அந்த வீட்டில், மனோகரன் மற்றும் SNP இருவர் மட்டுமே.. இருவருக்குமே அடி சற்று பலமாய் இருந்தது.. மனோகரன், SNP யை , கட்டியிருந்த சேர்-ருடன் தூக்கி, மீண்டும் அமர்த்தியிருந்தான். பக்கத்தில் இருந்த நாற்காலியில், அமர்ந்து, கோணலாய் ஒரு சிரிப்புடன், "எப்படி இருந்துச்சு ?", கேலியாய் கூற... அடுத்த நொடி என்ன நடந்ததென தெரியும் முன், SNP எழுந்து நின்று, கொத்தாய் அவன் சட்டையை பிடித்து, "நீயெல்லாம் ஒரு ஆளு?, எனக்கு சரியான ஆளாடா நீ?, நீதான் இதுக்கு பின்னாடி இருக்கன்னு தெரிஞ்ச உடனே, உன்னை தூக்கி உள்ள போட சொல்லி இருக்கணும். உன் குழந்தைக்காக பாத்தது தப்பா போச்சு", மனோகரனை பளார் பளாரென அடித்தவாறே பேசினான் , சூர்யா நாராயண பிரகாஷ்..
மனோகரன் தள்ளிவிட்டதில், SNPயினை இருக்கையுடன் கட்டியிருந்த கயிறு சற்றே தளர, அடுத்த இரண்டு மூன்று நிமிடங்களில், முயன்று கயிற்றினை அவிழ்த்து கட்டுகளில் இருந்து வெளி வந்தவன், ஆத்திரத்தில் மனோகரனின் மேல் பாய்ந்திருந்தான். ருத்ர அவதாரமே எடுத்திருந்தான், ஒரு பக்கம் அவனது தொழிலுக்கு இவனால், ஏற்பட்ட களங்கம்... மறுபுறம் இந்த மன உளைச்சல், என பிரச்சனைகள் மனத்துள் வலம் வர, கோபத்தையும் ஒரு அளவிற்கு மேல் காட்டாத SNPயே , மனோகரனின் கழுத்தில் கைவைத்து, அவனை சுவற்றோடு சேர்த்து தூக்கி நிறுத்தினான்... மூச்சு காற்றுக்கு அவன் தடுமாற....
SNP அலைபேசியின் கடைசி அழைப்பின் சிக்னலை வைத்து, பரிதி இவர்களின் இருப்பிடம் தேடி வநதிருந்தான். கதவு தாளிடப்பட்டிருக்க, உடைக்கப் பணித்தான்..
கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டும், SNP-யின் கவனம் திரும்பவில்லை.. கைகளையும் மனோகரனின் குரல்வளையில் இருந்து எடுக்கவில்லை... அதில் அவனது கால்கள் தொய்ய ஆரம்பிக்கும் போது .... "ஓஹ் மை காட்...!!!! ப்ளீஸ் மாமா, விடுங்க, விடுங்க. செத்துற போறான்", இளம்பரிதியின் பதட்டமான குரலை கேட்ட பின்புதான் சற்று அமைதியாகி, கையினை தளர்த்த, மனோகரன் வேரற்ற மரம்போல் வீழ்ந்து, இருமி, செருமி, மூச்சினை உள்ளிழுத்து, தன் உயிரை காப்பாற்றி கொண்டான்.
"போகட்டும், யூஸ்லெஸ், ஷேம்லெஸ் ஃபெல்லோ", SNP வெறுப்புடன் வார்த்தையை உமிழ்ந்தான்.
மெதுவாக எழுந்த மனோகரனின் கைகளில் விலங்கு பூட்டி "கான்ஸ்டபிள் , இவனை கூட்டிட்டு போங்க..", என்று, பரிதி சக காவலரிடம் பொறுப்பினை கொடுத்து, அங்கிருந்த பென் டிரைவ்-வினை கையில் எடுத்து பாக்கெட்டில் வைத்தான்..
"இளா , இதை சரண் பாத்துட்டாளா?", SNP க்குகேட்கும் போதே வேதனையில் குரல் நடுங்கியது .
"ம்ம்.. பாத்திருப்பாங்க.. எனக்கு தெரியாது, ஆனா, ஒரு நேரத்துல 5 பேருக்கு தான் வாட்ஸப் பதிவை அனுப்ப முடியும்-கிறதால, நமக்கு மட்டும்தான் வந்திருக்கு. எனக்கு அந்த மெசேஜ் வந்த உடனே, இன்டர்நெட் மொத்தமா ப்ளாக் பண்ணிட்டேன்."
"யா தெரியும், என் மொபைல்-லதான் அதை டவுன்லோட் பண்ணி, உங்க நம்பருக்கெல்லாம் அனுப்பினான் ", வண்டியில் வந்தவாறே இந்த உரையாடல்கள் இருவருக்குள்ளும், பாஸ்கர் அமைதியாய் டிரைவ் செய்தான். அவனுக்கு அப்பா SNPயிடம் எவ்வாறு ஆறுதல் சொல்வதென்பது விளங்கவில்லை. கூடவே இருப்பதுதான் இப்பொழுது அவனால் செய்ய முடிந்த ஒரே செயல் என்பதை உணர்ந்து, மனோகரனை கைது செய்யும் படலம் முடிந்ததும், தந்தை, மாமா இருவரையும் ஏற்றி.. இரவின் நிசப்தத்தை கலைத்து வீடு நோக்கி வாகனத்தை செலுத்தினான்.
இதனிடையே, இளம்பரிதிக்கு, மார்பிங் கும்பலை பிடித்துவிட்டதாக தகவல் அலைபேசியில் வர, "வீடியோ வேற எதுலாயாவது காப்பி பண்ணிருக்காங்களா?",பரிதி கேட்டான்.
"இல்ல சார் , அதே ஹோட்டல்-ல்ல தண்ணியடிச்சிட்டு இருந்தாங்க. தரோவா செக் பண்ணிட்டோம்.. ஒண்ணுமில்ல.. "
"சரி அப்போ இன்டெர்நெட் கனெக்சன் சரியாக்குங்க. பேப்பர் ஒர்க்-ல்லாம் நாளைக்கு தர்றேன்-ன்னு சொல்லுங்க, தேவைன்னா எங்கூட பேச சொல்லுங்க.. " என்று அலைபேசியை துண்டித்தான். அதற்குள் வீடும் வந்திருந்தது.
காலையில் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாய் இருந்த வீடு, மனோகரனிடம் மாட்டியபோது, மீண்டு(ம்) இங்கே வருவோமா என்று நினைத்தது SNP -ன் கண்முன் வந்தது, இப்பொழுதும் அமைதியாய் தான் இருந்தது, ஆனால் உள்ளே போகும் மூவருக்கும், அசௌகரியமான நிலை. என்ன வரப்போகிறதோ?
+++++++++++++++++++++++++
தயக்கங்கள் எல்லாம் வீட்டின் உள்ளே நுழையும் வரையே.. ஹாலில், சந்தடி கேட்டு , சமையலில் இருந்து வெளி வந்த சரண், பரிதியை நோக்கி "வாங்க, நீங்க சொன்ன மாதிரி.. தியா சாயங்காலமே வந்துட்டா, கொஞ்சம் டையர்டா தெரிஞ்சா.. அதான் டிபன் சீக்கிரம் தந்து அவ ரூம்-ல தூங்க சொல்லிட்டேன்."
"ஓகே அத்தை ", இது பரிதி.
"நரேன்.. உங்களுக்கு டிபன் தரட்டா? காஃபி யா? பிரெஷ் அப்பாகி வர்றீங்களா? மணி பத்தாச்சு", சரண் மிக மிக இயல்பாய் இருந்தாள் ..
வாசலில் இருந்து உள்நுழைந்த SNP , இன்னமும் தனது பார்வையை சாயாவிடத்திருந்து அகற்றி இருக்கவில்லை.... பூக்களை அடுக்க உபயோகிக்கும் டேபிளில் சாய்ந்து கைகளை மார்புக்கு குறுக்காய் காட்டியவாறு தீர்க்கமாய் பார்த்துக்கொண்டு இருந்தான்...
"நீயென்னடா சும்மா நிக்கற? போ ட்ரெஸ் மாத்திட்டு வா, கல்பா , இவனுக்கு என்ன வேணும்-னு பாரு?, உங்கம்மா பால் கேட்டாங்க , கொடுத்தாச்சா?" என....
"ஆங்.. தோ வர்றேன் .. அம்மாக்கு பால் கொடுத்துட்டேன் த்தை , இந்நேரம் தூங்கி இருப்பாங்க", பதில் வந்தது , கிச்சனில் இருந்து.. பேசியது கல்பலதிகா. அவளும் அம்மாவும் கெஸ்ட் ரூமில் தங்கி இருந்தனர்.
ஆண்கள் ... வீட்டில் ஒரு புயலை எதிர்பார்த்திருக்க.. இங்கே பெண்கள் என்னடாவென்றால், அவரவர்கள், அவரவர் வேளைகளில் பிஸியாய் இருந்தனர்... பாஸ்கரும் , பரிதியும் அறைக்கு செல்ல..., SNP மட்டும் அசையாது , இப்பொழுதும் அதே பார்வை, அதே போஸில் நின்று கொண்டிருந்தான் .
ஆழ மூச்செடுத்து கேட்டான்.."சரண்... "சற்று சத்தமாய் கூப்பிட,
"ஆங்.. சொல்லுங்க..", என கிட்டே வந்து நின்றாள் . நிதானமாய் அவள் விழிகளை ஊடுருவி, "எங்கிட்ட ஏதாவது கேட்கணுமா?", ஆழம் பார்க்கும் கேள்வி... அழுத்தமான கேள்வி... கேட்டான் SNP . எதுவாகினும் கேள்.. உனக்கு பதிலுரைக்க கடமைப்பட்டவன் நான் என்பதாய் கேட்க..
இப்படியொரு சூழலை கனவிலும் நினையாத சரண்யுசாயா கண்கள் கலங்கியது.."அப்படி கேட்டா.. நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாம போயிடும் நரேன். சொல்ல வேண்டிய விஷயமா இருந்தா நீங்களே சொல்லியிருக்க மாட்டிங்களா?”, அவனையும் விட அழுத்தமாய், நேர்பார்வையுடன் மனைவியின் பதில்...
இது வரை மனதை பிசைந்த பாரமெல்லாம், சரண் கூறிய பதிலில் காணாமல் கரைந்து போக, ஒருமுறை கண்மூடி "ஹூஃப் .... ", பெரிதாய் மூச்சு விட்டான், சூர்யநாராயண பிரகாஷ்.. இதைவிட அருமையாய் ஒரு மனைவி கணவனை பெருமை படுத்த முடியுமா என்ன ? கண் திறந்தவன் , உலகத்தில் உள்ள மொத்த அன்பையும் கண்களில் தேக்கி பார்த்தான் நரேன், அவன் மனைவியை. எத்தனை உயரம் தொட்ட பின்னும் கிடைக்காத ஒரு நிறைவு, அவனிடம்...
"சரண்... ", நரேன், அவளைப் பார்த்து அழைத்தான்..வார்த்தை கரகரத்தது .. இரு கைகளை விரித்து "வா", என்றான் ...
நிமிர்ந்து நரேனை பார்த்த சாயாவிற்கு அனைத்தும் மங்கலாய்...கண்ணீர் ததும்பி நிற்கையில்.. எதை காண? சிமிட்டங்காரியாய், வேகமாய் இமை சிமிட்டி பார்க்கையில்.. பெருமையாய், முக விகசிப்புடன், கைவிரித்திருந்த கணவன் தெரிய....அடுத்த நொடி அவனிடம், அழகாய் பொருந்தியிருந்தாள், சாயா...
"அவ்வளவு நம்பிக்கையா என்மேல?",
"ம்ம். எனக்கு SNP -யை கொஞ்சமாத்தான் தெரியும்.. ஆனா என்னோட நரேனை, மொத்தமா தெரியும்.. உங்க விரல் நகம் கூட இன்னொரு பொண்ணை தொடாதுன்னு தெரியும் ... இத்தனை வருஷத்துல, ஒரு பார்வை கூட அடுத்த பொண்ணு மேல தப்பா பட்டு நான் பாத்ததில்லை.", சொன்னவள் நிமிர்ந்து நரேன் முகம் பார்த்து தொடர்ந்தாள் "அந்த வீடியோல ... நடந்து ரூம்க்குள்ள போய் நிக்கற வரைக்கும் தான் நீங்க இருக்கீங்க, அப்பறம் இருந்ததெல்லாம் வேற யாரோ. நீங்க பாத்தீங்களா?"..
இவனுக்கே தெரியாத விஷயங்கள், வீடியோ பதிவினை பார்க்க ஆரம்பித்த உடனே, வேறொரு பெண்ணை தான் அனைத்திருப்பது தெரிய, ஒரு வித அசூயை வர, அதன் பின்னர் வந்த காட்சிகள் எதுவுமே SNP -ன் மூளையை எட்டவில்லை. உடனே, சரண் குறித்து, இவள் வருந்துவளோ, என்ற நினைவு மட்டுமே இருந்தது.
இல்லையென்று தலையசைத்தான்.. அவனை நேர்பார்வையாய் பார்த்து "ஒரு விஷயம் சொல்றேன் நரேன், அந்த வீடியோல இருந்தது நீங்களாவே இருந்தாலுமே, நான் நம்பியிருக்க மாட்டேன். உங்கள யாரோ மிரட்டி, செய்யவைக்கறாங்கன்னு தான் நினைப்பேன்.. நிச்சயமா, சந்தேகப் பட்டிருக்க மாட்டேன்.", என சரண் கூற.. திகைத்து நின்றான் நரேன். திருமணத்தின் தத்துவத்தை, நம்பிக்கை என்னும் சாரத்தை, மிக எளிமையாய் வார்த்தைகளில், நரேனுக்கு புரிய வைத்தாள், சரண்யுசாயா.
"தேங்க்ஸ்டி ...”, நெகிழ்ந்திருந்தான்.. .. வெறும் பேச்சாலேயே விண்ணையும் வசப்படுத்தும் தி கிரேட் SNP –க்கு வார்த்தைகள் பஞ்சமாயின. “ இந்த உலகமே என் கைக்குள்ள வந்த feel ... லவ் யூ பொண்டாட்டி..."..
"ம்ம்.. சரி சரி... இன்னும் உளறிட்டு நிக்காம, டிரஸ் மாத்திட்டு வாங்க..", என்றவள்.. அவன் உள்ளே செல்ல திரும்பியதும் , சட்டென முதுகோடு இறுக்கி அணைத்து, "லவ் யூ நரேன் ".. என்றாள் ஆத்மார்த்தமாய் ..., சொன்னவள், அவன் திரும்பி பார்க்கும் முன் சிட்டாய் பறந்திருந்தாள்.
சூர்ய நாராயண பிரகாஷின் முகம் காலை சூரியனாய் ஜொலித்தது.
அவளும் நானும் - அமுதும் தமிழும்
அவளும் நானும் - அலையும் கடலும்
அவளும் நானும் - தவமும் அருளும்
அவளும் நானும் - வேரும் மரமும்
அவளும் நானும் - தேனும் இனிப்பும்
அவளும் நானும் - சிிப்பும் மகிழ்வும்
அவளும் நானும் - திங்களும் குளிரும்
அவளும் நானும் - கதிரும் ஒளியும்
நானும் அவளும்......
உயிரும் உடம்பும்......
நரம்பும் யாழும்.......
..... பூவும் மணமும்.....
மொழிவோம்...