திகம்பரனின் திகம்பரி அவள் 21

இன்று..

“கிளம்புங்க முதல்ல..” பல்லவி ஈஷ்வரனிடம் சொல்ல, 

அவனோ “முடியாது.. ஏன் போகணும்..?” என்றான்.

“ஈஷ்வர்.. இப்படி இருக்க உங்களோட நான்  ஒரு ரூம்ல இருக்க மாட்டேன்..”

“ஓஹ்..” ஈஷ்வர் அவளை நெருங்க நெருங்க அவனை மிகவும் தீவிரமாக பார்த்த பல்லவி, 

“நேத்து நைட் நீ என் மறுப்பை மீறி என்னை தொட்டப்போ என்னோட அந்த காதல் தான் அதை சகிச்சுகிச்சு, ஆனா இன்னிக்கு உங்க மூச்சு காத்து என்மேல பட்டா கூட என்னை நான் எதாவது பண்ணிக்குவேன்..” தீவிரமாக சொல்ல, 

“உன்னை ஏண்டி..? என்னை கொன்னுடு.. நீயும் நிம்மதியா இருக்கலாம், நானும் நிம்மதியா போய் சேர்ந்தரலாம்..” ஈஷ்வர் குரல் கரகரக்க சொல்ல,  எவ்வளவு கட்டுப்படுத்தியும் பல்லவியின் கண்கள் கண்ணீரை சிந்தி தான் விட்டது.

இத்தனை வருட காதல், சில  மாத திருமண வாழ்க்கை, வருடங்களாய் பிரிவு, அவர்கள் பிரிவில் மகள்.. அமைதியில்லா நிலையில் ஈஷ்வர், பல்லவி இருவருமே காயப்பட்ட மனதுடன்  மற்றவரை பார்த்தனர். பல்லவியின் கண்ணீர் கன்னத்தில் வழிந்து கீழிறங்க, ஈஷ்வர் அதை ஒற்றை விரலால் சுண்டிவிட்டான்.

“என்னை தொடாதீங்க ப்ளீஸ்..” கண் மூடி அழுத்தமாக சொல்ல, ஈஷ்வர் அவளையே பார்த்து நின்றான்

பல்லவி அவன் பார்வை உணர்ந்தும் கண் திறக்கவில்லை. நொடிகள் கடக்க, “கிளம்புங்க..” என்றாள் மீண்டும் கண் மூடியே

இன்னும் கூட என்னை துரத்திட்டே இருக்க இல்லை..” ஈஷ்வர் குரலில் பல்லவி பட்டென கண் திறந்து அவனை பார்த்தாள். மிகவும் வெறுமையான முகத்துடன் நின்றிருந்தான். அதுவும் அவளை வேதனைபடுத்தியது

என்னை என்ன தான் பண்ண சொல்றீங்க ஈஷ்வர்..? இப்படி இருக்கிற உங்க பக்கத்துல என்னால நிக்க கூட முடியலமூச்சு முட்டுது..” ஆற்றாமையுடன் சொன்னாள்

எப்படி இருக்கேன்..? குடியும், குடித்தணுமும்மா  நல்லா தானே  இருக்கேன்..” கேலியாக சொல்ல

என்னை வேணும்ன்னு ஹர்ட் பண்றீங்க..?”

நீயும் அதை தான் நாலு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு செஞ்ச..?”

“ஏன் அப்படி செஞ்சேன்னு கேளு..”

ம்ஹூம்.. அதை பத்தி எதுவும் பேசாத..” மிக அழுத்தமாக சொல்ல

அப்போ என்னோட நியாயம்ன்னு ஒன்னு இருக்க கூடாதா..?”

“அப்படி பார்த்தா நான் இப்படி குடிகாரனா நிக்க கூட எனக்கு ஒரு நியாயாமான காரணம் இருக்கு, சொன்னா ஏத்துப்பியா நீ..? “

எதுக்கு எதை பேசுறீங்க ஈஷ்வர்..”

எனக்கு எல்லாம் ஒன்னு தான்..”

எது நீங்க இப்படி குடிச்சி கூத்தடிக்கிறதும், நான் நாலு வருஷம் கண் காணா இடத்துல கஷ்டப்பட்டதும் ஒண்ணா..?”

உன்னை யாருடி அப்படி கஷ்டப்பட சொன்னா..?”

என் தலைவிதி போதுமா..?”

இல்லை உன் அவசரத்தனம் தான் காரணம்..”

அதை நீங்க சொல்லாதீங்க, இருப்பத்தி ரெண்டு வயசுல கல்யாணம் செஞ்சே ஆகணும்ன்னு அவசர பட்டது யாரு..?”

அப்படி செஞ்சதுல என்ன தப்பு  இப்போ..?”

என்ன தப்பா..? நான் கஷ்டப்படவே அது தான் காரணம்..”

ஓஹ்.. என்னை கல்யாணம் செஞ்சது மேடத்துக்கு அவ்வளவு கழுத்தை நெறிக்குது போல..”

ஐயோ ஈஷ்வர்.. அந்த வயசுல நாம கல்யாணம் செஞ்சதை தான் தப்பு சொல்றேன்..”

பேசாதடி, அன்னிக்கு நான் ஏன் அந்த முடிவை எடுத்தேன்னு.. ம்ப்ச்.. போடி..” முகம் திருப்பினான். அன்று அவள் வீட்டை விட்டு வெளியே வந்து நின்ற போது அவளுக்கு ஒரு நம்பிக்கையை, பாதுகாப்பை கொடுக்க தான் அந்த திருமணமே. இன்று பல்லவியே அதை தவறு எனும் போது என்ன பேச..? 

ஈஷ்வர்..”

உன்னை பேசாதன்னு சொன்னேன்..” கோவத்தை கட்டுப்படுத்தி மகளிடம் செல்ல,

“அங்க போகாதீங்க..” மீண்டும் வழி மறைத்து நின்றாள்

என் பொண்ணு  மேல இப்படி இருக்கிற  உங்க மூச்சு காத்து கூட பரவ கூடாது..”

ம்ம்..” புருவம் தூக்கியவன், “உன் பொண்ணு..” தீயாக பார்க்க, பல்லவி முகம் திருப்பி கொண்டாள்

முதல்ல நீ என்னை விட்டு போன, இப்போ என் பொண்ணை என்னை விட்டு தள்ளி வைக்கிற..”

ஈஷ்வர்.. முதல்ல நீங்க இருக்கிற நிலைய பாருங்க.. அவ்வளவு ஸ்மெல், எப்படி உங்களாலே உங்க பொண்ணுகிட்ட போக முடியுது..?”

சரி.. நான் அவகிட்ட போகல, இப்படி ஓரமா உட்காரலாம் இல்லை..” பெட்டின் ஓரம் மகளை பார்த்தபடி அமர்ந்தான். பல்லவி தள்ளி சென்று சுவற்றின் ஓரம் சாய்ந்து அமர்ந்தாள். ஈஷ்வர் கண்கள் மகள் மேல் இருக்க, பல்லவியின் கண்களோ ஈஷ்வர் மேலே

தலை முடி ஏகத்துக்கும் வளர்ந்திருக்க, முகத்தில் முக்கால் வாசி தாடி, மீசை தான். எவ்வளவு வித்தியாசம் முன்பிருந்தவருக்கும், இவருக்கும். தோற்றத்தில் மட்டுமில்லை. குணத்திலும் தான். முழு முரடனாக கண்ணுக்கு தெரிந்தான்

எப்படி இவருக்கு என்னை புரிய வைக்க போறேன்..?” பல்லவி தனக்குள் மறுக

ஏன் புரிய வைக்கணும்..?” என்றது அவளின் இன்னொரு மனது

ஒரே ஒரு நிமிஷம் நீ ஏன் போனன்னு கேட்கலாம் இல்லை..”

“அந்த ஒரு நிமிஷம் பிரியறதுக்கு முன்னாடி நீ ஏன் இவர்கிட்ட பேசியிருக்க கூடாது..” சண்டையிட்டது மற்றொரு மனம். திரும்ப அவளுக்குள் ஒரு போராட்டம். ஈஷ்வரை காதலிக்கும் முன் ஆரம்பித்த மனபோராட்டம் இப்போது வரை தொடர்கிறது திகம்பரிக்கு.  

எவ்வளவு நேரம் முழித்திருந்தார்களோ, அப்படியே தூங்கி போயினர். பல்லவி கண் விழிக்கும் போது ஈஷ்வர் வெறுந்தரையில் கைகளை தலைக்கு கொடுத்து படுத்திருந்தான்

பார்த்தவளுக்கு நெஞ்சு சுருக்கென குத்தியது. அவனுக்கு பிடிக்கவே பிடிக்காத இந்த வீட்டில் அவளுக்காக, அவர்களின் மகளுக்காக இருக்கிறான். பிறந்த வீட்டை பற்றி பேசினாலே பிடிக்காமல் கோவப்படும் கணவன், இன்று அங்கேயே படுத்திருக்கிறான். தொண்டை அடைத்தாலும் எழுந்து குளிக்க சென்றாள்

“ம்மா..” கண் தேய்த்து, உருண்டு முழித்த அனு, கீழே படுத்திருந்த ஈஷ்வரை பார்க்க அப்படியே மீண்டும் படுத்து கொண்டாள். அவனிடம் தானாக போக இன்னும் தயங்கினாள் மகள்

அவளின் குரலில் கண் திறந்த ஈஷ்வர் மகள் கண் முழித்து தன்னையே பார்த்து படுத்திருக்க, அவனும் அவளை பார்த்து படுத்தான். அனு லேசான வெட்கத்தில் மறுபக்கம் முகம் திருப்பி படுக்க, ஈஷ்வருக்கும் மலர்ந்த சிரிப்பு

நீண்ட வருடங்கள் சென்று அந்த நாள் மிகவும் நல்ல நாளாக உணர்ந்தான். ரூமில் கண்களை சுழற்றி பல்லவியை தேட, குளிக்கும் சத்தம் கேட்டது. நான்கு வருடங்களுக்கு முன்பு சேர்ந்து குளித்து, கிளம்பி, பிரிந்து.. 

ச்சு.. ஈஷ்வர் காலையிலே அதையெல்லாம் நினைக்காத..” முகம் சுருக்கி எழ, பல்லவி வெளியே வந்தாள்

ம்மா..” அனு அவளை பார்த்தும் எழுந்து அவளிடம் தாவினாள். பல்லவி அவள் முடி ஒதுக்கி கிளிப் போட, மகள் எட்டி அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க, பல்லவியும் அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்

பார்த்த ஈஷ்வருக்கு அவனின் வெறுமை அதிகரிப்பது போல இருக்க, மனைவி, மகளை ஏக்கமாக பார்த்தவன், என்ன நினைத்தானோ எழுந்து ரெஸ்ட்  ரூம் சென்றுவிட்டான்

பல்லவி..” ரத்னா கதவு தட்டவும், மகளுடன் கதவை திறந்தாள்

மாப்பிள்ளை நைட் வந்திருக்கார் போலயே, இன்னிக்காவது அவரை வீட்ல சாப்பிட சொல்லு..” மகளிடம் கேட்க, அவளுக்கே பிடிக்காத போது என்ன சொல்வாள். ம்ம்.. தலை மட்டும் ஆட்ட

அனுக்கு பால் எடுத்துட்டு வரவா..?” கேட்டார் பேத்தியின் தலை வருடி

கொடும்மா..” என்றவள், கதவை மூடி வர, ஈஷ்வர் வந்தவன், பல்லவியின் சுடி ஷாலை எடுத்து முகம் துடைத்தான். பல்லவி மகளை ரெஸ்ட் ரூம் கூட்டி செல்ல, ரத்னா திரும்ப கதவை தட்டினார்

இந்த முறை ஈஷ்வர் திறக்க, “அனுக்கு பால் மாப்பிள்ளை..” கையில் கொடுத்தவர், அவனிடமும் சாப்பிட கோரிக்கை வைத்தார்

பார்க்கலாம்..” பட்டும் படாமல் சொல்லி கீழிறந்த கோமதி, மூர்த்தியை பார்த்து  சத்தமாக கதைவடைத்தான்

வேணும்ன்னே பண்றான் உன் மாப்பிள்ளை.. வரட்டும் நான் யார்ன்னு காட்டுறேன்..” கோமதி பிரஷர் ஏறி கத்த, பரணி ஆயாசத்துடன் தலை ஆட்டி கொண்டான்

அவன் பல்லவியை கோவத்தில் அடித்ததற்கே ஈஷ்வர் இப்போது வரை முறைத்து கொண்டிருக்கிறான், இதில் கோமதி ஏதும் பேசி.. விடு பரணி, அப்படியாவது வாங்கட்டும்,.. தனக்குள் சொல்லி கொண்டான்

அனுக்கு பால் கொடுத்திருக்காங்க..” பல்லவி மகளுடன் வரவும் ஈஷ்வர் கொடுக்க, பார்த்த அனு முகம் சுளித்தாள்

அவளுக்கு தான் பால் பிடிக்கலையே..? ஏன் கம்பெல் பண்ற..?” அனு மறுக்க ஈஷ்வர் கேட்டபடி மகளின் அருகில் சென்று கை நீட்ட, மகளோ பாலில் இருந்து தப்புவதற்காகவே ஈஷ்வரிடம் தாவி விட்டாள். 

“ம்ப்ச்.. ஈஷ்வர் அவளை கொடுங்க, கொஞ்சமாவது பால் குடிக்கட்டும்..” பல்லவி மகளை தூக்க வர, அவளோ ஈஷ்வரின் கழுத்தை கட்டி கொண்டாள். 

மகளின் அணைப்பில் ஈஷ்வரின் நெஞ்சு குழி ஏறி இறங்க, தானும் மகளை தன்னோடு சேர்த்து பிடித்தான். “ஈஷூ.. பாவு உவ்வே..” அனு தந்தையின் கழுத்தில் முகம் வைத்து தேய்க்க, எப்படி விடுவான்..? 

“உன் பாலை எடுத்திட்டு போடி.. வந்திட்டா பேபியை அழவைக்க..” மனைவியிடம் அதிகாரமாக சொன்னவன், மகளின் தலை முடிய ஒதுக்கிவிட்டவாறே, 

“அனு பேபி நாம நேத்து போல வெளியே போய் காபி குடிச்சிட்டு வரலாமா..? அப்படியே விஷ்ணு மாமாக்கும் உன்னை காட்டணும், என்னை கேட்டுட்டே இருக்காங்க அனு பேபியை தூக்கி வான்னு.. போலாமா..?” ஈஷ்வர் மகளிடம் பேசியபடி கிளம்ப பார்க்க

வெளியே எல்லாம் போக வேண்டாம்..” என்று பல்லவி முகம் தூக்கினாள்உன்னை யார்டி கேட்டா பார்வை பார்த்தவன், மகளுடன் வெளியவே செல்ல, பல்லவி மகள் முன் சண்டை போட பிடிக்காமல் அவன் பின் வந்தாள்

மாப்பிள்ளை.. சாப்பாடு ரெடியா இருக்கு, சாப்பிடலாமா..?” ரத்னா மருமகனை பார்க்கவும் வேகமாக வந்து கூப்பிட்டார்

அவனோ  நிற்க கூட செய்யாமல், “எனக்கு வேண்டாம்..” என்று ஹாலை கடக்க, கொதித்து போன கோமதி

இதுக்கு தான் சொல்றது ஆள் யாருன்னு பார்த்து மருமகனா கொண்டு வரணும்ன்னு, இங்க பாரு நின்னு பேசற மரியாதையும்  இல்லை, முறை சொல்லி கூப்பிடுற பண்பும் இல்லை..”  சத்தமாக வார்த்தைகளை விட, ஈஷ்வர் வாசலை கடக்க போனவன் அப்படியே திரும்பினான்.

அத்தை.. கொஞ்சம் அமைதியா இருங்க, ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க..?”  மாமியாரிடம் ஆதங்கத்துடன் கேட்டார் ரத்னா

உன்னை தான் சொல்லணும், மக வேணும்ன்னு தேடி பிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது நீ தானே..?” கோமதி அடங்காமல் பேச

ம்மா.. நீ வா நாம ரூமுக்கு போவோம்..” மூர்த்தி அவரின் வாயை அடக்க முடியாது தெரிந்து ரூமிற்கு கூப்பிட்டார். அவரோ எழாமல் மகனை முறைத்தவர்

மூர்த்தி.. முதல்ல இருந்து நான் உனக்கு சொல்லிட்டே இருந்தேன் இவளை சீக்கிரம் கட்டி கொடுத்துடுன்னு, அப்போ எல்லாம் இவங்க பேச்சை கேட்டு ஆடிட்டு  இருந்துட்டு இப்போ என்னை கண்டிரோல் பண்ண பார்க்கிற, அதுவும் யாருக்காக ஓடி போன உன்னை பொண்ணுக்காகவா..?” ஆங்காரத்துடன் கேட்டார்

அவரின் பேச்சில் மொத்த குடும்பமும் ஈஷ்வர், பல்லவியை தான் சங்கடத்துடன் பார்த்தனர். ஈஷ்வர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை, பல்லவியோ கோமதியை கூர்மையாய் பார்த்து  நின்றாள்.  

ம்மா.. முடிஞ்சு போனதை பத்தி எதுக்கும்மா பேசிக்கிட்டு, விடுங்கம்மா..” மூர்த்தி மகளை பார்த்து கெஞ்சலாக கேட்க

எது முடிஞ்சது..? அப்போ அங்க குடும்பமா வந்து நிக்கிறது யாரு..?” கோமதி மேலும் கேட்க, ஈஷ்வர் திரும்பி மகளை  தான் பார்த்தான். அனு ஏதும் புரியாமல் எல்லோரையும் பார்த்தபடி இருக்க, தந்தைக்கு உள்ளுக்குள் வலித்தது

அத்தை.. போதும், நீங்க இதுவரை பேசினதே அதிகம், என் மக இத்தனை வருஷம் கழிச்சி இப்போ தான் கண் முன்னாடியே வந்திருக்கா, திரும்ப பேசி அவளை அனுப்பிடாதீங்க..”  ரத்னா இந்த முறை தன் கோவத்தை வெளியே காட்ட, அது கோமதியை இன்னும் சீண்டியது.

“உன் பொண்ணு இவனை நம்பி ஓடி போனதுக்கு என்கிட்ட ஏன் உன் கோவத்தை காட்டுற ரத்னா..?” பேசி கொண்டே போக, பல்லவிக்கு வெறுத்து போனது

ம்மா..” என்று அம்மாவை தான் சத்தமாக கூப்பிட்டாள் மகள்

பல்லவி.. இவங்க..”

ம்மா.. ப்ளீஸ், நீங்க எனக்காக பேசுறீங்கன்னு என்னை கஷ்டம் தான் படுத்திட்டு இருக்கீங்க, உங்களுக்கு இது புரியலையா..?” கோவத்துடனும், வேதனையுடனும் கேட்டாள்

இல்லடா.. அவங்க தான் அன்னிக்கு நீ வீட்டை விட்டு வெளியே போக காரணமே..”

ம்மா.. ம்மா.. இது தான் சொல்றேன், எதுவும் பேசாதீங்க, நீங்க என்ன பேசினாலும் ஒரு அணு அளவுக்கும் பிரயோஜனமில்லை, அவங்க கொத்திட்டே தான் இருப்பாங்க..” 

ஏய் அப்போ என்னை பாம்பு சொல்றியா..?” கோமதி எகிறினார். பேத்தியோ அவரை கண்டு கொள்ளாமல்,

“ம்மா..  நான் இங்க வந்தே இருக்க கூடாது, என் மனசுல எதோ ஒரு மூலையில உங்க எல்லார் மேல கொஞ்ச பாசம் ஒட்டியிருக்கும் போல, அதான் இந்த வீட்டு வாசற்படியை திரும்ப மிதிச்சிட்டேன், ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு இந்த ரெண்டு நாள்லே நான் தெரிஞ்சுகிட்டேன்..” ரத்த பாசம் அவளை இப்போதும் மிகவும் வலிக்க வைத்தது

பல்லவி என்ன பேசுற நீ..? இது உன் வீடும் தான், பாட்டியை எல்லாம் கன்சிடர் பண்ணாத..” அதுவரை ஈஷ்வர் எதாவது பேசுவானோ என்று அமைதி காத்த பரணி வேகமாக சொல்ல

இல்லை.. எப்போ என்னை வீட்டை விட்டு  வெளியே போக சொன்னாங்களே.. அப்போவவே  இந்த வீட்டு பந்தம் அறுந்து போச்சு, இந்த காலத்துல பசங்களை கூட வீட்டை விட்டு வெளியே போக சொல்லி யாரும் சொல்றதில்லை, ஆனா இங்க என்னை வெளியே போக சொன்னாங்க, அப்படி பட்ட வீட்டுக்கு நான் திரும்ப வந்தது முழுக்க முழுக்க என் தப்பே தான்..”

பல்லவி.. பொறுடா, ப்ளீஸ், அம்மாவை பாருடா..”

ம்மா.. என்னை விட்டுடு ப்ளீஸ்,

“பல்லவி.. மனசு விட்டுடாத, நான் செஞ்சது எல்லாம் ரொம்ப பெரிய தப்பு, என்னை மன்னிச்சிரு..”  மூர்த்தி மகளின் அருகில் வர, அவளோ வேகமாக ஈஷ்வரை ஒட்டி  நின்றாள்

அன்று போனில் இவர் பேசிய பேச்சு.. இப்போதும் அப்பா இப்டி பேசிட்டாரே  என்ற அழுகை வராமல் இல்லை மகளுக்கு. ஈஷ்வர் மனைவியை திரும்பி பார்த்தான். மிகவும் பலவீனமாக இருந்தாள் பெண்

அவளின் அடக்கப்பட்ட அழுகை ஏறி இறங்கிய தொண்டை குழியிலே தெரிந்தது. எதுக்கு இந்த பாடு..? என்ன குறை இவளுக்கு..? ஏன் இப்படி இங்க வந்து பேச்சு வாங்கணும்..? அம்மாவையே  பார்த்த மகளை நன்றாக அணைத்து பிடித்தான்.

“நிக்க கூட  இடம் இல்லாமல் ஓடிட்டே இருக்கிறது தான்  எனக்கும் என் மகளுக்கும் விதிச்சிருக்கு போல..” பல்லவி சொல்லிவிட, ஈஷ்வர்க்கு சகலமும் துடித்தது

என்ன வார்த்தை சொல்றா..? இவளை நல்லா வச்சுக்கணும்ன்னு தானே நான்..”  மேலும் நினைக்க கூட முடியாமல் கோவத்தில், வேதனையில், ஆதங்கத்தில், வலியில் திகம்பரியை பார்த்தான்

பல்லவி என்ன பேசிட்டிருக்க நீ..?”  கங்கா குரல் பின்னிருந்து கேட்க, அவருடன் நரசிம்மனும் நின்றிருந்தார்.