மனதினுள்ளே இந்த நாகாவும், தர்மாவும் எங்கே இருப்பார்கள் என்ற கேள்வியே வியாபித்து இருக்க,
“சதீஸ் வீட்டுக்கு யார் வந்தாலும் சரி.. எனக்கு அப்டேட்ஸ் வந்திட்டே இருக்கணும்.. ஒரு த்ரீ டேஸ் நான் இங்க இருக்க மாட்டேன்.. ஆனா இங்க என்ன நடக்குதோ எல்லாம்.. எல்லாமே எனக்குத் தெரிய வரணும். புரிஞ்சதா??!!” என,
“ஓகே சார்..” என்றான் அந்த புதியவன்.
புதியவன் தான்.. இன்றுதான் இவனை வேலைக்கு எடுத்திருந்தான் மிதுன்.. வீட்டினில் இருக்க.. அதாவது வீட்டினில் யார் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று கண்காணிக்க.
உஷா கேட்டதற்கு கூட “ ம்மா எலக்சன் நெருங்கிட்டிருக்கு. நாங்க யாரும் சரியா இங்க இருக்கவும் மாட்டோம்.. ஆனா வீட்டுக்கு நிறைய பேர் வருவாங்க போவாங்க. சோ சதீஸ் இங்க மேனேஜ் பண்ணட்டும்..” என்றுவிட்டான்.
---------------------------
தீபனுக்கு, காதர் வந்து சென்றபின்னே மேலும் தெளிவு கிடைத்தது. முத்துவை தூக்குவதற்கு எல்லாம் செய்துவிட்டான். சரியான நேரம்.. அதற்கான காத்திருப்பு மட்டுமே..
எதையும் நேரம் பார்த்து செய்தால் வெற்றி நிச்சயம்.. அதற்குத்தான் காத்திருந்தான் தீபன்.. இம்முறை யாரையும் விட்டுவைப்பதாய் இல்லை என்ற முடிவு செய்தாகிவிட்டது.
அது யாராகா இருந்தாலும்..!!
சக்ரவர்த்தியோ “நீ ரொம்ப இதை போட்டு சிந்திக்காத..” என,
“இல்லப்பா.. இவ்வளோ பண்ணிட்டு கடைசில போனா போகட்டும்னு விட முடியாது..” என்று இவனும் சொல்ல,
“இதெல்லாம் பார்த்துக்க ஆள் இருக்குடா.. நீ ஏன் இப்படி அலையுற..” என்றவர், “வா என்னோட தொகுதிக்கு போகலாம்..” என்று அழைத்துச் சென்றுவிட்டார்.
எப்போதும் அப்படி செய்திடமாட்டார். அழைத்தாலும் தீபன் வர மாட்டான்..
ஆனால் இன்று அவனும் கிளம்பிட, சதீஸ் மூலமாய் இவ்விசயம் மிதுனுக்கு போக, ஏற்கனவே ஒருசிலர் அப்பாவிடம் உங்களுக்கு அப்புறம் சின்ன தம்பி வந்தா நல்லாருக்கும் என்று சொன்னதும் இவனுக்கு செய்தி வந்திருக்க, மேலும் மேலும் அவனுள் வன்மம் கூடியது..
-------------------------
அனுராகா, அவளோடு யாருமில்லை.. யாருமில்லை என்று தெரிந்து தான் வந்திருந்தான்.. ட்ரிப்ஸ் எடுத்திருந்தார்கள். ஓரளவு உடல் தேறியிருந்தது. இன்னும் இரண்டொரு நாளில் வீட்டிற்க்கும் கிளம்பிடுவாள். எல்லாம் தெரிந்து தான் வந்திருந்தான்..
நல்ல உறக்கத்தில் இருக்க, அவனோ அவளின் அருகே அமர்ந்து கன்னத்தில் கை வைத்து உறங்கும் அவளை ரசித்துக்கொண்டு இருந்தான்.
‘இந்த ஹாஸ்பிட்டல் ட்ரெஸ் உனக்கு சூட்டே ஆகலை ராகா..’ என்று அவனுள்ளம் நினைக்க,
அங்கே நர்ஸ் வந்தவளோ, அவன் அமர்ந்திருந்த விதம் கண்டு ஒருநொடி திடுக்கிட்டாலும், கேள்வி கேட்க முடியாதே ஆக “சார் ஆயின்மென்ட் போடணும்..” என,
“போடுங்க..” என்றான் அவனும் கூலாக..
“சார்..!!” என்று திகைத்தவள் “நீ.. நீங்க முன்னாடி வெய்ட் பண்ணுங்க..” என,
“ஓ!!” என்றவன், “கொடுத்துட்டு போங்க.. நான் போட்டுவிடறேன்..” என,
“சார்..!!!” என்று இன்னமும் அந்த நர்ஸ் திகைக்க, இவர்களின் சத்தம் கேட்டு அனுராகாவும் கண்விழிக்க,
‘நீ என்ன இங்க??!!’ என்றுதான் பார்த்தாள் அவள்.
“சதீஸ் வீட்டுக்கு யார் வந்தாலும் சரி.. எனக்கு அப்டேட்ஸ் வந்திட்டே இருக்கணும்.. ஒரு த்ரீ டேஸ் நான் இங்க இருக்க மாட்டேன்.. ஆனா இங்க என்ன நடக்குதோ எல்லாம்.. எல்லாமே எனக்குத் தெரிய வரணும். புரிஞ்சதா??!!” என,
“ஓகே சார்..” என்றான் அந்த புதியவன்.
புதியவன் தான்.. இன்றுதான் இவனை வேலைக்கு எடுத்திருந்தான் மிதுன்.. வீட்டினில் இருக்க.. அதாவது வீட்டினில் யார் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று கண்காணிக்க.
உஷா கேட்டதற்கு கூட “ ம்மா எலக்சன் நெருங்கிட்டிருக்கு. நாங்க யாரும் சரியா இங்க இருக்கவும் மாட்டோம்.. ஆனா வீட்டுக்கு நிறைய பேர் வருவாங்க போவாங்க. சோ சதீஸ் இங்க மேனேஜ் பண்ணட்டும்..” என்றுவிட்டான்.
---------------------------
தீபனுக்கு, காதர் வந்து சென்றபின்னே மேலும் தெளிவு கிடைத்தது. முத்துவை தூக்குவதற்கு எல்லாம் செய்துவிட்டான். சரியான நேரம்.. அதற்கான காத்திருப்பு மட்டுமே..
எதையும் நேரம் பார்த்து செய்தால் வெற்றி நிச்சயம்.. அதற்குத்தான் காத்திருந்தான் தீபன்.. இம்முறை யாரையும் விட்டுவைப்பதாய் இல்லை என்ற முடிவு செய்தாகிவிட்டது.
அது யாராகா இருந்தாலும்..!!
சக்ரவர்த்தியோ “நீ ரொம்ப இதை போட்டு சிந்திக்காத..” என,
“இல்லப்பா.. இவ்வளோ பண்ணிட்டு கடைசில போனா போகட்டும்னு விட முடியாது..” என்று இவனும் சொல்ல,
“இதெல்லாம் பார்த்துக்க ஆள் இருக்குடா.. நீ ஏன் இப்படி அலையுற..” என்றவர், “வா என்னோட தொகுதிக்கு போகலாம்..” என்று அழைத்துச் சென்றுவிட்டார்.
எப்போதும் அப்படி செய்திடமாட்டார். அழைத்தாலும் தீபன் வர மாட்டான்..
ஆனால் இன்று அவனும் கிளம்பிட, சதீஸ் மூலமாய் இவ்விசயம் மிதுனுக்கு போக, ஏற்கனவே ஒருசிலர் அப்பாவிடம் உங்களுக்கு அப்புறம் சின்ன தம்பி வந்தா நல்லாருக்கும் என்று சொன்னதும் இவனுக்கு செய்தி வந்திருக்க, மேலும் மேலும் அவனுள் வன்மம் கூடியது..
-------------------------
அனுராகா, அவளோடு யாருமில்லை.. யாருமில்லை என்று தெரிந்து தான் வந்திருந்தான்.. ட்ரிப்ஸ் எடுத்திருந்தார்கள். ஓரளவு உடல் தேறியிருந்தது. இன்னும் இரண்டொரு நாளில் வீட்டிற்க்கும் கிளம்பிடுவாள். எல்லாம் தெரிந்து தான் வந்திருந்தான்..
நல்ல உறக்கத்தில் இருக்க, அவனோ அவளின் அருகே அமர்ந்து கன்னத்தில் கை வைத்து உறங்கும் அவளை ரசித்துக்கொண்டு இருந்தான்.
‘இந்த ஹாஸ்பிட்டல் ட்ரெஸ் உனக்கு சூட்டே ஆகலை ராகா..’ என்று அவனுள்ளம் நினைக்க,
அங்கே நர்ஸ் வந்தவளோ, அவன் அமர்ந்திருந்த விதம் கண்டு ஒருநொடி திடுக்கிட்டாலும், கேள்வி கேட்க முடியாதே ஆக “சார் ஆயின்மென்ட் போடணும்..” என,
“போடுங்க..” என்றான் அவனும் கூலாக..
“சார்..!!” என்று திகைத்தவள் “நீ.. நீங்க முன்னாடி வெய்ட் பண்ணுங்க..” என,
“ஓ!!” என்றவன், “கொடுத்துட்டு போங்க.. நான் போட்டுவிடறேன்..” என,
“சார்..!!!” என்று இன்னமும் அந்த நர்ஸ் திகைக்க, இவர்களின் சத்தம் கேட்டு அனுராகாவும் கண்விழிக்க,
‘நீ என்ன இங்க??!!’ என்றுதான் பார்த்தாள் அவள்.