சிநிஉபி பதிவு 76 கருத்து....
அணுவரை துளைத்தவளை தொலைந்து போனவளை தேட...
‘கெட்டி மேளம்’ என்ற ஒலி முழங்கி நான்கு பேர்களின் வாழ்க்கையை புயலில் சிக்கிய சருகாய் மாற்றியது....
ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இதுவரை ஜான்சி & டேனி எதுக்காக அந்த மலை கோவில் வந்தார்கள் என்று சுதாவிடம் கூறவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது....
என் காதல் உண்மையானது. அதனால உன்னைத் தங்க கூண்டுல போட்டு பூட்ட மாட்டேன். என்ன ஒரு அழகான வரி பிண்ணிடிங்க ஷோபா பாராட்டுக்கள் ....
பின்னால் மூச்சு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க.. இந்த வரி படிக்கும் போதே எனக்கு அது ஜீவன் தான் என்று தோன்றியது அதேபோல் நடந்தது இதான் ஷோபா என்னைப் போன்ற சாதரண வாசகர்களை கூட உங்களை போல THINK பன்ற அளவிற்கு வளர்த்து விட்டது....
“குடேன்… குடுத்திட்டு சொல்லித் தான் பாரேன்…” என்ன சொல்வது No Words Sister you are beyond my expectation...
கண்ணன் நல்லவன் நினைத்தேன், அப்புறம் டேனி அவன் விட நல்லன்னு நினைத்தேன், கார்த்திக் பத்தி தெரிந்த பிறகு அவங்க இரண்டு பேரை விட Best னு நினைத்தேன் கடைசியாக அவங்க எல்லாவற்றையும் விட ஜீவன் தான் best னு நினைக்கும் அளவிற்கு அருமையான பாத்திர படைப்பு, தீபக்கை தவிர அனைவரையும் நல்லவர்களாக அறிமுகம் செய்தமைக்கு நன்றி...
இப்போது தீபக் திருமணத்தை அறிந்த பிறகு அவனையும் நல்லவனாக காட்டி விட்டீர்கள், என்ன ஒரு நேர்மறையான சிந்தனை அதற்கு முதலில் தலை வணங்குகிறேன்...
ப்ருந்தா கண்ணனை இன்னும் காதலிக்கிறாள் என்று தெரிந்தும் அவளை அதிலிருந்து மீட்டு தனை காதலிக்க வைக்கமுடியும் எனும் ஜீவன் இங்கு அவன் Confident என்று சொல்வதைக் காட்டிலும் அவன் காதல் மேல் இருக்கும் அபார நம்பிக்கை என்று சொன்னால் மட்டுமே சரியாக இருக்கும்...
ஜீவன் பனி காதல் செய்து கடப்பதே....
இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் தன் துணை வேறொரு வரை காதலித்தார் என அறிந்தும் முழுமையான மனதுடன் எந்த நேரத்திலும் அதை குத்திக் காட்டாமல் ஏற்றுக் கொள்ளும் மனம் இருக்கிறது....
உனக்கு உன்ன பிடிக்கரத விட, உனக்கு என்னைப் பிடிக்கும்..! என்ன ஒரு Confident ஜீவன்...
உங்களுக்கும் இப்படி தான் வலிச்சுதா?” இங்கு ப்ருந்தா score செய்கிறாள்.
காதல் செய்து காதல் செய்து கொள்ள போகிறேன் என்று ஒரு பாடல் வரிகள் உள்ளது அது போல ஜீவன் காதல் செய்து அவளையும் அவன் காதலிக்க வைக்கும் விதமாக கூறி அனைவரும் இவனை போல் துணை இல்லையே என ஏங்கும் அளவிற்கு ஜீவன் பாத்திர படைப்பு....
மனதிற்கு நிறைவான ஒரு அழகான பதிவு நன்றிகள் ஷோபா சகோதரி.....