ஈஷ்வர்அம்மாவின்குரலில்திரும்பியவன், நரசிம்மனைபார்க்கவும்திரும்பவும்முகம்திருப்பிகொண்டான். “வாங்க.. உள்ளவாங்க..” ரத்னா முதலில் கொஞ்சம் தடுமாறி அவர்களை உள்ளே அழைக்க, “வாங்க..” பரணியும் வாசலுக்கே சென்று அவர்களை கூப்பிட்டான்.
கங்கா, நரசிம்மன் இருவர் முகத்திலும் அதிருப்தி, கோவசாயலும் தெரிய உள்ளே வந்தனர். கங்கா நேரே மருமகள் முன் சென்று நின்றவர்,
“என்ன பேசிட்டிருக்க நீ..? உனக்கும், என் பேத்திக்கும் நிக்க இடம் இல்லையா..? என் மருமக நீ இப்படி சொல்லலாமா..? நான் இருக்கும் போது உன் மனசுல இப்படி நினைப்பு வரலாமா..?” அவ்வளவு ஆதங்கத்துடன் கேட்டார் மாமியார்.
அவரின் உரிமையான கோவத்தில், கேள்வியில் பல்லவி கண்கள் கலங்க அவரை பார்த்தாள். “ச்சு.. என்ன நீ..?” கங்கா சிறிதும் தயங்காமல் அவளின் கை பிடிக்க, பல்லவி கண்களில் கண்ணீர் வழிந்து தான் விட்டது.
இத்தனை வருடம் அவள் எதிர்பார்த்த அந்த தாய்மை அரவணைப்பு. ரத்னா கொடுக்க தவறியிருக்க, ஈஷ்வர் அதை உணராமல் இருக்க, கங்கா வந்து நின்றார் அவளுக்காக.
“இங்க பாரு பல்லவி முன்ன பின்ன நானும் நீயும் பேசினதில்லை, பழகினது இல்லை, அதுக்கு முழு முதல் காரணம் இதோ இவன் தான். ஆனா இனி அப்படி இல்லை, எனக்கு தெரியும் அப்பா, மகன் ஆளுக்கொரு பக்கம் எப்படி மனுஷங்களை பந்தாடுவாங்கன்னு, அதனால எனக்கு உன்னை புரியுது..”
“நீ இவங்களை எல்லாம் விடு, உனக்கு நான் இருக்கேன், என் பேத்திக்கு பாட்டி வீடு இருக்கு, சொத்து இருக்கு, அவ என் வீட்டு ராணி, உங்க பிரச்சனையில் நீ இவளையும் சேர்த்து அலைக்கழிக்கிறது இனி முடியாது.. நீங்க மூணு பேரும் என்ன வேணா அடிச்சுக்கோங்க, எங்க வேணா போங்க, ஆனா அனு உங்களோட சேர்ந்து வரமாட்டா..”
“முக்கியமா உனக்கு தாண்டா இது, கொடுடா என் பேத்தியை..” மகனிடம் இருந்து அனுவை பிடிங்கவே செய்தார் கங்கா.
“ம்மா.. ஏன் இப்படி பிடுங்கிறீங்க, பேபி பயப்படுறா பாருங்க..” ஈஷ்வர் மகளின் அரண்ட முகத்தை பார்த்து அம்மாவிடம் பாய்ந்தான்.
“எனக்கு தெரியும் என் பேத்தியை சமாதானம் செய்ய, நீ உன் வேலையை பாருடா..” கங்கா மகனுக்கு மேல் காய்ந்தவர், பேத்தியிடம் திரும்பினார். அவள் பல்லவியை பார்த்து பிதுக்கிய உதடுகளுடன் தாவ முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
“இதுல நீயும் அப்படியே உங்க அப்பனை மாதிரிடி, எப்போ பாரு லவி லவின்னு..” செல்லமாக, கொஞ்சம் ஆற்றாமையுடன் பேத்தியை கடிந்தவர், அவள் முடியை ஒதுக்கி முத்தம் வைத்தார்.
“ம்மா.. அவ குழந்தை, அவளுக்கு அவங்க அம்மா தான் தெரியும், உன்கிட்ட எப்படி உடனே ஓட்டுவா..” ஈஷ்வர் பல்லை கடித்து பேச,
“அது அவ தப்பு இல்லை, நீங்க எல்லாம் தான் காரணம்.. உங்க பிரச்சனையில் என் பேத்தி எல்லார்கிட்டேயும் பேச்சு வாங்குறா..” மருமகள், மகன், கணவன் மூவரையும் முறைத்தவர் திரும்பி கோமதியை பார்த்தார்.
கோமதி அவர் பார்வையை அலட்சியமாக எதிர்கொள்ள, கடுப்பான கங்கா, “நீங்க வயசுல பெரியவங்க தானே, ஒரு குழந்தை வச்சுக்கிட்டு எப்படி பேசணும்ன்னு தெரியாதா உங்களுக்கு..? அதுவும் எப்படி நீங்க என் மருமகளை பேசலாம்..?”
“இதுக்கு தான் வந்தே ஆகணும்ன்னு எங்ககிட்ட சண்டை போட்டு பல்லவியை இங்க கூட்டிட்டு வந்தீங்களா..?” ரத்னா, பரணியையும் பார்த்து கேட்டார். அவர்கள் என்ன சொல்வார்கள்..? முதலில் என்ன சொல்ல முடியும்..?
“ம்மா.. நீங்க இந்த வீட்ல எது பேசுறதும் வேஸ்ட், லீவ் இட்..” ஈஷ்வர் தோளை குலுக்கி சொல்ல,
“எப்படிடா விட முடியும்..? அவங்க என்னென்ன பேசுறாங்க.. இத்தனைக்கும் பல்லவிக்கு பாட்டி, இந்த வீட்டோட பெரிய மனுஷி அவங்க..”
“ஹாஹா.. பெரிய மனுசியா..? யாரு இவங்களா..?” ஈஷ்வர் சத்தமாக சிரித்தவன், “எதை வச்சு இவங்களை பெரிய மனுசி சொல்றீங்க, ஓஹ்.. தலை முடி நரைச்சிருக்கிறதை பார்த்தா, இல்லை முதுகு கூனு விழுந்திருக்கிதை பார்த்தா..”நக்கலான கோவத்தில் கேட்க, கோமதிக்கு தீ பற்ற வைத்தது போல இருந்தது.
“ஏய் என்ன பேசுற நீ..?” ஈஷ்வர் மேல் எகிறினார்.
அவனின் சிரிப்பில் தெரிந்த கோவத்தில், ரத்னா மருமகனை சமாதானம் செய்ய முயன்றவராக, “மாப்பிள்ளை.. அத்தைபேசினதுதப்..” ஆரம்பிக்க, கைதூக்கிகாட்டிஅங்கேயே அவரைநிறுத்திவிட்டான்மருமகன்.
பார்த்திருந்த பரணி, மூர்த்தி இருவராலும் பல்லவி அருகில் செல்ல கூட கால்கள் வரவில்லை. மகிளா கையில் மகளுடன் எல்லாவற்றையும் ஒரு ஆராய்தலுடன் பார்த்திருந்தாள். எதுவும் ஆதரித்தும் பேசவில்லை, எதிர்த்தும் பேசவில்லை.
“ம்மா.. போதும், போதும், இதுக்கும்மேலபேசாதீங்க, இதுவரைக்கும்நான்பண்ணினதப்புக்கேஎப்படிபிராயச்சித்தம்தேடபோறேன்தெரியல, இதுலேநீங்கஇன்னும்இன்னும்பேசிஎன்பொண்ணைமொத்தமாஎங்களைவிட்டுபிரிச்சிடாதீங்க..” மூர்த்திகையெடுத்தேகும்பிட்டுவிட்டார். அவரைபார்த்தஈஷ்வர்க்குஇன்னும்வெறுப்புமட்டுமே.
“கங்கா.. போதும், நாமஇங்கவந்ததேநம்மமருமகளையும், பேத்தியையும்அவங்கவீட்டுக்குகூட்டிட்டுபோகதானே.. கூட்டிட்டுவாகிளம்பலாம்..” அதுவரைஅமைதியாகஇருந்தநரசிம்மன்சொல்ல,