“ஈஷ்வர்.. இப்படி இருக்க உங்களோட நான் ஒரு ரூம்ல இருக்க மாட்டேன்..”
“ஓஹ்..” ஈஷ்வர் அவளை நெருங்க நெருங்க அவனை மிகவும் தீவிரமாக பார்த்த பல்லவி,
“நேத்து நைட் நீ என் மறுப்பை மீறி என்னை தொட்டப்போ என்னோட அந்த காதல் தான் அதை சகிச்சுகிச்சு, ஆனா இன்னிக்கு உங்க மூச்சு காத்து என்மேல பட்டா கூட என்னை நான் எதாவது பண்ணிக்குவேன்..” தீவிரமாக சொல்ல,
“உன்னை ஏண்டி..? என்னை கொன்னுடு.. நீயும் நிம்மதியா இருக்கலாம், நானும் நிம்மதியா போய் சேர்ந்தரலாம்..” ஈஷ்வர் குரல் கரகரக்க சொல்ல, எவ்வளவு கட்டுப்படுத்தியும் பல்லவியின் கண்கள் கண்ணீரை சிந்தி தான் விட்டது.
இத்தனை வருட காதல், சில மாத திருமண வாழ்க்கை, வருடங்களாய் பிரிவு, அவர்கள் பிரிவில் மகள்.. அமைதியில்லா நிலையில் ஈஷ்வர், பல்லவி இருவருமே காயப்பட்ட மனதுடன் மற்றவரை பார்த்தனர். பல்லவியின் கண்ணீர் கன்னத்தில் வழிந்து கீழிறங்க, ஈஷ்வர் அதை ஒற்றை விரலால் சுண்டிவிட்டான்.
“அவளுக்குதான்பால் பிடிக்கலையே..? ஏன் கம்பெல் பண்ற..?” அனு மறுக்க ஈஷ்வர் கேட்டபடி மகளின் அருகில் சென்று கை நீட்ட, மகளோ பாலில் இருந்து தப்புவதற்காகவே ஈஷ்வரிடம் தாவி விட்டாள்.
“ம்ப்ச்.. ஈஷ்வர் அவளை கொடுங்க, கொஞ்சமாவது பால் குடிக்கட்டும்..” பல்லவி மகளை தூக்க வர, அவளோ ஈஷ்வரின் கழுத்தை கட்டி கொண்டாள்.
மகளின் அணைப்பில் ஈஷ்வரின் நெஞ்சு குழி ஏறி இறங்க, தானும் மகளை தன்னோடு சேர்த்து பிடித்தான். “ஈஷூ.. பாவு உவ்வே..” அனு தந்தையின் கழுத்தில் முகம் வைத்து தேய்க்க, எப்படி விடுவான்..?