“இப்போஎன்னசுப்புதங்கம்திரும்பவாங்கிட்டுவருவார்.. போசுப்புகுட்டி..” திரும்பஅவனைவாங்கிவரசெய்துஅலப்பறைகூட்டினர். இரவு பனிரெண்டு மணி வரை அவர்கள் சத்தம் ஓயவில்லை.
{இது திகம்பரனின் திகம்பரி முதல் எபி ப்ரண்ட்ஸ்..}
“சுப்பு.. சுப்பு..” என்று அவனை ராகம் இழுத்தே பாடாக படுத்தினர்.
“எங்களுக்கு இன்னும் ஒரு புல் வேணும்..” என்று ரவுசு விட,
“டேய்.. இன்னும் என்னடா வேணும்..? அதான் பப்பே காலியாகிருச்சு இல்லை, கிளம்புங்கடா போலாம்..” என்றான் சுப்ரமணி நொந்து போய்.
“என்ன அதுக்குள்ள கிளம்புறதா..? வாய்ப்பே இல்லை மச்சி, இன்னும் ஒரு ஹாப் சொல்லு..” டேபிளில் தாளம் போட்டான் விஷ்ணு.
“அநியாயம் பண்றீங்கடா, நேரம் இப்போ நைட் பன்னிரண்டு மணி. இன்னும் எவ்வளவு நேரம்டா..”
“இப்போதான் பன்னிரண்டு மணியா..? ச்சு.. அப்போ ஒரு புல்லே சொல்லு மச்சி..” ராகம் இழுத்தான் ஈஷ்வர்.
“கொஞ்சமாவது என் நிலைமையை புரிஞ்சுக்கோங்கடா.. இங்க பப்ல அதெல்லாம் அலோவ்டே இல்லை, உங்களுக்காக நான் பக்கத்து டாஸ்மார்க்ல வாங்கி வந்து கொடுத்துட்டு இருக்கேன்டா, அவனும் கடைய மூடிட்டு ஓடியிருப்பான், இப்போ உங்க புல்லுக்கு நான் எங்க போகட்டும்..?”
“என்ன அதுக்குள்ள கடைய மூடிட்டானா..? என்ன தைரியம் அவனுக்கு.. வா மச்சி போய் அவனை என்னன்னு கேட்போம்..” இருவரும் எழுந்து பப்பை விட்டு வெளியே வந்தவர்கள், ரோடை கிராஸ் செய்ய, வேகமாக வந்த காரில் மோதி நின்றனர். சென்னை மவுண்ட் ரோட், நடுஇரவு நேரம்.
“எவண்டா அது.. எங்க கார்ல வந்து மோதுறது, கொஞ்சம் விட்டிருந்தா உங்களை அடிச்சு தூக்கியிருப்போம்..” காரில் இருந்து மூவர் இறங்கி வந்தனர்.
அவர்களுடன் மல்லுக்கட்டியதில் போலீஸ் வந்துவிட, அந்த மூவரையும் அரெஸ்ட் செய்தனர், சக்கரவர்த்தி சரியாக அந்த நேரத்துக்கு வர, ஈஷ்வர் கண்கள் அவரிடம் என்ன சொன்னதோ, அவர் உடனே அங்கு இவர்களை வீடியோ எடுத்து கொண்டிருந்தவர்கள் போனை வாங்கி கொண்டார்.
விஷ்ணு அவரை பார்க்கவும் போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கி சென்றுவிட, ஈஷ்வரும் கைது செய்தவர்களை கண் காட்டிவிட்டு விஷ்ணு பின் ஓடினான். அப்போது நரசிம்மன் அனுப்பிய ஆள் வர சொல்லி கூப்பிட, ஈஷ்வர் அவரை கத்திவிட்டு விஷ்ணுவுடன் சென்றான்.
சுப்ரமணி கார் எடுத்து வர, வீடு சென்றனர். மறுநாள் முழுதும் தூங்கி, அடுத்த நாள் ஈஷ்வர் பல்லவி குடும்பத்துடன் திருப்பதி கிளம்பிவிட, விஷ்ணு ரூமில் படுத்திருந்தான்.