யப்பா, கதையை எப்படி
சுத்திக் கொண்டு வந்து
எப்படிலாம் ட்விஸ்ட்டு
வைக்குறீங்க, ரம்யா டியர்?
எந்த நாத்தனார்மாருங்க
என்னிக்கு அண்ணிகளுக்கு
நல்லது செஞ்சிருக்காங்க?
இப்போ பிரவீணா மட்டும்
செஞ்சிடுவாளா?
நீலிமாவைப் பிடித்த அளவுக்கு பிரவீணாவுக்கு ஸ்வர்ணாவை
ஏன் பிடிக்கலை?
ராம் மீது அகிலாண்டேஸ்வரி
பாட்டிக்கு இருக்கும் பாசம்
கூட அண்ணன் மகனின்
மீது பிரவீணாவுக்கு
இல்லையேப்பா?
எல்லாவற்றிற்கும் மேலாக
மகனின் மனம் சென்ற இடம்
இன்னும் தாய் ஸ்வர்ணாவுக்கு
தெரியலை
தெரிந்தால் குழந்தைகள்
இருவருக்காகவே வாழும்
அந்த தாயின் உள்ளம்
தனக்கு பிடிக்காவிட்டாலும்
மகனுக்காக, அபர்ணாவை
மருமகளாக ஏற்றுக்கொள்ளும்
ராம் பிரகாஷின் மனைவியாக
அபர்ணா வந்த-பின் கட்டிய
கணவனிடமே நடிக்கும்
ஆட்டக்காரி நீலிமாவின்
கொட்டம் ஜாஸ்தியாகி
விடுமே?
தன் மூத்த மகளின் திருமணத்திற்கு
போவதற்கு நீலிமாவின்
அனுமதியை எதிர்பார்க்கும்
அந்த கேடுகெட்ட பிரகாஷ்ஷும்
நீலிக்கண்ணீர் வடிக்கும்
நீலிமாவுக்கே காவடித்
தூக்கட்டும்
ஹ்ம்ம்......நடக்கட்டும்
ஸ்வர்ணாம்பிகைதான் பாவம்ப்பா