Advertisement

அத்தியாயம் -3

சைந்தவி பிராக்டிஸ் செய்யும் மருத்துவமனை நோக்கி வண்டி செல்ல சகோதரிகள் இருவரும் பேசி கொண்டே வந்தனர். அப்போதுதான் சைந்துவிற்கு அந்த சந்தேகம் எழுந்தது. “ஹேய் பவி பார்சல் கொண்டு வந்து குடுத்தானே அவன் யாரு?”

பவி, “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டடி”

சைந்து,“ஈஈஈ……”என்று சிரித்தவள் “நான் என்னடி பண்ண நமக்கு சோறுதான் முக்கியம். அதை பார்த்த உடனே மத்தது எல்லாம் பிளாங்க் ஆகிடுச்சு. இதுல என் தப்பு என்ன சொல்லு”.

பவி,“தப்பில்லம்மா…. தப்பே இல்ல.எவன் தப்புன்னு சொல்லுவான்.அது நம்ம மேனுபேக்சரிங் டிபேக்ட், ஒன்னும்பண்ண முடியாது.டோன்ட் ஓர்ரி”என்று சிரிப்புடன் சொன்னவள் மேலும் “அவன்தான் அந்த சொட்ட அங்கிள் பையன் நேத்துல இருந்து அவன் எனக்கு அடிமை. எப்படி எள்ளுன உடனே எண்ணெய்யா போய் வாங்கிட்டு வந்து வெயிட்பண்றான் பாத்தியா”என்று கேட்க, வாயில் கை வைத்த சைந்து “உன்னை எல்லாம் பெரிய ரிப்போர்ட்டரா வருவன்னு நம்பிக்கை வச்சேன் பாரு என்னைய சொல்லணும்.எவன் எங்க போறான் யாருக்கூட போறான்னுங்கற மாதிரியான நீயூஸா கலெக்ட்பண்ணு உங்க ஆபிஸ் சீக்கிரம் விளங்கிடும்”என்று திட்டி கொண்டு வந்தாள். அப்போது அவர்கள் மருத்துவமனைக்கும் வந்துவிட அங்கிருந்த கும்பலை கண்டு ஆச்சர்யமானாள்.

சைந்து, “என்னடி. இவ்ளோ கும்பலு”என்றவள் விழி விரிக்க, பவியோ “நேத்து ஊழல் கேஸ்ல அமைச்சரை நைட்டோட நைட்டா அரெஸ்ட் பண்ணுனாங்க. ஸ்டேஷன் கொண்டு போக முன்னாடி மீடியா முன்னாடி நெஞ்சை பிடிச்சுட்டு சாஞ்சுட்டாரு. அதான் அவரை உங்க ஹாஸ்பிடல அட்மிட்பண்ணி இருக்காங்க” என்றாள்.

தங்கை சொன்ன விஷயத்தை கேட்டு திகைத்து போனவள் “இந்த விஷயம் உனக்கு எப்போ?எப்படி தெரியும்?” என்று கேட்க,அவளோ “நைட்டே தெரியும்.இங்கவந்ததாலதான் நைட் வீட்டுக்கு வர லேட் ஆகிடுச்சு”என்றாள் கூலாக.பின் வண்டியில் இருக்கும் தன் ஆபீஸ் பேக்கை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி சென்றாள்.

பவி பின்னாலேயே ஓடிய சைந்தவி “அடிப்பாவி இந்த விஷயம் உனக்கு முன்னாடியே தெரியும்னா. ஏன்டி என்கிட்ட சொல்லல. முக்கியமான விஷயத்தைவிட்டுட்டு யாரோ ஓடிப்போனது, பப்புக்கு போனதெல்லாம் சொல்ற”என்று கடுப்பாக கேட்க,அவளோ “ஒரு பயங்கரமான நியூஸ் இருக்குனு நான் சொல்ல வந்தேன்.நீதான் வேண்டான்னு சொல்லிட்ட,நானும் சரி காலைல தெரியதானே போகுதுனு விட்டுட்டேன்” என்றாள்.

சைந்தவி, “உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு….” என்று புலம்பியவள் பின் தான் கவனித்தாள் தங்கையும் ஹாஸ்பிடல் வருவதை “ஹேய்….நில்லு…நில்லு…நீ எங்க வர”.

பவி, “இது என்ன உடன்பிறப்பே கேள்வி.உங்க ஹாஸ்பிடல இருக்கறது ஆளுங்கட்சி அமைச்சர்.அங்க ரிப்போர்ட்டர் எதுக்கு வருவேன்”என்று கேட்க, சைந்துவோ அவளை புரியாமல் பார்த்தாள்.

அக்காவை அப்பாவியாக திரும்பி பார்த்த பவி “உன் கூடயே உள்ள வந்து அந்த அமைச்சர பாத்து எப்படி இருக்காரு, என்ன பண்றாருன்னு ரெண்டு மூணு ஸ்டில் மட்டும் என் போன்ல எடுத்துட்டு போயிட்டேன்னுவையி,எங்க ஆபிஸ்ல எனக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பாங்க பாரு. அதை கேட்க ரெண்டு காது பாத்தது. உன் தங்கச்சிய மத்தவங்க பெருமையா பேசுனா உனக்கும் சந்தோஷம்தானே.அதனால நீ என்ன பண்ற இந்த ஹாஸ்பிடல ஒர்க்பண்ற டாக்டரா உன்னோட பவர காட்டி என்னையும் உள்ள கூட்டிட்டு போற.இந்த பாசமலருக்காக இதகூட நீ பண்ண மாட்டியா”என்று கேட்க, சைந்துவோ இதனால் எதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்தாலும் தங்கையின் தொழில் மீதான ஆர்வத்தை அறிந்தவள் மனமே இல்லாமல் சரி என்றாள்.

பவி நினைத்தது போல் காவலாளிகள் நோயாளிகளையும் டாக்டர்களையும் மட்டுமே உள்ளே அனுமதித்தனர்.

சைந்தவி, “பவி நீ வயிறு வலி வந்த மாதிரி நடி. நான் அப்படியே உன் கை பிடிச்சு உள்ள கூட்டிட்டு போய்டறேன்”என்க, பவியோ “நடிப்புதானே அதெல்லாம் செம்மையா பிச்சு உதறுவேன்”என்றவள் வயிற்றில் கை வைத்து கொண்டு “ஐயோ…… அம்மா வயிறு ரொம்ப வலிக்குதே…”என்று குஸ்பூ ஸ்டைலில் கத்த, அவளை கேவலமாக பார்த்த சைந்து “உள்ள வர்ற ஐடியா உனக்கு இருக்கா இல்லையா. ஒழுங்கா அம்மாவோட உப்புமாவ சாப்பிட்ட மாதிரி மூஞ்ச மாத்து”என்று சொல்ல, கண்கள் கலங்க முகம் கசங்க வேதனையாக மாறியது பவியின் முகம். அவள் முகமாற்றத்தை கண்டு சைந்துவே ஒரு நொடி பயந்துதான் போனாள்.

அக்காவின் கண்களில் தோன்றிய கவலையை கண்ட பவி “எப்படி என் பர்பாமன்ஸு”என்று கேட்க, தலையில் அடித்து கொண்ட சைந்து அவள் இடுப்பில் கை போட்டு தாங்கியவாறு நடந்து ஹாஸ்பிடல் வாயிற்புறத்துக்கு வந்தாள். அங்கு நின்றிருந்த போலீசிடம் தன் ஐடி கார்டை எடுத்து காண்பித்தவள்,தங்கைக்கு உடல் நலம் சரியில்லை என்றும், ஸ்கேன், பிளாட் டெஸ்ட் அனைத்தும் எடுக்க மருத்துவமனை அழைத்து வந்ததாகவும் சொல்ல,அவரோ பவியை சந்தேகமாக பார்த்தார். அதற்குள் சைந்தவி “எமர்ஜென்சி சார் சீக்கிரம். எங்களை உள்ளவிடுங்க”என்று பர பரக்க அந்த போலீஸ்காரரும் பவியை சந்தேகமாக பார்த்து கொண்டே உள்ளே செல்ல அனுமதித்தார்.

சைந்தவி அவள் அறைக்கு சென்று நோயாளிகளை பார்க்க துவங்கினாள். அவளுடன் வந்த பவி அமைச்சர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வருவதாக சொல்லி சென்றாள்.சற்று நேரம் கடந்து சைந்தவியின் அறைக்கு வேகமாக வந்த பவி “சைந்து வா…. வா….ஒரு முக்கியமான விஷயம்”என்று அறையின் உள்ளே கத்தி கொண்டே வர,அவளை கண்டிப்பாக பார்த்தவள் “என்ன பவி இது. ஹாஸ்பிடல இப்படிதான் கத்தறதா. என்னபண்ணிட்டு இருக்கேன். வெயிட்பண்ணு வரேன்”என்றாள் அழுத்தமாக,அப்பொழுது தான் பவி கவனித்தாள் அக்கா எதிரில் அமர்ந்திருந்த நோயாளியை. வேலை நேரத்தில் அக்காவை தொந்தரவு செய்தால் அவளுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் இப்படி செய்த தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டவள்.

“சாரிக்கா”என்றுவிட்டு அமைதியாக அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்.அந்த நோயாளி சென்றபின் அவளை முறைத்த சைந்தவி “பவி நீ என்ன சின்ன பிள்ளையா? பொது இடத்தில் இப்படித்தான் நடந்துக்கிறதா”என்று கோபமாக கேட்டாள்.

சைந்தவியின் விளையாட்டுதனம், சேட்டை அனைத்தும் வீட்டில் மட்டுமே மருத்துவமனை வந்துவிட்டாள் பொறுப்பாக மாறிவிடுவாள்.

பவி கண்களால் கெஞ்சி மன்னிப்பு கேட்டுவிட்டு “ஒரு எமர்ஜென்சி அதான் அப்படி ஓடி வந்துட்டேன்”என்று பாவம் போல் சொல்ல,தங்கையை கூர் பார்வை பார்த்தவள் பின் நர்சை அழைத்து “இன்னும் எத்தனை பேர் இருக்காங்க”என்று கேட்க, அவரோ “இரண்டு பேர்தான் இருக்காங்க”என்று சொல்ல, “சரி….” என்றவள் பவியிடம் “அவங்களை பார்த்துட்டு அப்புறம் உன் முக்கியமான விஷயத்தை கேட்கிறேன்”என்று சொல்ல,அவளும் “சரி” என்றுவிட்டாள்.

சற்று நேரம் அந்த அறையில் சைந்தவியும், வந்த நோயாளியும் பேசும் சத்தம் மட்டுமே கேட்டது.அவர்களை சோதித்து தேவையான மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்து அனுப்பியவள் பவியின் புறம் திரும்பி சிறு சிரிப்புடன் “இப்ப சொல்லு”என்க, பவியோ கோபம் போல் முகத்தை திருப்பி உதட்டை சுழித்து “அமைச்சர் எங்க இருக்காருனு பாத்துட்டேன்.ஆனா என்னை அந்த புளோர்ல அலோவ்பண்ண மாட்டிக்கிறாங்க.இங்க ஒர்க் பண்ற டாக்டர் நர்ஸ் மட்டும்தான் போகணுமாம்.நீ வந்தா உன்னோட போகலாம்னு பார்த்தேன்”என்று சொல்ல,தங்கையை யோசனையாக பார்த்தவள் “பவி நல்லா யோசிச்சியா?இதனால எதுவும் பிரச்சனை வரப்போகுது. அவங்க வேற ஆளுங்கட்சி ஆள்” என்று மிரட்சியோடு சொல்ல,பவியோ பயம் இருந்தா நான் ரிப்போர்ட்டர் வேலைக்கே வந்திருக்க முடியாது சைந்து.உன்னால இப்போ என்கூட வர முடியுமா, முடியுமா…”என்று கோபம் போல் கேட்க,அவள் கேட்ட விதத்தை பார்த்து செல்லமாக முறைத்தவள் பின் “சரி போகலாம்”என்று பெருமூச்சுடன் எழுந்தவள், சில பல முன்னேற்பாடுகள் செய்துவிட்டு அமைச்சர் இருக்கும் இடம் நோக்கி நடக்க துவங்கினாள்.

சைந்து முன்னால் செல்ல அவள் பின்னோடு நர்சு உடையில் சென்றாள் பவி.இருவரும் அமைச்சர் இருக்கும் அறையின் வாயிலில் வந்து நிற்க ‘பளார்’ என்று யாரோ யாரையோ அறையும் சத்தம் கேட்டது.

Advertisement