S
semao
Guest
கவிமழையாம் இங்கே
கவிகளுக்கோர் போட்டியாம்
ஏட்டிக்கு போட்டியாய்
என்னுளே வந்த ஆர்வம்
என்னையும் எழுத தூண்ட
என்ன எழுதவென என்
எண்ணத்தில் வரவில்லை
ஏதும் தோணவில்லை
ஏதேனும் தலைப்பு கேட்டு
என்னவரை நாடி சென்றேன்
எழுதுவது தமிழில் என்றால்
எழுதுவதும் தமிழையே
எடுத்திடலாம் என்றவரை முதலில்
எழுதுகிறேன் பிழையின்றி தமிழை
நான் எழுத வேறு சொல்லென்றேன்
அம்மா என அருமை மகள் அழைத்து
அடுத்து ஒரு தலைப்பு எதற்கு
அழகு மகள் என்னை பற்றி
அருமை கவிதை தாராய் கவியே எனக் கூற
அடடா பிள்ளாய் அன்றுனக்கு தந்ததுவே
பேசும் தெய்வம் என உன்னையே
எழுதினேனே
நான் எழுத வேறு சொல்லென்றேன்
பிள்ளை என் குரல் கேட்டு
பெற்றவளோ தந்திட்டாள்
பெற்ற சுமை நீ அறிவாய்
கற்ற மொழியில் அதை
கவியாய் புனைவாய்
என்று அன்னை கூறிவிட
அன்னையர் தினம் அன்று
அன்னையே உன்னை பிரிந்த கதை
பாசக் கதை எழுதிவிட்டேன் கவியிலே
நான் எழுத வேறு சொல்லென்றேன்
தலைப்புக்கா பஞ்சமிங்கே
அருகினிலே அண்ணன் இருக்கையிலே என்றாரே
அருவியாய் தலைப்பு தருவாரோ என எண்ண
அருவியே தலைப்பு என சொல்ல
அட அண்ணா அருவியில்
குளிக்கையில் இக்காலம்
குளிருமே அதை சொல்லி
நான் எழுத வேறு சொல்லென்றேன்
உடன் பிறந்த அண்ணன் உண்டெனக்கு
உடன் பிறப்பென அக்கா இல்லை
அதை தீர்க்க உடன்பிறவா அக்காவாய்
இணையத்தில் வந்தவளோ
இணையத்தை தலைப்பாக்க
இதைத்தானே கதையின் கருத்து
சொல்கையில் எழுதி விட்டேன்
நான் எழுத வேறு சொல்லென்றேன்
உயிர்த்தோழி உண்டெனக்கு
தொல்லை கொடுத்தேனே
தலைப்புதனை தான் கேட்டு
தோழியோ கொடுத்தாளே
பசும்தோல் போர்த்திய புலிகளின்
பாலின வெறிகளை பற்றியே பகிர்ந்திடுவாயென
அதை தானே கொடுத்தேனே அந்த
நிஷாகந்தி கதைப்புத்தகத்தின் முடிவினிலே
நான் எழுத வேறு சொல்லென்றேன்
தப்பித்து விட்டனரே அனைவரும்
படிக்கும் நண்பர் நீங்களாகினும்
பங்கேற்க ஒரு தலைப்பை
பகிருங்கள் என்னிடம்
பாங்காய் அதையேற்று
பக்குவமாய் எழுதிடுவேன்
பங்கேற்று களித்திடுவேன்
படித்து விட்டு செல்லாதீர்
தலைப்பொன்றை சொல்வீரோ
தேவை ஒரு தலைப்பிங்கே
கவிகளுக்கோர் போட்டியாம்
ஏட்டிக்கு போட்டியாய்
என்னுளே வந்த ஆர்வம்
என்னையும் எழுத தூண்ட
என்ன எழுதவென என்
எண்ணத்தில் வரவில்லை
ஏதும் தோணவில்லை
ஏதேனும் தலைப்பு கேட்டு
என்னவரை நாடி சென்றேன்
எழுதுவது தமிழில் என்றால்
எழுதுவதும் தமிழையே
எடுத்திடலாம் என்றவரை முதலில்
எழுதுகிறேன் பிழையின்றி தமிழை
நான் எழுத வேறு சொல்லென்றேன்
அம்மா என அருமை மகள் அழைத்து
அடுத்து ஒரு தலைப்பு எதற்கு
அழகு மகள் என்னை பற்றி
அருமை கவிதை தாராய் கவியே எனக் கூற
அடடா பிள்ளாய் அன்றுனக்கு தந்ததுவே
பேசும் தெய்வம் என உன்னையே
எழுதினேனே
நான் எழுத வேறு சொல்லென்றேன்
பிள்ளை என் குரல் கேட்டு
பெற்றவளோ தந்திட்டாள்
பெற்ற சுமை நீ அறிவாய்
கற்ற மொழியில் அதை
கவியாய் புனைவாய்
என்று அன்னை கூறிவிட
அன்னையர் தினம் அன்று
அன்னையே உன்னை பிரிந்த கதை
பாசக் கதை எழுதிவிட்டேன் கவியிலே
நான் எழுத வேறு சொல்லென்றேன்
தலைப்புக்கா பஞ்சமிங்கே
அருகினிலே அண்ணன் இருக்கையிலே என்றாரே
அருவியாய் தலைப்பு தருவாரோ என எண்ண
அருவியே தலைப்பு என சொல்ல
அட அண்ணா அருவியில்
குளிக்கையில் இக்காலம்
குளிருமே அதை சொல்லி
நான் எழுத வேறு சொல்லென்றேன்
உடன் பிறந்த அண்ணன் உண்டெனக்கு
உடன் பிறப்பென அக்கா இல்லை
அதை தீர்க்க உடன்பிறவா அக்காவாய்
இணையத்தில் வந்தவளோ
இணையத்தை தலைப்பாக்க
இதைத்தானே கதையின் கருத்து
சொல்கையில் எழுதி விட்டேன்
நான் எழுத வேறு சொல்லென்றேன்
உயிர்த்தோழி உண்டெனக்கு
தொல்லை கொடுத்தேனே
தலைப்புதனை தான் கேட்டு
தோழியோ கொடுத்தாளே
பசும்தோல் போர்த்திய புலிகளின்
பாலின வெறிகளை பற்றியே பகிர்ந்திடுவாயென
அதை தானே கொடுத்தேனே அந்த
நிஷாகந்தி கதைப்புத்தகத்தின் முடிவினிலே
நான் எழுத வேறு சொல்லென்றேன்
தப்பித்து விட்டனரே அனைவரும்
படிக்கும் நண்பர் நீங்களாகினும்
பங்கேற்க ஒரு தலைப்பை
பகிருங்கள் என்னிடம்
பாங்காய் அதையேற்று
பக்குவமாய் எழுதிடுவேன்
பங்கேற்று களித்திடுவேன்
படித்து விட்டு செல்லாதீர்
தலைப்பொன்றை சொல்வீரோ
தேவை ஒரு தலைப்பிங்கே