வணக்கம் மக்களை
உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லிட்டு போகலாம்ன்னு தான் வந்திருக்கேன். அதாவது இனி நான் எபி போட தாமதம் செஞ்சு உங்களை சோதிக்க விரும்பலை, இனிய நான் வருவதான சோதனையை (எழுதி) முடிச்சிட்டு வந்து தான் உங்களை சோதிக்க வருவேன்.
என்னால் முன்ன மாதிரி எழுத முடியலை, ஆபிஸ் வேலை வீட்டு வேலை குழந்தைங்கன்னு ரொம்ப டைட்டாக போகுது, எழுத கிடைக்கிற நேரம் ரொம்பவே குறைவா தான் கிடைக்குது, வேலை பளுனால எழுத முடியாம உங்களை எல்லாம் ரொம்பவே காக்க வைச்சுட்டேன்...
நேரடி புத்தகமா வெளிவந்த என்னோட கதை கோள்களின் பதிவு தாமதமில்லாது வரும், இதுக்கு இடையில புதுக்கதை எழுதி முடிச்சிட்டா வந்திருந்தேன், இல்லையோ எப்போ முடிக்கறனோ அப்போ தான் பதிவுகளோட வருவேன்
உங்கள் தொடர்ந்த கருத்துக்களுக்கும் காத்திருப்புகும் அன்புக்கும் மிக்க நன்றி
சவீதா முருகேசன்