அடங்காத நாடோடி காற்றல்லவோ 1

கந்தா கடம்பா முருகா  சரணம்..”  கைகள் தேய்த்து கண் விழித்தார் துர்கா. நேரம் காலை ஐந்து என்றது

வெளியே பைக் கிளம்பும் சத்தம் கேட்க, பெரு மூச்சுடன் ரிப்ரெஷ் செய்து வெளியே வர, “ம்மா.. காபி..” என்று கையில் வைத்தார் ருக்கு.. ருக்குமணி அந்த வீட்டின் ஆல் இன் ஆல்

ரொம்ப தேவைப்பட்டுச்சு ருக்கு..” வாங்கியவுடனே ஒரு சிப் வைத்தவர் முகம், மனம் இரண்டும் பில்டர் காபி சுவையில் சோர்வை விரட்டி தள்ளியது

நைட் நீங்க ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததே லேட்ன்னு தெரியும்மா..” அவரின் தூக்க பற்றாக்குறையை சுட்டி காட்ட, இது பழக்கம் தானே என்பது போல  லேசான  சிரிப்புடன் அதை கடந்தவர்

விஷ்ணு காபி குடிச்சிட்டு கிளம்பினானா..?” பெரிய மகனை விசாரித்தார்

எங்கம்மா நான் எடுத்துட்டு வரதுக்குள்ள காத்தா பறந்துடுச்சு..” ருக்கு கவலையாக சொன்னார்

ம்ப்ச்.. பரவாயில்லை விடு, வழியில குடிச்சிப்பான்..” சொன்னபடி காலியான  காபி கப்பை கொண்டு சென்று கிட்சனில் வைத்த துர்கா சின்ன மகனின் ரூமிற்கு சென்றார்

மெல்லிய சிவப்பு வண்ணத்தில் நைட் லேம்ப் ஒளிர்ந்து கொண்டிருக்க, கண்கள் பழக சில நொடிகள் எடுத்து கொண்டது. இப்போது  அந்த வெளிச்சத்திலே பெட்டிற்கு சென்றார். முகம் முழுதும் மறைத்தபடி படுத்திருந்தான் அவரின் இளைய மகன் ‘துருவ்’. வீட்டினருக்கு ‘சின்னு’. 

முகம் மட்டும் தெரிய உடல் முழுதும் பெட்ஷீட்டில் மூடி படுத்திருந்தான். முகம் இப்போது நான் டீனேஜ் என்று காட்ட, மெலிதான மீசை முளைவிட்டு இருந்தது. ஆனாலும் இன்னும் சிறு பிள்ளை போல முகத்தில் விளையாட்டு தனம் கலந்த ஜொலிப்பு. 

கனிவுடன் அவனை பார்த்தவர், குனிந்து அவன் நெற்றியில் முத்தம் வைத்தார். கூடவே எப்போதும் போல கண்கள் கலங்கியது. முயன்று தன்னை தானே கட்டு படுத்தி கொண்டவர், ஏசி அளவை குறைத்துவிட்டு, ரூம் கதவை மூடி  தோட்டத்திற்கு வாக்கிங் செல்ல ஆரம்பித்தார். 

அரை மணி நேரம் நடைபயணம் முடிய உள்ளே வந்த துர்காவின் போன் ஒலித்தது. “டைம் பார்த்துட்டே இருப்பீங்களோ..? வேலை எதுவும் இருக்காதா ACP சக்ரவர்த்தி சாருக்கு..?”  எடுத்ததும் துர்கா சிரிப்புடன் கேட்டார். 

“பொண்டாட்டிய விட்டு பிரிஞ்சிருக்கிற புருஷனுக்கு இதை விட வேறென்ன வேலை இருக்க போகுது டாக்டர் மேடம்..?”  அவரும் சீண்டலான சிரிப்புடன் கேட்க, அதற்கு பிறகான பதினைந்து நிமிடங்கள் கணவன், மனைவிக்கான பேச்சாக சென்றது. 

ACPயாக இருக்கும் சக்கரவர்த்தியின் நேர்மைக்கு கிடைக்கும் பரிசு அவரின் அதிகபட்ச டிரான்ஸ்பர் தான். அதனாலே குடும்பத்தை சென்னையில் விட்டு தான் மட்டும் ஊர் ஊராக சுத்தி கொண்டிருப்பார்.  அதன்படி இப்போது அவரின் இருப்பிடம் மதுரை. 

அவரின் மனைவி துர்கா, கைனகாலஜிஸ்ட். சென்னையில் சொந்தமான மருத்துவமனை வைத்துள்ளார்.  இரு மகன்கள். பெரியவன் விஷ்ணு. அவனும் MD படித்து கொண்டிருக்கிறான். சிறியவன் துருவ். அந்த வீட்டின் கடைக்குட்டி. 

விஷ்ணுவிற்கும் அவனுக்கும் கிட்டத்தட்ட ஏழெட்டு  வருட வித்தியாசம். அதனாலே எல்லோருக்கும் மிகவும் செல்லம்.  அதனுடன் அவன் நிலையும் குடும்பத்தினர்க்கு அவன் மேல் மிகவும் பலவீனத்தை கொடுத்தது. அவன் என்றாலே எல்லோருக்கும் சம்திங் ஸ்பெஷல்.  

“ம்ம்.. எங்க உன் பெரிய மகன் எப்போவும் போல பீச்சுக்கு காவல் காக்க  கிளம்பியாச்சு போல..”  சக்ரவர்த்தி கேட்க, 

“அஞ்சு மணிக்கே, அப்படியே ஜிம் போய்ட்டு வருவான்..” என்றார் துர்கா சோர்வான பெருமூச்சுடன். 

“அப்பா மாதிரி காவல் காக்க தான் பிடிச்சிருக்கு போல, அப்பறம் எதுக்கு MBBS எடுக்கணும்..?” சக்ரவர்த்தி கிண்டலாக கேட்டார். 

“ம்ப்ச்.. காலையிலே ஆரம்பிக்காதீங்க, அப்பறம் நான் தான் நாள் முழுதுக்கும் ப்ரெஷர் ஏறி சுத்தணும்..” என்றார் துர்கா. 

“ஏன் பிரஷர் ஏறணும்..? அதுக்கு அவனை உட்காரவைச்சு பேசலாம் இல்லை, இன்னும்  எத்தனை நாளைக்கு இப்படி உருண்டை இழுத்திட்டு திரிவான்..?”

“என்ன பேச..? நாம பேசுறதை எல்லாம் காது கொடுத்து கேட்கிற முதிர்ச்சியை அவன் கடந்துட்டான்..”

“அப்படியென்ன நூத்து கிழவன் உன் மகன்..?”

“விடுங்க..”

“என்ன விட, அடுத்த வருஷம் அவனும் ஒரு MD டாக்டர், இன்னும் அப்படியே இருந்தா எப்படி..? ஒரு வாரம் சஸ்பென்க்ஷன்ல இருந்து இன்னிக்கு தான் மறுபடியும் காலேஜ் போறான், இதுதான்  சஸ்பெண்ட் ஆகிறது கடைசின்னு அவன்கிட்ட சொல்லி வை, யார் என்ன பண்ணா இவனுக்கென்ன..? எல்லார்கிட்டயும் மல்லு கட்டிக்கிட்டு இருக்கான், அப்புறம் இன்னார் மகன்னு என் பேர் தான் அடிபடும்..” சக்ரவர்த்தி பொரிந்து தள்ள, 

“நான் அவன்கிட்ட பேசுறேன், இனி இப்படி நடந்துக்க மாட்டான், விடுங்க..” துர்கா அவரின் பேச்சை இடையிட்டு முடித்து வைத்தார். 

“நீ பேசும் போது எனக்கு கால் பண்ணிட்டு பேசு..” என்றார் அப்போதும் சக்ரவர்த்தி. 

“சரிங்க..” துர்கா சொல்ல, 

“சின்னு எழுந்ததும் எனக்கு கால் பண்ண சொல்லு.. அவன் ஏதோ வேணும்ன்னு கேட்டுட்டு இருந்தான், நாளைக்கு நான் வரும் போது வாங்கிட்டு வரேன்..” மேலும் பேசி வைத்துவிட, துர்கா ஹாஸ்பிடலுக்கு கிளம்ப சென்றார்.

காட்டன் சேலை  மடிப்பை நீவி விட்டபடி துர்கா கிளம்பி ஹாலுக்கு வர, அவரின் பெரிய மகன் விஷ்ணு சோபாவில அமர்ந்திருந்தான். இவரை பார்த்தவன் திரும்பவும் நியூஸ் பேப்பர் படிக்க ஆரம்பித்துவிட்டான்

காலேஜுக்கு இன்னும் கிளம்பவில்லை. மணியை பார்த்தவருக்கு கோவம் வராமல் இல்லை. அவன் அருகில் சென்றவர், “இன்னிக்கோட உன் சஸ்பென்க்ஷன் முடிஞ்சது விஷ்ணு, காலேஜ் கிளம்பு..” என்றார்

தெரியும்மா.. கிளம்புறேன்..” என்றவன் கண்கள் பேப்பரில் தான் இருந்தது

விஷ்ணு..”  அவர் அதட்டலாக கூப்பிட, நிமிர்ந்து அவரை பார்க்க மட்டும் செய்தவன் கண்கள் தான் என்ன என்று கேள்வியை கேட்டது

கிளம்பி வா விஷ்ணு, உன்கூட பேசணும்..” அம்மாவாக சொல்ல, புருவம் தூக்கி ஒரு நக்கலான சிரிப்புடன் கடைசி பேஜ் வரை படித்தே குளிக்க சென்றான்

அவன் ரூம் போகவும், துர்கா மீண்டும்  சின்னு ரூமிற்கு சென்றார். அவன் அப்போது தான் குளித்து வந்திருப்பான் போல. தலையில் ஈரம் சொட்டி கொண்டிருக்க, கப்போர்டில் உடை எடுத்து கொண்டிருந்தான். உடன் ருக்கு கணவன் கணேஷ் இருந்தார்

இவரை பார்க்கவும் கணேஷ் வெளியே செல்லதுர்கா டவல் எடுத்து மகனின்  தலையை துவட்டினார். “ம்மா..” பின்னால் திரும்பி பார்த்தவன் அவரை இடையோடு கட்டி கொண்டான்

அடேய் விலகுடா, சேரி எல்லாம் ஈரம் ஆயிடுச்சு..” துர்கா அவன் தலையை தள்ள, அவனோ இன்னும் சிரிப்புடன் அவரின் இடையை கட்டி கொண்டான்

உன்னோட..”  செல்லமாக அவன் தலையில் கொட்டியவர், தலை துவட்டி முடிக்கவும், உடை அணிய உதவினார்

ம்மா.. இந்த டீசர்ட் ஓகேவா..” கேட்டு அணிந்து கொண்டவன், அம்மாவுடன் வெளியே வந்தான்

சின்னு உனக்கு பிடிச்ச ஆப்பம், தேங்காய் பால்..”   ருக்கு சுட சுட எடுத்து வைக்க

என் ருக்குன்னா ருக்கு தான்.. ஆப்பம் பார்க்கவே உன் மனசு மாதிரி வெள்ளையா மின்னுதே டார்லிங்..”  அவரிடம் வம்பு வளர்த்தப்படி சாப்பிட அமர்ந்தான்

வைக்கவா..?” துர்கா எடுக்க

அண்ணா வந்துரட்டும்..” என்றான் அவன்

இல்லை சின்னு நீ சாப்பிடு, நான் விஷ்ணுகிட்ட பேசணும்..”  துர்கா சொல்ல

“பேசுங்க.. நான் சாப்பிடுறேன், எனக்கும் உங்களை வேடிக்கை பார்த்துட்டு சாப்பிட இன்னும் பிடிக்குமே..” என்றான் குதூகலத்துடன்

நீ இருக்கியே, சரி இரு அப்பா உன்னை கூப்பிட சொன்னார்..”  கணவருக்கு அழைத்து மகனிடம் கொடுத்தார்

“ப்பா..”   சின்னு பேச ஆரம்பிக்க, துர்கா விஷ்ணுக்காக பார்த்திருந்தார். விஷ்ணு வந்தவன் சின்னு பக்கத்தில் அமர, துர்கா இருவருக்கும் உணவு வைத்தபடி, பேச ஆரம்பிக்க

முதல்ல டிபனை முடிச்சுக்கலாம் இருங்க..” என்றுவிட்ட  விஷ்ணு  சின்னுக்கு கொடுத்து, தான் சாப்பிட்டான்

ண்ணா.. போதும்..”  சின்னு மறுத்த பிறகும் ஒரு முழு ஆப்பம் கொடுத்தவன், ருக்கு கொடுத்த காபியை குடித்து வைத்தான்

முடிஞ்சதுப்பா..”  சின்னு போனில் சொல்ல, விஷ்ணு அவனிடம் இருந்து  போனை வாங்கி ஸ்பீக்கர் ஆன் செய்து டேபிளில் வைத்தவன், “இப்போ பேசுங்க, ACPக்கு கேட்கும்..” என்றான் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி நக்கலாக

புரிந்தும் அதை ஒதுக்கு தள்ளிய துர்காவிஷ்ணு.. நாங்க என்ன சொல்வோம்ன்னு உனக்கு நல்லா தெரியும், இந்த சஸ்பென்ஷன் எல்லாம் போதும், படிக்கிற வழிய பாரு..” ஆரம்பித்து சில பல நிமிடங்கள் பேசி முடித்து மகனை பார்த்தார்

அவன் அதுவரை கை கட்டி அமைதியாக அமர்ந்திருந்தவன், “முடிஞ்சுதா.. நான் காலேஜ் கிளம்பவா..?” என்றான் சாதாரணமாக

ம்ப்ச்.. விஷ்ணு நான்..” துர்கா கடுப்புடன் பேச

துர்கா இது வேலைக்கு ஆகாது, அவனை காலேஜ் கிளம்ப சொல்லு, நான் நாளைக்கு நேர்ல வந்து பேசிக்கிறேன்..”  என்றார் சக்ரவர்த்தி இடையிட்டு

அப்பறம் என்னம்மா, அதான் ACP நாளைக்கு வந்து பேசிக்கிறாராமே.. நான் கிளம்புறேன்.. சின்னு..  நீ கேட்ட படம் உன் ரூம்ல இருக்கு.. பை..”  அவனுடன் உள்ளங்கை அடித்தவன் வாசலுக்கு நடந்தான்

கழுத்தில் ஸ்டெத் தொங்கி கொண்டிருக்க, கையில் இருந்த வெள்ளை  கோட்டை அனாயசமாக தூக்கி தோளில் போட்டு நடந்தவன் கையில் மருந்துக்கும் புக் இல்லை. பாக்கெட்டில் ஒரு பென் மட்டும் இருந்தது

வெளியே நின்றிருந்த பைக் மேல கோட்டை வைத்தவன், கிளம்ப, துர்கா அவனையே பார்த்து நின்றிருந்தார். அப்படியே உருவத்தில் சக்ரவர்த்தி. MD இரண்டாம் ஆண்டு  மருத்துவம் படிக்கும் மாணவன் போல இல்லாமல் பெரிய ஆண் போல நல்ல வாட்டசாட்டமான உடல் வாகு.

முகத்தில் ஒரு பிடிவாதம். இறுக்கம். அவன் மனம் விட்டு சிரிக்கும் ஆட்கள் சின்னு, ஈஷ்வர் மட்டுமே. ஈஷ்வரை நினைத்தவுடன், நரசிம்மனும் நினைவிற்கு வந்தார்

அண்ணாகிட்ட அந்த இடத்தை பத்தி பேசணும்..”  துர்கா நினைத்தபடி உள்ளே செல்ல, இங்கு விஷ்ணு காலேஜிற்குள் நுழைந்தான். அவர்கள் காலேஜிலே ஹாஸ்பிடலும் இருக்க, இவர்கள் கேம்பஸ் உள்ளே இருந்தது

பைக் நிறுத்திவிட்டு கிளாஸ் சென்றான். கிளாஸ் ஆரம்பித்தது. பிரேக் வரவும் நண்பர்களுடன் நேரம் சென்றது. மதிய உணவை கேன்டீனில் முடித்தவன்  கிளாஸ் வர, “விஷ்ணு உன்னை டாக்டர் குப்தா வரச்சொன்னார்..” என்றான் சுப்ரமணி

நீ எங்கடா போன காலையில் இருந்து..” விஷ்ணு அவனிடம் கேட்க, அவனோ சோர்வுடன் அமர்ந்தவன்

முதல்ல அவரை போய் பார்த்துட்டு வா..” என்றான். விஷ்ணு அவரை தேடி கொண்டு போக, அவரோ ஹாஸ்பிடலில் சர்ஜரியில் இருப்பதாக தெரிய, விஷ்ணு அங்கேயே அவரை பார்க்க சென்றான்

ஆப்பரேஷன் தியேட்டருக்கு வெளியே பல பேர் நின்றிருக்க உள்ளே சென்று விசாரித்தான். அவர் ஆப்பரேஷன் முடித்து வெளியே  வரும் நேரம் என்பதால் தியேட்டரை விட்டு வெளியே வந்துவிட்டவன், அங்கிருந்த கம்பியில் சாய்ந்து நின்றான்

அவன் கோட்டை பார்த்து ஒரு வயதானவர், “தம்பி..” என்று அவன் தோள் தட்டினார்

திரும்பி பார்த்தவன், “சொல்லுங்க..” என

தம்பி நீங்க டாக்டர் தானே..” அவனின் உடல் வாகு பார்த்து கேட்க

இப்போ தான்  படிச்சிட்டு இருக்கேன்..” என்றான்

ஓஹ்..”  சோர்ந்து போனது அவர் முகம்தள்ளி நின்றவர் கண்கள் ஆப்பரேஷன் தியேட்டர் வாசலிலே இருந்தது. உள்ளே அவருக்கு வேண்டியவர் இருக்கிறார் போலஅவர் கண்களை அடிக்கடி துடைத்து கொள்ள, விஷ்ணுவின் பார்வை அவர் மேல் கூர்மையாக விழுந்தது

தாத்தா..” என்று இரு பெண் பிள்ளைகள் அவரிடம் ஓடிவர, அவர்  அவர்கள் பின்னால் பார்த்தார். ஒரு நடுத்தர வயது ஆள், ஒரு பெண்  வந்தனர். அந்த ஆள்  அவரிடம் தாழ்ந்த குரலில் ஏதோ பேசி  கொண்டிருந்தார். இந்த முதியவர் அவரிடம் ஏதோ சொல்ல, அந்த ஆள் காது கொடுத்து கேட்கும் நிலையிலே இல்லை

இவரோ போராடி அவரிடம் கையில் இருந்த பைல் எடுத்து காட்ட, அந்த ஆள் வாங்க கூட இல்லை. ஏதேதோ பேசிவிட்டு அந்த பெண் பிள்ளைகளை,மனைவியை  அங்கிருந்து இழுத்து சென்றார் மனிதர்