Advertisement

அத்தியாயம் -17

சைந்தவி மனதுள் ஏதேதோ எண்ணங்கள் எழ, சுருண்டு படுத்துவிட்டாள்.பல நினைவுகள் அவளை சுழன்றடிக்க அழைப்புறும் மனதுடன் இருந்தவளுக்கு, சூர்யா தன் கண் முன் இருந்தால் அவனை ஒரு நிமிடம் கூட பிரியாமல் தன்னுடனே வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக எழ ‘எங்கடா இருக்க’ என்று பேதை இதழ்கள் முணு முணுத்து கொண்டே இருந்தன.

அப்போது அவள் அறை கதவு திடீர் என்று தட்டப்படவும் புருவம் சுருக்கியவள் ‘இந்த நேரத்துல யாரா இருக்கும். ஒரு வேலை அத்தையா. அவங்க எதுக்கு இந்த நேரத்துக்கு கதவு தட்ட போறாங்க.மாத்திரை போட்டு படுத்தாங்கன்னா காலைலதானே எழுந்திருப்பாங்க’என்று யோசித்தவளுக்கு பயம் அதிகமாகியது.

மீண்டும் மீண்டும் வேகமாக கதவு தட்டப்பட தன்னை சமாளித்து கொண்டவள்,ஒருவேலை அத்தைக்கு உடம்பு எதுவும் முடியலையோ அதான் கூப்பிட வந்திருப்பாங்களோ என்று நினைத்து வேகமாக சென்று கதவை திறக்க அங்கு யாரும் இல்லை.’என்ன யாரும் காணோம். கதவு தட்டுனாங்களே….’என்று நினைத்தவள் வெளியே வர, அங்கு கைகளை கட்டி கொண்டு சிரிப்புடன் நின்றிருந்தான் சூர்யா. அவனை அங்கு அப்போது எதிர்பார்க்காதவள் முதலில் அதிர்ந்து பின் கண்கள் கலங்க அவனையே பார்த்து கொண்டிருக்க, அவள் கண்ணீரை கண்டு குழம்பி போனவன் “ஹேய் தேவி என்ன ஆச்சு ஏன் அழற”என்றவாறு அவளை நெருங்க, அவன் அருகில் வருவதற்குள் கணவனை தாவி அணைத்து கொண்டவள் “பூச்சாண்டி ஏன்டா போன் பண்ணல. நான் பண்ணினாலும் எடுக்கல, எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா. நீ ரொம்ப மோசமானவன் என்னை அழ வச்சுட்ட. நீ எனக்கு வேணாம் போ” என்று அவனை திட்டி கொண்டிருந்தாலும் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.அவள் கைகளோ அவனை தன்னுடலோடு இறுக்கி கொண்டது.

‘எதே….. பூச்சாண்டியா…’என்ற அவளின் அழைப்பில் முதலில் திகைத்தவன் பின் அவள் பேச்சில் இருக்கும் தனக்கான தேடலை கண்டுகொண்டு, மென்மையான சிரிப்புடன் தானும் அவளை அணைத்து தூக்கி கொண்டே அறையின் உள்ளே வந்தான்.

கணவனின் சிரிப்பை கண்டு கடுப்பானவள் “பூச்சாண்டி என்ன அழ வச்சுட்டு, நீ சிரிக்கறியா.. போ நான் கோவமா எங்க வீட்டுக்கு போறேன்”என்று வாய் பேசினாலும் உடல் அவன் மீது சொகுசாக சாய்ந்து இருந்தது.

மனைவியின் பேச்சில் லேசான கோபம் வர அவள் கன்னத்தை கடித்தவன் “எதுடி உங்க வீடு. இதுதான் நம்ம வீடு. இன்னொரு டைம் இப்படி பேசு.பேசற உதட்டை கடிக்கறேன்”என்று செல்லமாக அதட்ட, அவளோ உதட்டை சுழிக்க, அவள் இதழை கையில் பிடித்தவன் “என்னடி போலி டாக்டர் பேச்சு எல்லாம் ஒரு மாதிரி இருக்கு”என்று கேட்டவனின் கரங்கள் அவள் இடையில் அழுத்தமாக பதிய, அவளோ அவனை விழிவிரித்து மையலாக பார்த்தாள்.

சூர்யா, “என்ன டாக்டரே இன்னைக்கு ஒரு மார்க்கமா இருக்கீங்க. இது சரிப்பட்டு வராது. ஒழுங்கா தள்ளி நில்லுங்க”என்று வேண்டுமென்றே அவளை தன்னில் இருந்து பிரிப்பது போல் பாசாங்கு செய்ய, அவளோ அவன் கையை தட்டிவிட்டு “நான் அப்படிதான் பிடிப்பேன் போடா” என்றாள்.அந்த அழைப்பே அவனுள் இளமை உணர்வுகளை தட்டி எழுப்ப போதுமானதாக இருக்க “தேவி தள்ளி போடி. நீ இப்படி பிடிச்சுட்டு இருந்தா, என்னென்னவோ தோணுது. இந்த அப்பாவி ஆண் மனச கொஞ்சம் புரிஞ்சுக்கோமா”என்றான் உணர்வு தாக்கத்தில் உண்டான கரகரத்த குரலில்.

“முடியாது. என் புருஷன். நான் அப்படிதான் கட்டி பிடிப்பேன். ஏன் இப்படி முத்தம் கூட குடுப்பேன்”என்றவள் அவன் இதழ்களில் தன் இதழை அழுத்தமாக பதித்து விலக, ஆணவனுக்கு உடல் சிலிர்த்து போனது. இருந்தாலும் மனைவி உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க எண்ணி “ஹேய் முயல் குட்டி. ப்ளீஸ் என் நிலைமையை புரிஞ்சுக்கோடி. இதுக்கு மேல……”என்றவன் இதழை மீண்டும் சிறை செய்தவள் “தத்தி புருஷா. நீ இவ்ளோ நல்லவனா இல்லாம இருந்திருக்கலாம். இதுக்கு மேல நான் எப்படி சொல்ல” என்றவள் கண்கள் வெட்கத்தில் குனிந்து கொள்ள, முகமோ சிவப்பாக மாறி இருந்தது.

சைந்து சொல்வதை கேட்டு வாயை பிளந்தவன் “அடி பாவி. பாவம் பொண்டாட்டி. பயமா இருக்குனு சொன்னாளேனு பாவம் பார்த்துவிட்டா என்னையவே தத்தி சொல்றியா” என்றவன் அப்படியே அவளை தொடையோடு கையிட்டு தூக்கி படுக்கையில் போட்டு தானும் அவள் மேல் விழுந்தான்.

சைந்து,“ம்ம்…. பொண்டாட்டி அப்படி சொன்னா, என்கிட்ட உனக்கு என்னடி பயம். எல்லாம் நான் பார்த்துக்கறேன்னு சொல்லி ஆகற வேலைய பார்த்திருக்கணும்”என்று அவன் சட்டை பட்டனை நோண்டி கொண்டே எழும்பாத குரலில் கிசு கிசுப்பாக அவள் சொல்ல,

“தப்பு தான்டி பொண்டாட்டி தப்புதான். உன்னை இவ்ளோ வாய் பேச விட்டது தப்புதான் என்றவனின் இதழ்கள் அவளது கன்னத்தில் கோலம் வரைந்து காது மடல் அருகே சென்று “ஹேய் முயல்குட்டி மயக்கறடி….”என்று மோக குரலில் கூறியவனின் வார்த்தைகள் கேட்டு அவள் உடல் அதிர்ந்து அடங்கியது.’இ…. இ…. இது அதே வார்த்தை….. அதே குரல்….’என்று நினைத்தவளுக்கு திக்கென்று இருந்தது.

சூர்யா மனையாளின் முகத்தை கண்டு என்ன என்று கேட்க, இதை எப்படி சொல்ல என்று நாணம் கொண்டவள் ஒன்றும் இல்லை என்று சொல்லும்போதே அவனுக்கு புரிந்தது ஏதோ இருக்கிறது என்று இருந்தாலும் அதை பிறகு கேட்டு கொள்ளலாம் என்று நினைத்தவன் அவளுள் மூழ்க துவங்கினான்.

ஆணவன் தாப மூச்சு காற்றை அவள் காதுகளில் விட, சைந்துவின் உடல் சூடாகியது, அதில் தன்னை மறந்து அவன் முதுகில் கையை அழுத்தமாக பதித்தவள், அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.

ஆணவனின் கரம் தன் மனைவியின் அழகை கண்டு கொள்ள அவளது இரவு உடைக்குள் நுழைய, அதில் உடல் சிலிர்த்தவள் மேலும் அவன் உடலோடு ஒன்றினாள். பெண்மையின் மென்மையை கரங்களில் உணர்ந்தவனுள் இளமை உணர்வுகள் போட்டி போட்டு கொண்டு எழ அவள் இதழை வன்மையாக சிறை செய்தான். கணவனின் முத்ததில் தன்னை மறந்து இருந்தவளின் நிலையை தனக்கு சாதகமாக மாற்றி கொண்டவன் அவள் உடைகளை கலைய, அவள் முகம் வெட்கத்தில் சிவந்து போனது,அவள் உடலில் தன் தேடலை துவங்க, அவளின் கை அவனை இறுக்கமாக பிடித்தது. அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் ஆழ்ந்து சுவாசித்து அங்கு அழுத்தமாக கடிக்க, அவள் இதழ்கள் தன்னையும் மீறி முணகலை வெளியிட்டது. அது அவனுள் மேலும் தாபத்தை அதிக்கமாக்க, அவன் முகம் அப்படியே கிழிறங்கியது. அவளை தன் கைகளாலும் இதழ்களாலும் உணர்ந்தவன் மனைவிக்குள் மூழ்கி போக எண்ணியவன், அவள் கண்களை பார்த்து கொண்டே “லவ் யூ டி பொண்டாட்டி…”என்று சொல்லியவாறு அவளுள் செல்ல, அவள் உடலில் பூகம்பமே வந்த உணர்வு, பெரிய மூச்சுகள்விட்டு தன்னை சமாளித்து கொண்டவள் கண்களில் இருந்து வலியில் கண்ணீர் வழிந்து ஓட, அதை தன் இதழ்களால் துடைத்தவன், சிறிது இடைவெளிவிட்டு அவளை ஆழ துவங்கினான். அவன் ஆசை அடங்கும் வரை.இரவு முழுவதும் மீண்டும் மீண்டும் மனைவியை நாடியவன் அவளை பிரிந்து விழும் சமயம் விடிய துவங்கி இருந்தது.அன்றைய இரவு இருவருக்கும் இனிய இரவாய் இல்லறத்தை துவக்கிய சுப இரவாக மாறியது.

அடுத்த நாள் எப்போதையும் விட அழகாக விடிந்தது போல் இருந்தது சைந்தவிக்கு, அருகில் குழந்தை போல் உறங்குபவனை கண்டு ரசித்தவள் “மோசமான பையன்டா நீ. படுத்தி எடுத்துட்ட”என்றவள் அவன் நெற்றியில் மென்மையாக இதழ் பதிக்க, பட்டென்று கண் திறந்தான் “என்னடி பொண்டாட்டி காலைல செம்ம தரிசனம் தர்ற”என்று நமுட்டு சிரிப்போடு சொல்ல, உடனே போர்வையை எடுத்து தன்னை மூடி கொண்டவள் “போலிஸ்கார் நீங்க ரொம்ப பேட் பாய். நான் குளிக்க போறேன்”என்று எழுந்து ஓட போனவள் கையை பிடித்தவன் “ஹேய் பொண்டாட்டி ஒரு டர்ட்டி கிஸ் குடுத்துட்டு போ”என்று சொல்ல,

சைந்து அவனை புரியாமல் பார்த்தாள், இப்போது அவளை “தத்தி பொண்டாட்டி. நீ சரியான தத்திடி. ஒன்னும் தெரியல, எல்லாம் நான்தான் சொல்லி தர வேண்டியதா இருக்கு”என்றவன் அவள் முறைக்கவும், “என்ன பொண்டாட்டி ரொமான்டிக்கா பாக்குற”என்றவன், அவளை இழுத்து பெட்டில் போட்டு, தானும் போர்வைக்குள் புகுந்தவன் “நான் ஒரே ஒரு கிஸ்தான் கேட்டேன். நீதான் பார்த்தே என்னை டெம்ப்ட் பண்ணிட்ட”என்றவன் அவளை கலைக்கும் வேலையில் இறங்கி களைத்து போனான்.அப்படியே மீண்டும் இருவரும் உறங்கிவிட ராதிகா வந்து கதவை தட்டினார்.

Advertisement