சகோதரி சரயு அவர்களுக்கு,
உங்களின் குறுநாவல் என் ஆசை உன்னோரமே பற்றி சில வரிகள். இந்த நாவல் படிக்கும் போது இரவினில் மெல்லிசை கேட்பது போல் ஒரு உணர்வு.
தந்தையிடம் தோன்றத பாதுகாப்பு உணர்வு, திருமணம் செய்ய போகும் அத்தை மகனிடம் வராத காதல், ஹீரோ நவீனிடம் கிடைக்க பெற்ற நந்தினிக்கு, காதல் சொல்லாமல் சூழ்நிலையால் திருமணம் நடைபெறுகிறது. பின் நவீனின் சமயோச்சித நடவடிக்கையால் குடும்பம் இணைகிறது.
நம்பி வரும் பெண்ணை கைவிடகூடாது என்று நினைக்கும் தர்மா சாஸ்தா குடும்பம் அருமை. நந்தினியின் விஷயத்தை கோபப்படாமால் அருமையாக கையாண்டு குடும்ப அமைதி தேடிய சாஸ்தா உண்மையில் தர்மா சாஸ்தா தான். அவரின் மனைவி மணியாள் அருமை குடும்பதலைவி. அவரின் மகன்கள் நரேன், நவீன் அருமை. அதேபோல் பெண்ணின் பாதுகாப்பு ஒன்றே குறிகோள் கொண்டு இருக்கும் சுப்புராஜ், சிந்தாமணி நாம் சந்திக்கும் சகமனிதர்கள். மாமன் மகளிடம் அதீதியஉரிமை கொண்டு நடக்கும் நாகராஜ் அவர் அம்மா ராஜூ கிராமமனிதர்கள். இவ்வாறு தினமும் நம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களை கொண்டு அருமை நாவல் படைத்ததுக்கு வாழ்த்துகள் சகோதரி. நல்ல நாவல் சகோதரி.
கண்ட நாள் முதலாய் காதலா
கண்டு கொள்ளவில்லை..
இணையில்லாத ஒருவன்
துணையாய் வந்திடுவானோ
என்று தவிக்கையில்
தவிப்பினை உணர்ந்து
அவனது சிறு செயல் மூலம்
எனக்கு ஒரு நம்பிக்கையை விதைத்து..
துணிவாக ஒரு முடிவினை எடுத்து
அவன் வீடு சென்றேன்..
மணியான மகன்களை
பெற்ற மணியாளின்
பாசமும் உள்ளத்தினை வருடி தந்தது..
வந்த நொடி சிந்திக்கவில்லை..
திருமணம் கூடிவரும் என்று..
கூடிய வந்தும் முழு நிம்மதி இல்லை
பெற்றோரின் அங்கிகரிப்பு இன்றி..
என்னிலை உணர்ந்தவன்
தவறவில்லை பெற்றோரின்
நன்மதிப்பைப் பெற.
{கவிதை சகோதரி பாத்திமா}