கொஞ்சும் காதல் சாரல் -26

அத்தியாயம் -26

தன்னுடைய வீட்டு காம்பவுண்டில் ஜீவாவை மிதுன்யாவுடன் கண்ட அன்பு பெரும் சீற்றத்தோடு அவர்களை நெருங்கினான். அவனது பார்வை ஜீவாவின் மீதிருக்க, பயந்து விட்டாள் மிது

எதற்காக இங்கு வந்தேன் என்பதை விளக்க நினைத்து, “அவசர படாதீங்க அண்ணா…” என ஆரம்பித்தான் ஜீவா. 

அவ்வளவுதான் அன்புவின் வேக நடை ஓட்டமாக மாறியிருந்தது. ஜீவாவை தாக்க போனான். தற்காத்து கொள்ள தயாராகத்தான் இருந்தான் ஜீவா. அதற்குள் ஜீவாவிற்கு ஏதும் ஆகி விடக்கூடாது என அவர்களுக்கு குறுக்கே வந்து விட்டாள் மிது.

அன்புவால் சுதாரிக்க முடியவில்லை, அவனுடைய கை அவளுடைய கன்னத்தில் பலமாக தாக்கிய பிறகே தளர்ந்தது

அதீத வலியில் அப்படியே மண்டியிட்டு தரையில் அமர்ந்து விட்டாள்

அன்பு திகைத்துப் போனான். பதறிப் போன ஜீவாவும் மண்டியிட்டு அமர்ந்து அவளுக்கு என்னவானது என பார்த்தான்வலி தாள முடியாமல் கண்ணீர் நிறைந்த கண்களை மூடிய படி இருந்தவளை தன்னோடு சாய்த்துக் கொண்டான் ஜீவா

அதைக் கண்ட அன்பு, “ச்சீ தள்ளி போடா!” என்றான்

அன்புவை கோவமாக ஒரு பார்வை பார்த்த ஜீவா, மிதுவின் முகத்தை கவனிக்க, அவளது கன்னம் விரைவாக வீங்க ஆரம்பித்து விட்டது

என்னங்க அப்படி கண்ணு மண்ணு தெரியாத கோவம்? உங்க அம்மாக்கு அடி பட்ருச்சு, ஹாஸ்பிடல் போக கார் எடுக்கலாம்னுதான் வந்தோம். எப்படிங்க இவளை அடிப்பீங்க நீங்க?” என கோவமாக கேட்டான்

தன்னை திட்டுபவன் மீது கோவமென்றாலும் மிதுவை அடித்து விட்டதிலும் தன் அம்மாவுக்கு அடி பட்டிருக்கிறது என்பதிலும் செய்வதறியாமல் நின்றான் அன்பு

மிதுதான் வலியை பொறுத்துக் கொண்டே, “எனக்கொன்னும் இல்லை, அத்தை சங்கரன் மாமா வீட்ல இருக்காங்க, அவங்கள ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போங்க மாமாஎன்றாள்

அன்பு வீட்டிற்குள் விரைய, கார் சாவி எடுக்கத்தான் செல்கிறான் என்பதை கணித்து, “சாவி என்கிட்ட இருக்குங்க, உள்ள போய் டைம் வேஸ்ட் பண்ணாதீங்கஎன சத்தமிட்டான் ஜீவா. கவனமாக அண்ணா என்ற அழைப்பை தவிர்த்திருந்தான்.  

ஜீவா கார் சாவியை தூக்கி போட அதனை பிடிக்காமல் கீழே விழ வைத்து, பின் அதை எடுத்துக் கொண்டு காரில் ஏறினான் அன்பு

எமர்ஜென்சில கூட எகத்தாளத்தை பாரு!” என முணு முணுத்த ஜீவா, மிதுவை எழுப்பி நிறுத்தினான்

உன்னை யாரு இடைல வர சொன்னது? எனக்கு பார்த்துக்க தெரியாதா? தண்ணி குடிக்கலாம் வா, உன் அக்கா உள்ளதானே இருக்காங்க?” எனக் கேட்டுக் கொண்டே அவளை வீட்டிற்குள் அழைத்து செல்ல பார்த்தான்

அத்தைக்கு என்னாச்சுன்னு தெரியலை, பார்க்கணும்என்றவள் வெளியே செல்ல நடந்தாள்

இந்த முகத்தோட எப்படி போவ, ஐஸ் வைக்கணும் இல்லைனா டாக்டர்கிட்ட போகணும் மிது, என்ன செய்யலாம்னு நீயே சொல்லுஎன அக்கறையாக சொல்லி அவளின் கையை பற்றினான்

அவனை உதறி விட்டவள், “நான் என்னை பார்த்துக்கிறேன், ஒழுங்கா ஊருக்கு கிளம்புறீங்க நீங்க!” என்றாள்

போறேன் மிது, போதுமா?” என இரைந்தவன் அவளது வீங்கிய கன்னத்தை பார்த்து விட்டு நிதானித்தான்.

அன்புவின் கார் சாலையில் செல்வது தெரிந்தது. அவனது அம்மாவுடன் மருத்துவமனை செல்கிறான் என்பதை புரிந்து கொண்டனர்

நான் ஒரு மாசம் இங்க இருந்திட்டு வர்றேன் ஜீவா, உடனே உங்க கூட வந்தா நமக்குள்ள இன்னும் மோசமாகும், புரிஞ்சுக்கோங்கஎன பொறுமையாக சொன்னாள் மிது

என்ன நடந்ததுன்னு எக்ஸ்பிளைன் பண்ணக்கூட விட மாட்டியா மிது?” என அவன் கேட்க, கைகளை கட்டிக் கொண்டு அங்கேயே நின்றாள். எந்த சூழலில் தான் ஆட வேண்டி வந்தது என்பதை வேகமாக சொன்னான் ஜீவா

இப்படி ஏதாவது அவன் காரணம் சொல்வான் என ஏற்கனவே அவள் நினைத்ததுதான்

எல்லாத்துக்கும் லிமிட்ஸ் இருக்குல்ல ஜீவா, உங்களை மாதிரி நானும் உங்ககிட்ட சொல்லாம யார் கூடவும் அப்டி க்ளோசா ஆடியிருந்தா எம்மேல உங்களுக்கு கோவமே வந்திருக்காதா?” எனக் கேட்டாள்.

அவன் அவ்வாறெல்லாம்  நினைத்து பார்த்தது இல்லை, இப்போது இவள் சொல்கையில் யோசித்தவன், “உன் ப்ரொஃபஷன் இதுதான்னா நான் புரிஞ்சுப்பேன் மிதுஎன்றான்

ஹ்ம்ம்நான் புரிஞ்சுக்கலைன்னு சொல்றீங்களா? சரி நீங்க நல்ல புரிதல் உள்ள ஹஸ்பண்ட்டாவே இருங்க, என்னை அப்டி வேற…” அவளுக்கு சொல்லவே பிடிக்கவில்லை, தான் சொல்ல வருவது அவனுக்கு புரிந்திருக்கும் என்பதால், “என்னை அப்படி பார்க்க கொஞ்சம் கூட கஷ்டமாவே இருக்காதுல்ல உங்களுக்கு?” என ஏளனமாக கேட்டாள்

கஷ்டமாகத்தான் இருக்கும் என ஒத்துக் கொண்டு தலையாட்டினான்

ஹப்பா இப்போ என்னை புரியுதா உங்களுக்கு?” என கோவமாக கேட்டாள்

அவன் மௌனம் காக்க, “இன்னும் ஒரு மணி நேரத்துல ஊரை விட்டு கிளம்பியிருக்கீங்க நீங்கஎன கட்டளையாக சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்

சென்னை சென்று விட முடிவெடுத்து விட்டான், ஆனால் இவளை இப்படியே விட்டு செல்ல மனமில்லை, குறைந்த பட்சம் அவள் சிறு புன்னகையோடு இவனுக்கு விடையளிக்க வேண்டுமென விரும்பினான். அன்புவும் வீட்டில் இல்லாததால் தைரியமாகவே வீட்டிற்குள் சென்றான்

அக்காவின் அறைக்கு சென்று அவள் உறங்குவதை உறுதி படுத்திக் கொண்டாள் மிது. வெளியில் துணைக்காக இருந்த வேலை செய்யும் பெண் என்னவானது எனக் கேட்டதற்கு ஒன்றுமில்லை என சொல்லி, சைகையாக அக்காவை பார்த்துக் கொள்ளும் படி கூறி விட்டு மாடிக்கு செல்ல நடந்தாள். லாவண்யா எழுந்ததும் பருக ஏதாவது கொடுக்கலாம் என நினைத்து சமையலறை சென்று விட்டாள் வேலை செய்யும் பெண்

உள்ளே வந்த ஜீவா, மிது படிகளில் ஏறுவதை கண்டு விட்டு சத்தம் செய்யாமல் அவனும் ஏறினான்

அறைக்கு வந்தவள் அங்கிருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்துக் கொண்டிருக்க, அதில் ஜீவாவின் பிம்பமும் தெரிந்தது. அதிர்ந்து திரும்பியவள், “என்ன ஜீவா செய்றீங்க? டென்ஷன் பண்ணாம போங்கஎன்றாள்

சட்டென உள்ளே நுழைய போனான், அதை புரிந்து கொண்டு கதவை சாத்தி விட்டாள் மிது

ப்ளீஸ் மிது, இப்படி கோவத்தோட என்னை போக சொன்னா நான் எப்டி போவேன்? அங்க போய் எப்படி இருப்பேன்னு யோசிஅதிக சத்தமில்லாமல், அதே சமயம் அவளுக்கு கேட்கும் படி பேசினான்

தலையில் கை வைத்துக்கொண்டவள், “படுத்தாம கிளம்புங்களேன்என்றாள்

மனசாட்சி இல்லையா மிது உனக்கு? நீ இல்லாம ஒரு வாரம் என்ன பண்ணியிருப்பேன்னு நினைக்கவே இல்லையா? எதுக்குடி இடையில வந்தஅப்படியே விட்ருக்க வேண்டியதுதானே என்னை? நானா கேட்டேன் கல்யாணம்? உன்னை பத்தி தெரிஞ்சுதானே பங்கஜ் ஸார்கிட்ட போக மாட்டேன்னு சொன்னேன்?” என அவன் கேட்க, யாரும் வந்து விடுவார்களோ என்ற பயம்தான் மிதுவுக்கு.

 “கதவை தொற மிதுஎன சற்று சத்தமாகவே சொல்லி கதவை தட்டினான் ஜீவா

இப்போது வேலை செய்யும் பெண்ணுக்கு காதில் விழுந்து விட, என்னவென பார்க்க வந்தாள். லாவண்யாவும் விழித்துக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள்

என்ன சத்தம் மேல?” என அந்த பெண்ணிடம் கேட்டாள் லாவண்யா.

என்ன சங்கதின்னே தெரியலை, முதல்ல பெரியாத்தா வெளில போனாங்க, சங்கரன் ஐய்யா வூட்ல போய் நின்னுகிட்டு பெரியாத்தா சத்தம் போடுறாங்கன்னு பெரியம்மாவும் தங்கச்சி பாப்பாவும் போனாங்க, அப்புறம் கொஞ்ச நேரத்துல தங்கச்சி பாப்பா வந்து கார் சாவி எடுத்திட்டு போனாங்க, இப்பதான் வீங்கின கன்னத்தோடு மேலே ஏறினாங்க. நீங்க இங்க இருங்க, நான் போய் பார்த்திட்டு வர்றேன்என விவரித்தாள் அந்தப் பெண்

தங்கையின் கன்னத்தில் வீக்கம் எனவும் பயந்து போன லாவண்யா அவளின் பெயரை சொல்லி அழைத்தாள்

ஜீவா சத்தம் எழுப்பியதால் கதவை திறந்து விட்ட மிது, அக்காவின் குரல் கேட்டு வேகமாக அவனை உள்ளே இழுத்து நிறுத்தினாள். கீழிருந்து பார்த்தால் மிது தங்கியிருக்கும் அறை பார்வைக்கு தெரியாது, ஆகவே லாவண்யாவுக்கு எதுவும் தெரியவில்லை

என்னக்கா?” என கேட்டுக் கொண்டே மாடியின் மேலே உள்ள முதல் படிக்கருகில் வந்து நின்றாள் மிது

என்னடி நடக்குது, என்னாச்சு உனக்கு?” என பதறினாள் லாவண்யா

பயம், குழப்பம் என மிரண்டு நின்றாள் மிது.

முதல்ல கீழ வாஎன லாவண்யா அதட்ட, கைப்பேசியை எடுத்துக் கொண்டு வருகிறேன் என அவசரமாக அறைக்கு சென்ற மிது, “நான் வர்ற வரை சைலன்ட்டா இங்கேயே இருங்கஎன ஜீவாவை எச்சரித்து விட்டு அறைக் கதவை வெளிப்பக்கமாக தாழிட்டு கீழே சென்றாள்

அக்காவை பயமுறுத்தாமல் மேலோட்டமாக விவரம் சொன்னாள் மிது. கார் சாவி எடுத்துக் கொண்டு வெளியே சென்ற போது கீழே விழுந்து எனக்கு அடி பட்டு விட்டது, நல்ல வேளையாக அன்பு மாமா  வரவும் அவரே கார் எடுத்துக் கொண்டு சென்று விட்டார் என்றாள்

விழுந்து அடிபட்ட மாதிரி இல்லியே, கை விரல் தடம் பதிஞ்சிருக்கு?” தங்கையை இரக்கமாக பார்த்துக் கொண்டே கேட்டாள் லாவண்யா

அப்படியா? அப்படி எப்படி தெரியுதுன்னு தெரியலையேஎன்றாள் மிது

வேலை செய்யும் பெண்ணைக் கொண்டு மஞ்சள் பத்து தயார் செய்ய சொன்னாள் லாவண்யா. பத்து வந்த பின் அவளே தங்கைக்கு போட்டு விட்டாள். பின் கணவனுக்கு அழைத்து அத்தையை பற்றி விசாரித்தாள்.

மாமனார் ஊரில் உள்ள கிளினிக் தான் சென்றிருந்தான் அன்பு. இரண்டு தையல் போடப் பட்டிருக்கிறது, இதோ புறப்பட்டு விட்டோம் என்றான் அன்பு. விஜயாவும் அவர்களுடன்தான் இருந்தார்

அன்பு வருவதற்குள் ஜீவாவை வெளியேற்ற வேண்டும் என்பதால் அறைக்கு செல்வதாக சொன்னாள் மிது

எனக்கு என்னவோ போல இருக்குடி, அவர் வர்ற வரை என் ரூம்லேயே இரு, இங்கேயே படுத்துக்கோஎன லாவண்யா சொல்ல, மிதுவால் மறுக்க முடியவில்லை