ஹாய் க்யூட்டிபைஸ் எல்லா கதைக்கும் ஸ்பெஷல் epi போடுவேன் அதே மாதிரி இந்த கதையோட ஸ்பெஷல்.
பொதுவா எல்லாக்கதையோட நாயகன் மற்றும் நாயகி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிப்பாங்க, இல்லையா ரெண்டு பேர்ல ஒருத்தங்க லவ் பண்ணுவாங்க அப்படியும் இல்லையா எங்கயோ பார்த்து ஆச பட்டிருப்பாங்க, இல்ல சின்ன வயசுல சந்திச்சு இருப்பாங்க, இதுல ஏதாவது ஒன்னு நடந்து அவங்க நியாபகத்துல இருக்கும். வாசன் வாசுகிக்கிடைல அப்படி ஏதும் சுவாரசியமான சம்பவங்கள் எதுவும் நடக்கல, அதுதான் இந்த கதையோட ஸ்பெஷல்.
கல்யாணம் பண்ணா பொண்ணுகளுக்கு மாமியாரால பிரச்சினை வரலாம், நாத்தனாரால் பிரச்சினை வரலாம் நாத்தனாரோட மாமியாராலையும் பிரச்சினை வரும்னு சொல்லத்தான் பத்மாவும், புஷ்பாவும். {எதோ ஒரு வித்தியாசம் பண்ணணுமே!}
வாசன் வாசுகியை அடிச்சிட்டான் என்றதும் அவனை கொல்லுங்க என்ற லெவலுக்கு இறங்கிட்டீங்க... ஒரு பக்கத்த பார்த்து நாம முடிவெடுக்குறோம் அது தவறு... அத ஒழுங்கா சொலிட்டேனா? புரிஞ்சிகிட்டீங்களா?
நித்யா அண்ட் வாசன் நித்யா கருகலைந்த சம்பவம் ஒரு உண்மையான சம்பவம் அண்ணனும் தம்பியும் தன் சகோதரிக்கு help பண்ண சம்பவம் கதைக்கு என்ன வேணுமோ அத மட்டும் எழுதிட்டேன்.
பூர்ணா கேரக்டர் கூட நான் ரியல் லைப்ல பார்த்த ஒருதங்கத்தான் ஆனா அவங்க அப்படி ஒன்னும் மோசமானவங்க இல்லை. அதுக்கு காரணம் 1930s ல பிறந்திருப்பாங்க 12 or 13 கல்யாணம் ஆகி இருக்கும் அப்போ அவங்க மனநிலை எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பார்த்தா என்னால அவங்கள தப்பு சொல்ல முடியல. இப்போ அவங்க உயிரோட இல்ல. இருக்கும் வரைக்கும் நல்ல வாழ்ந்துட்டுத்தான் போய் சேர்ந்தாங்க.
மத்த எல்லா விஷயமும் கற்பனைதான்.
Thanks for your love and support friends