hi friend PM
உங்கள் முதல் பக்கத்தில் நீங்க கொடுத்துள்ளதை படித்தேன் ஒரு எழுத்தாளர் இப்படி சொல்லக்கூடாது எல்லாவிதமான கருத்துக்களையும் கூர்ந்து கவனித்து என்னை வளர்த்தெடுப்பேன் என்று சொன்னால் நல்ல இருக்கும் அது என்ன கலாயங்கனு....... சொல்வது
தமிழ் கூறும் நல் வார்த்தைகள் பேசுவதும் எழுதுவதும் எவ்வளவு உயர்ந்தது தெரியுங்களா???? நான் தமிழை நேசிப்பவள் இது மிகவும் சதாரண வார்த்தை தமிழ் மொழியை பற்றி அவ்வ்ளவு வெறியானவள் உடனே பொல்டிக்ஸ் என்று தமிழை கொச்சை படுத்திவிடாதீங்க……… நீங்க தமிழில் கதை எழுதி இருக்கீங்க உங்கள் தாய் மொழியில் என் தாய் மொழியில் நல்ல வார்த்தைகள் கொண்டு என் இனிய தமிழுக்கு சேவை செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்
எப்பவும் ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் சொல்லுவாங்க அதிலும் நீங்க ஒரு ரைடர் ஆகனும் முயற்சி பண்ணும் போது மிக கவனமுடன் இருக்கணும் ஒரு கமெண்டு போடுவதில் கூட எந்த அர்த்தமில்லாததோ மிகை படுத்தப்பட்ட கருத்தோ அல்லது எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளட்டும் என்ற நிலையிலோ ஒரு கருத்து அமையக்கூடாது இது எல்லா எழுத்தாளருக்கும் பொருந்தும் நீங்கள் போடும் கமெண்டு கூட சிந்திக்க கூடியாதகவும் படிப்பவர்களை அடுத்த நிலைக்கு நல்ல சிந்தனைகக்கு இழுத்து செல்வதாக இருக்க வேண்டும் நிந்திப்பதாகவோ குறிகிய வட்ட த்தினுள் மாட்டி கொண்டதாகவோ இருக்க கூடாது அப்பதான் வளர்ச்சி பாதை விரிவடையும் இல்லா விட்டால் ??????????
என்னடானா இவ பெரிய அல்டடல் மாதிரி பேசறானு நினைச்சீங்கனா நான் என்ன பண்ணுவது நான் போன தலை முறையாளர்களின் கதைகளில் மூழ்கிய எழுந்தவள் லெஜண்டு வரிசை பட்டியலில் உள்ள எல்லார் எழுத்துக்களும் கரைத்து குடித்தவள் என் வீடு என் பாட்டி அம்மா அப்பா மாமனார் கணவர் கசின்ஸ் ......... இருந்து அனைவரும்கதை புத்தகம் படிப்பவர்கள் இது எதற்கு விடுங்க நா பார்த்தசாரதி, கல்கி ,தீ ஜானகிராமன் போன்றோ புத்தகங்களை படிச்சு பாருங்க ஒரே கதையை பல தடவ வாசிங்க அதுவும் தீ ஜானகிராமன் கதை மரப்பசு அவரின் சிறுகதை தொகுப்பு படிங்க 10 ,15 நாட் கள் எந்த கதையும் படிக்க முடியாது அவ்வளவு தாக்கம் இருக்கும் ,எழுத்து சித்தர் பாலகுமாரன்!!!!! விக்ஷின் நான் விகிஷன் சுஜாதா!!! அவர் பெண் என்னும் தலைப்பு கொண்டு கதை போல் ஒரு புக்கு எழுதி இருப்பார் சூப்பரா இருக்கும் வாஸந்தி கதைகள் மனதை வருடும் அனுராதாராமன் அவங்க கதையை படிக்கும் போது சிரிக்கலாம் அழலாம் இந்துமதி யப்பா இப்படி பல ….இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் பேசணும் என்று இருந்தாலும் டைமில்லை என் சம்பளத்தில் நான் லெண்டிங் லைப்பிரரிக்கு கொடுத்ததில் ஒரு சொத்தே வாங்கி இருக்கலாம் என்று திட்டு வாங்கியவள்