தாரகை 35

ஸ்ரீநிதி விழித்ததை பார்த்து அனைவரும் ரிஷியிடமிருந்து நகர்ந்தனர். அவள் கண்ணீருடன் அவனை பார்க்க, அனைவரும் வெளியே சென்றார்கள்.

கண்ணீருடன் இருவரும் அணைத்துக் கொள்ள, “சார் நேரமாகுது” என்றார் ஒரு போலீஸ்.

“ரிஷி நானும் நம்ம பேபியும் உங்களுக்காக காத்திருப்போம்” அழுது கொண்டே அவனை விடாமல் அணைத்துக் கொண்டாள் ஸ்ரீநிதி.

எப்போதும் வழவழவென பேசும் ரிஷி அமைதியாக ஸ்ரீநிதியை நகர்த்தி அவள் நெற்றியில் முத்தமிட்டு, தன் கையை அவளது வயிற்றில் பதித்து, “என்னோட பேபி அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க. டாட் வருவேனா? வர மாட்டேனான்னு தெரியல?” கண்ணீர் வடிய மண்டியிட்டு ஸ்ரீநிதி வயிற்றில் முத்தமிட்டு அவளை பார்த்தான்.

ஸ்ரீநிதி அழுது கொண்டே அவனை பார்த்தாள்.

உன்னோட பேச்சை நான் கேட்கலை ஸ்ரீ. அந்த கோபத்தை மனசுல வச்சுக்கோ. எனக்காக காத்திருப்பேல்ல? கண்ணீருடன் ரிஷி கேட்க,

“இவ்வளவு காதல் வச்சிருக்கிற என்னோட ரிஷி மீது கோபப்படுவேனா? இல்ல ரிஷி. உங்களுக்காக நாங்க இருவருமே காத்திருப்போம்” என்றாள்.

போலீஸ் அவனருகே வர, “ரிஷி” ஸ்ரீநிதி அவனை அழைத்தாள்.

ரிஷி அவளை பார்க்க, “லவ் யூ பேட் பாய்” அவன் இதழ்களில் அழுது கொண்டே முத்தமிட்டாள். அனைவரும் கண்ணீருடன் இருவரையும் பார்த்தனர்.

ராம் கிஷோரை பார்க்க, இருவரும் வெளியே வந்தனர். ரிஷியை கொலை செய்ததற்காக அழைத்து சென்றனர்.

“அம்மா” அவள் பனிமலரை பார்க்க, அவ்விடம் வந்தார் பரசுராம் வக்கீலாக..

“பரசு” பனிமலர் ஸ்ரீநிதியை அணைத்துக் கொண்டே தன் கணவனை பார்த்தார்.

குடும்பத்தினர்கள் அவரிடம் கோபப்பட, பவிதா எல்லார் முன்னும் வந்து “அவரை பேச விடுங்க” நகர்ந்து தன் அம்மாவை பார்த்தாள்.

பரசுராம் அனைவரிடமும் மன்னிப்பு வேண்டி விட்டு, தன் பனிமலரிடம் வந்து அவர் கழுத்தில் தாலியை கட்டினார். பனிமலர் உறைந்து நின்றிருந்தார். ஜோ சினமுடன் கையை ஓங்க, ஸ்ரீநிதி அவனை தடுத்தாள்.

அவங்க இனியாவது சேர்ந்து வாழட்டும்டா. எல்லாருக்கும் என்ன செய்வதென்று புரியாத சூழ்நிலை வரும். சிலர் பிரச்சனையை எதிர்த்து நிற்பாங்க. சிலர் மறைந்து விடுவார்கள். இதை தான இவரும் செய்தார்.

நம்ம அம்மா மீதும் தவறு இருக்கு. பிள்ளைகளை வச்சிட்டு சாகணும்ன்னு எப்படி நினைக்கலாம்?

“அம்மா நிலையில் அன்று நான் இருந்த போது தெளிவாக இருந்தேன். இன்றும் நான் தெளிவாக இருக்கேன்” ரிஷியை எண்ணி உடைந்து அழுதாள் ஸ்ரீநிதி.

அவன் பாடலை கேட்டு அவனுக்காக காத்திருந்தவர்களுக்கு வந்த செய்தியில் ரிஷியின் பெயர் கெட்டுப் போனது.

வக்கீலாக தன் மாப்பிள்ளைக்காக பரசுராம் ஆஜர் ஆனார். ரிஷி முகம் வாட தன் மனைவியை தேடினான்.

“ஸ்ரீநிதி வரவில்லை” சந்திரமுகன் தன் மகனிடம் கண்ணாலே பேசினார்.

ரிஷி கண்ணீருடன் அவரை பார்த்தான்.

கேஸ் முடிவில் ஒரு பொண்ணின் மானத்தையும், அவன் குழந்தையின் உயிரை காப்பாற்ற கொலை செய்ததால் குறைந்த பட்ச தண்டனையாக ஐந்து வருட கடுங்காவல் தண்டனையை அறிவித்தனர்.

ரிஷி தன் தந்தையை பார்த்து விட்டு சென்றான்.

ஸ்ரீநிதிக்கு டெலிவரி சமயம் ரிஷியை பார்க்க வேண்டுமென பிடிவாதம் செய்தாள். அதனால் சந்திரமுகன் அவனை நீதிபதி மூலமாக வெளியே வர வைத்தார்.

ஸ்ரீநிதி வலியுடன் இருக்க, ரிஷி சிகிச்சை அறைக்கு சென்றான்.

வலியில் கத்திக் கொண்டிருந்த ஸ்ரீநிதி ரிஷியை பார்த்து கண்ணீருடன் அவன் கையை இறுக பற்றினாள். வந்தவுடன் தன் மனைவியின் கத்தலை கேட்கவும் மிரண்டு போனான் ரிஷி. வெகு நேரத்தின் பின் அவளிடமிருந்து பெண்குழந்தை வெளியே வந்தது.

ரிஷி தான் அக்குழந்தையை வாங்கி தன் ஸ்ரீயை பார்த்தான். அவள் மயக்கத்தில் இருக்க குழந்தையை கொஞ்சி விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான். அதற்குள் அவனுக்கான நேரம் முடியவும் குழந்தையை அவளருகே வைத்து, “ஸ்ரீ நான் சீக்கிரம் வந்துருவேன். நமக்கு பாப்பா பிறந்திருக்கா. நல்லா பார்த்துக்கோ” மீண்டும் ஒரு முறை அவளுக்கு முத்தமிட்டு சென்றான்.

     (ஐந்து வருடங்களுக்கு பின்)

ஜெய் பவிதாவிற்கு பவிஸ் என்ற மகனும், கிஷோர் சிவாங்கிக்கு ஷேத்ரா என்ற மகளும் இருந்தனர்.

பவிஸிற்கு மூன்று வயதாக ஷேத்ரா பிறந்து ஒரு வருடம் தான் ஆனது.

“ஷேத்ரா செல்லம்” பவிதா அவளை தூக்க, பவிஸ் கையிலிருந்த விளையாட்டு காரை தூக்கி பவிதா மீது எறிந்தான்.

மான்விழி அவனை பிடிக்க வந்தவர், “ஆத்தாடி அவ மேல போட்டுட்டானே! பவிஸ் கண்ணா பாட்டிட்ட வந்துரு. உன்னோட அம்மா சாமி ஆடப் போறா” தன் பேரனை தூக்கினார்.

ஜெய் ஆபிஸிற்கு கிளம்பி வந்தான்.

“டாட் மாம் அந்த பொண்ணை தூக்குறா” ஜெய்யிடம் கம்பிளைண்ட் செய்தான் பவிஸ்.

“இன்னுமா சிவாங்கி வரலை” ஜெய் கேட்க, “வந்துருவாப்பா. அதுவரை உம் பொண்டாட்டி தான் சமாளிச்சிட்டு இருக்கா. உம் மகனுக்கு தான் குட்டி தங்கத்தை அவன் அம்மா தூக்க கோபம் வருது” என்றார்.

“தங்கமா? பாட்டி…” இழுத்தான் பவிஸ்.

“கண்ணா..” ஸ்ரீநிதி அழைக்க, “பெரியம்மா” அவளிடம் ஓடிச் சென்று அவளிடமும் பவிதா ஷேத்ராவை கொஞ்சியதை கூறினான்.

“மாம்” புத்தகப்பையுடன் பாட்டி அறையிலிருந்து வந்தாள் நம்ம ஸ்ரீநிதி ரிஷியின் தவபுதல்வி அனாமிகா. பாட்டி அவள் பின்னே வந்தார்.

“சாப்பிடலாமா அனா?”

“ம்ம்! வாசனை சூப்பரா இருக்கு” மணத்தை ஆழ்ந்து அனாமிகா நுகர, ஸ்ரீநிதி மான்விழி கண்ணில் சிறுநீர்த்துளிகள்.

“மாம் என்ன சாப்பாடு?” தன் அம்மாவை பார்த்து, “உனக்கு டாட் நினைவு வந்துருச்சா. போ சாப்பிடாமல் தான கிளம்புவ?” கையை கட்டிக் கொண்டு கோபமாக திரும்பிக் கொண்டாள்.

சந்திரமுகன் அறையிலிருந்து வந்து தன் பேத்தியை தூக்கி, “நாளைக்கு நீயும் மாம்மும் உன்னோட டாட்டை அழைச்சிட்டு வர்றீங்களா?”

ஆமா தாத்தா.

“தாத்தா டாட்டுக்கு என்ன பிடிக்கும்? வாங்கிட்டு போகலாமா?” அனாமிகா அக்கறையுடன் கேட்டாள்.

டாட்டுக்கு உன்னையும் நிதுவையும் தான் ரொம்ப பிடிக்கும்.

“தாத்தா சாப்பிட என்ன பிடிக்கும்?” அவள் கேட்க, மான்விழி வரிசையாக அடுக்கி, இதெல்லாம் நாளை சமைத்து வைக்கிறேன். எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என்றார்.

கிஷோர் வந்தான்.

“ஷேத்ரா” அழைத்துக் கொண்டே அவன் பவிதாவிடம் நேராக செல்ல,

“அய்யோ பாட்டி! நான் டாட்டுக்கு என்ன ஸ்நாக்ஸ் பிடிக்கும்ன்னு கேட்டேன்?”

அது..அவன்..மான்விழி கலங்க, கிஷோர் அனாமிகாவை தூக்கி, உன்னோட டாட் வந்த பின் நீயே கேளேன்.

“அங்கிள் உங்க யாருக்கும் தெரியாதா?”

“அப்படியில்லைடா. அவன் மனநிலை…” கிஷோர் கண்கலங்க நிறுத்தி, “உன்னோட மாம்முக்கு பிடிச்ச எல்லாமே பிடிக்கும்” ஸ்ரீநிதியை பார்த்தான். அவள் கண்ணீருடன் திரும்பிக் கொண்டாள்.

“இன்று என்னோட பள்ளிக்கு வர்றீங்களா?” கிஷோர் கேட்க, “தாத்தா..நான் இன்று மட்டும் விடுப்பு எடுத்துக்கவா?” அனாமிகா கேட்டாள்.

“எதுக்கும்மா?” பாட்டி கேட்க, “பாக்கியம் என்னோட டாட் நாளை வந்துருவார். அவருக்கு பிடித்த எல்லாம் வாங்க ஷாப்பிங் போகணுமே!”

“நோ” ஸ்ரீநிதி அவளை தூக்கி, “நாளை நாம டாட்டை பார்க்க போகலாம். இன்று விடுப்பு எடுக்கக் கூடாது” கண்டிப்புடன் அவள் கூற, “மாம்” சிணுங்கினாள் அனாமிகா.

“அனா” ஸ்ரீநிதி சத்தம் போட, “ஹே..என்னோட டியரை மிரட்டிட்டு இருக்கிறியா?” ஜோ உள்ளே வந்தான்.

“ஜோ ஏற்பாடெல்லாம் எப்படி போகுது?”

எல்லாம் நல்லா போகுது அங்கிள். ராம் அங்கிள், தர்மா மாமா, சுகி மாமா எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்காங்க.

“ஏய்யா நள்ளூ நல்லா இருக்காளா? பாட்டி கேட்க,

“நேற்று தான அத்தை அவ புருசனோட வந்துட்டு போனா. அதுக்குள்ள உங்களுக்கு அவ நினைவா இருக்கா?” மான்விழி முறுக்கிக் கொண்டார்.

ஆம்,நளினி சுகிவர்மனுக்கு திருமணம் முடிந்து அவர்கள் தனியே இருக்கிறார்கள். தன்வி அவர்களுடனும், அமரேசன் தாத்தா வீட்டில் பனிமலர் குடும்பமும், அழகி தர்மேந்திரனுடன் புகழ் ஷாலினியும் இருக்கிறார்கள்.

தன் மானத்தை காப்பாற்ற சென்று தான் ரிஷி சிறையில் இருக்கிறான் என்று ஷாலினியும் புகழும் விலகியே இருக்கிறார்கள். அதை பார்த்த பெரியவர்கள் மனவருத்தமுடன் இருக்கிறார்கள். இந்த எண்ணம் ஷாலினிக்கு மட்டுமல்ல தன் மனைவிக்காக ரிஷியின் செயலில் புகழும் விலகி தான் இருக்கிறான்.

“ரிஷி என்று வெளியே வந்து அவன் குடும்பத்துடன் சேர்கிறானோ அன்று தான் எங்களுக்கு முதலிரவு” ஷாலினி கண்டிப்புடன் எல்லாரிடமும் கூறி விட்டாள். அதை ஆமோதித்தான் புகழமுதன்.

“ரிஷி மாமா இல்லாமல் எங்களுக்கு திருமணமே வேண்டாம்” ஜோவும் திருமணத்தை ஒத்தி வைத்து, நாளை ரிஷி வருகிறான் எனவும் தான் ஒரு வாரத்தின் முன் திருமண வேலைகளை தொடங்கினார்கள்.

“மாமா” அனாமிகா ஜோவிடம் கொஞ்சிக் கொண்டு வர, ஜோ முன் வந்து சுடிதாரில் வந்து நின்றாள் சஞ்சனா. அவள் இப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் தம்பி நிரஞ்சன் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

“அக்கா அவள தொந்தரவு பண்ணாத” நிரஞ்சன் சஞ்சனாவை முறைத்து அனாமிகா முன் வந்து புன்னகைத்தான்.

“ஆ”வென நம்ம அனா அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஜோ சிரித்துக் கொண்டு, “சஞ்சு எப்பவுமே மாற மாட்டா” அவளை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ நிரா வீட்டுக்கு வா. உன்னை வச்சிக்கிறேன்” சஞ்சனா ஜோவை தள்ளி, “உனக்கும் இருக்கு” முறைத்து விட்டு மான்விழியிடம் சென்றாள்.

“மாமா” அனாமிகா நிரஞ்சனையும் ஜோவை பார்த்து தன் அம்மா ஸ்ரீநிதியை பார்த்தாள்.

முடியாதுடி. கண்டிப்பா முடியாது. பள்ளிக்கு மட்டம் போட காரணம் தேடுறியா?

“மாம் நான் அப்பாவுக்காக ஏதாவது வாங்கித் தரணும்” அழுதாள்.

“இன்று ஒரு நாள் தானம்மா” சந்திரமுகன் கூற, “மாமா இதுவே பழக்கமாகிடும். அதெல்லாம் முடியாது. வா” அனாமிகா கையை பிடித்து சினமுடன் ஸ்ரீநிதி நகர, “நிது ஒரு நாள் தான…” அனைவரும் அனாமிகாவிற்காக பேச அவளுக்கு மேலும் கோபம் தான் வந்தது.

வெளியே நின்று இதை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீநிதியின் தந்தை பரசுராம்..

“நிதும்மா அவளோட அப்பாவுக்காக ஏதாவது வாங்கணும்ன்னு பிள்ளை ஆசைப்படுதுல்ல? இதை தடுக்குறீயேம்மா?” வக்கீல் மூளையை கையிலெடுத்தார்.

ஸ்ரீநிதி பேசாமல் அனாமிகா கையை விட, “மாம் நீங்களும் வாங்க. நாம சேர்ந்து போகலாமா?” பாப்பா கேட்டாள்.

ம்ம்! இருவரும் வெளியே கிளம்பினார்கள்.

எல்லாரும் புன்னகையுடன் செல்லும் ஸ்ரீநிதி, அனாமிகாவை பார்த்தனர்.

மறுநாளின் விடியல் நம்மை போல எல்லாருக்கும் உற்சாகமாக இருந்தது.

மான்விழி, நளினி, பனிமலர், அழகி அனைவரும் சமையல் அறையில் ரிஷிக்காக விருந்துணவை சமைத்துக் கொண்டிருந்தனர்.

தனு அங்கே வந்து, “அண்ணீயை காணோம்” கேட்டாள்.

சோபாவில் அமர்ந்திருந்த பவிதா, இத்தனை வருடங்களாக ரிஷிக்காக தான் நிது காத்திட்டு இருந்தா. அதிகாலை நான்கு மணிக்கே அவ, அனா, ஜோ, ஜெய் கிளம்பீட்டாங்க என்றாள்.

ஜோ என்னிடம் சொல்லி இருந்தால் நானும் அண்ணாவை பார்க்க போயிருப்பேன்.

திருமணத்தை வைத்துக் கொண்டு அங்கெல்லாம் நீ செல்லக் கூடாது. ரிஷி இங்க தான வருவான். உன் அண்ணனை அப்புறம் பார்த்துக்கோ..

ம்ம்!

ரிஷிக்காக எல்லாரும் காத்திருந்தனர்.

சிறைக்கு வெளியே காரில் அனாமிகா இருக்க, ஸ்ரீநிதி காரின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்.

“அக்கா  கார்ல்ல உட்காரு” ஜோ சொல்ல, “இல்லை” தலையசைத்து ரிஷியை பார்க்க ஆர்வமுடன் இருந்தாள் ஸ்ரீநிதி.

அனாமிகா தன் தாயையும் தந்தை வருகிறானா? என்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அனா நீயாவது தூங்கிட்டு இருந்திருக்கலாம்” ஜெய் கூற, “நான் என்னோட டாட்டை பார்க்கணும்” உதட்டை சுளித்தாள்.

“ரிஷி சிறையில் இருக்கிறான்னு தெரிந்தும் குழந்தை தன் தந்தையை தேடுகிறாளே! ரிஷி..நீ கொடுத்து வைத்தவன்டா. ஆனால் எங்க எல்லாரையும் மிஸ் பண்ணிட்டு இருப்பேல்ல?” மனதினுள் அவனுக்கு அவனே பேசிக் கொண்டான் ஜெய்கிரிஷ் வருத்தமுடன்.

நேரம் செல்ல செல்ல, ஸ்ரீநிதி இதயம் எகிறி துடித்தது.

சற்று நேரத்தில் கதவு திறக்கப்பட, அனைவரும் ஆவலாக பார்த்தனர். யார் யாரோ வந்து சென்றார்கள் ரிஷி வரவில்லை. ஸ்ரீநிதிக்கு கண்ணீர் வந்து விட்டது.

“ஜோ அவரை இன்னும் காணோம்” பதட்டமாக அவள் கேட்க, “மாமா வந்துருவாங்க அக்கா…” அனாமிகாவை பார்த்தான்.

“அனா அப்பாகிட்ட நல்லா பேசணும். ஓ.கேவா?” ஜோ கேட்க, “மாமா டாட் எப்ப வருவாங்க?” சோர்வுடன் குழந்தை கேட்டாள். ஆனால் தூங்க மட்டும் இல்லை. ரிஷியின் பிடிவாதம் கொஞ்சமாவது அவளுக்கும் இருக்குமே!

ஸ்ரீநிதி கண்ணீருடன் தன் மகளை பார்க்க, “மாம்” அனாமிகா சிணுங்கினாள்.

“மாமா” ஜோ அழைக்க, ரிஷி உடுத்தி இருந்த ஹூட்டி சர்ட், பேண்டுடன் மிகவும் மெலிந்து முகம் மாற இருந்தவனை ஓடிச் சென்று அழுது கொண்டே ஜோ அணைத்துக் கொண்டான்.

வாய்க்கு வாய் பேசி எல்லாரையும் பேச திணற வைக்கும் தன் தமையனை பார்த்த ஜெய் கண்கள் கலங்க, “ரிஷி..ஏன்டா?” சொல்லிக் கொண்டே அவனை கட்டிக் கொண்டான்.

இருவரும் விலகி ஸ்ரீநிதியையும் ரிஷியையும் பார்க்க, ஸ்ரீநிதி இரு கையையும் வாயில் வைத்து அழுது கொண்டே நின்றாள். ரிஷி கண்ணீருடன் அவளை பார்த்தான்.

ரிஷி கண்ணை காட்ட, ஓடிச் சென்று அவனை தழுவி, “ரொம்ப மெலிஞ்சு போயிட்டீங்க ரிஷி” அவனை இந்நிலையில் பார்க்க முடியாமல் கதறி அழுதாள்.

ரிஷி அப்பொழுதும், “ஸ்ரீ நீயில்லாமல் நான் உறங்க ரொம்ப கஷ்டப்பட்டேன்” அவன் அழுது கொண்டே ஸ்ரீநிதியை இறுக கட்டிக் கொண்டான்.

“நானும் தான் ரிஷி. நம்ம அறையில நீங்க இருப்பது போல எண்ணி தான் வாழ்ந்தேன்” அழுதாள் ஸ்ரீநிதி.

“அவளை நகர்த்தி லைட்டா வெயிட் போட்டிருக்க” ரிஷி புன்னகைக்க, “அத்த தான் ரிஷி” அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“மாமா நாளை நாம பைக் ரைடு போகணும்” ஜோ கூற, “போயிடலாமே!” புன்னகைத்தான்.

கல்யாணத்தை வச்சிட்டு ரைடா? ஸ்ரீநிதி ஜோவை செல்லமாக அடித்தாள்.

“கல்யாணமா? எனக்கு மருமகளோ, மருமகனோ இருப்பாங்கன்னு நினைச்சேன்” ரிஷி சொல்ல, “நீங்க இல்லாம நாங்க எப்படி மாமா கல்யாணம் பண்ணிப்போம்? எங்களை விடுங்க. புகழ் முதலிரவையே ஒத்தி வச்சிருக்கான்” ஜோ சொல்ல, அதிர்ந்து, “ஸ்ரீ என்ன இது?” சினமுடன் ரிஷி கேட்டான்.

“நான் சொன்னால் இருவருமே கேட்கலை ரிஷி” அவள் வருந்த, எங்க அவனை..

“வருவான் மாமா” ஜோ கூற, “ஸ்ரீ நம்ம பேபி?” தயக்கமுடன் ஸ்ரீநிதியை பார்த்தான்.

ரிஷியின் அழுகை, பாசம், சிரிப்பு, கோபம் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்த்த அவனின் செல்ல புதல்வி, டாட் தன்னை தான் கேட்கிறான் எனவும் கார்க்கதவை தள்ளிக் கொண்டு கீழிறங்கி “டாட்” கத்தினாள்.

ரிஷி உணர்வு சொல்ல முடியாதவனாக ஸ்ரீநிதியை பார்த்து, “ஸ்ரீ…தொண்டை அடைக்க நம்ம பேபியா?” கேட்டான்.

“ஆம்” தலையசைத்தாள்.

“அனாமிகா மாமா. கேஜி படிக்கிறா” ஜோ கூற, “என்னோட கையில வாங்கிய வாசம் கூட போகலைடா. அதுக்குள்ள ஸ்கூல் போறாளா?” அனாமிகாவை பார்த்தான்.

வெள்ளை நிற கவினில் இரட்டை போனிடைலில் குதித்து குதித்து, “டாட்.. டாட்..” ரிஷியை அழைத்துக் கொண்டு அவனை நோக்கி ஓடி வந்தாள்.

ரிஷி மண்டியிட்டு கண்கலங்க ஓடி வரும் தன் குட்டி ஏஞ்சலை பார்த்தான்.

டாட் அருகே வந்ததும் அவனை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் அனாமிகா.

“மை பேபி..மை பேபி…” அவள் முகத்தை கையில் ஏந்தி ஸ்ரீநிதியை பார்த்து, “ஸ்ரீ உன்னை போலவே இருக்கா” முகம் முழுவதும் முத்தமிட்டான். அவளும் அதே போல் ரிஷிக்கு முத்தமிட்டாள்.

ரிஷி பார்க்க தான் நிது போல. சேட்டை எல்லாம் உன்னை போல தான் பேச்சு முதற்கொண்டு ஜெய் கூற, அனாமிகாவை தூக்கி, “டாட் மீது கோபம் இருக்காம்மா?” கேட்டான்.

“எஸ் டாட், உங்களால தான மாம் அழுதுட்டே இருப்பாங்க. அதான் கோபம்” அவனை பார்த்து, “டாட் இனி எங்கும் போக மாட்டீங்கள?” கண்கலங்க கேட்டாள் அனாமிகா.

“இல்லடா, என்னோட குட்டி இளவரசியை விட்டு நான் எங்கும் போக மாட்டேன்” அனாமிகாவை கட்டிக் கொண்டான்.

அவனிடமிருந்து கீழே இறங்கி அவன் கையை பிடித்து காருக்கு அழைத்து சென்றாள் அனாமிகா.

“டாட், நானும் மாம்மும் உங்களுக்காக வாங்கினோம். எங்க கிப்ட் நல்லா இருக்கா?” கார்க்கதவை திறந்து அவனுக்காக வாங்கியதை காட்டினாள்.

“நல்லா இருக்கும்மா” ஸ்ரீநிதியை பார்த்தான்.

“ஸ்ரீ நம்ம வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”

ம்ம்! தலையசைத்தாள்.

ஜெய் பாப்பாவை தூக்க, பைக்கில் வந்தனர் புகழும் ஷாலினியும்.

புகழுக்கு முன்னதாக ஓடி வந்து ஷாலினி ரிஷி கையை பிடித்து கதறி அழுது விட்டாள். ரிஷி அவளது கரம் பற்றி, “ஒன்றுமில்லை ஷாலூ” சமாதானப்படுத்த, கண்ணீருடன் புகழ் ரிஷியை பார்த்தான்.

ஷாலினியை நகர்த்தி விட்டு புகழ் ரிஷியை அணைத்து அழுது தீர்த்தான்.

புகழை நகர்த்திய ரிஷி அவனை அடித்து விட்டு, “ஏன்டா பெரிய தியாகின்னு நினைப்பா?” திட்டினான்.

“உனக்கு மட்டும் இல்லையா?” புகழ் கண்ணீரை துடைத்துக் கொண்டே கேட்டான்.

“அது தியாகம் இல்லை. கடமை” ரிஷி சொல்ல, “இதுவும் கடமை தான்” புகழும் பேச,

“டாட்… அங்கிள்…” ஜெய்யிடமிருந்து அனாமிகா இருவர் கையையும் பற்றி, “சண்டையா போடுறீங்க?” கேட்டாள்.

இருவரும் ஒன்றாக “இல்லையே!” புன்னகைத்து ஒருவரை ஒருவர் பாய்ந்து அணைத்துக் கொள்ள, அனைவர் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

“வாங்க கிளம்பலாம்” வீட்டிற்கு அனைவரும் கிளம்ப, “ஸ்ரீ உனக்கு கார் ஃபியர் இருக்கே!” ரிஷி கேட்க, “எனக்கு சரியாகிடுச்சு ரிஷி” அவன் கையை கோர்த்துக் கொண்டாள்.

ஜெய் காரை எடுக்க, அவனருகே ஜோவும் பின்னே ரிஷி, ஸ்ரீநிதி, அனாமிகாவும் இருந்தனர். அனாமிகா ரிஷியின் மடியில் அமர்ந்து தூங்கி விட்டாள்.

“இந்த நேரத்துல்ல பாப்பா தூங்குவாலா ஸ்ரீ?” ரிஷி கேட்டான்.

உங்களை பார்க்கணும்ன்னு இரவு முழுவதும் இப்ப வரை அனா தூங்கலை ரிஷி..

தன் மகளை கண்கலங்க பார்த்து முத்தமிட்டு, ஸ்ரீநிதியின் தோளில் சாய்ந்தான் ரிஷி.

“ரிஷி” ஸ்ரீநிதி அழைக்க,

“பயந்துட்டேன் ஸ்ரீ. எங்கே என்னை பார்த்ததும் உனக்கு பிடிக்காமல் போயிடுமோன்னு ரொம்ப பயந்து தான் வெளிய வந்தேன்” ரிஷி அழ, மூவரும் அவனை திகைத்து பார்த்தனர்.

“நீங்க என்னோட ரிஷி. எனக்கு உங்களை பிடிக்காமல் போகுமா?” அவன் கையை இறுக பற்றி முத்தமிட்டாள்.

இல்ல ஸ்ரீ. என்னை பார்க்க உனக்கு பிடிக்கலைல்ல?

“ரிஷி” ஜெய் சத்தம் போட்டான்.

“மாமா” ஸ்ரீநிதி சத்தம் போட, அவன் இருவரையும் பார்த்தான்.

ரிஷி புன்னகைத்து, “எனக்காக பேசுவதை நீ இன்னும் விடலையா ஸ்ரீ?”

நீங்க என்னோட ரிஷி. உங்களை யாரும் ஏதும் சொல்ல முடியாது.

ரிஷி உங்க கனவு தான். ஸ்ரீநிதிக்கு அழுகை வந்து விட்டது.

என்னோட கனவு நீங்க தான் ஸ்ரீ. உன்னுடனும் நம்ம பேபியுடனும் பல வருடங்கள் வாழணும்.

“நானும் ரிஷி” அவனை கட்டிக் கொண்டாள்.

வீட்டிற்கு வரவும் ரிஷியை பார்த்து அவனை விசாரித்து அழுது புலம்பி அவன் மனதை தேற்றி, அனைவரும் அவனருகே இருந்தனர்.

தனு அவனை கட்டிக் கொண்டு நகரவேயில்லை. சிலமணி நேரத்தின் பின் தான் நகர்ந்து அவனிடம் பேசினாள். அவனை நன்றாக சாப்பிட வைத்து, பொண்ணுடன் விளையாடி, எல்லாருடனும் பேசி பொழுதை கழித்து விட்டு ரிஷி அவர்களின் அறைக்கு வந்தான்.

அறை முழுவதும் ரிஷி ஸ்ரீநிதியின் புகைப்படங்களும், அனாமிகாவின் புகைப்படமும் தான் நிரம்பி இருந்தது. ஸ்ரீநிதியின் காதல் அவனுக்கு திகட்டாத கனியாக இருக்க, ஸ்ரீநிதி தன் மகளுடன் உள்ளே வந்தாள்.

“ஸ்ரீ இன்று நான் நிம்மதியாக தூங்கப் போறேன்” ரிஷி சொல்ல, “ஷ்..பாப்பா விழிச்சிடுவா” அவனருகே படுக்கப் போட்டாள். அனாமிகா அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஸ்ரீநிதி மறுபக்கம் படுக்க, ரிஷி முகம் மாறியது.

“ரிஷி” அவன் முகத்தை ஸ்ரீநிதி பார்த்து புன்னகைத்தாள்.

அவன் திரும்பிக் கொண்டான்.

எழுந்து “ரிஷி”,  ஸ்ரீநிதி இரு கையையும் விரிக்க, அவளை பார்த்து மீண்டும் திரும்பிக் கொண்டான்.

“பாப்பாவுடன் தூங்க வேண்டாமா?” ஸ்ரீநிதி கேட்க, “ஸ்ரீ அதுக்கில்லை. எனக்கு உன்னுடன் உறங்கியே பழகிடுச்சு. அதான்” அனாமிகாவை பார்த்து அதிர்ந்தான்.

அனாமிகா விழித்து அவனை பார்த்தாள்.

“அனா…நான்…” ரிஷி திணற, “டாட் நான் பாட்டியோட உறங்கி பழகிடுச்சு. மாம்” கையை அவள் தூக்க சொல்லி காட்ட, ரிஷி தன் மகளை தூக்கி நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

டாட்..பாட்டி..

நீ தூங்கு. அப்புறம் பாட்டிக்கிட்ட உன்னை விட்டுறேன்.

ம்ம்! அவளை தூங்க வைத்து பாட்டியிடம் விட்டு ஸ்ரீநிதி அருகே வந்து படுத்தான். இருவரும் அணைத்துக் கொண்டே உறங்கினர் வெகு வருடத்தின் பின்.

ஜோஜித்- தன்வி திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

தன் மகளை உறங்க வைத்து பாட்டியிடம் விட்டு வந்த ரிஷி, தன் மனைவியை காணாது தேடினான்.

அறையை விட்டு அவன் வெளியே செல்லும் நேரம் “ரிஷி” அழைத்தாள் ஸ்ரீநிதி.

“எனக்கு உங்களை போல பையனும் வேணும்” முதலிரவன்று வந்தது போல பட்டுப்புடவையுடன் வந்தாள்.

கண்ணிமைக்க மறந்து ரிஷி அவளருகே சென்றான்.

ஸ்ரீ, யூ ஆர் ப்யூட்டிபுல்..

“ரிஷி” அவன் மார்பில் அவள் வெட்கமுடன் கோலமிட, “ஓய்..என்னால முடியாது. உன்னோட வலியை நான் நேரில் பார்த்தேன். இதுக்கு மேல என்னோட ஸ்ரீ அழக் கூடாது”.

“ரிஷி” அவள் கொஞ்சலாக அவனை அடிக்க, ப்ளட்ல்லாம் வரும் ஸ்ரீ..

அய்யோ ரிஷி! அது முதல் முறை. அதான் ப்ளட் வந்தது. இனி ஒன்றும் ஆகாது.

“இல்ல..இல்ல..குழந்தை பிறக்கும் போது உனக்கு வலிக்கும்” அவன் அறையை விட்டு வெளியே செல்ல முனைந்தான்.

ஸ்ரீநிதி கோபமாக படுக்கையில் சென்று அமர்ந்தாள். ரிஷி அவளை பார்த்து, “பயமா இருக்கு ஸ்ரீ. உனக்கு ஏதாவது ஆனால் தாங்க முடியாது”.

அவள் கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டாள்.

நமக்கு பின் நம்ம அனாவுக்காக தம்பியோ பாப்பாவோ இருந்தால் நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன்.

அப்படின்னா ஒரு கண்டிசன். நீ அழாம குழந்தை பெத்துக்கணும்.

அதெப்படி முடியும் ரிஷி?

நீ அழுதா என்னால தாங்க முடியாதே!

“போய்யா” அவள் எழ, போய்யாவா? அவளை இழுத்தான்.

“ஸ்ரீ நாம முதல் முறை இருவரும் புரிந்து ஒருவருக்கு ஒருவர் உறவாடப் போகிறோம்ல்ல?” ரிஷி கேட்க, ம்ம்! அவனை பார்த்து, “விருப்பமில்லைன்னா வேண்டாம்” என்றாள்.

அவன் புன்னகைத்து, என்னோட தாரகையை நான் ரசித்து புசித்ததில்லையே! என்றான். அவள் வெட்கமுடன் முகத்தை மூடினாள்.

“ஸ்ரீ என்னோட வாழ்க்கையில் சுடரொளியாய் மின்னும் என் தாரகை நீ தான்”   படுக்கையில் அவளை சரித்து அவளை காதல் கள்வனாக களவாடினான்.

                  (முற்றும்)