“உனக்கு அவனுங்க கூட சேர்ந்து அந்த பழக்கம் தான் இல்லன்னு நினைச்சேன், அதுவும் இருக்குன்னு சொல்றியா டா?“

“ச்சீ… என்னடா பேசுற! நான்லாம் மதுரை காரன், கன்னகி பரம்பரை ஆக்கும் ஒருவனுக்கு ஒருத்தியோடன்னு வாழ்றவன் டா“

“கன்னகி பத்தினி தான், ஆனா அவங்க புருஷன் அப்படி இல்லையே டா“ என்று நக்கலாக சிரித்தவனை முறைத்த மதி.

“போ டா, என் நண்பன்னு என் பீலிங்ஸ சொல்ல வந்த பாரு, என்ன சொல்லனும்!“ என்று எழுந்து செல்ல போனவனின் கையை பிடித்து அமர வைத்த த்ரூவ்.

“சரி கோபம் படாதீங்க பத்தினன்“ என்றவனை மேலும் முறைக்கவும், விளையாட்டை கைவிட்ட த்ரூவ்.

“உண்மையா லவ் பண்றியாடா?“ என்றதற்கு ஆம் என்று அவன் தலையாட்டவும்,

“உனக்கு இப்போ வந்திருக்க பீலிங் அவளுக்கு வரலனா என்ன பண்ணுவ மதி?“

“வேற என்ன, தாடிய வச்சுக்கிட்டு வாழ்வே  மாயம்னு சுத்த வேண்டியது தான்!“

“நீ தாடியோட சுத்துனா கூட பரவாயில்லை, ஆனா அவள டார்ச்சர் பண்ணி லவ் பண்ணனும் னு சொல்ல கூடாது டா“

“நான் லவ் பண்ற பொண்ண எப்படி டார்ச்சர் பண்ணுவன்னு நினைக்கிற எருமை! நான் அவ்ளோ கெட்ட பையன் லாம் இல்ல“ என்றவனை அனைத்து கொண்டவன்.

“நீ நல்லவன்னு தெரியும் டா மதி, இருந்தாலும் பார்த்து டா, எப்பவும் பொண்ணுங்கள கஷ்டப்படுத்த கூடாது“ என்று குறள் கம்ர பேசியவனை புரியாமல் பார்த்த மதி.

“ஏன் என்ன ஆச்சு? ஏன் இத்தன எமோஷனலா இருக்க பிரனாவ்?“

“அதுடா….“ என்று மௌனமாக கசங்கிய முகத்துடன் இருந்தவனை பார்த்து தோள் தட்டியவன்,

“சரி விடுடா, எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். இப்போ போய் தூங்கு, மார்னிங் கிளாஸ் இருக்குல“

என்று சொல்லி மதி செல்லவும், இவனும் படுத்து தூங்கி போனான்.

“ எதையோ உள்ள வச்சி கஷ்ட பட்டுட்டு இருக்கான் போல. அப்படி என்ன தான் யோசிக்கிறான்” என்று யோசித்தபடி மதியும் உறங்கி போனான்.

காலை எப்போதும் போல கிளம்பி இருவருமாக உணவு உண்ணச் சென்ற இடத்தில், இவர்களுக்கு முன்பே சரத் மற்றும் வினோ அமர்ந்து உண்டு கொண்டிருந்தார்கள்.

“என்னடா அதிசயம், உன் சுப்பினி சப்புனி இங்க சாப்பிடுறாங்க? இவனுங்க எப்பவும் வெளிய கிளாஸா தான சாப்பிடுவாங்க?”

“அதான் பிரானாவ், எனக்கும் புரியல. இவனுங்க இவ்ளோ சீக்கிரம் முழிக்க மாட்டாங்களே. ஏதோ பிரச்சனையா இருக்குமோ?”

“ஒருவேளை காசு எல்லாம் குடிச்சு காழி பண்ணிட்டாங்க போல” என்று த்ரூவ் சொல்வது போல, இருவரும் பணம் இன்றி தான் இங்கு சாப்பிட வந்திருக்கார்களே!

“தெரியலையே டா… சரி நீ போடா, நான் என்னன்னு போய் கேட்டுட்டு வரேன்.”

என்றதும் சரி என்று த்ரூவும் சென்று விட்டான்.

பின் மதி மட்டும் இவர்களுடன் டேபிளில் அமர்ந்து,

“என்னடா அதிசயம்யா இந்த பக்கம்?” என்று மதி பேச கண்டுகொள்ளாதது போல இருவரும் அமைதியாக இருப்பதை பார்த்து,

“என்னடா எதுவுமே பேச மாட்டிக்கிறீங்க? ஏதாவது பிரச்சனையா?”

என்றதற்கும் பதில் வராமல் போகவும், “டேய், பேச போறீங்களா இல்லையா?” என்று கத்தியவனை முறைத்து பார்த்த வினோ

“நாங்க ஏன்டா உன் கூட பேசணும்? அதான் உனக்கு உன் புது பிரண்டு இருக்கான்ல, அவன் கூட போய் பேசு.”

“ப்ஷ்…. அவன் பிரண்டுனா நீங்களும் பிரண்டு தானடா?”

“நீ எங்கள பிரண்டு மாதிரியா பாத்துட்டு இருக்க? அழகா சென்னையிலேயே நல்ல காலேஜ்ல படிச்சிருப்போம்,

அதை விட்டுட்டு ஒன்னா படிக்கலாம்னு இங்க கூட்டிட்டு வந்துட்டு, போயும் போயும் அவன் கூட போய் சுத்துற,” என்ற வினோவை முறைத்து பார்த்தவன்,

“உங்ககிட்ட பேசலையா அதுக்கு திட்டுங்க, அதை விட்டுட்டு அவன தப்பா பேசாதீங்க டா.”

“ஏன் பேச கூடாது? நாங்க என்ன பொய்யா பேசுறோம்? இருக்குறத தான பேசுறோம்? எங்கள பாத்துட்டு ஒரு மாதிரி மூஞ்ச திருப்பிட்டு போறான். அவன் அப்பாவ விடவா நாங்க கேவளமா போயிட்டோம்?”

“நியாயப்படி அப்படிப்பட்ட அப்பனுக்கு போறந்த  அவ கூட தான் நாங்க பேச யோசிக்கணும்.”

“வினோ, நீ ரொம்ப தப்பா பேசுற, போதும், இதோட நிறுத்திக்கோ டா.”

“என்ன நிறுத்தணும் மதி? நான் இந்த வயசுக்கு பொண்ணுங்க பிரண்டோட சுத்துறேன், அதுல என்ன தப்பு? நான் லவ் பண்ற பொண்ணு கிட்ட போய் என்ன பத்தி தப்பா சொல்லி வச்சிருக்கான்.”

“அது அவனா போய் சொல்லல டா? அந்த பொண்ணு உன்ன பத்தி எங்ககிட்ட கேட்டதுக்கு தான் அவன் உண்மையா சொன்னா டா, அதுல என்ன தப்பு இருக்கு?

அவன் சொன்ன மாதிரி நீ நிறைய பொண்ணுங்க கூட பழகுற தான?”

“எனக்கு என்ன பத்தின உண்மைய அந்த பொண்ணு தெரிஞ்சிக்கிட்டதுலாம் ஒரு மேட்டரே இல்ல. இவ இல்லனா வேற பொண்ணுன்னு நான் மூவ் ஆன் ஆகிடுவேன்.”

“அப்பறம் என்ன, அந்த பொண்ண மறந்திடு டா!”

“எனக்கு என்ன பத்தி தப்பா அவன் பேசுனது தான் பிரச்சனை. போயும் போயும் இவன் வாய்யால என்ன பொம்பள போருக்கின்னு சொல்லுவான்னா…” என்று டேபிளை அடித்து பேசியவனிடம்,

“அவன் உன்ன பொம்பள பொருக்கி ன்னு சொல்லல, அப்படி அவன் சொன்னாலும் அதுல என்ன தப்புன்னு கேக்குறேன்.

நானும் வந்தது பாக்குறேன், அவன பத்தி தப்பாவே பேசிட்டு இருக்க. இதுவே வேற எவனாவது பேசியிருக்கணும், மூஞ்ச பேத்து கைல கோடுத்துருப்பேன்.”

என்று பேசியவனின் சினத்தில் பயம் துளிர்த்தாலும் வினோ தொடர்ந்து பேசத்தான் செய்தான்.

“நீ என்ன வேணா பண்ணு, ஆனா அவன பத்தி தெரிஞ்சிட்டு அதுக்கு அப்பறம் அவனுக்கு சப்போர்ட் பண்ணு. அவங்க அப்பாக்கு அவங்க அம்மா எத்தனாவது பொண்டாட்டி ன்னு தெரியுமா?”

“என்னடா பேசுற? அம்மா பத்தி தப்பா பேசாத!”

“உண்மையா தான் சொல்றேன், அவங்க அம்மா அவங்க அப்பாக்கு மூணாவது பொண்டாட்டி. சொத்துக்காக இருபது வயசு வித்தியாசத்துல அவன கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

ஏன் அந்த அளு? அவங்க அம்மா ஓடயும் நிப்பாட்டலையே! அவங்க அப்பறம் எத்தனையோ பேரை வீட்டுல இவங்களுக்கு தெரிஞ்சே வப்பாட்டியா வச்சிருந்தானாம்!”

இதை கேட்டு மதி அதிர்ந்து போனவனாக வினோவை பார்க்க, அவன் மேலும் தொடர்ந்தான்.

“சரி, அம்மா தான் இப்படின்னா, இவன் என்ன பண்ணிட்டு இங்க வந்திருக்கான் தெரியுமா? சொத்துக்காக சொந்த அப்பனையே மாடில இருந்து தள்ளி விட்டு, படுத்த படுக்கையா ஹோம்ல சேத்துட்டு வந்திருக்கான் டா!”

அதற்கு மேலே கேட்க முடியாது என்று சேரை விட்டு எழுந்த மதி, கைகளை இறுக மூடித் திறந்தவன் வினோவை நோக்கி விரல் நீட்டி,

“அவங்க அம்மா அப்பாவ பார்த்து நான் அவ கூட நண்பனா இருக்கல. எனக்கு அவனை பத்தி தெரியும், அது போதும். தேவை இல்லாத விஷயத்த இப்படி பேசிட்டு இருக்காத!

இப்போ நீ என் கிட்ட பேசுனது என்னோட போயிடனும். வெளிய எதவது தெரிஞ்சது நீ இங்க பண்ற எல்லாம் தப்பும் நியூஸ்ல வரும் வினோ, நான் சும்மா பேசிட்டு போறன்னு நினைக்காத, உனக்கு என்ன பத்தி தெரியும் தானே!”

என்று மிரட்டி விட்டு விறு விறு என மதி சென்றுவிட, வினோ கோபமாக,

“சிட், சிட், சிட்!” என்று டேபிளை தட்டியவன்,

“இவங்கள எப்படியாவது பிரிக்கணும் டா!” என்று கோபமாக யோசிக்கத் தொடங்கினான்.

வினோ சொல்வதை கேட்டு முதலில் அதிர்ச்சி ஆனான் தான் மதி, ஆனால் இது முழு உண்மை இல்லை என்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது.

இத்தனை நாட்களாகத் த்ரூவ் உடன் பழகியதில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

த்ரூவ் என்ன தான் பெண்களை மரியாதையாக நடத்தினாலும், அவர்களிடம் நெருங்கி கூட நிற்க மாட்டான்; எப்போதும் ஒரு வித இடைவெளியில் தான் நின்று பேசுவான்.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தவனுக்குத் தோன்றியது, இதுவே த்ரூவ் ஏதோ மிக பெரிய வலியைச் சுமந்து கொண்டு இருக்கிறான் என்று.

அதை நண்பனான இவனிடம் கூட சொல்ல முடியாமல் தவிப்பதும், நேற்று இரவு பேசியதை வைத்து யூகித்தவன்; இன்று வினோ பேசியது எதுவும் அவன் காதுக்கு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டான்.

இவன் எடுத்த உறுதியை இவனே உடைத்து எறியப் போவது தெரியாமல், தன் நண்பனைப் பார்க்கச் சென்றான் மதி.