சக்ரவர்த்தி உடனே  கிளம்பியவர், முதல் வேலையாக அவர்கள் இரு வீட்டிற்கும் பாதுகாப்பை பலபடுத்தினார். அடுத்து சிம்மிடமும் பர்சனலாக, அவனுடைய இடங்களுக்கு ரைட் நடக்க ஏற்பாடு செய்தவர்ஈஷ்வர் சொன்ன இடத்தை விட்டு தள்ளி நின்றார்

அவர்களின் டீம் ஆட்கள் சிக்கனலும் பக்கத்திலே காட்ட, பார்த்து கொண்டவருக்கு தனக்கு தான் தெரியவில்லை என்று தெரிந்தது. டீம் ஹெட் என்கிட்டேயே சொல்லலை பாரு இவன்.. என்று ஈஷ்வரை நினைத்து பல்லை கடித்தார் மனிதர்

சுற்றிலும் காம்பவுண்ட் இருக்க, வெளியே *** இண்டஸ்ட்ரி  என்று போர்ட் வைக்க பட்டிருந்தது. வாட்ச் மேன்கள் கேட்டிற்கு வெளியே கண்காணித்து கொண்டிருக்க, உள்ளே ஆங்காங்கு லைட் ஒளிர்ந்து கொண்டிருந்தது

சக்கரவர்த்தி தன் காரை அதன் பின் பக்கம் நிறுத்தி இறங்கினார். சுற்றிலும் இருட்டு. பெரிய காம்பவுண்ட் உள்ளே நடப்பதை மறைத்திருக்க, சிசிடிவி சுற்றி வந்தது. சக்கரவர்த்தி கவனித்து அதன் எல்லைக்குள் வராமல் தள்ளி நின்று கொண்டார்

அவரின் ரகசிய போனை எடுக்க, டார்ச் லைட் அடிக்கும் போது உள்ள வாங்க.. என்று மெசேஜ் நொடியில் வந்தது. இவர் திரும்ப மெசேஜ் அனுப்ப, சென்று சேரவில்லை. சுவிட்ச் ஆப் செய்திருக்கலாம்

காருக்குள் அமர்ந்து கொண்டவருக்கு நேரம் ஆக ஆக பதட்டம் கூடியது. நிலா நடுவானில் இருந்து  கிழிறங்க ஆரம்பித்தது. இன்னும் சில மணி நேரங்களில் விடிந்துவிடும். இன்னும் அவருக்கான சமிக்சை வரவில்லை.

“என்ன தான் செஞ்சிட்டு இருக்காங்க..?”  உள்ளேயே பார்த்து கொண்டிருக்க, அங்கு ஈஷ்வர் கண்களோ  கவனமாக சுற்று புறத்தை ஆராய்ந்து கொண்டிருக்க, கைகளோ மெஷினை இயக்கி கொண்டிருந்தது

மெயின் கேட் திறந்து மூட, ஒரு கார் வேகமாக வந்து நின்றது.  அதில் இருந்து இறங்கினான் தயாளன். அவனுடன் பாதுகாப்பிற்காக இரண்டு பாடி கார்ட்ஸ் இருக்க, கம்பனிக்குள் நுழைந்தான். ஈஷ்வர் நேரம் பார்த்தான். இன்னும் அரை மணி நேரம் இருந்தது ஷிப்ட் முடிய, 

அதன் பிறகு ஒரு மணி நேரம் சென்று தான் அடுத்த ஷிப்ட் ஆரம்பமாகும். அந்த ஒரு மணி நேரம் தான் இவர்கள் குறித்திருக்கும் நேரம்.  ஈஷ்வர் எதிர்பார்த்த அந்த நேரமும் வந்தது. ஷிப்ட் முடிய ஹார்ன் அடித்தனர். எல்லோரும் மெஷினை நிறுத்திவிட்டு உடை மாற்ற சென்றனர். ஈஷ்வரும், அவன் டீம் ஆட்கள் இருவரும் கூட உடை மாற்றி வர, அவர்கள் கம்பெனி வேன் நின்றிருந்தது

எல்லோரும் அதில் ஏற, ஈஷ்வர் போல சில ஆட்கள் பைக் நிறுத்தும் இடம் சென்றனர். “அச்சோ என்னப்பா பைக் பஞ்சர் ஆகியிருக்கு..”   உடன் வேலை செய்பவர் சொல்ல

அட ஆமாம்ண்ணா.. ச்சு..” என்றான் சலிப்பாக

நான் உதவி பண்றேன்..”  என்று அவன் டீம் ஆட்கள் இருவர் நிற்க, மற்றவர்கள் கிளம்பிவிட்டனர். இவர்கள் மூவர் மட்டும் பார்க்கிங்கில் நின்றவர்கள், எல்லாம் கிளம்பிவிட்டதும், மொபைல் வைத்து டார்ச் அடித்தனர் மேல் நோக்கி

சக்ரவர்த்தி பாரத்து உடனே போன் எடுத்து மெசேஜ் அனுப்பிவிட, சற்று தள்ளி தயாராக இருந்த போலீஸ் டீம் கிளம்பியது. சக்கரவர்த்தியும் உடனே அவர் கார் எடுத்து முன் பக்க கேட்டிற்கு வந்தார்

இங்கு ஈஷ்வர் இருவருடனும் நேரே தயாளன் கார் இருக்கும் இடம் சென்று அதில் சாய்ந்து  நின்றான். செக்கூரிட்டி பார்த்து,  “ஏய் யார் நீ..? இங்க எல்லாம் நிக்க கூடாது.. கிளம்பு..”  என, ஈஷ்வர் அவருக்கு பதில் சொன்னான் இல்லை

உங்களை தான் கிளம்புங்க முதல்ல..”  அவர் கத்த

ஷ்ஷ்.. என்ன இங்க சத்தம், அவங்க நமக்கு வேண்டப்பட்டவங்க தான்..”  என்று வந்தான் தயாளன். அதிலே ஈஷ்வருக்கு புரிந்துவிட்டது அவன் தங்களை முன்னமே கண்டு கொண்டான் என்று. அது தானே அவனுக்கு வேண்டியதும்

அதற்கேற்றாற் போல, “வாங்க.. வாங்க..  உங்களை தான் எதிர்பார்த்திட்டு இருந்தேன்..”   கண்களில் கண்ணாடி, வெள்ளை சபாரி, தூக்கி வாரிய தலை என்று ஆர்பாட்டமாக இவர்களை வரவேற்ற தயாளனை  ஈஷ்வர் தீவிரமாக பார்த்து நின்றான்.  

தயாளன் மூவரையும் கூர்மையாக பார்த்தவன், “ஆமா இதுல யாரு டீம் ஹெட்..” என்றான். மூவரும் அவனுக்கு பதில் சொல்லாமல்  இருக்கபின்னால் நின்ற பாடிகார்ட்ஸ்

சார் கேட்கிறார் இல்லை பதில் சொல்லுங்கடா..” என்று அதிகாரமாக கத்தினான்ஈஷ்வர் நக்கலான சிரிப்புடன் ஒற்றை காலை கார் மேல் வைத்து நன்றாக சாய்ந்து நின்றான்.

டேய் என்ன தைரியம் செருப்பு காலை  எங்க சார் கார் மேல வைக்கிற..”  மற்றவன் ஈஷ்வர் மேல் பாய்ந்த  நொடி அப்படியே பின்னால் விழுந்தான்.  

ஏய் என்ன..?” எல்லோரும் முன் வர

அட இருங்கப்பா.. இது யார் தெரியும் இல்லை நம்ம மினிஸ்டர் நரசிம்மன் மகன்ப்பா.. ஆனா இவருக்கு இங்க என்ன வேலை..?” தயாளன் கேட்க, ஈஷ்வரோ அவன் போன் எடுத்து நரசிம்மனுக்கு அழைத்தான்.

“சார் டார்கெட் கண் முன்னாடி தான் இருக்கு.. சீக்கிரம் வாங்க.. இல்லை நான் போட்டுடுவேன், அப்பறம் என்னை கேட்க கூடாது..” என்றான் தயாளனை நேராக பார்த்து

டேய்..”  தயாளன் ஆட்கள் கத்த, தயாளனோ, ஈஷ்வரை அலட்சியமாக பார்த்தவன், “நீ முதல்ல என்னை  எப்படி  கண்டுபிடிச்ச சொல்லு..? உன் மாமாக்கே தண்ணி காட்டிட்டேனே.. அவர் என்னோட டாக்டர் பினாமியை தானே நான்னு நினைச்சு சுத்திட்டு இருந்தார்..”  எகத்தாளமாக சொல்லி சிரித்தான்

அப்படி நீ நினைச்சா..? மாமா உன்னை எப்போவே நெருங்கிட்டார், நான் ஜஸ்ட் நீன்னு கன்பார்ம் பண்ணேன் அவ்வளவு தான், என்ன புரியலையா..? உன்னை நம்பி இருக்கிற ஆசிரம பிள்ளைங்களை நீயே பரிசோதனைக்காக  ஊனமாக்கிட்டு, அவங்களுக்கு நீயே வைத்தியம் பார்க்க வெளிநாட்டுல இருந்து கோடி கோடியா டொனேஷன் வாங்குன இல்லை, அங்க வச்சு தான் உன்னை பிடிச்சேன்..”

அங்க எப்படி..?” தயாளன் புரியாமல் பார்த்தான்

நீ வைத்தியம் பார்க்க போறேங்கிற பேர்ல அவங்களுக்கு சப்மிட் பண்ண  ரிப்போர்ட் தான் உனக்கு வினயா முடிஞ்சது, எங்க துருவ்க்கு நடந்த அதே பிரச்சனை தான் அந்த பையனுக்கும் நடந்திருக்கு, அந்த ரிப்போர்ட் ரெபரென்ஸுக்காக எங்க சின்னுக்கு கிடைச்சுது, விஷ்ணு என்கிட்ட சொல்லியிருந்தான்..”

சரி அந்த பையனுக்கு எப்படி இப்படி ஆச்சுன்னு  லேசா கிளறுனா புதையலா நீ வெளிவந்த, உன்னை அப்படியே பாலோவ் பண்ணா பார் பாரா நீ முடிஞ்ச டீலிங், உன் கைரேகை, நீ பண்ண கொலைகள் எல்லாம் கிடைச்சது, இனி நீ மேல போய் உன் கணக்கு வழக்கை பார்க்க வேண்டியது தான்..”

அப்போ உன் மாமா மகனை செஞ்சதுக்கு பழி வாங்க தான் என்னை போட போறீங்க அப்படி தானே..?” கேட்டான்

“இல்லை முதல்ல உன்னை அரெஸ்ட் பண்ணி உன் யோக்கியத்தை இந்த உலகத்துக்கு காட்டலாம்ன்னு தான் நினைச்சோம், ஆனா எப்போ நீ ஆசிரமத்துல இருக்கிறவங்களை எல்லாம் பரிசோதனைக்காக பயன் படுத்துறன்னு தெரிஞ்சுதோ இனி உன்னை வைக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம்.. நீ ஒருத்தன் இல்லாம போறதால பல உயிர்கள் ஆரோக்கியமா வாழும்ன்னா நீ போய் சேரதுல தப்பில்லை..” என்று தீவிரமாக சொன்னவன், பின் பேக்கெட்டில் சொருகியிருந்த கன்னை வெளியே எடுத்தான்

எங்க  எங்க சாரை போட்டுடுவியா நீ..? அதுக்கு முதல்ல நீ உயிரோட இருக்கனும்.. பாரு சுத்தி ஒரு காக்கா கூட இல்லை, உங்களை இங்கேயே கொன்னு புதைச்சிடுவோம், இதுக்கு தான் நாங்களும் காத்திருக்கோம்..”  தயாளன் பாடி கார்ட்ஸ் மிரட்ட, 

தயாளனோ,  “தம்பிக்கு என் பவர் தெரியல போல..” என, ஹாஹா.. என்று ஈஷ்வர் சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டான்

எதுக்குடா சிரிக்கிற..? பயத்தை மறைக்க சிரிக்கிற  போல..”  தயாளன் கிண்டலாக கேட்டான்.   

இல்லை பவர்ன்னு சொன்ன இல்லை அதை நினைச்சு சிரிச்சேன்..” ஈஷ்வர் மேலும் சிரிக்க, தயாளனுக்கு கண்கள் சுருங்கியது

உன்னை நான் ரொம்ப ஸ்ட்ராங் வில்லன் நினைச்சேன், ஆனா நீ இவ்வளவு டம்மி பீசா இருக்க..? உன்னை கண்டிப்பிச்சப்போவே உன்னோட பவர் எல்லாம் எந்தளவுன்னு தெரியாம இருக்குமா..?”

ஆனா உன்னோட பவர் சிம் மை விட அதிகமா இருக்குமா என்ன..? ஏன் கேட்கிறேன்னா உன்னை போட சொன்னதே அவர் தான்.. போட போறதும் இந்த சிட்டி கமிஷனர்.. அதாவது நீ உன் மெடிசின் வச்சு படுக்க வச்சியே துருவ், அவனோட அப்பா, என்னோட மாமா  சக்ரவர்த்தி தான்..” என, தயாளனுக்கு வேர்க்க ஆரம்பித்தது

டேய் என்னங்கடா பார்த்து நிக்கிறீங்க, போடுங்கடா இவனை..” என்று கார்ட்ஸ் பார்த்து பயத்தில் கத்த, அவர்கள் ஹா என்று  கத்தி கீழே விழுந்தனர். அவர்களுக்கு பின்னால் போலீஸ் போர்ஸ் நிற்கசக்ரவர்த்தி அவர் காரை நிறுத்தி இறங்கினார்

தயாளனுக்கு அப்போது தான் நிலைமையின் தீவிரம் புரிந்தது, ஏதோ சிறிய அளவில் என்று நினைக்க,  சிம் தலையீடு என்பதில் தான் சூழ்நிலை புரிய, கைகளை மேலே தூக்கி நின்றான். “சார்..” ஈஷ்வர் கன்னை காட்ட,  

சக்ரவர்த்தியோநீ இவனை என்கவுன்டர் பண்ணு ஈஷ்வர்.. உன்னோட முதல் என்கவுண்டர் இவனா இருக்கட்டும்..” என்றார்.  

நீங்களே..” ஈஷ்வர் ஆரம்பிக்க

நோ ஈஷ்வர் இவனை தேடி பிடிச்சது நீ தான், என்னால கூட இவனை பிடிக்க முடியல, நீ தான் கண்டுபிடிச்ச.. உனக்கு தான் இந்த ரைட்ஸ் இருக்கு.. ம்ம்.. முடிச்சிடு..”  என, ஈஷ்வருக்கு அந்த நொடி நினைவிற்கு வந்தது விஷ்ணு, சின்னு தான்

இவனால் பாதிக்கப்பட்ட லட்ச கணக்கான குடும்பங்களில் இவர்களும் உண்டு தானே. கண் மூடி திறந்தவன், பயத்தில் ஓட  முயன்ற தயாளனை கன் எடுத்து குறி பார்த்தான்

வேண்டாம்.. வேண்டாம்..” என்று அவன் ஓட, அவன் நெற்றி பொட்டில் புல்லட் துளைத்து பின் தலை வழியே சென்றது. தயாளன் உயிர் பிரிந்தே கீழே விழுந்தான்

வெல் டன்.. பெர்பெக்ட் ஷாட் ஈஷ்வர்..” சக்ரவர்த்தி அவன் தோள் தட்டினார்

இரவிரவாக  தயாளனின் இடம் எல்லாம் ரைட் நடக்க, ஒரு மெடிக்கல் மாபியா கூட்டமே மாட்டியது. அதில் JR, விஷ்ணுவின் சீப் டாக்டர் என்று பலரும் மாட்டினார்கள். போலீஸ் எல்லோரையும் கைது செய்ய, அன்றய காலை செய்தி இந்த நியூஸில் தான் விடிந்தது

பலரும் தயாளன் உத்தமன் என்று போர் கொடி தூக்க, பலர் அவனுக்கு எதிராக பேசினர். ஈஷ்வர் யூனிபார்மில் கமிஷனர் அலுவலகம் சென்று ரிப்போர்ட் செய்தான்

பிரஸ் ஆட்கள் அவனை சூழ, அவனோ நேரே விஷ்ணுவை பார்க்க தான் சென்றான். அவன் எதிர்பார்த்து போல விஷ்ணு, அவன் சீப் டாக்டரை பார்க்கவும் நடந்ததை புரிந்து கொண்டு கதறி கொண்டிருக்க, ஈஷ்வர் அவனை அணைத்து கொண்டான்

மகாவும் நியூஸ் பார்த்து அண்ணனின் செயல்களுக்கான காரணம் புரிந்து கொண்டவள், சின்னுவிற்கு நியாயம் செய்தவனை தேடி ஓடி வந்துவிட்டாள். ஈஷ்வர் ஒரே நேரத்தில் மொத்த குடும்பத்திற்கும் நியாயம் செய்து விட்டான்.

விஷ்ணு அப்போதும் சின்னுவை பார்க்க முடியாமல் கெஸ்ட் அவுஸ் செல்ல ஈஷ்வர் அவனுடன் தங்கினான். “நீ வீட்டுக்கு போ ஈஷ்வர், பல்லவி, அனு கூட இரு..”  விஷ்ணு அவனை போக சொல்ல, அவனோ முடியாது என்று அவனுடனே இருந்தான்

உன்னை இப்படி விட்டு நான் போறதா இல்லை விஷ்ணு, ஒன்னு நீ வீட்டுக்கு போ, இல்லை ஹாஸ்பிடலுக்கு போ.. ஏதாவது செய், இப்படி தனியா உன்னை விட முடியாது..”  என்றான் கண்டிப்புடன்

டேய்.. நீ என்கிட்ட இப்போ ஐபிஸா பேசுற..?” விஷ்ணு கிண்டலாக சொன்னான்

எப்படி வேணா இருக்கட்டும், நீ முதல்ல இந்த தாடியை, முடியை எடு, வா சலூன் போலாம்..”  என

டேய் உனக்கு உன் பொண்டாட்டி திரும்ப கிடைச்சுட்டா, அதுவும் தனியா இல்லை, உன் பேபி கூட, நீ பொறுப்பான குடும்பஸ்தனா இரு, அதுக்காக என்னை ஏண்டா படுத்துற..?”

அப்போ நீயும் குடும்பஸ்தனா மாறு, என்ன கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாமா..?” ஈஷ்வர் சிரிப்புடன் கேட்டான்.

“அதுக்கு வாய்ப்பே இல்லை, எனக்கு எல்லாம் கல்யாணம் செட் ஆகாது..” விஷ்ணு கசப்புடன் சொன்னான்

அப்பறம் எதுக்கு மகாகிட்ட போன்ல பேசுற..”  ஈஷ்வர் அண்ணனாக கோபத்துடன் பார்த்தான்

டேய் என்கூட இருந்து என்னை வேவு பார்க்கிற நீ..?” விஷ்ணுவும் லேசான கோபத்துடன்  கேட்க

நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு, உனக்கு மகா வேண்டாம்ன்னா ஏன் போன் பேசுற, அவ ஏற்கனவே உன்னை தான் கல்யாணம் செஞ்சுப்பேனு சொல்லிட்டா தெரியும் இல்லை..”

சோ உன் தங்கச்சியை கட்டிக்க சொல்லி டிஸ்பி என்னை மிரட்டுறார் அப்படி தானே..?”

உங்க வாழ்க்கைக்காக அதையும் செய்வேன்..” என்றான் ஈஷ்வர் அசராமல்

ஓகே அப்போ நீ என் ஈஷ்வரா பேசல, உன் தங்கச்சிக்கு அண்ணனா தான் பேசுற..? அப்போ என் பதிலும் இது தான், என் கல்யாண விஷயம் நானும், மகாவும் சமந்த பட்டது, நான் அவகிட்ட பேசிக்கிறேன், நீ கிளம்பு போடா..”  என்றுவிட்டான்.