அடங்காத நாடோடி காற்றல்லவோ 7

“என்ன சொல்றீங்க டாக்டர்.. அதெப்படி..?” விஷ்ணு அதிர்ந்து கேட்டான். 

“நீங்களே பாருங்க விஷ்ணு ரிப்போர்ட் தான் சொல்லுது, அவரோட கிட்னி அபெக்ட் ஆகி இருக்கு, ரத்த ஓட்டம் சீரா இல்லை, அவரோட ஹெல்த் ஸ்டேபிள் ஸ்டேஜ்ல இல்லை..” என்றார் மீண்டும். 

“நோ.. வாய்ப்பே இல்லை டாக்டர்.. சின்னுவுக்கு  எல்லாம் நான் தான் செய்றேன்..”  நம்பிக்கை இல்லாமல் விஷ்ணு தலை ஆட்டினான்

ஓகே.. இந்தாங்க நீங்களே பாருங்க..” அவர் ரிப்போர்ட் கொடுக்க வாங்கி பார்த்தவன் முகம் கொஞ்சம் கொஞ்சமா சுருங்க ஆரம்பித்தது

இது எப்படி நடக்கும்..? ம்ஹூம்.. என் தம்பி நல்லா இருக்கான், அவனுக்கு ஒன்னும் இல்லை.. 

விஷ்ணு.. முதல்ல இந்த தண்ணி குடிச்சு ரிலாக்ஸ் ஆகுங்க, வீ வில் டிஸ்கஸ் அபவுட் திஸ்..” அவர் பாட்டிலை கொடுக்க, விஷ்ணு வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்தான்

ஏன் இவ்வளவு எமோஷன்ல ஆகுறீங்க, கண்டிப்பா நம்மால துருவை சரி பண்ண முடியும்..” திலக் நம்பிக்கையுடன் சொன்னார். விஷ்ணு ஏதும் பேசவில்லை. நிறைய குழப்பங்கள், பதட்டம் அவனை எதையும் தெளிவாக யோசிக்க விடாமல் செய்தது

டாக்டர்  நான் தினமும் அவனை பார்க்கிறேன். அவன் நார்மலா தான் இருக்கான்..” விஷ்ணு நம்பாமல் சொன்னான்.  

“உங்களுக்கு அப்படி தெரியலாம் விஷ்ணு.. பட் அவருக்கு இன்னும் கேர் தேவை..”

“முன்னாடி அவனுக்கு பார்த்த டாக்டர் பிரதாப்பும், JRம்  அவன் நார்மலா தான் இருக்கான்  சொன்னாங்க..”

“நீங்க அவருக்கு டெஸ்ட் எல்லாம் எடுத்து ஒன் இயர்கிட்ட ஆயிடுச்சு விஷ்ணு சோ அவங்களுக்கு தெரியாம இருக்கலாம், இப்படியே விட்டா அவரோட ஹெல்த் இன்னும் மோசமாகிடும்,  JR கொடுத்த டேப்ளெட்ஸ் நிறுத்திடுங்க, இன்பெக்ட் அது கொஞ்சம் பவர் புல்லான டேப்ளெட்ஸ், உங்களுக்கு தெரியாதா.. அந்த பெயின் டேப்ளெட்ஸ் எல்லாம் எடுக்கவே கூடாது..”

“டாக்டர் அது அப்போ  ஆப்ரேஷன் பண்ணப்போ பெயினுக்காக எடுத்தது..” 

“அது  கூட தப்பு தான் விஷ்ணு, அந்த வீரியம் எல்லாம் சின்னு உடலை அரிச்சிடும், இன்னர் பார்ட்ஸ் எல்லாம் பலவீனமாகிடும்..”

“டாக்டர்.. நீங்க என்னென்னவோ சொல்றீங்க.. நான் பார்த்து பார்த்து தான் செய்றேன்..” விஷ்ணுவால்  ஏற்று கொள்ள முடியவில்லை. 

“விஷ்ணு உங்களுக்கு சந்தேகம்ன்னா ரிப்போர்ட் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. நானா எதுவும் சொல்லலை, அவரோட ரிப்போர்ட் சொல்றதை தான் நான் சொல்றேன்..”    திலக் சொல்ல,  விஷ்ணு மீண்டும் மீண்டும் ரிப்போர்ட்ஸ் பார்த்தான். 

“நாளை துருவ் கூட்டிட்டு வாங்க.. ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிடலாம்..” என, விஷ்ணு திரும்ப ரிப்போர்ட் ஆராய்ந்த படி அவன் ரூம் சென்றான். பேஷண்ட் நேரம் முடியவும், வீட்டிற்கு சென்றான். 

துர்காவும் விஷ்ணு போன் செய்ததால் வந்திருக்க, ரிப்போர்ட் கொடுத்தான். வாங்கி பார்த்தவர் திலக் சொல்வது உண்மை தான் என்றார்.  ஆனால் எப்படி.. என்று அம்மா, மகன் இருவரும் யோசிக்கவே செய்தனர். 

வேறு வழி இல்லை. ட்ரீட்மெண்ட் எடுத்து தான் ஆக வேண்டும் என்று புரிய,  சின்னு,  திலக் அப்சர்வேஷன்  கீழ் இருந்தான். அவர் கொடுத்த மாத்திரைகள், உணவு முறைகளை பாலோவ் செய்தான். 

அவர் சொன்னதை சின்னு  செய்தான். ஏன் என்று கேட்கவில்லை. விஷ்ணுவிற்கு தம்பியிடம்  ஏதோ மாற்றம் தெரிய என்ன என்று கேட்க, சரியான பதிலே இல்லை. ஐம் ஓகே.. இது தான் அவன் பதில். ஆனால் ஏதோ தவறாக நடப்பது போல உறுத்தல் அண்ணனுக்கு. 

இப்படியே மாதங்கள் செல்ல சின்னு உடல் கொஞ்சம் இளைத்தது தவிர வேறெந்த  மாற்றமும் இல்லை. எப்போதும் போல இருந்தான். விஷ்ணுவிற்கு தான் குழப்பம். அன்றிரவு விஷ்ணு உணவு கொடுக்க, சின்னு  சாப்பிட்டு கொண்டு  இருந்தவன், திடிரென இரும ஆரம்பித்தான்.  

“மெல்லடா..” விஷ்ணு தண்ணீர் கொடுக்க, குடித்த பிறகு கொஞ்சம் ஆசுவாசமானான். தூங்கும் முன் பால் கொடுக்க, தலைக்கு ஏறியது. 

“என்னடா பண்ணுது..” விஷ்ணு கண்கள் சுருங்கியது. 

“ஒன்னும் இல்லைண்ணா..”   சின்னு குடித்து படுக்க, விஷ்ணுவும் அவனுடன் படுத்தான். நடு இரவு போல சின்னுவின் கண்கள் விழித்து கொள்ள, மூச்சு காற்று பற்றவில்லை. காற்றுக்கு தவித்து போனவன், கைகளை பெட்டில் அடிக்க, விஷ்ணு முழித்து தம்பிய பார்த்தவன், அவன் நிலை உணர்ந்து உடனே முதுலுதவி செய்தவன், துர்கா ஹாஸ்பிடல் கூட்டி சென்றான். 

துர்கா ஒரு எமெர்ஜென்சி என்று ஹாஸ்பிடலில் இருந்தவர், விஷ்ணு போன் செய்யவும் ஸ்ட்ரெச்சருடன் தயாராக வாசலிலே இருந்தார். கணேஷ் கார் நிறுத்தவும், விஷ்ணு தம்பிய கையில் தூக்கி கொண்டு ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்க, அன்றிரவு முழுதும் அவனுக்கான ட்ரீட்மெண்ட் நடந்தது.

விடியற்காலையில் கண் முழித்தான் சின்னு. விஷ்ணு மிகவும் சோர்ந்து போனான். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. துர்கா உடனே பிரதாப்பை வர சொன்னார். அவரும் மகனுடன் லண்டனில் இருந்தவர், துர்கா அழைப்பை ஏற்று உடனே  கிளம்பி இந்தியா வந்தார். 

சின்னுவை பரிசோதித்தவர், முழு செக் அப் எடுத்தார். “என்ன ஆச்சு டாக்டர்..?”   துர்கா தான் கேட்டார். விஷ்ணு மிக மிக  அமைதி. 

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல டாக்டர்.. கிட்னி, லங்ஸ் எல்லாம் ஹைய்லி அபெக்டட்.. ரத்த ஓட்டம் சீரா இல்லை, ஆக்சிஜன் லெவல் லோ, ரொம்ப கிரிட்டிகள் ஸ்டேஜ்..”  என, மொத்த குடும்பத்திற்கும் இடியாக விழுந்தது. 

துர்கா கண்ணீரில் நினைய, நரசிம்மன்,  “இப்போ  எதுக்கு கலங்குற..? என் மருமகனுக்கு ஒன்னும் இல்லை.. நான் எதுக்கு இருக்கேன் தாய்மாமன்..? அவனை எழுந்து ஓடியாடற வரைக்கும் விடறதில்லை..”  அண்ணனாக அரவணைத்து  கொண்டார்

ஆமா அண்ணி நம்ம சின்னு நல்லாகிடுவான், நீங்க அழுது மனசை தளரவிடாதீங்க..” கங்கா அவர் கை பிடித்து ஆறுதல் சொல்ல, சக்ரவர்த்தி  ஓய்ந்து போய் சேரில் அமர்ந்தார்.  

“மாமா நீங்களுமா..? தைரியமா இருங்க..” அவர் வேதனையான முகம் பார்த்து நரசிம்மன் ஆறுதல் சொன்னார்

என் பிள்ளை இன்னும் எவ்வளவு தான் தாங்குவான் மச்சான்..” சக்ரவர்த்தி குரல் உடைந்தே போனது.  

இனி சின்னு நல்லா இருப்பான், சீக்கிரம் கேரளா போகணும், அவன் காலுக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கணும், முதல்ல போல அவன் ஓடியாடனும்..”  உள்ளுக்குள் பல ஆசைகளுடன் இருந்த விஷ்ணுவிற்கு நடப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை

சின்னுவை பார்த்த திலக், JR இருவரும் வரவைக்க பட்டனர். “எதனால இப்படி..? அவனுக்கு ஆப்பரேஷன் நடந்தப்போ கூட அவனுக்கு இந்த பிரச்சனை இல்லை. நல்லா தான் இருந்தான்..” பிரதாப் கேட்க, இருவரும் நாங்க சரியா தான் பார்த்தோம் என்றனர். 

“என்கிட்ட வரும் போதே சின்னுக்கு கிட்னி அபெக்ட் இருந்தது. நான் சொல்லி தான் ட்ரீட்மென்ட் கொடுத்தேன் என்றார் திலக்..”

“சரி நீங்க ட்ரீட்மெண்ட்  கொடுத்ததும் ஏன் இப்படி ஆச்சு..?”   பிரதாப் கேட்டால் அவர் ஏதேதோ சொன்னார். JR டாக்டரை கை காட்டினார். 

“அவரோ.. நான் சின்னுவுக்கு பெயின் டேப்ளெட்ஸ் அளவா தான் கொடுத்தேன், மீதி எல்லாம் விட்டமின் மட்டும் தான்..”  என்று வாதாடினார். இருவரையும் கூர்மையாக பார்த்து நின்றான் விஷ்ணு.

சக்ரவர்த்தி கண்கள் சுருங்கியிருக்க, உடனே வீட்டிற்கு கிளம்பினார். சில மணி நேரங்கள் சென்று திரும்ப ஹாஸ்பிடல் வந்தவர் முகம் ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை.

மொத்த குடும்பமும் அங்கே தான் இருந்தனர். கங்கா வற்புறுத்தி உணவு கொடுத்தார்அடுத்து என்ன செய்ய என்று எல்லோரும் பிரதாப்பை சுற்றி இருக்க, விஷ்ணு, மகா மட்டும்  சின்னுவுடன் ரூமில் இருந்தனர். சின்னு படுத்திருக்க, விஷ்ணு போன் ஒலித்தது. ஈஷ்வர் எனவும் அவன் வெளியே போக, சின்னு மகாவை பார்த்தான்

என்ன சின்னு..?” அவள் அருகில் வர

எனக்கு என்ன மகா..?”  கேட்டான் மெல்லிய குரலில்

உனக்கு ஒன்னும் இல்லை சின்னு, ஜஸ்ட் ஆக்சிஜென் பத்தலை, அவ்வளவு தான்..” அவள் சாதாரணமாக சொல்ல, சின்னு தலை ஆட்டினான்

எனக்கு தெரியும் மகா..” என்றான்

என்.. என்ன தெரியும்..?”

எல்லாம் தான்.. என்னால என் உடம்புல நடக்கிறதை உணர முடியும் தானே..”

அப்டின்னா.. என்ன சொல்ற நீ..?”  மகா அதிர்ந்து கேட்டாள்.  

“அடிக்கடி பெயின் இருக்கும், ஆனா நான் சொல்லலை,  திரும்ப கடவுள் எனக்கு ஏதோ கிப்ட் கொடுத்து இருக்கார்ன்னு புரிஞ்சது, அது என்னன்னு நீங்க தான் சொல்லணும்..”  லேசான சிரிப்புடன் கேட்க, மகா தொண்டை வலித்தது அழுகையில்

நீ பண்ணது ரொம்ப தப்பு, எங்ககிட்ட சொல்லியிருக்கணும் நீ..”  

ஏன் சொல்லணும் மகா..? எனக்கு வேண்டாம் தோணுச்சு, இனியும் என்னால போராட முடியும் தோணல..” 

சின்னு.. உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல, ஏண்டா இப்படி பண்ண..?” அவன் விரக்தியாக சிரித்தான்

சின்னு என்ன சொல்லுடா..  எனக்கு பயமா இருக்கு..”  அவன் சிரித்த முகம் பார்த்து  தவித்து போனாள்

இல்லை ஏன் என்னை இப்படி போராடி காப்பாத்துறீங்கன்னு தான் புரியல.. விட்டுடலாம்..”  என்றுவிட்டான்

சின்னு.. என்ன பேசுற நீ..” மகா சத்தமாக கதறிவிட்டாள்

ஷ்ஷ்.. மகா.. அண்ணா வந்துடுவான்.. தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவான்..”

அது நீ பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும், உன்னால எப்படி சின்னு இப்படி பேச முடியுது..?”

ஏன் பேசாம மகா, எனக்கு இப்படி ஓரிடத்துல இருக்கிறது பிடிக்கல, எப்போ பார்த்தாலும் ட்ரீட்மெண்ட், டேப்ளெட்ஸ், ஹாஸ்பிடல்.. வெறுத்து போச்சு மகா. இதுல இருந்து எனக்கு விடுதலை கிடைச்சா சந்தோசம் தானே..”

சின்னு ப்ளீஸ் நிறுத்துடா.. எங்களை பத்தி யோசிக்கல நீ..  உனக்காக நாங்க இருக்கோம்னு உனக்கு புரியலையா..?” மகா அழுகையில் குமுறினாள்

போன் பேசி உள்ளே வந்த விஷ்ணு, மகாவின் அழுகையில்மகா என்ன பண்ற..?” என்று அதட்டினான்

இவன்.. இவன்..” அவனிடம் ஓடி சென்று அழுகையில் திணற, மகா.. சின்னு அவளிடம் கெஞ்சலாக கண் காட்டினான்

என்ன ஆச்சு..?” விஷ்ணு கேட்க

ண்ணா.. அவளுக்கு என்னை நினைச்சு கவலை, அது தான் அழுறா.. நீ எனக்கு தண்ணீ கொடு வா..” என, விஷ்ணு தம்பி முன் அழும் அவளை கோபத்துடன் பார்த்து சென்றான்.

சக்ரவர்த்தி உள்ளே வந்தார். சின்னு தண்ணீர் குடித்து முடிக்க, அவன் பக்கத்தில் சென்று தலை வருடினார். சின்னு அவரை பார்த்து லேசாக சிரிக்க, தந்தைக்கு உயிர் துடித்தது. எப்பாடு பட்டேனும் மகனை காப்பாற்றிவிட வேண்டும் என்று உறுதி கொண்டார். அவரின் வேதனை, துயரத்தை தள்ளி வைத்தார்

அவன் தூங்கவும், விஷ்ணு.. பெரிய மகனை வெளியே கூப்பிட்டார். துர்கா, கங்கா, மகா சின்னுவுடன் இருக்க, விஷ்ணு பார்த்து வெளியே சென்றான்

என்ன ஆச்சு உனக்கு ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்குற..? சின்னுக்கு அடுத்து என்ன செய்யணும் பார்க்க வேண்டாமா..?”  கேட்டார்

இல்லைப்பா.. நீங்களே பாருங்க..” என்றான் அவன்

ஏன்..?” சக்ரவர்த்தி அவன் முகம் பார்த்து கேட்டார்

நீங்க சொல்றது உண்மை தான்ப்பா, அம்மா வேற, அண்ணா வேற தான்..”  என்றான்

என்ன சொல்ற நீ..?”

உண்மையை தான் சொல்றேன்ப்பா.. நான் அவனை ஒழுங்கா பார்த்துகிட்டு இருந்தா அவன் ஏன் இப்படி..?”

விஷ்ணு.. இதுக்கு நீ எப்படி காரணமாகுவ..”

தெரியல, ஆனா என் உள்மனசு சொல்லுது.. ஏதோ ஒரு இடத்துல என்னால தப்பு நடந்திருக்கு..”  

“விஷ்ணு என்ன பேசிட்டிருக்க நீ..? இந்த தாட்ஸ் எல்லாம் விடு,  சின்னுவை காப்பாத்துறது தான் இப்போ முக்கியம்..”

“எனக்கு உண்மையாவே பயமா இருக்குப்பா.. என்னை விட்டுடுங்க..”   

நீ எல்லாம் என்ன அண்ணன்டா.. பி ரெஸ்பான்சிபிள், ஒழுங்கா உன் தம்பியை காப்பாத்துற வழிய பாரு..”   அப்பாவாக அதட்டி உள்ளே சென்றார். அவன் வெளியவே அமர்ந்தான்

ஏனென்று தெரியாத கோவம், அழுகை, அவனின் நெஞ்சு ஏறி இறங்கியது. தொண்டை குழி தவித்தது.  நேரம் சென்றும் உள்ளே வரவில்லை. மகாவிற்கு விஷ்ணுவிடம் பேச வேண்டும், சின்னு மனநிலையை சொல்லிவிட வேண்டும் என்று அவனை தேடி வந்தாள்

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..”  மகா சொல்ல,  

நோ மகா.. உள்ள போ..” அவன் இருக்கும் நிலையில் பேச முடியும் என்று தோன்றவில்லை

ப்ளீஸ்.. கொஞ்ச நேரம்,நான் சொல்றதை கேளுங்க..”   விஷ்ணு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டான். அவன் கண்கள் கலங்கியிருக்க, பார்த்துவிட்ட மகா எதுவும் யோசிக்காமல் அவன் பின்னாலே வந்தாள்

மகா அவன் பின்னால் வர, “இப்போ எதுக்கு என் பின்னாடி வர, போடி..” அவள் மேல் காய்ந்தான்

மகா எதுவும் பேசாமல் அவனுடனே நடந்தாள். “மகா.. ப்ளீஸ் உள்ள போ.. ஐம் நாட் இன் குட் மூட்..” கொஞ்சம் தணிவாக சொன்னவன், பைக் எடுக்க, மகா அவன் பின்னாலே அமர்ந்துவிட்டாள்

மகா.. என்னை கொஞ்சம் தனியா விடு.. நான் எங்க போவேன்னு எனக்கே தெரியாது..”  அவன் மீண்டும் சொல்ல

நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. ஜஸ்ட் கூட இருக்கேன்.. உங்களுக்கு எங்க போகணுமா போங்க..”  அவள் இறங்கும் நோக்கம் இல்லை என்று புரிந்து விஷ்ணு பைக்கை விட்டு இறங்கியவன்

உனக்கு இப்போ என்ன பேசணும்..?” கேட்டான்

சின்னு.. அவன் பேச்சு சரியில்லை. ரொம்ப மனசு விட்டு பேசுறான்.. நீங்க அவன்கிட்ட பேசுங்க..”  என்றாள்

என்ன சொல்ற..?” மகா அவன் பேசியதை முழுதும் சொல்லிவிட்டாள்

அவன் அவ்வளவு மனசு விட்டு பேசுற அளவுக்கா அவனை நான் பார்த்துக்கிட்டேன்.. இதயத்தில் பாரம் ஏறியது. அவனை படைத்த கடவுள் மட்டும் கண் முன் இருந்தால், உனக்கு என்ன தான்யா வேணும்.. கேட்டு சண்டையிடும் கோவம், இயலாமை

நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலும்ஏதும் செய்ய முடியாமல் திணறும் போதும் மனம் படைத்தவனிடம் தான் செல்லும். விஷ்ணுவும் அதற்கு விதிவிலக்கல்ல.

மகா ஆறுதலாக அவன் கை பிடிக்க, என்ன கட்டு படுத்தியும் கண்கள் கண்ணீரை சிந்த, யோசிக்காமல்  மகாவை அணைத்துவிட்டான். மகா இதை எதிர்பார்க்காமல் அப்படியே நிற்க, விஷ்ணு கண்ணீர் அவள் கழுத்தில் வழிந்தது.

“விஷ்ணு, மகா..”   ஈஷ்வர் குரலில்  மகாவிற்கு  பதறிவிட்டது. முன்னால் பார்க்க, ஈஷ்வர் நின்றிருந்தான். அவன்  கண்கள் விஷ்ணு மேலே இருந்தது.