“இப்போ பார்க்க முடியாது காவ்யா.. நானே சொல்றேன், அப்போ வீட்டுக்கு வரலாம் சரியா..?” மகா போனில் பேசியபடி வீட்டிற்குள் வந்தாள்.
“சரிங்கக்கா..” அந்த பக்கம் காவ்யா ஏமாற்றமாக சொன்னாள்.
“உடனே அப்செட் ஆக கூடாது காவ்யா, இன்னும் உன் விஷயம் வீட்டுக்கு தெரியாது இல்லை, நீ என்கிட்ட பேசியே மூணு வாரம் தானே முடிஞ்சிருக்கு, நான் முதல்ல இவர்கிட்ட பேசிடுறேன், அப்பறம் வீட்ல பேசிடலாம்..” மகா சமாதானமாக சொன்னாள்.
“புரியுதுக்கா.. ஆனா வீட்ல என்னை ஏத்துப்பாங்களான்னு பயமா இருக்கு..” காவ்யா தவிப்புடன் சொன்னாள்.
“நம்பிக்கை வைடா.. வாய்ப்பிருக்கு.. நான் பேசிட்டு சொல்றேன்..” மகா வைத்து விட, ருக்குஅவள்கையில்பூஸ்ட்டைவைத்தார்.
“தேங்க்ஸ்க்கா..” மறுக்காமல்குடிக்க,
“ஏன்பாப்பா.. பேசாமஇந்தநைட்டியூட்டியைமாத்திக்கலாம்இல்லை.. எத்தனைநாளைக்குஇப்படி..?” கேட்டார்.