ஹாய் ஷக்தி,
கதை ரொம்ப நல்லா இருந்தது.பார்த்தவுடனே காதல் அதுவும் நான்கு நாட்கள் மட்டுமே பழகியவர்களுக்குள் இவ்வளவு ஆழமான காதலா?இவர்களின் காதலை பார்த்து பிரமிப்பா இருக்கு.சரவணன்&தேவி முதல் சந்திப்பு நீங்க சொன்ன விதம் ரொம்ப நல்லா இருந்தது.அதுவும் அவளுடைய மேக்கப் பார்த்து அவங்க அம்மா என்ன செய்வாங்கன்னு நினைச்சான் பாருங்க சூப்பர்.அவனுடைய அம்மாக்கு உடல்நிலை சரி இல்லைன்னு அவள் எடுத்த முடிவு சரி தான் அதே நேரத்தில் சரவணனை பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டாள்.அவரவர் நியாயம் அவரவர்க்கே.ஸ்ருதி கிடைத்தவுடன் அவங்க பெற்றோருக்கு சரவணன் சொன்ன அறிவுரை ஒவ்வொண்ணும் அற்புதம்.இன்றைய பெற்றோர் யோசிக்கவேண்டிய விஷயம்&கவனிக்க வேண்டிய விஷயம்.கோதாவரி கடைசியில் தேவிகிட்ட உண்மையை சொன்னது சூப்பர்.யாராயிருந்தாலும் செய்த தப்பை ஒத்துக்கொள்ள மனது வேண்டுமே.