Manimegalai
Well-Known Member
மிக அருமையான கருத்துக்கள் அண்ணா,பொன்ஸ் சகோதரி, தங்களின் கனவுகளின் சுயவரமே நாவல் பற்றி சில வார்த்தைகள், பொதுவாக நாவல் இருவகைப்படும். காதல்,காதல்சிக்கல் நாவல் ஒன்று, குடும்பம்,குடும்பஉறவுகள் என இருவகைபடும்.ஆனால் நீங்கள் தன்னம்பிக்கை,சமையல்குறிப்பு,காதல்,மோதல்,பாசம்,சோகம்,நகைசுவை,பிறஉதவிநாடமை,சுயமுன்னேற்றம் என நவரத்தினமாலை போல் நவரத்தின நாவல் படைந்துள்ளீர்.தங்களின் ஹீரோயின் இருவரும் கைம்பெண்கள். ஆம், நம்பிக்{கை] பெண்கள்தான்.மீனாக்ஷியம்மா,மித்ரா இருவரும் வயதில் இருதுருவம்,ஆனால் வாழ்வில் நேர்{மை}துருவம்.நம் அம்மா இப்படி இருக்கவேண்டும் என நினைக்கும் மீனாட்சி அம்மா. இப்படி இருக்கவேண்டும் என நினைக்கும் {விக்னேஷ்,வினி} பிள்ளைகள், நண்பர்கள்,குழந்தை,வேலைஆள்,திருத்தியஉறவுகள் என அனைவரும் அருமை. விக்னேஸ்வரன் அருமையான மனிதன். சிறந்த ஹீரோ.ஆனால் மீனாட்சிஅம்மாவின் பாத்திரம் பின்தான் தெரிகிறர்.நம்மைவிட அவருக்கு மிக சந்தோசம்ஏனெனில் அவர் அம்மாபிள்ளை. சதிஷ்-வினி ஜோடி மோதல் ஜோடி அருமை. ஆசிரியர் ஆகிய நீங்கள் ஒரு புது துறையே {IT} எங்களுக்கு புரியும் படி எழுதியுள்ளீர் அருமை. இரு வகை காதல்,இரு வகை காதல் கல்யாணம் என எழுதியது அருமை. சொத்து,சொத்து என அலையாதீர்,உங்களுக்கு சேரவேண்டியது இறைஅருளால் உங்களிடம் வரும் என போகிறபோக்கில் அசால்டாக கூறியுள்ளீர்.சிறந்த படிப்பாளிகள் குழப்பவாதிகள் என்ற மாயகருத்தை உடைத்து,சிறந்த படிப்பாளிகள் சிறந்த படைப்பாளிகள் என மீண்டும் உங்கள் மூலம் நிறுபனம் ஆகியிருக்கு.சில தெரியாத பழக்கவழக்கங்களை அறிமுகம்{தாலி செயின்}செய்துள்ளீர்.அருமை.ஒரே பதிவில் கண்ணீரையும்,.ஒரே பதிவில் நகைசுவையும் இயல்பாக வருகிறதுசகோதரி .மிக மிக சில இடங்களில் எழுத்து பிழை வருகிறது சகோதரி, அது என் கண் குறைபாடா அல்லது என் கவனகுறைபாடா தெரியவில்லைசகோதரி. ஒரு துளியோண்டு செய்தி சகோதரி,நிறைய உபசெய்திகளை இன்நாவலில் சேர்த்துள்ளீர்,இரண்டு,மூன்று நாவலுக்குதேவையானது. பின் நாளில் நீங்கள் எழுதும் கதைக்கு தேவை எதிர்பார்ப்பை எற்படுத்தும்.உங்களால் முடியும். இதயத்துக்கு இதம் தரும் நாவல் படைத்ததுக்கு நன்றிகள் சகோதரி அன்புடன் V.முருகேசன்.
ஒரு கருத்து போட்டாலும் எல்லாம் அதில் இருக்கு....சூப்பர் புரோ.