கொங்கு தமிழ்
தமிழ் மக்கள் பேசும் தமிழ் மொழியிலேயே ஒவ்வொரு விதமான ஸ்டைல் உண்டு. ஒவ்வொருவரும் அவரவர் இடத்திற்கேட்ப மண்டல பாஷைகளை அள்ளி வீசுவார்கள். அதில் கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் கோவை மக்களின் சாதாரண பேச்சுகளிலும் கூட மரியாதை மணம் வீசும். மரியாதை மட்டுமா!! அன்பிற்கும் குறைவிருக்காது.
“ஏங் கண்ணு இப்போ பஸ்ஸு வருமுங்ளா?!!” என்று முன்பின் தெரியாதவரிடம் கேட்கும் கேள்வியிலேயே “நீங்க கோவை ஆஹ்!!” என எதிரிலிருப்பவர் விழுந்துவிடுவார்.
வீட்டிற்கு வரும் சிரியவர்களிடம் கூட "எப்போ வந்தீங்க? என்று கேட்பதே வழக்கம்.
“ஏனுங் அப்புச்சி” “ஏனுங் ஆத்தா” என்று பெரியவர்களை அழைத்தால்
“ஏனுங் அம்மணி” “ஏங் கண்ணு” “ஏஞ்சாமி” என்று தான் பதிலுக்கு திருப்பி அழைப்பார்கள்.
“ஒன்னா போலாம்” என்பது வெறும் வார்த்தை “ஒட்டுக்கா போலாம்” எங்கள் எமோஷன்.
அரிசியும் பருப்பும் சாதம் மணக்க அதனோடு “ஒரு வாய் உண்டுட்டு போ கண்ணு” என்ற அம்முச்சியின் வார்த்தைகளில் அன்பும் சேர.. சுவைத்து பார்த்தவர்களுக்கு தான் அதன் சுவை தெரியும். மறக்கக்கூடிய ஒன்றா அது!!
பெரியவர்களோடு இருக்கும் போது அவர்கள் பேசுவதை உன்னிப்பாய் கவனித்தால் தெரியும்,
அவசரமாய் செல்வதை குறிக்க “வேகு வேகுன்னு எங்க கண்ணு போற??” என்பார்கள்.
குளித்து செல்ல “தண்ணி ஊத்திட்டு போ”... தள்ளிச் சென்று அமர “அக்கட்டால போய் உக்காரு” என்பர்.. அவர்கள் பேசுவதை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
திட்டுவாங்குவது கூட சுகம் தான்
சிறியவர்கள் ஒரு இடத்தில் இல்லாது ஓடிக்கொண்டிருந்தால் “பொட்டாட்டம் உக்கார்” (அமைதியாக) என்பர்.
“கொஞ்சமாவது வருத்தமானம் (குடும்ப சூழல்) தெரியுதா உனக்கு”
கொஞ்சம் டீப்பாய் சென்றால் “ஆகாவழி” ஒன்றுக்கும் உதவாத என்ற பொருள்.
வட்டார மொழி வழக்கு தான் ஒவ்வொரு ஊருக்கு அழகு சேர்ப்பதே..
தமிழ் மக்கள் பேசும் தமிழ் மொழியிலேயே ஒவ்வொரு விதமான ஸ்டைல் உண்டு. ஒவ்வொருவரும் அவரவர் இடத்திற்கேட்ப மண்டல பாஷைகளை அள்ளி வீசுவார்கள். அதில் கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் கோவை மக்களின் சாதாரண பேச்சுகளிலும் கூட மரியாதை மணம் வீசும். மரியாதை மட்டுமா!! அன்பிற்கும் குறைவிருக்காது.
“ஏங் கண்ணு இப்போ பஸ்ஸு வருமுங்ளா?!!” என்று முன்பின் தெரியாதவரிடம் கேட்கும் கேள்வியிலேயே “நீங்க கோவை ஆஹ்!!” என எதிரிலிருப்பவர் விழுந்துவிடுவார்.
வீட்டிற்கு வரும் சிரியவர்களிடம் கூட "எப்போ வந்தீங்க? என்று கேட்பதே வழக்கம்.
“ஏனுங் அப்புச்சி” “ஏனுங் ஆத்தா” என்று பெரியவர்களை அழைத்தால்
“ஏனுங் அம்மணி” “ஏங் கண்ணு” “ஏஞ்சாமி” என்று தான் பதிலுக்கு திருப்பி அழைப்பார்கள்.
“ஒன்னா போலாம்” என்பது வெறும் வார்த்தை “ஒட்டுக்கா போலாம்” எங்கள் எமோஷன்.
அரிசியும் பருப்பும் சாதம் மணக்க அதனோடு “ஒரு வாய் உண்டுட்டு போ கண்ணு” என்ற அம்முச்சியின் வார்த்தைகளில் அன்பும் சேர.. சுவைத்து பார்த்தவர்களுக்கு தான் அதன் சுவை தெரியும். மறக்கக்கூடிய ஒன்றா அது!!
பெரியவர்களோடு இருக்கும் போது அவர்கள் பேசுவதை உன்னிப்பாய் கவனித்தால் தெரியும்,
அவசரமாய் செல்வதை குறிக்க “வேகு வேகுன்னு எங்க கண்ணு போற??” என்பார்கள்.
குளித்து செல்ல “தண்ணி ஊத்திட்டு போ”... தள்ளிச் சென்று அமர “அக்கட்டால போய் உக்காரு” என்பர்.. அவர்கள் பேசுவதை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
திட்டுவாங்குவது கூட சுகம் தான்
சிறியவர்கள் ஒரு இடத்தில் இல்லாது ஓடிக்கொண்டிருந்தால் “பொட்டாட்டம் உக்கார்” (அமைதியாக) என்பர்.
“கொஞ்சமாவது வருத்தமானம் (குடும்ப சூழல்) தெரியுதா உனக்கு”
கொஞ்சம் டீப்பாய் சென்றால் “ஆகாவழி” ஒன்றுக்கும் உதவாத என்ற பொருள்.
வட்டார மொழி வழக்கு தான் ஒவ்வொரு ஊருக்கு அழகு சேர்ப்பதே..
Last edited: