“ஏன் படிச்சு முடிச்சுட்டு வேலை கிடைச்சிருச்சு ன்னு சொல்லி எஸ்கேப் ஆகிருப்ப தானே.., அதனால தான் கல்யாணம் பண்ணிட்டு படின்னு உங்கப்பா அனுப்பிட்டாரு தெரியாதா”., என்றான்.
அவனை முறைத்து பார்க்கவும்., அவனோ அவளை சுற்றி சுற்றி வந்தான்.
“எதுக்கு இப்படி சுத்தி சுத்தி பார்க்கீங்க” என்று கேட்டாள்.
“இல்ல இத்தனை நாள் வீட்டிலிருந்த அப்பவும் சுடி தான் போட்ட.., ஆனா அப்ப போட்டுற சுடிக்கும்., இப்ப போட்டுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு”., என்றான்.
“ஆமா 7 வித்தியாசம் கண்டு பிடிங்க., நான் கிளம்புறேன்”.,என்று சொல்லி நகர போக., அவள் ஜடையை பிடித்து இழுத்தான்.,
“வித்தியாசம் கண்டுபிடிச்சிட்டேன்”., என்றான்.
“வீட்டில் இருக்கும்போது ரொம்ப நார்மலா இருந்த.., காலேஜ் போகும் போது கரெக்டா டிசிப்லின் ஸ்டூடண்ட் மாதிரி கிளம்பி போற., அப்புறம் எந்த குறையும் சொல்ல முடியாது.., ஏன் ஜடையை ஸ்கூல் பிள்ளை மாதிரி இப்படி பின்னல் போட்டுறுக்க.., பாவம் போல இருக்க., என்றான்.,
“நான் என்ன இரட்டை பின்னலா போட்டுருக்கேன்., போதும் போதும் இப்படி கிளம்பி போனா போதும்”., என்றவள்.,
அவளிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தவனிடம் பேசிக்கொண்டே அவசரமாக பேகை எடுத்து அறையை விட்டு வெளியே வந்தவளை மீண்டும் கையை பிடித்து நிறுத்தினான்.
“கைல கேஷ் இருக்கா” என்றான்.,
” இருக்கு., எப்பவுமே கைல தவுசண்ட் இருந்துட்டே இருக்கும்.., அது அப்படியே தான் இருக்கு., பேக்குல எப்பவும் இருக்கும்” என்றாள்.,
“உங்க அப்பா ஹாஸ்டலில் இருக்கும் போது கொடுத்ததா இது” என்றான்.
“ஆமா., அது தவற வேணும் னா., ஏடிஎம்மில் எடுத்துக்கலாம்., நான் எடுக்க மாட்டேன் தேவைப்பட்டால் எடுத்துப்பேன்., காலேஜ் உள்ளே பேங்க் ல தான் அக்கவுண்ட் இருக்கு”., என்றாள்.
” உனக்கு செலவு பண்ண மாட்டியா”., என்றான்.,
“காலேஜ்ல என்ன செலவு பண்ண வேண்டியது இருக்கு., என்றாள்.
“சரி ரொம்ப நல்லது., நீ கிளம்பு.., சின்ன புள்ளயாவே இரு.., ஓடு ஓடு கிளம்பு கிளம்பு”., என்று மிரட்டவும்.,
” நீங்க என்ன ஒழுங்கா பேர் சொல்லிக் கூப்பிடணும்”., என்றாள்.
“ஏன்”., என்றான்.
” நானும் உங்களுக்கு நிக் நேம் வைப்பேன்”.,என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து கண்ணை சுருக்கி கன்னத்தில் விரலை வைத்து தட்டிக்கொண்டே சொன்னவள்., உங்களுக்கு பேரு லைசன்ஸ் பார்ட்டி ன்னு வைக்கலாம்” என்று சொல்லவும்.,
அவனுக்கு சிரிப்பு தான் வந்தது., “என்னைய பாத்தா எப்படி தெரியுது உனக்கு” என்றான்.
“உங்களுக்கு அந்த நேம் தான்” என்றாள்.
“ஆமா பூனைக்குட்டி., நீ சொன்னாலும் சொல்லாட்டியும்., நான் கையெழுத்து போடலை னா., லைசென்ஸ் கிடைக்காது தெரிஞ்சுக்கோ., நீ என்னைய நாலு பேரு முன்னாடி வச்சு இதுபோல கூப்பிடாத வரை பிரச்சனை இல்ல.., போ போ போ கிளம்பு கிளம்பு”.,என்றான்.
“போயா.., லைசென்ஸ் பார்ட்டி” என்று சொல்ல.,
“போயா., வா” என்றான்.
“ஆமா அப்படித்தான் கூப்பிடுவேன்”., என்றவளிடம்.,
“அடுத்தவங்க முன்னாடி கூப்பிடாதே., ரூம்ல வைத்து எப்படின்னாலும் கூப்பிட்டுக்கோ”.., என்று சொல்லிவிட்டு அவள் பின்னேயே அவனும் கீழே வந்தான்.
அதே நேரத்தில் அவளுக்கு ஆட்டோ வந்து காத்திருக்கவும் சரியாக இருந்தது.
மதிய உணவிற்கான பையை எடுத்துக்கொண்டு அத்தை மாமாவிடம் சொல்லி கொண்டவள்., அவனிடம் கை ஆட்டி பய் என்று சொல்லி விடை பெற்று கொண்டு ஆட்டோவில் ஏறினாள்.
கல்லூரி சென்று வரத் தொடங்கவும்., அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.,
கல்லூரிக்கு சென்று வருபவள் வந்தவுடன் பேக்ஐ எல்லாம் போட்டுவிட்டு மதிய உணவு பாத்திரத்தை எடுத்து சுத்தம் செய்து வைத்துவிட்டு.., அவளும் அவளை சுத்தம் செய்து கொண்டு கீழே வருபவள் இரவு உணவிற்காக நந்தனின் அம்மாவோடு சேர்ந்து ஏதாவது உதவி செய்து கொண்டிருப்பாள்.,
அப்போது தான் ஒருநாள் “ஏதோ கொஞ்சம் கொஞ்சம் சமைப்பேன் அத்தை., அன்னைக்கு சும்மா தான் சமைக்க தெரியாது ன்னு சொன்னேன்”., என்று சொல்லவும்.
அதன் பிறகு மாலை நேரம் சற்று நந்தனின் அம்மாவோடு உதவி செய்வது அவளது வழக்கமாக இருந்தது., காலையில் முடிந்தளவு ஏதாவது செய்து கொடுத்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பி விடுவாள்.,
வீட்டினரோடு ஒத்துப் போவதில் அவளுக்கு எந்தவித வேறுபாடும் தெரியவில்லை., வீட்டில் உள்ளவர்களுக்கும் அவளது பழக்க வழக்கத்தில் இருந்து நடவடிக்கை வரை அனைத்தும் புரிந்து நடந்து கொள்ளும் படியே நடந்து கொண்டாள்., அது போல மற்றவர்களும் நடந்துகொண்டார்கள்.
ஒரு வாரம் இப்படியே சென்று விட அன்றுதான் முதல் முதலாக வண்டியில் செல்வதற்காக வண்டியை எடுத்தாள்.
” உண்மையிலேயே வண்டி ஓட்டி தானே லைசென்ஸ் வாங்கின., இல்ல உங்க அப்பா ரெக்கமன்ட்டேஷன் பண்ணி வாங்கினாரா”., என்றான்.
“தேவை இல்லாம பேசக் கூடாது., அதெல்லாம் வண்டி ஓட்டி தான் வாங்கினேன்”., என்றாள்.
“எட்டு போட்டீயா”., என்றான்.
“எட்டு போட்டாச்சு”., என்றாள்.
“இதுக்காகவே ஒரு நாள் நான் ஆபீஸ்ல கூட்டிட்டு 8 போட விடுறேன்”., என்று சொல்லவும்.
“ஆபீஸ் புத்தி வீட்டில வந்தும் போகுதா பாரு.., லைசென்ஸ் பார்ட்டி”., என்று திட்டிவிட்டு
“அத்தை உங்க புள்ள ஆபீஸ் நினைப்புல தான் வீட்டில சுத்துறாரு., என்னன்னு கேளுங்க”., என்று சொல்லவும்.
“ஏன்டா உனக்கு சும்மாவே இருக்க முடியாதா., எப்ப பாத்தாலும் வம்பு பண்ணிட்டே இருக்க”., என்று தேவகி அவனை சத்தம் போடும் அளவிற்கு அவனைப் பற்றி அவரிடம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்…
இரண்டு நாட்கள் நந்தனின் அப்பா அவள் பின்னே சென்று அவள் செல்லும் பாதையை பார்த்துக் கொண்டார்.
அவள் வண்டி ஓட்டுவது நன்றாக ஓட்டவும்., அதன் பிறகு அவளை சென்று கொண்டாள்.
நாட்கள் அது தன் போல வேகமாக செல்ல தொடங்கியிருந்தது.,
கல்லூரி பாடங்களும் கடைசி வருட இறுதி செமஸ்டர் என்பதால் பாடங்கள் போக கல்லூரியின் பிராஜக்ட் என்று., அது ஒரு பக்கம் வேலையாக இருந்தது.,
இதற்கிடையில் கல்யாண நேரத்தில் கொஞ்சம் எழுதாமல் பாக்கி வைத்தது இருந்தது.,
அன்று வந்திருந்த பேராசிரியர் நினைவுபடுத்த அவரிடம் ஒரு வாரம் நேரம் கேட்டுக்கொண்டு நோட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்., வந்தவள்..
“மாமா உங்க கேன்ட் ரைட்டிங் எப்படி இருக்கும்”., என்றாள்.
“பகல்ல உங்களுக்கு எப்படி மாமா நேரம் போகுது”., என்றாள்.
“என்னத்த நியூஸ் பார்ப்பேன்., அது கொஞ்ச நேரம் தான்., அதுக்கு அப்புறம் உங்கத்த சீரியல் பார்க்க ஆரம்பித்தா., அவ கூட வந்து நானும் சீரியல் தான் பாத்துட்டு இருக்கேன்.., எப்படியோ போகுது ரிட்டயர்மென்ட் வாழ்க்கை”.., என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தார்.
“மாமா எனக்கு ஒரு ஹெல்ப்”., என்று போய் நின்றாள்.
“என்னம்மா”., என்றவுடன்
அலுவலகம் விட்டு வந்த நந்தனோ., ‘தேவையில்லாத வேலையா., கேள்வி கேட்டுட்டு இருக்கிறாளா’ என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்…
“மாமா இதுல ஏழு பேஜ் ரெக்கார்ட் மட்டும் எழுதலை., கொஞ்சம் எழுதி கொடுக்குறீங்களா”என்று கேட்டாள்.
“நான் எழுதினா தெரிஞ்சிறாதா மா” என்றார்.,
“அதெல்லாம் ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க., மாமா. அவங்களுக்கு எழுதி இருக்கணும்”., என்றாள்.
“இதுதான் என் கேன்ட் ரைட்டிங்” என்று சொல்லி அவர் ஒரு பேப்பரில் எழுதி பார்க்கவும்..,
“கண்டுக்க மாட்டாங்க., மாமா., நீங்க எழுதுங்க” என்று கொடுத்தாள்.
“அவரோ சரிமா வச்சிட்டு போ.., எத்தனை நாள்ல வேணும்”., என்றார்.
“அது டைம் இருக்கு மாமா., எழுதலாம்” என்று சொல்ல.,
நந்தன் அவன் தந்தையை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்., “நீ ஏன்டா இப்படி முறைக்கிற”., என்றார்.,
“அப்பா இதெல்லாம் அநியாயம் சொல்லிட்டேன் பாத்துக்கோங்க., நான் படிக்கும்போது ஒரு சின்ன ஒர்க் கேட்டா எவ்வளவு அட்வைஸ் கொடுப்பீங்க., உன் வேலையை நீ தான் பாக்கணும்., என்ன நினைச்சுகிட்டு இருக்க அப்படி ன்னு எவ்வளவு சத்தம் போடுவீங்க.,
என்னைய விடுங்க ஸ்வேதா ஒரே ஒரு படம் தான் அவரது கேட்டா பிசிக்ஸ்ல அதுக்கு என்ன சொன்னிங்க.,
ஆனால் நீங்க இப்போ அவளுக்கு எழுதிக் கொடுக்கிறேன் சொல்லி., நோட்டை வாங்கி வச்சிட்டு எத்தனை நாள்ல வேணும்னு கேக்குறீங்க.., இதெல்லாம் நியாயமே இல்லை”., என்று சொல்லவும்.
“போடா போடா போய் வேலையை பாரு”., என்று சொல்லி விட்டு “நீ வேற வேலையைப் பாரு மா., நான் எழுதி தர்றேன்., அவன் கெடக்கான் இப்போ மத்த வேலையை பாரு”., என்று சொல்லவும்.
சந்தோஷத்தோடு குதித்துக் கொண்டு ஓடினாள்., அவனோ ஏய் நில்லு என்று சொல்லவும்., நந்தனின் அம்மாவிற்கு பின்னால் சென்று நின்று கொண்டாள்..
நந்தன் அம்மாவோ… “போடா எப்ப பாரு வம்பு பண்ணிட்டு”., என்றபடி நிவேதா வை தன்னோடு பிடித்து கொண்டார்.
நந்தனின் அப்பா சொன்னது போல மூன்று நாள்களுக்குள் எழுதிக் கொடுத்தார்., அதில் ஒரு படம் மட்டும் அவரால் வர முடியவில்லை என்று சொல்ல.,
அன்று அலுவலகம் முடிந்து வந்த நந்தனை பிடித்து வைத்து படத்தை வரைய வைத்தாள்., அவனோ “நீ படித்து டிகிரி வாங்க போறியா., இல்ல நானும் எங்க அப்பாவும் வாங்க போறோமா., எங்களை போட்டு இந்தப் பாடு படுத்துற” என்று கேட்டுக்கொண்டே இருந்தான்.
ஆனாலும் மிரட்டி வரைந்து வாங்கினாள்., மறுநாள் காலை சந்தோஷமாகவே கல்லூரிக்கு கிளம்பி சென்றாள்.
கல்லூரி எப்போதும் போல அவளது தோழிகளோடு சந்தோசமாகக் கழிந்து கொண்டிருந்தது.,
அன்று நல்ல பிள்ளையாக பேராசிரியரிடம் சென்று கையெழுத்து வாங்கிவிட்டு வரவும்., தோழிகள் தான் “எப்படி மூன்று நாளில் எழுதின.., நீ ஏற்கனவே ஸ்லோவா தான் எழுதுவ., எப்படி எழுதின”., என்று கேட்டனர்.