திகம்பரனின் திகம்பரி அவள் 18

“டின்னர் டைம் முடிய போகுது, சாப்பிட வரலையாம்மா..” அவள் உணவு அப்படியே இருந்ததில் ஹாஸ்டல் ஹெட் பல்லவியின் ரூம் கதவை தட்டி கேட்டார்

இல்லை மேம்.. பசிக்கல.. வேண்டாம்..” என்ற பல்லவி  அவர் ஒரு மாதிரி பார்க்கவும் மெலிதாக சிரித்தாள்

என்ன ஆச்சு உனக்கு..? உடம்பு ஏதும் சரியில்லையா..? டாக்டரை வர சொல்லவா..?” அவளின் வீங்கிய முகத்தையும், சிவந்த கண்களையும் பார்த்து கேட்டார்.  

வேண்டாம் மேம்..  ஈவினிங் வாக்கிங் போய்ட்டு வரும் போது மழையில நினைஞ்சுட்டேன், அதான் கொஞ்சம்  தலைவலியா இருக்கு..” என

சரி பாலும், தலைவலிக்கு மாத்திரையும்  கொடுத்துவிடுறேன்..” என்றவர் அவளை  சந்தேகமாக பார்த்து கொண்டு செல்ல, கதவை மூடி தாளிட்ட பல்லவியின் நின்றிருந்த கண்ணீர் திரும்ப வரும் போல இருக்க, பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தாள்

அவள் மட்டுமே அந்த ரூமில் இருக்க, ஏன் அழுகிறாய் என்று கேட்பார் இல்லை. அவளின் ப்ரைவசிய மனதில் கொண்டு உடன் யாரும் வேண்டாம் என்றுவிட்டான் ஈஷ்வர்

அட்டேச்சேட் பாத்ரூம், ஏசி, ஹீட்டர், பெரிய கட்டில், பெட் என எல்லா வசதியும் கொண்ட ரூமை தான் அவளுக்கு எடுத்திருந்தான். அவளுக்கான  உணவும் ஒவ்வொரு நேரத்திற்கும் அவனே செலெக்ட் செய்தும் கொடுத்திருந்தவன், அதற்கு தனியாக  பல ஆயிரத்தையும் கட்டியிருந்தான்

பல்லவி இரவில் பால் குடிப்பாள்  என்று தெரிந்து அதையும் ஞாபகம் வைத்து லிஸ்ட்டில் சேர்ந்திருக்க, கதவை தட்டி பால், மாத்திரை  கொடுத்து சென்றார் அங்கு மேற்பார்வை பார்க்கும் பெண்மணி. வாங்கி வைத்து கொண்டவள், சேர் போட்டு ஜன்னலை திறந்து அமர்ந்தாள்

அவளுக்கு நேரே கிளை ரோடு  இருக்க, வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அதையே பார்த்தவளுக்கு மனம் வெறுமையாக இருந்தது. “என்ன கல்யாணமே பண்ணிட்டியா..? ச்சீ.. உன்னை தேடி நாங்க இங்க வேதனை பட்டுட்டு இருக்கோம், நீ கல்யாணமே பண்ணிட்டு எந்த தைரியத்துல எங்களுக்கு போன் பண்ற..?” மூர்த்தி கோபத்துடன் கத்தியது இன்னும் காதில் ஒலித்து கொண்டே இருந்தது

என்னதான் இரவு நேரம் என்றும் பாராமல் வீட்டை விட்டு அனுப்பிய மூர்த்தி மேல அளவுகடந்த கோவம், வேதனை இருந்தாலும் மகளாக அவர்களை தினம் தினம் தேடவே செய்தாள். அதிலும் ரத்னா, பரணி நினைவு அதிகம். 

“அன்னிக்கு அம்மா என்னால திட்டு வாங்கி அழுதுட்டே இருந்தாங்க, நான் எங்க இருக்கேன் நினைச்சு கஷ்டப்படுவாங்க, அவங்களுக்காவது பேசலாமா..? அப்படியே அண்ணாகிட்டயும் பேச முடிஞ்சா பேசணும்..” மனதில் ஆசை இருக்க, தயக்கம் அவளை கட்டி போட்டது. 

“ஒருவேளை என்மேல இன்னும் கோவம் இருந்தா..?”

“எப்படி இல்லாம இருக்கும் பல்லவி, நீ செஞ்சதும் தப்பு தானே, அவங்க கோபப்பட்டா கேட்டுக்கோ, திட்டுனா வாங்கிக்கோ, கோவப்பட்டா கூட ஓகே, பேசாம வச்சுட்டா..” தனக்குள்ளே மருகி தவித்தவள், இன்று பேசிவிட வேண்டும் என்ற முடிவுடன் மனதை தைரியப்படுத்தி  வீட்டு லேண்ட் லைன் நம்பரை அழைக்க அவுட் கோயிங் கால் இல்லை என்றது.

“ம்ப்ச்..” அப்போது தான் அவளின் பேலன்ஸ்  முடிந்த ஞாபகம் வந்தது. கையில் ஈஷ்வர் கொடுத்து சென்ற பணம் இருக்க, அதை எடுக்க யோசித்தாள். இத்தனை நாட்கள் அதில் இருந்து பணம் எடுக்கவில்லை. இன்று எடுக்கவும் மனம் இல்லை. ஆனால் அம்மாவிற்கு பேச வேண்டும் என்ற ஆசை வந்த பின் வேறு வழி இல்லாமல் அந்த பணத்தை எடுத்து கொண்டு வெளியே சென்றாள்

வழியில் டெலிபோன் பூத் இருக்க, அதிலே வீட்டுக்கு அழைக்க, அவளின் நேரம் எடுத்தது மூர்த்தி. அவரின் குரலில் இத்தனை நாள் இருந்த கோவம் கூட சட்டென மறைந்துவிட, “அப்பா..”  என்று கூப்பிட்டுவிட்டாள்

பல்லவி..” அவரும் உணர்ச்சி வசப்பட்டார்

ஆமாம்ப்பா..” என்றவளுக்கு தொண்டை அடைத்தது

எங்க இருக்க பல்லவி நீ..? இத்தனை நாளா உன்னை எங்கெங்கே தேடினோம் தெரியுமா..? நல்லா இருக்க தானே..?” அவர் கேட்டு கொண்டே போக, பல்லவிக்கு வீட்டில் தன்னை தேடியது அப்படி ஒரு சந்தோசம்

இங்க சென்னயில தான் இருக்கேன்ப்பாநீங்க எப்படி இருக்கீங்க, அம்மா எங்கப்பா..?” பயம், தயக்கம் மறைந்து உற்சாகத்தோடு பேசினாள்.

என்ன சென்னையிலா  இருக்க..?” என்றவர் குரல் சட்டென கோவத்திற்கு மாற, “ஆமா யார் கூட இருக்க நீ, அந்த பையன் கூடவா..?” கேட்க, வித்தியாசம் புரிந்த பல்லவிக்கு மகிழ்ச்சி அப்படியே வடிந்தது

அப்போ நீ அந்த பையனையே கல்யாணம் முடிச்சிட்டியா..?”  அவளின் பதிலை எதிர்பாராமல் அவரின் எப்போதுமான அவசர தனத்தை காட்டினார் மனிதர்

பல்லவி உன்னை தான் கேட்கிறேன் பதில் சொல்லு..”  கோவத்துடன் அதட்ட

ஆமாம்ப்பா.. எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு..” என்றுவிட்டாள் இவள்

என்ன கல்யாணமே பண்ணிட்டியா..? ச்சீ.. உன்னை தேடி நாங்க இங்க வேதனை பட்டுட்டு இருக்கோம், நீ கல்யாணமே பண்ணிட்டு எந்த தைரியத்துல எங்களுக்கு போன் பண்ற..?” என்றவர் அதோடு நிறுத்தாமல்

உன்னை போய் நாங்க தேடினோம் பாரு எங்களை சொல்லணும், இத்தனை வருஷம்  எந்த குறையும் இல்லாம உன்னை வளர்த்த எங்க முகத்தில கரிய பூசிட்ட இல்லை..” என்று கத்த, பக்கத்தில் கோமதி வேறு

கல்யாணமே பண்ணிட்டாளா..? அயோ.. இவளை மாதிரி ஒரு பொண்ணை நீ பேக்காமலே இருந்திருக்கலாம் மூர்த்திநம்மளை கேவலப்படுத்தவே இப்படி எல்லாம் செஞ்சிட்டு இருக்கா..? கேட்கிறவங்களுக்கு என்ன பதிலை சொல்ல எவனையோ நம்பி ஓடி போயிட்டான்னா..?”

இவளால நம்ம மானம் போச்சு, மரியாதை போச்சுநம்ம வயித்தெரிச்சலை கொட்டிக்கிறாளே, இவ எல்லாம் எப்படி நல்லா இருப்பா..? நாசமா தான்..” பேசி கொண்டே போக, பல்லவிக்கு அதற்கு மேலும் கேட்க முடியவில்லை. போனை வைத்துவிட்டவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது.  

அங்கு நிற்க முடியாமல் முகம் துடைத்து வெளியே வந்தவள்ரீசார்ஜ்  செய்யும் நினைவில்லாமல் ஹாஸ்டலுக்கு நடந்தாள். மெலிதாக ஆரம்பித்த தூறல் இப்போது மழையாக மாற, அதுவும் அவளுக்கு நல்லதாக போனது. கண்ணீரை அடக்கும் வலி இல்லாமல் மழையில் நினைந்தபடி அழுது கொண்டே ஹாஸ்டல் வந்து சேர்ந்தாள்ஈர உடையை கூட மாற்றும் உணர்வில்லை

கோமதியின் வார்த்தைகள் அவளின் உயிர் வரை அதிர செய்தது. “என்ன எல்லாம் சொல்லிட்டாங்க..? நான் அவங்க பேத்தி இல்லையா..? அப்பாவும் கோவப்பட்டு தானே பேசினார்..? அம்மா பக்கத்துல இருந்திருப்பாங்களா..? ஏன் என்கிட்ட பேசல..? அண்ணா.. அவனும் இப்படி தான் பேசுவானா..? அவங்க யாருக்கும் நான் வேண்டாமா..?” நினைத்து நினைத்து அழுது கொண்டே இருந்தாள்

நிமிடங்கள் சென்ற பின்னும் அவளின் அழுகை நிற்கவில்லை. துடைக்க துடைக்க ஊற்றாக வந்து கொண்டே இருக்க, ஈஷ்வர் போன் செய்துவிட்டான். பார்த்தவளுக்கு ஏனோ இன்னும் துக்கம்இவள் எடுக்காமல் போக, அவன்  திரும்ப திரும்ப கூப்பிட்டான்

இப்போதும் அட்டென்ட் செய்யாவிட்டால் இங்கேயே வந்து விடுவான் என்று புரியஅவரச அவசரமாக முகம் துடைத்தவள், தண்ணீர் குடித்து, போன் எடுத்தாள்

லவி ஏன் இவ்வளவு நேரம்..? நீ ஓகே தானே..?” ஈஷ்வர் வேகமாக கேட்க

நா.. நான் ஓகே தான்..” என்றாள் இவள்

ஏன் குரல் நமநமன்னு இருக்கு, அழுதியா..?” கூர்மையாக கேட்க

இல்லையில்லை.. கொஞ்சம் தூங்கிட்டேன். அதான் வேற ஒன்னுமில்லை..”

நம்பிட்டேன்டி..” என்றவன், கட் செய்துவிட்டுஉடனே வீடியோ காலில் வந்தான்.

இவரோட.. பல்லவி காலை அட்டென்ட் செய்ய, அழுத முகம் தெளிவாக அவளை காட்டி கொடுத்தது. அவன்  எதுவும்  பேசாமல் அவளை பார்த்து கொண்டே இருக்க, “ஈஷ்வர் ப்ளீஸ்..” என்றாள் இவள்

அப்பொழுதும் அமைதியாகவே இருக்க, “வீட்டு ஞாபகம்.. அதான்..” என்றாள் சிறுகுரலில்.  

உன்னால அவங்களை நினச்சு எப்படி அழுக முடியுது..?” ஈஷ்வர் காட்டமாக கேட்டான்

அம்மா, அண்ணா.. அவங்களை நினைச்சு..”

விடு.. அப்பறம் எனக்கு கோவம் வந்து ஏதாவது சொல்வேன், வீணா  சண்டை தான் வரும்..” கடுப்பாக சொன்னவன், “சாப்பிட்டியா..?” கேட்க

இனி தான் போக போறேன்..” என்றாள்

சரி போய் சாப்பிட்டு வந்து எனக்கு கால் பண்ணு..” வைத்துவிட்டான். கோவத்தில் எதுவும் பேசிட கூடாது என்று போனை வைக்கிறான் புரிய, பெருமூச்சோடு எழுந்து சென்று உடை மாற்றி வந்தவளுக்கு பசி என்று ஒன்று இல்லை

சில நிமிடங்கள் சென்று ஈஷ்வர் போன் செய்ய, சாப்பிட்டேன்.. என்றுவிட்டாள். இல்லை என்றால் சாப்பிடும் வரை விடமாட்டான்,  இல்லை நேர்ல வருவேன் என்று மிரட்டுவான். அதனாலே பொய் சொல்லிவிட்டவள், படிக்க போகிறேன் என்று போனை வைத்து படுத்தாள்.

அன்றிரவு மழையில் நினைந்தது வேலையை காட்டியது. சில மணி நேரங்களில் ஆரம்பித்த லேசான ஜுரம், விடியற்காலையில் கொதிக்க ஆரம்பித்தது

உடல் சூடு, சளி, இருமல் என்று ஒரே இரவு அவளை பிரட்டி போட, மறுநாள் பெட்டை விட்டு எழ கூட முடியவில்லை. ஈஷ்வர் எப்போதும் போல எழுந்ததும் அவளுக்கு போன் செய்ய, மொபைல் ஸ்விட்ச் ஆப்

சார்ஜ் போடாம தூங்கிட்டாளோ..?” சில நிமிடங்கள் சென்று திரும்ப கூப்பிட அதே பதில். மனது வேற உறுத்தி கொண்டே இருக்க, ஹாஸ்டலுக்கு அழைத்து பார்க்க சொன்னான்

ஈஷ்வர்..” என்று கங்கா கீழிறந்து கூப்பிட, வந்தவன் அவர்கள் தயாராக இருக்கவும் தந்தையை பார்த்தான். அவர் தான் முன்பு போல மகனிடம் பேசுவதில்லையே

இப்போதும், “நாங்க கிளம்புறோம், பார்த்துக்கோங்க..” என்று வாசலுக்கு நடந்துவிட்டார். அரசியல் முக்கிய கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவிற்காக டெல்லி செல்கின்றனர்

வேலையாட்களிடம் உணவு, வீட்டு பராமரிப்பு பற்றி அறிவுறை வழங்கிய கங்கா, “மகா.. பார்த்துக்கோ, நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடனும், அம்மா போன் பண்ணுவேன்..” சொல்லிவிட்டு இறுதியாக மகனின் தலையை தடவியவர், சொல்லி கொண்டு கணவனுடன் கிளம்பிவிட்டார்

ண்ணா.. சாப்பிடலாமா..?” மகா கேட்க

நீ சாப்பிடு வா..” என்று அவளுக்கும் மட்டும் வைத்தவன் கவனம் முழுதும் போனில் இருந்தது

என்ன ஆச்சுண்ணா..?” மகா கேட்க

பல்லவி போனை எடுக்கல..” என்றான்

ஓஹ்..” என்றுவிட்டவள் அதை பற்றி மேலும் பேசவில்லை. என்னமோ அவளுக்கு ஈஷ்வர் செய்தது இன்னமும் ஏற்று கொள்ள முடியவில்லை. அதோடு பல்லவியை பார்த்தும் இல்லை எனும் போது அவளை பற்றி எந்த அபிப்பிராயமும் வளர்த்து கொள்ள அவள் விரும்பவில்லை

உணவு முடியவும், “ண்ணா.. நான் காலேஜ் போய்ட்டு அத்தை வீட்டுக்கு போகட்டுமா..? சின்னு கூட இருக்கணும் போல இருக்கு..” கேட்டாள்

ம்ம்.. எப்படி வருவ..? விஷ்ணு கூட ஊர்ல இல்லை..”

அதனால் தான் அங்க போகவே செய்றேன், அந்த பாய்லர் இருந்தா நான் ஏன் அத்தை வீட்டுக்கு போக போறேன்..?” மனதில் முனங்கியவள், “அத்தையை டிராப் பண்ண சொல்றேன்..” என, ஈஷ்வரும் விஷ்ணுவின் அம்மாவிற்கு போன் செய்து பேசி தங்கைக்கு சம்மதம் சொன்னான்

தேங்ஸ்ண்ணா.. அப்படியே அம்மா கேட்டா சொல்லிடு.. பை..” என்று ஓடிவிட, “என்னை கோர்த்துவிட்டு போறா பாரு..” ஈஷ்வர் அவளுக்கு பை சொன்னவன், அவனின் போன் ஒலிக்கவும் காதுக்கு கொடுத்தான்

சார்.. பல்லவிக்கு  நல்லா ஜுரம், கண் கூட முழிக்க முடியல, ரொம்ப கஷ்டப்பட்டு தான் கதவையே திறக்க வச்சோம்..” என்றார் ஹாஸ்டல் ஹெட்