அன்றிரவு தூங்கும் போது, “ண்ணா.. எனக்கு வெளியே போகணும், ரொம்ப நாள் ஆச்சு நாம வெளியே போய்..” சின்னு  கேட்க, விஷ்ணுவிற்கும் புரிந்தது

ஓகேடா.. இந்த வீக் எண்ட் போலாம், உனக்கு எங்க போகணும்..?”  விஷ்ணு கேட்டான்

நம்ம ஏரியால இருக்குற *** ஹோட்டல் நைட் கிளப்க்கு..”

நைட் கிளப்க்கு.. சின்னு என்ன இது..?”

ண்ணா.. அங்க *** இவரோட  ஸ்டேண்ட் அப் காமெடி இருக்கு, எனக்கு நேர்ல போகணும், முடியாது சொல்லாத..”

அந்த அரைவேக்காடு உன்கிட்ட பேசினாளா..?”  போன் எடுத்து பார்த்தவன், உடனே அவளுக்கு அழைத்துவிட்டான்

ஓய் சின்னு மாமா என்ன இந்த நேரத்துல..”  மகா போன் எடுத்து கேட்க

உன்னை நேர்ல வந்தேன் அவ்வளுதான்..” என்றான் விஷ்ணு பல்லை கடித்து


ஐயே இது பாய்லர்.. ஆமா ஏன் கொதிக்குது..” மகா சத்தமாக தனக்குள் கேட்டு கொள்ள, விஷ்ணு இங்கு  திரும்பி தம்பியை முறைத்தான்

ண்ணா.. மகாவை எதுவும் சொல்லாத, நான் கேட்டதுனால தான் சொன்னா, இது என்னோட விஷ்..” சின்னு எட்டி அவன் கையில் இருந்த மொபைலை பிடிங்கி

மகா நான் காலையிலே பண்றேன்..” என்று வைத்துவிட்டான்

சின்னு அது பாஷாடா, ஒரு நேரத்துக்கு மேல அங்க முடியாதுடா..”

ண்ணா.. நாம அந்த புளோர் போக வேண்டாம், இது மட்டும் முடிச்சிட்டு கிளம்பிடலாம்..” கெஞ்ச, விஷ்ணுவிற்கு ஏனோ மறுக்க முடியவில்லை. அவன் விருப்பபட்டு கேட்பது அரிது என்பதால் அந்த வீக் எண்ட் புக் செய்தான்

ண்ணா.. மகாக்கும் சேர்த்து புக் பண்ணு ப்ளீஸ்..”  என, அன்றிரவு டின்னர்க்கும் சேர்த்து புக் செய்தான்.

ஈஷ்வரிடம் சொல்ல, “போலாம், ஆனா மகா வேண்டாம்..” அண்ணனாக மறுத்தான்

மாமா ப்ளீஸ், எனக்காக..”  சின்னு கேட்க, அவனாலும் மறுக்க முடியவில்லை. இப்போதெல்லாம் சின்னு மிகவும் மெலிவது வேறு கவலைய கொடுத்திருக்க, விஷ்ணு, ஈஷ்வர் இருவரும் அமைதியாகி போயினர்

பிளான் செய்தது போல அன்றிரவு நால்வரும் ஹோட்டல் வந்து சேர்ந்தனர். லாபியில் கார் கீ கொடுத்து, சின்னு வீல் சேரில் வர, மகா தள்ளி கொண்டு அவனுடன் பேசியபடி நடந்தாள்

ஈஷ்வர் அமைதியாக வர, “என்ன பல்லவியை மிஸ் பண்றியா..?” விஷ்ணு புரிந்து கேட்டான்

எப்படி மிஸ் பண்ணாம இருப்பேன் விஷ்ணு, இப்போ அவ என் வைப், நாம மட்டும் இப்படி பேமிலியா வரும் போது அவ அங்க தனியா..”   திகம்பரிய நினைத்து வாடி தான் போனான் திகம்பரன்

விடு, கொஞ்ச நாள்..”  விஷ்ணு சமாதானம் செய்ய

இங்கு மகா, “எப்படி சின்னு என்னையும் உங்களோட கூட்டி வர ஒத்துக்கிட்டாங்க..?” மெல்ல  கேட்டாள்

எனக்காக கேட்டேன்.. இந்த வீல் சேர் காரனுக்காக ஒத்துக்கிட்டாங்க போல..”

சின்னு.. என்ன ஆச்சு உனக்கு, இப்போ எல்லாம் அடிக்கடி இப்படி பேசுற, நீ என் சின்னுவே இல்லை, ஏதோ என்னை விட அஞ்சாறு வருஷம் சின்ன பையனா போயிட்டன்னு பார்க்கிறேன் இல்லை உன்னையே கல்யாணம் செஞ்சு உன்னை கொடுமை படுத்துயிருப்பேன் தப்பிச்சுட்ட..”

இப்போ மட்டும் என்ன, டெண்டுல்கர் போல நாமும் கல்யாணம் செஞ்சுக்கலாம்..”  மகா  சொல்ல, சின்னு வாய் விட்டு சிரித்தான்

சின்னு நான் ரொம்ப சீரியஸா தான் சொல்றேன், போற போக்கை பார்த்தா உங்க அண்ணனுக்கு நான்தான் வாழ்க்கை கொடுக்கிற நிலைமை வந்துடும், அதுக்கு முன்னாடியே நாம மேரேஜ் முடிச்சுக்கலாம் என்ன சொல்ற..?”

மகா.. நீ என் அண்ணியா வந்தா எப்படி இருக்கும், ஹாஹா.. வீட்டுக்குள்ளே லைவா நான் டாம் அண்ட் ஜெரி பார்ப்பேன்.. ஹாஹா..” மீண்டும் நினைத்து சிரிக்க, மகா முகத்திலும் சிரிப்பு தான்

அப்போ இந்த மகா உனக்கு வேண்டாம்..”

ம்ப்ச்.. எனக்கு என்ன தலையெழுத்து இந்த ஆண்ட்டியை கல்யாணம் செஞ்சுக்க..”  சின்னு கிண்டலாக சொல்ல

ஏதே ஆன்ட்டியா.. இதுக்கே உனக்கு அட்டு பிகர் தான் கிடைக்கும் பாரு.. அப்போ தெரியும் இந்த  மகா அருமை..”  அவள் பொங்கியெழுந்து வெட்டினாள்

சின்னு சிரித்து கொண்டே வர, மகா முகத்தில் ஒரு நிறைவு. விஷ்ணு, ஈஷ்வர் இருவரும் சின்னு சிரிப்பை பார்த்து தாங்களும் மலர்ந்தனர். அதே நிறைவுடன் உணவை முடித்தவர்கள், ஸ்டேண்ட் அப் காமெடி பார்த்து கீழே வந்தனர்

நடு இரவு ஆகிவிட்டிருக்க, துர்கா பல முறை போன் செய்துவிட்டார். “டேய் நீங்க மட்டும்ன்னா நான் கவலையே படமாட்டேன், மகா இருக்கா, அண்ணா, அண்ணிக்கு வேற தெரியாது, சீக்கிரம் வந்து சேருங்க..”ஈஷ்வர்க்கு போன் செய்து பேச

இதோ வந்துட்டோம்த்தை..” ஈஷ்வர் கார் எடுத்து வர சொல்ல செல்ல, மகா  சின்னுவுடன் பேசி கொண்டே மெதுவாக வந்தாள்

சின்னுவிற்கு அவள் பேசுவது பாதி கேட்டும் கேட்காமலும் இருந்தது. என்னமோ மிகவும் அசவுகரியமாக உணர்ந்தான். வேர்க்க வேறு செய்ய, கண்கள் எங்கேயோ இழுத்து

அப்போது பார்த்து, “டேய் இங்க பார்றா இவனுக்கு எல்லாம் ஜோடி இருக்கு..”  மிகவும் தள்ளாட்டத்துடன் வந்த  பட்டாளம் மகா, சின்னு பார்த்து நக்கலடிக்க, உடன் இருந்தவர்கள் ஜோராக சிரித்தனர். பிரசாத்தும் அடக்கம். சொன்னதும் பிரசாத் தான்

விஷ்ணுவின் மாமா மகள் இவள் என்ற ஒன்றே அவனுக்கு போதுமானது அவளை சீண்டகண்களில் வன்மத்துடன் மகாவை பார்த்து நின்றான்.  

டேய் இது நம்ம காலேஜ்  பொண்ணுடா..” ஒருவன் கண்டுகொண்டு சொல்ல

அட ஆமாம்.. ஏன்மா பொண்ணு உனக்கு எங்களை பார்த்தா ஆளா தெரியலையா..? இவன் கூட  போய் சுத்திட்டு இருக்க.. இவனால் என்ன பண்ண முடியும்ம்ம்..” ராகமாய் இழுத்து சிரிக்க, அவர்கள் சிரிப்பு சத்தத்தில் ஹோட்டல் முகப்பில் நின்ற விஷ்ணு திரும்பி பார்த்தான்

ஈஷ்வர் காரை எடுத்து வர சொல்லி கேட்டு கொண்டிருக்க, விஷ்ணு கால்கள் வேகத்துடன் அங்கு வந்தது.  “அடடே விஷ்ணு சார் கூட இங்க தான் இருக்காரா..?  என்னடா இது ரெண்டு பேருக்கு ஒரு..” பிரசாத் பார்வை மகாவை தொட, புரிந்து கொண்ட விஷ்ணுவின் அத்தனை நரம்புகளும் வெடித்தது

அவன் முடிக்க வாய் இல்லாமல் விஷ்ணுவின் கை அவன் வாயை உடைத்தது. ரத்தம் அவன் சட்டையை நினைக்க, உடன் இருந்தவர்கள் ஏய்.. என்று விஷ்ணு மேல் பாய்ந்தனர்

சத்தத்தை வைத்து  ஈஷ்வர் ஏதோ பிரச்சனை என்று வந்தவன், விஷ்ணு மேல் எல்லோரும் ஏறி கொண்டு வரவும்  நொடியும் யோசிக்காமல்  பாய்ந்துவிட்டான். இருவரும் ஆளுக்கொரு பக்கம் அவர்களை வெளுத்து கொண்டிருக்க, ஹோட்டல் ஆட்கள் உள்ளே வந்து தடுக்க முயன்றனர்

தகவல் சென்று போலீசும் வந்துவிட்டது. சின்னுவிற்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. அவன் நினைவே இங்கு இல்லை போல இருந்தான்மகாவிற்கு அடுத்து என்ன என்று  கவலையாக இருந்தாலும் பிராசத்திற்கு விழுந்த அடி உண்மையில் மகிழ்ச்சி தான்

மகா போ..” போலீஸ் சைரனில் விஷ்ணு, ஈஷ்வர் இருவரும் கத்த

மகாவும, “சின்னு நாம போலாம், நான் வந்தது வேற  அப்பாக்கு தெரியாது, நம்ம கார் அங்கு இருக்குபோயிடலாம்..” என்று பக்க வாட்டு கதவு வழியே வெளியே வந்துவிட, பார்த்து கொண்ட ஈஷ்வர், விஷ்ணுவிற்கு நிம்மதியானது

போலீசும் இவர்களை பார்த்தாலும் விட்டுவிட்டனர். பார்க்கிங்கில் இருந்த  ஆட்கள் உதவி செய்ய, சின்னு, மகா இருவரும் காருக்குள் வந்து லாக் செய்து கொண்டனர். “அத்தைக்கு சொல்லிடலாம்..”  மகா துர்காவிற்கு அழைத்து சொல்ல, சின்னு கண் மூடி சீட்டில் சாய்ந்தான்.  

தண்ணீர் குடி சின்னு..”   மகா போன் வைத்தவள் அவன் முகம் பார்த்து எடுத்து கொடுத்தாள். அவன் மறுக்காமல் வாங்கி குடித்தவன், தண்ணீர் முழுங்கும் போது  அப்படியே பாட்டிலோடு சரிந்தான்.  

சின்னு.. சின்னு..”   மூடிய காருக்குள் மகா அலறிவிட்டவள், அவனை பிடித்து சீட்டில் சாய்த்து வைக்க முடியவில்லை. கீழே விழுந்துவிட்டான். மருத்துவ மாணவி என்ற எண்ணமே இல்லை அவளுக்கு, அழுது கொண்டே காரை திறந்து உள்ளே ஓடினாள்

ண்ணா..ண்ணா..”  ஈஷ்வரை கூப்பிட்டு  கொண்டே வர, ஈஷ்வர், விஷ்ணு இருவரும் அடித்து பிடித்து அவளிடம் வந்தனர். போலீசும் என்னவோ ஏதொன்று வர, மகா வாய் திறந்து சொல்ல முடியாமல் அவளின் பக்கத்தில் நின்ற விஷ்ணு  பிடித்து காருக்கு ஓடினாள். இப்போது ஈஷ்வர், விஷ்ணு இருவருக்கும் புரிந்துவிட்டது.

காரை திறக்க சின்னு கீழே விழுந்திருந்தான். “சின்னு..” விஷ்ணு அவனை தூக்கி சீட்டில் உட்கார வைத்து முதலுதவி செய்ய, ம்ஹூம்.. முழிப்பே இல்லை. 

“ஹாஸ்பிடல் போலாம்..” ஈஷ்வர் காரை எடுக்க, 

“போலீஸ் நீங்க போக கூடாது, நாங்க பார்த்துகிறோம்..” என்றனர். ஈஷ்வர்  அவரை தள்ளிவிட்டு காரை எடுத்து கொண்டு பறந்துவிட்டனர். அந்நேரத்தில் ரோடும் காலியாக இருக்க, அவர்கள் ஏரியாவிலே இருந்த துர்கா ஹாஸ்பிடல் தான் சென்றனர். 

மகா போனில் சொல்லியிருக்க, துர்கா அடித்து பிடித்து ஹாஸ்பிடல் வந்துவிட்டார். போலீசும் இவர்கள் பின்னால் வந்துவிட்டனர். துர்கா காரில் வரும் போதே சக்கரவர்த்திக்கு அழைக்க, போன் ஸ்விட்ச் ஆப். 

உடனே நரசிம்மனுக்கு அழைத்து சொல்லியிருக்க, அவரும் கங்காவுடன்  வந்திருந்தார். போலீஸ் அவரை பார்த்து தயங்கி நிற்க, அப்போது அங்கு வந்த டிஸ்பி நரசிம்மன் மேல் கொண்ட பகையால் என்னவென்று கூட விசாரிக்காமல் இருவர் மீதும் FIR பைல் செய்து அர்ரெஸ்ட் செய்தே தீருவேன் என்று நின்றார். 

நரசிம்மனுக்கு இருவர் மீதும் தவறு இருக்காது என்ற நம்பிக்கை இருந்த போதும், விஷ்ணு, ஈஷ்வர் இருவரும் அங்கிருந்து நகர்வதாய் இல்லை. 

“சின்னுக்கு என்னன்னு பார்த்துட்டு தான் வருவோம்..”  அசையாமல் நின்றனர். இருவரையும் ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை.   விடியற்காலை போல சின்னுவிற்கு முழிப்பு வர, அதன் பிறகே ஸ்டேஷன் சென்றனர். 

சக்கரவர்த்தி ஒரு முக்கியமான கேசில் துப்பு துலக்கி கொண்டிருந்தவர் அதை முடித்து போனை ஆன் செய்ய, விஷயம் தெரிந்தது. அவர் இங்கு வருவதற்குள் நரசிம்மனே ஹோட்டல் சிசிடிவி வைத்து இருவர் மேல் தவறு இல்லை என்று நிரூபித்து ஜாமின் எடுத்தவர், கையோடு அந்த டிஸ்பி மேலும் வழக்கு தொடர்ந்தார். 

ஈஷ்வரை போலீஸ் ஆக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பவர் ஆயிற்றே. மகன் மேல் FIR எப்படி. 

விஷ்ணு, ஈஷ்வர் சென்றபடியே ஹாஸ்பிடல் வந்தனர். அதற்குள் இங்கு சின்னுவிற்கு என்ன பிரச்சனை என்று கண்டுகொண்டனர். இதயத்தில் அடைப்பு.

ஆரம்பித்தேவிட்டது விஷ்ணுவின் கருப்பு நாட்கள்.