எனக்கு தீனா பார்த்தா அடிபட்ட குழந்தை போல தான் உள்ளது. பாவம், ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போன முதல் கல்யாணம், தான் தப்பு பண்ணாமல் வாங்கின தண்டனை , பேச்சு எல்லாம் சேர்ந்து மனதளவில் பெரிய பாதிப்பு தீனாக்கு தான். தீனா இன்னும் கல்யாணத்துக்கு ரெடி ஆகவும் இல்ல. நல்லதாய் எதிர்பார்ப்பதற்கு ஒரு பயம், தங்கம் தன்னை பாதிப்பது ஒரு குழப்பம் , வீட்ல எல்லாரும் புதுசா வந்த பொண்ணை கவனிக்கிறாங்க ,நம்மை கவனிக்கல அப்படின்னு.
தங்கம் பத்தி ஒன்னும் இன்னும் தெரியாது அவனுக்கு. தங்கத்திற்கு தீனா முதல் கல்யாணம் நடந்த விஷயம் ரூபிணி பத்தி எல்லாம் தெரியுமா தெரியல. அவன் செகண்ட் கல்யாணம் பண்ணதே பெரிய தப்பா நினைக்கிறவன் கிட்ட போய், மூணாவது கல்யாணம் பத்தி பேசலாமா ? ரொம்ப காயப்பட்டு இருக்கிறவங்களுக்கு கோவம் அதிகமா வரும் இல்லையா? அவங்கள ரொம்ப கண்ணாடி போல கையாளுனும். என்ன இருந்தாலும் அடிச்சது தப்புதான். மன்னிப்பு கேளுப்பா.