Sasideera
Well-Known Member
ஹாய்! ஹலோ! பிரெண்ட்ஸ்!
கடலை உருண்டை சாப்பிடும் போது கண நேரத்தில் இந்த யோசனை உதயமானது... அது என்னன்னா டிவியில மட்டும்தான் குக் வித் கோமாளி நடத்துவாங்களா... நம்ம சைட்ல நடத்தி ஒரு புது சரித்திரம் படைப்போம்னு ஒரு முயற்சி....(ஹா ஹா) எல்லாருக்குமே குக்கிங் அனுபவம் எக்கச்சக்கமாக இருக்கும் அதில் நம்மளே கோமாளியா மாறிய சுவாரசியமான அனுபவங்கள் நிறைய இருக்கும்...
சமையல்னு செய்ய ஆரம்பிச்சு இந்த குழம்புக்கு இந்த பொருள் தான் போடணும், இந்த பதம் இருக்கணும், கலர் இப்படி இருக்கணும்னு நிறைய விஷயங்களில் நம்ம எதாவது சொதப்பி அசடு வழிய நின்ற தருணங்கள் நிறைய நமக்கு இருக்கும்ல... அதைத்தான் இங்க ஷேர் பண்ண போறோம்... அனைவரும் இதில் கலந்துக் கொண்டு உங்கள் அனுபவங்களை சொல்லவும்.... கொஞ்சம் ஜாலியா நேரம் போகும்... வாங்கோ வாங்கோ.... நீங்க சொல்ல போகும் களம் இதோ.... இதோ.... எழுத்துக்களால் எங்களை மயங்க வைத்த எழுத்தாளர்களே உங்களின் சமையல் அனுபவங்களை சொன்னால் இன்னும் சைட்டு களைகட்டும்...
என்னோட அனுபவம் சொல்றேன்...
அம்மா ஊருல இல்லாத சமயங்களில் தான் நம்ம அந்த பக்கம் எட்டிப்பார்க்கறது... தம்பி ஃபிரியா இருந்தா அதுகூட கிடையாது ஏன்னா அவனே நல்லா வெரைட்டியா சமைச்சு தருவான்...நான் நல்லா சாப்பிட்டு பார்த்துட்டு அதோட நிறை குறைகள் சொல்லுவேன்(வெஜ்) அதிகமா குறை சொல்றதுன்னு கூட சொல்லலாம்... அப்பவே என் பழைய ஆபீஸ் பிரெண்ட் உனக்கு செஃப் சுரேஷ்ன்னு நினைப்பு எப்ப பாரு கமெண்ட் சொல்லிக்கிட்டுன்னு சொல்லுவாங்க.... ரொம்ப மோசமா இல்லைன்னாலும் ஓரளவுக்கு வாயில வைக்கற அளவுக்கு இப்ப செய்ய தெரியும்...
ஆனா நான் சமைக்க ஆரம்பிச்சதுல இருந்து இப்பவரைக்கும் எனக்கு சரியா வராதது சாப்பாடு சரியா பதத்துக்கு வடிக்கறது... அம்மா செய்யும் போது பார்த்திருக்கேன் அவங்க சாப்பாடு அடுப்புல வைச்சுட்டு பக்கத்துல வேற வேலை செய்வாங்க ஆனா அது அவ்ளோ சமத்தா வேகும்... அதுவே பக்கத்துல தான் நின்னுட்டு இருப்பேன் ஆனாலும் புசுபுசுன்னு அப்படி பொங்கிவரும்.... அதை உள்ளே தள்ளிவிடறேன்னு கிண்டி கிண்டி கடையிசில பொங்கல் தான் கிடைக்கும்.... இப்பவரைக்கும் இதே தான்...
இது சாப்பாடு பொங்கலா மாறிய கதை...
அடுத்தது சப்பாதிக்குன்னு பிசைஞ்ச மாவுல வெந்தும் வேகாததை சுட்டு மத்தவங்களுக்கு போட்டுட்டு எனக்கு சுடறது சோம்பேறித்தனமான இருக்கும் போது பிசைஞ்ச மாவை கோதுமை தோசைக்கு உருமாற்றிய பெருமை என்னையே சேரும்... லைட்டா என் தம்பியையும் சேரும்.... இதை திரட்டி சாப்பிடறதுக்குள்ள பசி போயிடும்னு பிசைஞ்ச மாவுல கொஞ்சம் கொஞ்சமா தண்ணியை ஊத்தி ஊத்தி கடைசியில அன்னைக்கு தண்ணி குடிச்சுட்டு தான் தூங்கினேன்.... இப்படி சில பலது இருக்கு.... இதே மாதிரி உங்களோட அனுபவங்களை கேட்க ஆவலோடு இருக்கேன்....
கடலை உருண்டை சாப்பிடும் போது கண நேரத்தில் இந்த யோசனை உதயமானது... அது என்னன்னா டிவியில மட்டும்தான் குக் வித் கோமாளி நடத்துவாங்களா... நம்ம சைட்ல நடத்தி ஒரு புது சரித்திரம் படைப்போம்னு ஒரு முயற்சி....(ஹா ஹா) எல்லாருக்குமே குக்கிங் அனுபவம் எக்கச்சக்கமாக இருக்கும் அதில் நம்மளே கோமாளியா மாறிய சுவாரசியமான அனுபவங்கள் நிறைய இருக்கும்...
சமையல்னு செய்ய ஆரம்பிச்சு இந்த குழம்புக்கு இந்த பொருள் தான் போடணும், இந்த பதம் இருக்கணும், கலர் இப்படி இருக்கணும்னு நிறைய விஷயங்களில் நம்ம எதாவது சொதப்பி அசடு வழிய நின்ற தருணங்கள் நிறைய நமக்கு இருக்கும்ல... அதைத்தான் இங்க ஷேர் பண்ண போறோம்... அனைவரும் இதில் கலந்துக் கொண்டு உங்கள் அனுபவங்களை சொல்லவும்.... கொஞ்சம் ஜாலியா நேரம் போகும்... வாங்கோ வாங்கோ.... நீங்க சொல்ல போகும் களம் இதோ.... இதோ.... எழுத்துக்களால் எங்களை மயங்க வைத்த எழுத்தாளர்களே உங்களின் சமையல் அனுபவங்களை சொன்னால் இன்னும் சைட்டு களைகட்டும்...
என்னோட அனுபவம் சொல்றேன்...
அம்மா ஊருல இல்லாத சமயங்களில் தான் நம்ம அந்த பக்கம் எட்டிப்பார்க்கறது... தம்பி ஃபிரியா இருந்தா அதுகூட கிடையாது ஏன்னா அவனே நல்லா வெரைட்டியா சமைச்சு தருவான்...நான் நல்லா சாப்பிட்டு பார்த்துட்டு அதோட நிறை குறைகள் சொல்லுவேன்(வெஜ்) அதிகமா குறை சொல்றதுன்னு கூட சொல்லலாம்... அப்பவே என் பழைய ஆபீஸ் பிரெண்ட் உனக்கு செஃப் சுரேஷ்ன்னு நினைப்பு எப்ப பாரு கமெண்ட் சொல்லிக்கிட்டுன்னு சொல்லுவாங்க.... ரொம்ப மோசமா இல்லைன்னாலும் ஓரளவுக்கு வாயில வைக்கற அளவுக்கு இப்ப செய்ய தெரியும்...
ஆனா நான் சமைக்க ஆரம்பிச்சதுல இருந்து இப்பவரைக்கும் எனக்கு சரியா வராதது சாப்பாடு சரியா பதத்துக்கு வடிக்கறது... அம்மா செய்யும் போது பார்த்திருக்கேன் அவங்க சாப்பாடு அடுப்புல வைச்சுட்டு பக்கத்துல வேற வேலை செய்வாங்க ஆனா அது அவ்ளோ சமத்தா வேகும்... அதுவே பக்கத்துல தான் நின்னுட்டு இருப்பேன் ஆனாலும் புசுபுசுன்னு அப்படி பொங்கிவரும்.... அதை உள்ளே தள்ளிவிடறேன்னு கிண்டி கிண்டி கடையிசில பொங்கல் தான் கிடைக்கும்.... இப்பவரைக்கும் இதே தான்...
இது சாப்பாடு பொங்கலா மாறிய கதை...
அடுத்தது சப்பாதிக்குன்னு பிசைஞ்ச மாவுல வெந்தும் வேகாததை சுட்டு மத்தவங்களுக்கு போட்டுட்டு எனக்கு சுடறது சோம்பேறித்தனமான இருக்கும் போது பிசைஞ்ச மாவை கோதுமை தோசைக்கு உருமாற்றிய பெருமை என்னையே சேரும்... லைட்டா என் தம்பியையும் சேரும்.... இதை திரட்டி சாப்பிடறதுக்குள்ள பசி போயிடும்னு பிசைஞ்ச மாவுல கொஞ்சம் கொஞ்சமா தண்ணியை ஊத்தி ஊத்தி கடைசியில அன்னைக்கு தண்ணி குடிச்சுட்டு தான் தூங்கினேன்.... இப்படி சில பலது இருக்கு.... இதே மாதிரி உங்களோட அனுபவங்களை கேட்க ஆவலோடு இருக்கேன்....