சுமிக்கு தன் பாட்டியை நினைத்து பெருமையாக இருந்தது, தனக்கு என்னவெல்லாம் செய்த்திருக்கிறார். ஆனால் நான் அவருக்கு ஒன்றுமே செய்யவில்லையே என்ற ஏக்கம் வந்தது.
"இதை நீங்களே வைத்து கொள்ளுங்கள் , எனக்கு தான் இங்கு எல்லாமே இருக்கிறதே" என்றாள்.
"இல்லை தாரா உன் பாட்டி உனக்காக கஷ்ட பட்டு சேர்த்தது, அவருடைய கடைசி ஆசை இது உன்னிடமே இருக்கட்டும்..." என்றான். அவளுக்கும் இது சரி என்று பட்டது, அவனிடமும் அதை சரி என்று ஒப்புக்கொண்டாள்.
" அப்புறம் தாரா நான் உன்னிடம் முன்னமே சொன்னதுதான், இனி என் வாழ்நாள் முழுவதும் நீ ஒருத்திதான், என் மனதிலும் நீ மட்டும் தான் இருக்கிறாய்... அதனால் தேவை இல்லாததை மனதில் போட்டு குழப்பிக்கொண்டு இருக்காதே" என்றான் அவள் சமையல் அறையில் யோசித்து கொண்டு இருந்ததை மனதில் வைத்து சொன்னான்.
பின் அவளிடம் கூறி விட்டு அலுவலகம் சென்று விட்டான். அவன் சென்றதும் சோர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தவள்..... . அவன் தன்னை கட்டாயத்தின் பெயரில் திருமணம் செய்து கொண்டவன் பின் எப்படி இப்போ அவன் மனதில் தான் இருப்பதாக சொல்கிறான்.... மனதில் எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியாது அமர்ந்து இருந்தாள் சுமி...
இங்கு அலுவலகத்தில், பாரதிக்கு முழுவதும் அவள் நினைப்புதான்..... தான் தொட்டதும் குழைந்து நின்றவளின். சிவந்த முகம் அவன் கண் முன் வந்து சென்றதும் கண் மூடி சாய்ந்து
"பேபி என் மனதில் நீ இருப்பது போன்று உன் மனதில் நான் இருக்கிறேன், ஆனால் நீ அதை உணரவில்லை சீக்கிரம் உணர்ந்து உன் காதலை என்னிடம் சொல்லுவாய் தாரா' என்றான் மனதுடன். கதவு தட்டும் சத்தத்தில் தன் சுயம் வந்தவன் "எஸ் கமின்" என்றான்.
உள்ளே வந்த பிரியா, "குட் மோர்னிங் சார், சார் நீங்க கனடா போயிட்டு வந்த பயணத்தின் ரிப்போர்ட்" என்று நீட்டினாள்.
அவன் அதை வாங்கி பார்த்து கொண்டு இருந்தான், பிரியாவும் அவனை பார்த்து கொண்டுதான் இருந்தாள். அவளுக்கு இன்னும் கோபம் அடங்க வில்லை , இவன் தன் கட்டுக்குள் வர மாட்டான் என்று தெரிந்த பின் அவன் அம்மாவை வளைத்து போடலாம் என்று நினைத்தாள். ஆனால், அந்த கிழவி முகம் குடித்து கூட பேசாது, சரி சமாளித்து வரலாம் என்று பார்த்தாள், இவன் ஏதோ பிச்சைக்காரிய மணந்து கொண்டு வந்துவிட்டான் இருந்தும் அவனை விட அவளுக்கு மனம் வரவில்லை சரியான சந்தர்பத்துகாக காத்து கொண்டு இருந்தாள்.
"இந்தாங்க மிஸ்.பிரியா எல்லாம் சரியாக இருக்கிறது, பின் இரண்டு புதிய ஒப்பந்தம் போட்ட அலுவலகம் பற்றிய முழு விவரம் என் மெயில்கு அனுப்பி வைத்து விடுங்கள்" என்று விட்டு தன் கணினியில் கவனம் செலுத்து விட்டான்.
"ஓகே சார் நான் அனுப்பி வைக்கிறேன் " என்று விட்டு சென்றாள். அவன் அலுவலகம் தவிர்த்து வேறு எதுவும் அவளிடம் பேச மாட்டான், அவளை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும், அவள் அப்பாவுக்காக பார்க்கிறான் இல்லை என்றோ வேலை விட்டு அனுப்பி இருப்பான். ஒரு விபத்தில் தன் கால் ஒன்றை இழந்து நின்ற அவர் இவனிடம் வருந்தி கூறியதால் அவர் பார்த்த வேலையை அவர் பொண்ணுக்கு கொடுத்தான்.
புதிதாக போட்ட ஒப்பந்தம் என்று அவன் முடிக்க வேண்டிய வேலை அதிகமாக இருந்தது. மாலை 6 மணிக்கு அவன் அம்மா அவனுக்கு அழைத்த பின், தன் பிஏ விடம் முடிக்க வேண்டிய வேலையை சொல்லிவிட்டு சென்றான்.
வீட்டிற்கு வந்தவன் தன் அறைக்கு சென்று குளித்து உடை மாற்றி விட்டு வந்தான்..... அவன் வந்ததும் அவனுக்கு காபியும், பலகாரமும் வைத்து விட்டு சென்றவளின் கை பிடித்து தன் அருகில் அமர வைத்து, அவள் காதில்
"என்னடி நான் ஒன்று கொடுப்பதாக சொன்னது உனக்கு மறந்து விட்டதா என்றான்" அவள் காதில் ரகசியமாக.
உள்ளம் தொடரும்.....