09
விக்ரமுடன் தன் மனம் குறித்து பேசியதில் சற்று ஆசுவாசப்பட்ட ஷிகா ஒரு நிறைவான மனதுடனே மருத்துவமனை வாயிலுக்கு வந்து தன் ஸ்கூட்டியை உயிர்ப்பித்தவள் அதில் ஏறி அமர்ந்துகொண்டு முறுக்கி விட்டாள்.
அவள் மனம் போலவே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டி மருத்துவமனைக்கு சற்று அருகிலிருந்த சிறுவர் பூங்காவினுள் நுழைந்தது தன் இயக்கத்தை நிறுத்தியது.
கைகள் அதன்பாட்டுக்கு வண்டியை ஓட்டிக் கொண்டுயிருந்தாலும் மனம் தன்னவனின் நினைவிலே மிதந்து கொண்டிருக்க அவன் நினைவு கொடுத்த சுகமான சுமையை மனதில் சுமந்துகொண்டு வண்டியில் இருந்து இறங்கியவள் தான் நின்ற இடத்தினை பார்த்து அதிசயித்து தான் போனாள்.
மனம் எப்போதெல்லாம் மிகையான சோகத்திலும் சந்தோஷத்திலும் இருக்கின்றதோ அப்போதெல்லாம் அவள் தஞ்சமடைவது இந்த சிறுவர் பூங்காவில் தான். மழலைகளின் மழலை மொழியில் தன் துக்கம் குறைவதையும் கண்டாள். அவர்களின் சந்தோஷ பீறிடலில் தன் இன்பம் பெருகுவதையும் கண்டாள்.
இன்று மனம் சற்று மகிழ்வில் திளைத்திருக்க தன் மனதின் எண்ணம் அறிந்து தன் கைகள் தன்னை சரியான இடம் நோக்கி கொண்டு வந்து விட்டிருக்கின்றது என்ற நினைவில் இதழ்களில் மெல்லிய புன்னகையை தவழ விட்டவள் வழக்கமாய் அமரும் இடத்தில் அமர்ந்துகொண்டு சிறுவர்கள் கலகலப்பாய் சுற்றி திரிவதை வேடிக்கை பார்க்கலானாள்.
*****
“ஹர்ஷு கண்ணா சொன்னா கேட்கனும் பேபி...” மருமகனிடம் பொறுமையாய் கூறிக்கொண்டு இருந்தான் ஆர்யன்.
“முடிது மாமு... நான் போவேன்...” மூக்கை விடைக்க உதட்டை பிதுக்கி அழுவதற்கு தயாரானான் சின்னவன்.
அதை பார்த்து தலையில் அடித்த ஆர்யன் தன் தமக்கையை பாவமாய் பார்த்து வைத்தான். தம்பியின் பார்வையில் நமுட்டு சிரிப்பு சிரித்த மீரா எனக்கும் இதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனும் ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டு துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்தாள்.
அதில் பல்லை கடித்தவன் தன் மருமகன் புறம் திரும்பி அவனை பாவமாய் பார்த்து வைத்தான்.
“ஹர்ஷு கண்ணா மாமுக்கு நிறைய வேலையிருக்கு ஆபீஸ் போகணும்.. நாம வேணா நாளைக்கு போகலாம்... இன்னிக்கு நான் ஷாக்கி வாங்கி கொடுக்கட்டுமா...” ஆவலுடன் கேட்க,
மாமுவின் பதிலில் தலை சாய்த்து கன்னத்தில் கைவைத்து யோசித்த சின்னவன் என்ன நினைத்தானோ மாமவின் நெஞ்சத்தில் சப் சப்பென குத்த ஆரம்பித்தான். அது ஆறடி ஆண்மகனுக்கு தடவிக்கொடுப்பது போலத்தான் இருந்தது. இருந்தும் அழுவது போல் சின்னவன் முன்பு பாவ்லா காட்டிக்கொண்டு முகத்தை கைகளால் மூடிக்கொண்டான்.
மாமுவின் செயலில் அடிப்பதை நிறுத்தியவன் அவன் உடல் அழுகையில் குலுங்கியது கண்டு என்ன நினைத்தானோ தன் பிஞ்சு கையால் அடித்த இடத்தை தடவிக்கொடுத்தான்.
“வலிக்குதா மாமு...” மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டே...
மருமகனின் செயலில் அவன் நெஞ்சம் பாகாய் உருகித்தான் போனது. காயத்தை கொடுத்து அதற்கு மருந்தும் போட சிறு குழந்தைகளால் தான் முடியும் என்பதை உணர்ந்தவன் பாசத்துடன் அவனை இறுக தழுவிக்கொண்டான்.
“மாமுக்கு கொஞ்சம் தான் வலிச்சது....” அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
“நானு...நானு...” தனக்கு முத்தமிட்ட மாமுனுக்கு தான் முத்தம் கொடுத்தவன் அவன் தோளில் சாய்ந்துகொண்டான்.
“ஹெனி... ஷாக்கி கொடுத்த டிஸ்யூம் கொடுக்க சொன்னா...” அழகாய் தன் அத்தையையும் போட்டுக்கொடுத்தான். அதை கேட்டு அப்பிடியா எனும் பாவனையில் தலையசைத்தவன் மருமகனின் முகத்தில் பரவிக்கிடக்கும் சந்தோஷத்தினை கண்டு தன் வேலையை கிடப்பில் போட்டவனாய் சின்னவனை அழைத்துக்கொண்டு அவன் செல்ல விரும்பிய பார்க்கிற்கு அழைத்துச் சென்றான்.
****
ஸ்டாப் ரூமில் மேசையில் தலைசாய்த்து கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஷாஷி. சின்ன சின்ன வேலைகள் இருப்பதால் காலையில் வீட்டில் இருந்தும் வரும்போது பெயருக்கு கொறித்து விட்டு வந்திருக்க அது இப்போது அதன் வேலையை காட்டியிருந்தது.
நிகழ்ச்சி ஆரம்பிக்கவும் உள்ளே சென்று நின்றுகொண்டவளுக்கு நேரம் செல்லச்செல்ல தள்ளாட்டமாய் இருந்தது. கைகால்கள் வலுவிழந்தது போல் இருக்க அதற்கு மேல் நின்றால் மயங்கி விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதால் அவசரமாய் அங்கிருந்து வெளியேறியவள் வெளியில் நின்றுகொண்டிருந்த மாணவர்களை அழைத்து கான்டீனில் ஏதாவது வாங்கி வரும்படி கூறியவள் ஸ்டாப் ரூமிற்குள் தஞ்சமடைந்து கொண்டாள்.
அவர்களும் அவளின் சோர்ந்த தோற்றத்தை பார்த்து அவசரமாய் கான்டீனில் இருந்து உணவு எடுத்து வந்து கொடுக்க உண்ணமுடியாமல் சிறிது நேரம் உணவை வெறித்துப்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் மயக்கம் வரும் போல் இருக்கவும் உணவை உண்டு தண்ணீரை குடித்தவள் களைப்பில் கண்ணயர்ந்து விட்டாள்.
அதற்குள் சில மணித்துளிகள் கடந்திருக்க அப்போதுதான் மெதுவாய் கண்களை மலர்த்தினாள். முன்பைவிட இப்போது பரவாயில்லை என்றாலும் எழுந்தமற மனமில்லாமல் கண்களை மூடி இருந்தவாக்கிலே இருந்தாள்.
அதற்குள் அவளை தேடி வந்த அவள் வகுப்பு மாணவி ப்ரின்சி அழைப்பதாய் கூறவும் சில நொடி அசையாமல் இருந்தவள் பின் முகத்தை சீர் செய்து கொண்டு அவரை தேடிச்சென்றாள்.
மேடையில் தோரணனையாய் அமர்ந்திருந்த ஆர்.கே. கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி ரோஹன் கிருஷ்ணா வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில் இருக்கும் நிலையை தாண்டவும் முடியாமல் தாண்டிடாமலிருக்கவும் முடியாமல் அந்த நூலிடை இடைவெளியில் அல்லாடிக்கொண்டு இருந்தான்.
யாரை பார்க்கவே கூடாது என்று வெறுப்பை சுமந்துகொண்டு இருந்தானோ இன்று அவளே அவன் கண் முன். அவளை பார்ப்போம் என கனவிலும் நினைத்திறாதவன் அவள் எதிர்பாராமல் பார்த்ததில் திகைத்துத்தான் போனான்.
அதுவும் பெண்ணவள் தோற்றம். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்தவளுக்கும் இப்போது இருப்பவளுக்கும் தான் எத்தனை எத்தனை வித்தியாசம். அதை தான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் மேல் மலையளவு வெறுப்பு இருக்கின்றது தான் ஆனால் கடலளவு காதலும் இருக்கிறதல்லவா...
காதல் கொண்ட நெஞ்சம் அவளின் உருக்குலைந்த தோற்றத்தில் துடித்து தான் போனது. சிட்டுக்குருவி போல் சுற்றிதிரிந்தவளின் சிறகை தான் துடிக்க துடிக்க பிய்த்துவிட்டோமோ காலம் கடந்து தோன்றியது.
அதுவும் பெண்ணவளின் தள்ளாடல் கண்களில் இருந்த சோர்வு மெலிந்த தோற்றம் அத்தனையையும் ஒரு நொடியில் படம்பிடித்துக் கொண்டது அவன் விழிகள்.
அவள் சோர்ந்துபோய் அங்கிருந்து சென்றதை பார்த்து பின்னே செல்ல துடித்த கால்களை அடக்கமுடியாமல தவித்தவன் அவளை பார்த்ததும் எங்கோ ஓர் மூலையில் ஓடிச்சென்று மறைந்து கொண்ட வெறுப்பினை இழுத்துப்பிடித்து அவள் பின்னே செல்லாமல் தன்னை தானே தடுத்து நிறுத்திக் கொண்டான்.
காதல் மனமோ அவளை தாங்கிட துடித்தது. அவள் சோர்வு கண்டு தாயாய் மடிதாங்கிட ஏக்கம் கொண்டது. அவள் கரம்பிடித்து நான் இருக்கிறேன் என ஆறுதல் கூற விளைந்தது. அவளை தன் கரத்தில் அல்லாமல் நெஞ்சத்தினில் தாங்கிட துடித்தான் அந்த காதலன்.
ஆனால் அவன் நினைத்த எதையும் அவனால் செய்ய முடியவில்லை. வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில் அவனின் காதல் தோற்ற வலி கோபமாய் உருமாறியது. அவள் தன்னை தன் காதலை அசிங்கப்படுத்தியதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதை நினைக்கும் போதே அன்று தான் அடைந்த அவமானம் நினைவில் எழ அத்தனை நேரம் அவளை காதலுடன் தாலாட்டிக்கொண்டிருந்தவன் சடுதியில் கோபமும் வெறுப்பும் ஆக்கிரமிக்க வெறுப்புடன் அவள் நினைவுகளை தூக்கியெறிந்தான்.
இவள் இல்லை என்றால் ஊர் உலகத்தில் வேறு பெண்ணே இல்லையா என்ற அலட்சியத்துடன்... ஆனால் உள்ளுக்குள் சுருக்கென வலித்தது.
விடாப்பிடியாய் அதை மறைத்துக்கொண்டவன் கம்பீரமாய் கல் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.
ஓய்வு எடுத்தினாலோ என்னவோ தெம்பு வந்தது போல் இருக்க ப்ரின்சியை தேடி சென்றவள் அவர் ஆடிடோரியத்தின் வழியால் வெளியில் வருவதை பார்த்து அவரருகில் விரைந்தாள்.
விக்ரமுடன் தன் மனம் குறித்து பேசியதில் சற்று ஆசுவாசப்பட்ட ஷிகா ஒரு நிறைவான மனதுடனே மருத்துவமனை வாயிலுக்கு வந்து தன் ஸ்கூட்டியை உயிர்ப்பித்தவள் அதில் ஏறி அமர்ந்துகொண்டு முறுக்கி விட்டாள்.
அவள் மனம் போலவே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டி மருத்துவமனைக்கு சற்று அருகிலிருந்த சிறுவர் பூங்காவினுள் நுழைந்தது தன் இயக்கத்தை நிறுத்தியது.
கைகள் அதன்பாட்டுக்கு வண்டியை ஓட்டிக் கொண்டுயிருந்தாலும் மனம் தன்னவனின் நினைவிலே மிதந்து கொண்டிருக்க அவன் நினைவு கொடுத்த சுகமான சுமையை மனதில் சுமந்துகொண்டு வண்டியில் இருந்து இறங்கியவள் தான் நின்ற இடத்தினை பார்த்து அதிசயித்து தான் போனாள்.
மனம் எப்போதெல்லாம் மிகையான சோகத்திலும் சந்தோஷத்திலும் இருக்கின்றதோ அப்போதெல்லாம் அவள் தஞ்சமடைவது இந்த சிறுவர் பூங்காவில் தான். மழலைகளின் மழலை மொழியில் தன் துக்கம் குறைவதையும் கண்டாள். அவர்களின் சந்தோஷ பீறிடலில் தன் இன்பம் பெருகுவதையும் கண்டாள்.
இன்று மனம் சற்று மகிழ்வில் திளைத்திருக்க தன் மனதின் எண்ணம் அறிந்து தன் கைகள் தன்னை சரியான இடம் நோக்கி கொண்டு வந்து விட்டிருக்கின்றது என்ற நினைவில் இதழ்களில் மெல்லிய புன்னகையை தவழ விட்டவள் வழக்கமாய் அமரும் இடத்தில் அமர்ந்துகொண்டு சிறுவர்கள் கலகலப்பாய் சுற்றி திரிவதை வேடிக்கை பார்க்கலானாள்.
*****
“ஹர்ஷு கண்ணா சொன்னா கேட்கனும் பேபி...” மருமகனிடம் பொறுமையாய் கூறிக்கொண்டு இருந்தான் ஆர்யன்.
“முடிது மாமு... நான் போவேன்...” மூக்கை விடைக்க உதட்டை பிதுக்கி அழுவதற்கு தயாரானான் சின்னவன்.
அதை பார்த்து தலையில் அடித்த ஆர்யன் தன் தமக்கையை பாவமாய் பார்த்து வைத்தான். தம்பியின் பார்வையில் நமுட்டு சிரிப்பு சிரித்த மீரா எனக்கும் இதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனும் ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டு துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்தாள்.
அதில் பல்லை கடித்தவன் தன் மருமகன் புறம் திரும்பி அவனை பாவமாய் பார்த்து வைத்தான்.
“ஹர்ஷு கண்ணா மாமுக்கு நிறைய வேலையிருக்கு ஆபீஸ் போகணும்.. நாம வேணா நாளைக்கு போகலாம்... இன்னிக்கு நான் ஷாக்கி வாங்கி கொடுக்கட்டுமா...” ஆவலுடன் கேட்க,
மாமுவின் பதிலில் தலை சாய்த்து கன்னத்தில் கைவைத்து யோசித்த சின்னவன் என்ன நினைத்தானோ மாமவின் நெஞ்சத்தில் சப் சப்பென குத்த ஆரம்பித்தான். அது ஆறடி ஆண்மகனுக்கு தடவிக்கொடுப்பது போலத்தான் இருந்தது. இருந்தும் அழுவது போல் சின்னவன் முன்பு பாவ்லா காட்டிக்கொண்டு முகத்தை கைகளால் மூடிக்கொண்டான்.
மாமுவின் செயலில் அடிப்பதை நிறுத்தியவன் அவன் உடல் அழுகையில் குலுங்கியது கண்டு என்ன நினைத்தானோ தன் பிஞ்சு கையால் அடித்த இடத்தை தடவிக்கொடுத்தான்.
“வலிக்குதா மாமு...” மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டே...
மருமகனின் செயலில் அவன் நெஞ்சம் பாகாய் உருகித்தான் போனது. காயத்தை கொடுத்து அதற்கு மருந்தும் போட சிறு குழந்தைகளால் தான் முடியும் என்பதை உணர்ந்தவன் பாசத்துடன் அவனை இறுக தழுவிக்கொண்டான்.
“மாமுக்கு கொஞ்சம் தான் வலிச்சது....” அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
“நானு...நானு...” தனக்கு முத்தமிட்ட மாமுனுக்கு தான் முத்தம் கொடுத்தவன் அவன் தோளில் சாய்ந்துகொண்டான்.
“ஹெனி... ஷாக்கி கொடுத்த டிஸ்யூம் கொடுக்க சொன்னா...” அழகாய் தன் அத்தையையும் போட்டுக்கொடுத்தான். அதை கேட்டு அப்பிடியா எனும் பாவனையில் தலையசைத்தவன் மருமகனின் முகத்தில் பரவிக்கிடக்கும் சந்தோஷத்தினை கண்டு தன் வேலையை கிடப்பில் போட்டவனாய் சின்னவனை அழைத்துக்கொண்டு அவன் செல்ல விரும்பிய பார்க்கிற்கு அழைத்துச் சென்றான்.
****
ஸ்டாப் ரூமில் மேசையில் தலைசாய்த்து கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஷாஷி. சின்ன சின்ன வேலைகள் இருப்பதால் காலையில் வீட்டில் இருந்தும் வரும்போது பெயருக்கு கொறித்து விட்டு வந்திருக்க அது இப்போது அதன் வேலையை காட்டியிருந்தது.
நிகழ்ச்சி ஆரம்பிக்கவும் உள்ளே சென்று நின்றுகொண்டவளுக்கு நேரம் செல்லச்செல்ல தள்ளாட்டமாய் இருந்தது. கைகால்கள் வலுவிழந்தது போல் இருக்க அதற்கு மேல் நின்றால் மயங்கி விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதால் அவசரமாய் அங்கிருந்து வெளியேறியவள் வெளியில் நின்றுகொண்டிருந்த மாணவர்களை அழைத்து கான்டீனில் ஏதாவது வாங்கி வரும்படி கூறியவள் ஸ்டாப் ரூமிற்குள் தஞ்சமடைந்து கொண்டாள்.
அவர்களும் அவளின் சோர்ந்த தோற்றத்தை பார்த்து அவசரமாய் கான்டீனில் இருந்து உணவு எடுத்து வந்து கொடுக்க உண்ணமுடியாமல் சிறிது நேரம் உணவை வெறித்துப்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் மயக்கம் வரும் போல் இருக்கவும் உணவை உண்டு தண்ணீரை குடித்தவள் களைப்பில் கண்ணயர்ந்து விட்டாள்.
அதற்குள் சில மணித்துளிகள் கடந்திருக்க அப்போதுதான் மெதுவாய் கண்களை மலர்த்தினாள். முன்பைவிட இப்போது பரவாயில்லை என்றாலும் எழுந்தமற மனமில்லாமல் கண்களை மூடி இருந்தவாக்கிலே இருந்தாள்.
அதற்குள் அவளை தேடி வந்த அவள் வகுப்பு மாணவி ப்ரின்சி அழைப்பதாய் கூறவும் சில நொடி அசையாமல் இருந்தவள் பின் முகத்தை சீர் செய்து கொண்டு அவரை தேடிச்சென்றாள்.
மேடையில் தோரணனையாய் அமர்ந்திருந்த ஆர்.கே. கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி ரோஹன் கிருஷ்ணா வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில் இருக்கும் நிலையை தாண்டவும் முடியாமல் தாண்டிடாமலிருக்கவும் முடியாமல் அந்த நூலிடை இடைவெளியில் அல்லாடிக்கொண்டு இருந்தான்.
யாரை பார்க்கவே கூடாது என்று வெறுப்பை சுமந்துகொண்டு இருந்தானோ இன்று அவளே அவன் கண் முன். அவளை பார்ப்போம் என கனவிலும் நினைத்திறாதவன் அவள் எதிர்பாராமல் பார்த்ததில் திகைத்துத்தான் போனான்.
அதுவும் பெண்ணவள் தோற்றம். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்தவளுக்கும் இப்போது இருப்பவளுக்கும் தான் எத்தனை எத்தனை வித்தியாசம். அதை தான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் மேல் மலையளவு வெறுப்பு இருக்கின்றது தான் ஆனால் கடலளவு காதலும் இருக்கிறதல்லவா...
காதல் கொண்ட நெஞ்சம் அவளின் உருக்குலைந்த தோற்றத்தில் துடித்து தான் போனது. சிட்டுக்குருவி போல் சுற்றிதிரிந்தவளின் சிறகை தான் துடிக்க துடிக்க பிய்த்துவிட்டோமோ காலம் கடந்து தோன்றியது.
அதுவும் பெண்ணவளின் தள்ளாடல் கண்களில் இருந்த சோர்வு மெலிந்த தோற்றம் அத்தனையையும் ஒரு நொடியில் படம்பிடித்துக் கொண்டது அவன் விழிகள்.
அவள் சோர்ந்துபோய் அங்கிருந்து சென்றதை பார்த்து பின்னே செல்ல துடித்த கால்களை அடக்கமுடியாமல தவித்தவன் அவளை பார்த்ததும் எங்கோ ஓர் மூலையில் ஓடிச்சென்று மறைந்து கொண்ட வெறுப்பினை இழுத்துப்பிடித்து அவள் பின்னே செல்லாமல் தன்னை தானே தடுத்து நிறுத்திக் கொண்டான்.
காதல் மனமோ அவளை தாங்கிட துடித்தது. அவள் சோர்வு கண்டு தாயாய் மடிதாங்கிட ஏக்கம் கொண்டது. அவள் கரம்பிடித்து நான் இருக்கிறேன் என ஆறுதல் கூற விளைந்தது. அவளை தன் கரத்தில் அல்லாமல் நெஞ்சத்தினில் தாங்கிட துடித்தான் அந்த காதலன்.
ஆனால் அவன் நினைத்த எதையும் அவனால் செய்ய முடியவில்லை. வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில் அவனின் காதல் தோற்ற வலி கோபமாய் உருமாறியது. அவள் தன்னை தன் காதலை அசிங்கப்படுத்தியதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதை நினைக்கும் போதே அன்று தான் அடைந்த அவமானம் நினைவில் எழ அத்தனை நேரம் அவளை காதலுடன் தாலாட்டிக்கொண்டிருந்தவன் சடுதியில் கோபமும் வெறுப்பும் ஆக்கிரமிக்க வெறுப்புடன் அவள் நினைவுகளை தூக்கியெறிந்தான்.
இவள் இல்லை என்றால் ஊர் உலகத்தில் வேறு பெண்ணே இல்லையா என்ற அலட்சியத்துடன்... ஆனால் உள்ளுக்குள் சுருக்கென வலித்தது.
விடாப்பிடியாய் அதை மறைத்துக்கொண்டவன் கம்பீரமாய் கல் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.
ஓய்வு எடுத்தினாலோ என்னவோ தெம்பு வந்தது போல் இருக்க ப்ரின்சியை தேடி சென்றவள் அவர் ஆடிடோரியத்தின் வழியால் வெளியில் வருவதை பார்த்து அவரருகில் விரைந்தாள்.