S
semao
Guest
வாடா கிகிதுளசி....
பூவில் ஒரு அழகு உண்டு. பார்க்கும் போது மனதில் ஆரவாரம் தோன்றும்.
ஆனால் துளசி தனித்தன்மை வாய்ந்தது. பார்க்கையில் மனதில் ஒருவித அமைதி தோன்றும். தன்னை சுற்றி மெல்லிய வாசனை பரப்பி... பிணிகளை விரட்டி... சுத்தமான சூழ்நிலை உருவாக்கி.... காற்றில் மெதுவாக அசைந்தது ஆட ஒரு பூங்கோத்தே ஆடுவது போல... ஈர்க்கும் அழகு...அதனாலேயே எந்த செடிகளை காட்டிலும் துளசி ரொம்ப ஸ்பெசல்...
அதே தனிதன்மை ஈர்க்கும் தன்மையுடன் கதையின் நாயகி துளசி...
துளிசியை புரட்டிபோடும் காற்றாக... அசைத்து வருடும் தென்றலாக திருநீர்வண்ணன்.
செம பேர்....
எனக்கு கதை படிச்சு என்ன என்னவோ பண்ணுது...அந்ந உணர்வுகளை சொல்ல தெரியல... நெடுங்கால வனவாசம் போன்ற வாழ்க்கை. அவள் கொண்ட பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் அதை எல்லாத்தையும் விட அந்த தன்னலம் இல்லா எதையும் எதிர்பார்க்காத காதலுக்கும் அவளுக்கு கிடைத்த உன்னதமான பரிசு திருநீர்வண்ணன்....
மல்லி அக்கா உங்க கதை ஹீரோயின் என்னை ரொம்பவே ஈர்க்கறாங்க.... கதை முடியும் போது மனசு நிறைஞ்சு இப்போதைக்கு வேற எதுவுமே வேணாம் அப்படின்னு தான் தோணுது...
வெல்கம்
படிச்சிட்டியா