ..சரி சரி..சீக்கிரம் வாங்க கோயில் போகனும்”  என்றபடி பேயை கண்டது போல குடு குடுவென ஓடினாள்..

 

பின்னர் இரு ஜோடிகளும் கோயில் சென்று சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வர கொஞ்சம் கொஞ்சமாக உறவினர்கள் கூட தொடங்கினர்..ரிஷெப்ஷனும் மண்டபத்தில் வைத்திருந்ததால் வீட்டிலேயே தயாராகி மண்டபத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

 

அதன்படி அனைவரையும் தயாராக செய்ய உதவி உறவினர்களை கவனித்து கொண்டு இருந்த ஆதிரா இறுதியாக தான் தயாராக சென்றாள்.. நேரமாவதை உணர்ந்து அனைவரையும் முன்னே போக சொன்ன கவின் தானும் ஆதிராவும் பின்னர் தனி காரில் வருவதாக கூறினான்..அனைவருக்கும் அதுவே சரி என்று பட அவர்களை வரச்சொல்லிவிட்டு மற்றையோர் அனைவரும் கிளம்பினர்..ஸ்ரீயுடன் பின் தங்கிய கவின் ஹாலில் சோபாவில் அமர்ந்து அவளுடன் விளையாடி கொண்டிருந்தான்..

 

சிறிது நேரம் பொறுது பார்த்தவன் ஆதிரா வர நேரமாவதால் பொறுமையை இழந்தபடியே ஸ்ரீயை தூக்கி சோபாவில் வைத்து

 

சமத்தா இருங்க குட்டி..நான் போய் அம்மாவை கூட்டிட்டு வருவேனாம்..சரியா?” எனவும் தலையை உருட்டியபடி

 

சதிப்பாஎன்றாலும் அவளது கவனம் முழுவதும் பாட்டி அணிவித்துவிட்டிருந்த வளையலில் தான் இருந்தது..

 

ஆதிராவை அழைத்துக்கொண்டே படியேற திரும்பியவனின் வாய் அபொழுது தான் இறங்கி வந்து கொண்டிருந்த ஆதிராவை பார்த்தவுடன் கப்பென்று மூடிக்கொள்ள கண்களோ அநியாயத்துக்கு விரிந்தது..

 

கூந்தலை விரித்து விழிகளுக்கு மையிட்டு இதழ்களிற்கு உதட்டு சாயம் இட்டிருப்பாள் போலும் ஏற்கனவே சிவந்திருந்த உதடு இன்னும் சிவந்து மினுமினுத்தது..வளையல்கள் குலுங்க முகத்தை மறைத்த கூந்தலை தூக்கி பின்னால் எடுத்துவிட்டவாறே மறுகையில் புடவை முந்தானையை பற்றியபடி வேகமாக இறங்கி வந்தவளை காண காண தெவிட்டவில்லை கவினுக்கு..

ஆதிரா அருகில் வந்து ஏதோ கூடுவது கண்ணில் பதிந்தாலும் கருத்தில் பதியாமல் பே என்று முழித்தபடி நின்றிருந்தான்.

 

ஆதிராவோ தான் அழைத்தும் கூட பதிலில்லாமல் பேய் அறைந்தது போல நின்றிருந்த கவினை கண்டு

என்ன ஆச்சு இவருக்குஎன்று எண்ணியபடி அவன் தோளில் ஓங்கி ஒன்று போட்டாள்..

 

அவளின் அடியில் வலியெடுக்க முகத்தை சுருக்கியபடி தன் கனவிலிருந்து வெளியே வந்தவன் அவளை கண்டு முறைத்து

எதுக்கு இப்போ இப்பிடி அடிச்ச?”

 

பின்ன நேரம் போய்ட்டுது என்று இங்க காட்டு கத்து கத்திக்கொண்டு இருக்கேன்..நீங்க ஏதோ பேய் அடிச்ச மாதிரி இருக்கீங்க

 

ஓஹ்..மேடம் உங்க முகத்துக்கு இவ்வளோ நேரம் சுண்ணாம்பு அடிக்கும் போது நேரம் போறது தெரியலையா? லேட் வந்திட்டு குத்திக்கிறத பாருஎன வம்பிழுக்கவும் நேரமாவதை உணர்ந்தவள் ஒரு உதட்டு சுழிப்புடன் ஸ்ரீயை அழைத்துகொண்டு காரை நோக்கி நடந்தாள்..

 

ஹேய்..நான் இங்க கேட்கிறேன்..பதில் சொல்லுஎன்று கத்தியபடி தானும் அவர்களை பின் தொடர்ந்தான் கவின்..

 

இவ்வாறு ஒருபடியாக ரிசெப்ஷன் மண்டபத்தை அடைந்து வந்தோரை வரவேற்று பின்னர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மண்டபமேடையில் கருண்பாவனா ஜோடிக்கு அருகில் அமர்ந்தனர்..

 

சிறிது நேரத்தில் வந்தவர்கள் குடும்பசகிதம் மேடை ஏறிவந்து வாழ்த்து கூறி போட்டோவும் எடுத்து கொண்டு பின்னர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விருந்தில் கலக்க தொடங்கவும் அதுவரை பொழுது போகாமல் இருந்த இரு ஜோடிகளும் பிஸி ஆகி போயினர்..

 

பெரும்பாலும் கவினின் பிஸ்னஸ் டீலர்ஸ் வந்திருந்தமையால் அவர்களை ஆதிராவின் செவியருகில் அறிமுகப்படுத்தியபடி கவின் இருக்க அதை புன்னகைத்த முகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள் ஆதி.

 

அப்பொழுது திடீரென அவர்களின் அருகே இருந்த பாவனா அண்ணாஎன்று கூறவும் கவினும்சொல்லுமாஎன்றபடி அவளை நோக்கி திரும்பினான்..கவினை நோக்கி ஆதியும் பாவனாவை நோக்கி பார்வையை திருப்ப அங்கு பாவனாவின் பார்வையோ எங்கோ வெறித்துக்கொண்டு இருந்தது..

 

உதடுகளோ மெதுவாகஅண்ணாஎன்று அசைந்து கொண்டு இருந்தது..அருகில் இருந்த கருணும் புரியாமல் பாவனாவை ஒட்டி பார்வையை நகர்த்த அங்கு யாரும் இல்லை..ஆதிரா சற்று பாவனாவை நெருங்கி அவள் தோளை பற்றி உலுக்கி

யாரு பாவனா?” என்று கேட்கவும் அவர்களின் அருகில்  எக்ஸ்க்யூஸ் மீஎன்ற குரல் கேட்கவும் சரியாக இருந்தது..

 

அந்த குரல்..அந்த குரல் திடுக்கிட்டு திரும்பிய ஆதி தன்னருகே நின்று கொண்டிருந்த முகத்தை கண்டவுடன் அதிர்ந்து போய் பின்னால் நகர அவள் அருகில் இருந்த கவின் அவளின் கையை பற்றி கொண்டான்..அவனை திரும்பி பார்த்தவள் அவன் தான் தற்போதைய ஒரே ஆதரவு என்று நினைத்தவாறு அவனருகே சற்று இன்னும் நெருங்கி நின்றாள்..

 

பாவனா,ஆதியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கவும் சந்தேகத்துடன் அருகில் வந்தவனை கேள்வியாக நோக்கினான்..கவின் தன்னை ஆர்ப்பதை உணர்ந்ததும் பளிச்சென புன்னகைத்த அவன்வாழ்த்து கூறியவாறு கையில் இருந்த பரிசுபொருளை கவினின் கரங்களில் திணித்து விட்டு கருணுக்கும் வாழ்த்து கூறிவிட்டு படிகளில் இறங்கி விரைந்து வெளியேறினான்..

 

அனைத்துமே ஒரு சில நொடிகளில் நடந்து விட்டிருக்க கையில் இருந்த பரிசுபொருளை அப்படியும் இப்படியுமாக திருப்பி பார்த்துவிட்டு அங்கு சற்றி தள்ளி நின்ற சிந்துவை அழைத்து அதனை கவனமாக வைக்க கூறினான்..அதனை பெற்றுக்கொண்டு சிந்து அப்பால் நகர்ந்ததும் ஆதியை நோக்க அவளோ வாசலையே வெறித்து கொண்டு இருந்தாள்..

 

கவின் வாசலை நோக்க அப்பொழுது தான் வாசலை அடைந்திருந்த அவன்ஆதியை திரும்பி பார்த்து கண்ணை சிமிட்டி விட்டு விரைந்து வெளியேறினான்..அவனின் செயலை மண்டபத்தில் இருந்த நால்வருமே பார்த்தனர்..

 

கவினுக்கு அவன் செய்கைகள் சரியாக படாததால் ஆதியின் அருகே சென்று

ஹேய் யாரு அது? உனக்கு தெரிஞ்சவனா?” என்று கேட்க ஆதியிடம் ஒரு பதிலும் இல்லை..அவளது கண்கள் சர சரவென மண்டபத்தை அலசியது..

 

அவள் பதில் சொல்லாமல் மட்டும் இல்லாமல் வித்தியாசமாக செயற்படவும் குழம்பியவன் கருணை பார்க்க, விழி மூடி திறந்த கருண் பாவனாவை அசைத்து

ஹேய் பாவனா நீயாச்சும் சொல்லு..யார் அது?” என்று கேட்க அண்ணாஎன்றாள்..

 

உறவுக்காரனா? அதுக்கேன் இவ இப்பிடி பேயை கண்ட மாதிரி இருக்கா?” என்று சிரித்தவாறு கேட்டவன் ஆதியை நோக்கி பார்வையை திருப்ப போக

 

இல்ல என்னோட கூடபிறந்த அண்ணா..ஹரிஷ்..ஹரிஷ் ஷர்மாஎன்று அழுத்தி உரைத்தாள்.. அவளது பதிலில் திடுக்கிட்டு போய் பாவனாவை நோக்கிய கவினின் பார்வை கேள்வியாக ஆதியை நோக்கியது..இதயத்துடிப்போ எக்கச்சக்கமாக எகிறீயது

 

பாவனாவின் பதிலில் அதிர்ந்து போய் திரும்பிய கவின் ஆதியையே நோக்கி கொண்டிருக்கவும் அவனனின் அதிர்ச்சி உணர்ந்தவனாக கருண் மீண்டும்

ஹேய் அப்போ இது? ஸ்ரீ? “

 

என்று கேள்வியாக இழுக்கவும் இல்லை என்பதாக தலையை மறுப்பாக அசைத்து ஆதிரவின் அருகில் அமர்ந்தவள்என்னோட இரண்டாவது அண்ணா..அவன்..அவன் தான் ஹரிஷ்..என்னோட மூத்த அண்ணா விஷால் அவர் தான் ஸ்ரீயோட அப்பாஎன்று கூறி விழிகளில் திரண்ட நீருடன் ஆதியின் தோளில் சாய்ந்தாள்..

 

 பாவனா தோள் சாய்ந்ததும் உணர்வு பெற்ற ஆதிரா சட்டென்று எழுந்து அங்கிருந்தவர்களை விலக்கியபடி தனலக்ஷ்மியிடம் ஓடினாள்..அவள் எழுந்து ஓடவும் ஹேய் ஆதிஎன்று கத்த தொடங்கியவன் அங்கே இருந்தவர்கள் தன்னை வித்தியாசமாக நோக்குவதை கண்டு ஒரு அசட்டு சிரிப்பை வெளியிட்டவன் தன் நெற்றியை தேய்த்துவிட்டவாறே ஆதியின் நடவடிக்கைகளை நோக்கினான்..

 

தனலக்ஷ்மியிடம் போய் பதற்றமாக ஏதோ கேட்டவள் அவர் சற்று தொலைவில் சுட்டி காட்டவும் மீண்டும் பதற்றமாக அங்கே ஓடினாள்.அங்கு தனது நண்பிகளுடன் பேசி சிரித்தபடி இருந்த சிந்துவிடம் சென்றவள் அவள் கைகளில் இருந்த ஸ்ரீயை வாங்கி அணைத்தவாறு மீண்டும் மண்டபத்திற்கு வந்தாள்..

 

 இருக்கையில் அமர்ந்தபடி ஸ்ரீயை தன்னுள் புதைத்துவிடுவது போல இறுக்கியவளின் செயலால் ஸ்ரீ சிணுங்கவும் அவ்வளவு நேரமும் இருந்த பொறுமை பறக்க அவளின் கைகளில் இருந்து ஸ்ரீயை பற்றித்து தன் தோளில் சய்த்து தட்டி கொடுத்தவன் பிஹேவ் யுவர் செல்ஃப் ஆதிரா.” என்று கடித்த பற்களுக்கிடையில் வார்த்தையை துப்பி விட்டு ஆதிராவின் மறுபுறம் சென்று அமர்ந்தான்..

 

அதன் பிறகு அங்கு யாரும் பேசிக்கொள்ளவே இல்லை..ஆதிக்கு தெரியும் இந்த பிரச்சனை இன்றே திரும்பவும் கவினால் அலசப்படும் என்று..இருந்தாலும் அதை பற்றியில்லாமல் அவளது சிந்தனைகள் வேறு வட்டத்துக்குள் சுழன்று கொண்டிருந்தது..

 

அன்றைய ரிஷெப்ஷனை முடித்து விட்டு சோர்வுடன் வீடு திரும்பிய சக்கரவர்த்தி குடும்பத்தினர் அலுப்பில் வந்த வேகத்தில் அவரவர் அறைக்குள் நுழைந்து கொண்டனர்..ஸ்ரீயை தூக்கியபடி தனது அறைக்கு வந்த கவினும் அங்கே இருந்த கட்டிலின் நடுவில் ஸ்ரீயை தூங்க வைத்துவிட்டு ஆதிராவை நோக்கி திரும்ப அவளோ மாற்றுடையுடன் விறுவிறுவென குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்..

 

 மூடிய கதவை முறைத்து விட்டு தானும் கீழே இருந்த விருந்தினர் அறையில் குளித்து விட்டு வந்த கவின் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து தன்னுடைய போனை நோண்டிக்கொண்டு இருந்தான்..

 

குளித்துவிட்டு மெல்ல கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டி பார்த்த ஆதி கட்டிலில் சாய்ந்திருந்த கவினை கண்டதும் அவன் புறம் திரும்பாமலே விறுவிறுவென வெளியேறி நகைகளை பத்திரப்படுத்திவிட்டு விரைந்து சென்று கட்டிலின் மறுபுறம் கவினுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்..

 

அவள் கட்டிலில் சாய்ந்ததும் நொடியும் தாமதிக்காமல் ஆதிராஎன்று அழுத்தமாக அழைத்தான் கவின்.

 

அவள் எதுவும் பதில் பேசாமல் இருக்கவும்ஆதிரா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்என்றவுடன் மெல்லிய குரலில்

 

கவின் ப்ளீஸ் நான் ரொம்ப களைச்சு போய் இருக்கேன்..உடலாலயும் மனசாலயும்..அப்புறம் பேசலாம்..நான் தூங்கனும்என்று கூறவும்பச்என்று சலித்தபடியே அறைவிளக்கை அணைத்துவிட்டு தானும் தூங்க தொடங்கினான்..

 

இருவருக்கிடையில் இருந்த ஸ்ரீயோ எந்த கவலையும் இன்றி முகத்தில் பூத்திருந்த புன்னகையுடன் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள்..

 

நடுஇரவை தாண்டி முழிப்பு வந்துவிட்டது கவினுக்கு..தூக்கக்கலக்கத்துடனே திரும்பி படுத்தவன் இமைகளினிடையே  இருந்த சிறி விரிசலினூடே பார்வையை செலுத்தியவன் ஒருக்களித்தவாறு படுத்திருந்த ஆதிராவின் நடவடிக்கையை கண்டு விழிகளை சற்று திறந்து நோட்டமிட தொடங்கினான்..

 

ஆதிராவின் பார்வை ஸ்ரீயையே வெறித்த படி இருக்க அவளது கரங்களோ ஏதோ ஒரு பொக்கிஷத்தை வருடுவது போல மென்மையாக ஸ்ரீயின் உடலை வருடிக்கொண்டு இருந்தது.. இடையிடையே அந்த பிஞ்சு நெற்றியில் தனது இதழ்களையும் ஒற்றிக்கொண்டு இருந்தாள்..அவ்வாறு எவ்வளவு நேரம் செய்த்து கொண்டிருந்தாளொ எவ்வளவு நேரம் இவனும் நோட்டமிட்டு கொண்டிருந்தானோ தெரியாது..ஆதிராவை அறியாமலே அவள் மெல்ல மெல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல கவினின் உறக்கமோ தூர விலகி சென்றூ கொண்டிருந்தது..

Advertisement