sema"மாப்பி! உடனே வா. கதிர்வர லேட் ஆகும். அதுக்குள்ள ஒரு விஷயம் பேசணும்" எனப் பாண்டி சக்கரையை அழைக்க, அவனும் யோசனையோடு கடையைவிட்டு அடுத்தப் பத்து நிமிஷத்தில் வந்து நின்றான்.
"எதுக்கு டா அவசரமா கூப்பிட்ட?"
"எல்லாம் கதிர் விழி பத்தி பேசத்தான். தங்கச்சி என்னவோ காதல்னா உணருறதுனு சொல்லுது. அவன் என்னடானா கம்புக்கு தாலி கட்டுன மாதிரி எனக்கென்னனு சுத்திகிட்டு இருக்கான். இப்படியே போச்சுன்னா ஒன்னு நடக்காது. அதுனால என்னோட சைடிஸ்ட் மூளையை வச்சு ஒரு திட்டம் போட்ருக்கேன்" எனக் கூற,
"டேய் பாண்டி. வாழ்க்கையிலையே இப்பதான் உருப்படியான விஷயம் சொல்லிருக்கடா...எனக்கு சங்கடம்மாவே இருந்தது. நீயாச்சும் யோசுச்சியே...சொல்லு என்ன பிளான் ?"
"விழி எழுதுனது போல ஒரு கடுதாசிய (கடிதம்) மாப்பிகிட்டையும், அவன் எழுதுனது போல இன்னொரு கடுதாசிய தங்கச்சிகிட்டையும் கொடுத்தா...அப்படியே லவ் பிக் அப் ஆகிட்டு போகுது" எனச் சாதாரணமாகக் கூற,
"இது வேலைக்கு ஆவுமாடா?"
"டேய் நான் எழுதியிருக்க விஷயம் அப்படிடா....அத படிச்சதும் உள்ள இருந்து கிளம்பும்பாரு... அதுக்கு அப்புறம் நம்மள யாருனு கேட்குற அளவு லவ்ல மூழ்கிடுவாங்க" என நம்பிக்கையாகக் கூற, "சிறப்புடா மாப்பி...காட்டு காட்டு..என்ன எழுதிருக்க. மாப்பி நீ நிஜமாவே மாஸ் பாண்டிதாண்டா" எனப் பாராட்டியபடி கடிதத்தைக் கேட்க, அவனும் இரெண்டு கடிதங்களையும் கொடுத்தான்.
அதைப் படித்த சக்கரையின் முகம் கொதி நிலைக்குச் சென்றுகொண்டிருந்தது....
கனல் விழி கனல் விழி வாராய்
நம் வாழ்வு மணக்கும் ஜோராய் - வாழப்போகிறோம்
பீசும் பிரியாணியுமாய்ப் பாராய்
-- இப்படிக்கு கதிரவன்
கதிரவனே!
என் காஜுகட்லியே
நீ சக்கரையாய்
நான் வெண்பாலாய்
ஆவோமா பால்கோவாவாய்
-- இப்படிக்கு கனல் விழி
இதைப் பார்த்த சக்கரை, பாண்டியை கொலைவெறியுடன் துரத்த பரிதாபமாக மூச்சிரைக்க நின்றவன், "டேய்! எதுக்கு டா தொரத்துற ? நீங்க தானாடா சொல்லுவீங்க. உணர்ந்து பிடிச்சமாதிரி காதல சொல்லணும்னு. அத நானும் பிரியாணி பால்கோவானு உணர்ந்து சொன்னேன். அதோடு டேஸ்ட் தெரியுமாடா உனக்கு ?"
------------------------------------------------------------------------------------------------------------------