வாசனின் வாழ்க்கையில் வந்த வசந்தம் வாசுகி
அப்போ வாசன் வாசுகியின் வாழ்க்கையில் என்னவா வந்தான்?
யார் வீட்டில் ரேடியோ! பாடிக்கொண்டிருந்ததோ! இந்த ஆறு மாதமாக இந்த வீட்டில் காலையில் நடைபெறும் பூஜை இன்று இல்லை. பூஜை செய்ய பெரிய பூஜையறை ஒன்றும் இந்த வீட்டில் இல்லையென்றாலும் வாசலில் ஒரு மேசையை போட்டு அதில் சுவாமி படங்களை வைத்து, மாலை சாத்தி, விளக்கேத்தி தினமும் பூஜை செய்து வருவாள் வாசுகி.
தூங்கும் மனைவியையே! கண்சிமிட்டாமல் பார்த்திருந்தான் வாசன். அவன் அடித்த அடியில் அவள் கன்னம் வேறு வீங்கிப் போய் இருக்க, கையை தலையணையாய் வைத்து அசந்து தூங்கிக்கொண்டிருப்பவளை எழுப்ப மனம் வரவில்லை. திருமணமாகி இந்த ஆறு மாதத்தில் மரியாதைக் குறைவாக எந்த பேச்சும் பேசியதில்லை. நடந்துகொண்டதுமில்லை. அப்படி இருக்க, ஏன் அப்படி கூறினாள்? அமைதியாக நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் தன்னையே! கோபத்துக்கு உள்ளாக்கும் அளவுக்கு இவள் பேசி இருக்கக் கூடாது.
“அங்கே நித்யாவின் வாழ்க்கை கேள்விக் குறியாகிக் கொண்டிருக்க, இவள் சத்யாவிடம் மெனக்கிட்டு போனை போட்டு இதை சொல்லியிருக்கக் கூடாது. இந்த பெண்களுக்கு அப்படி என்ன புறணி பேசுவதில் இன்பமோ! தெரியவில்லை"
ஒட்டுமொத்த பெண்களையும் சாடிக்கொண்டிருந்தவனின் மனசாட்ச்சியோ! "நீ பாத்தியா? உன் பொண்டாட்டி பக்கத்து வீட்டிலாவது நின்னு பேசுறத நீ பாத்தியா?" என்று அவனை வசை பாட
"நின்னு பேச என்ன இருக்கு அதான் வீட்டு அழைத்து பேசட்டும் என்று கல்யாணமான கையோட கைல ஒரு போன வாங்கிக் கொடுத்தேனே! எனக்கிருக்கிறது! ரெண்டு தங்கச்சி அவங்க கூடயும் நல்ல விதமா பலகுமான்னுதானே! சொன்னேன். ஒருத்தியப்பத்தி இன்னொருத்திகிட்ட பேசி இருக்கா" பொருமினான் வாசன்.
அவன் அடித்த அடியில் முகம் வீங்கி அவன் கைத்தடம் கன்னத்தில் நன்றாகவே! பதிந்திருக்க, "யாரு இப்போ இவருக்கு மதியத்துக்கு கடைக்கு சாப்பாடு கொண்டு போவாங்கலாம். நான் கொண்டு போக மாட்டேன்" முறுக்கிக் கொண்டவள் இருவரும் அருந்த காபி டம்ளர்களை கொண்டு போய் மேசையில் சத்தம் வர வைத்து விட்டு வந்து மீண்டு வேலையை கவனிக்கலானாள்.
"சரி சரி இன்னைக்கி சாப்பாடு எடுத்து வர வேணாம். நான் கடையிலையே! ஏதாச்சும் சாப்பிடுகிறேன். நான் கடைக்கு போயிட்டு வாறன்" வாசன் சுவத்தை பாத்து கூறியவாறு கைகழுவியவன் வாசலுக்கு விரைந்திருக்க,,
வாசுகிக்கு அப்படியொரு கோவம். "இவருக்கு ஆக்கிப்போடவும், சாப்பாடு கொண்டு போகவும்தான் நான் இங்க இருக்கேனா?"
வாசுகியின் உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது. "அவர் எப்படி என்ன அடிக்கலாம். அதுவும் வீட்டுக்கு வந்ததும் வராததுமா? என்ன நடந்தது? நீ அப்படி பேசினியான்னு ஒரு வார்த்த கேக்கமாட்டாரா? இவரா முடிவு பண்ணிக்குவாரா? இன்னக்கி மாதிரி தனியாத்தான் தூங்கணும் அப்போதான் இந்த மனுசனுக்கு புரியும்" தன்னை அடித்ததில் கணவனை படுக்கையிலிருந்து விலக்கி வைப்பதென்ற முடிவோடு இருந்தாள் வாசுகி.
இது ஒரு கணவன் மனைவி குடும்ப கதைதான். இவங்களுக்குள்ள பிரச்சினையா? குடும்பத்தால் இவங்களுக்கு பிரச்சினையா? இல்ல ஏற்கனவே! குடும்பத்துல ஏகப்பட்ட பிரச்சினையா? கதையை படிச்சி தெரிஞ்சிக்கலாம்.
செவ்வானில் ஒரு முழு நிலவு epilogue இன்னும் ரெண்டு நாள்ல தந்துடுறேன்.
அப்போ வாசன் வாசுகியின் வாழ்க்கையில் என்னவா வந்தான்?
யார் வீட்டில் ரேடியோ! பாடிக்கொண்டிருந்ததோ! இந்த ஆறு மாதமாக இந்த வீட்டில் காலையில் நடைபெறும் பூஜை இன்று இல்லை. பூஜை செய்ய பெரிய பூஜையறை ஒன்றும் இந்த வீட்டில் இல்லையென்றாலும் வாசலில் ஒரு மேசையை போட்டு அதில் சுவாமி படங்களை வைத்து, மாலை சாத்தி, விளக்கேத்தி தினமும் பூஜை செய்து வருவாள் வாசுகி.
தூங்கும் மனைவியையே! கண்சிமிட்டாமல் பார்த்திருந்தான் வாசன். அவன் அடித்த அடியில் அவள் கன்னம் வேறு வீங்கிப் போய் இருக்க, கையை தலையணையாய் வைத்து அசந்து தூங்கிக்கொண்டிருப்பவளை எழுப்ப மனம் வரவில்லை. திருமணமாகி இந்த ஆறு மாதத்தில் மரியாதைக் குறைவாக எந்த பேச்சும் பேசியதில்லை. நடந்துகொண்டதுமில்லை. அப்படி இருக்க, ஏன் அப்படி கூறினாள்? அமைதியாக நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் தன்னையே! கோபத்துக்கு உள்ளாக்கும் அளவுக்கு இவள் பேசி இருக்கக் கூடாது.
“அங்கே நித்யாவின் வாழ்க்கை கேள்விக் குறியாகிக் கொண்டிருக்க, இவள் சத்யாவிடம் மெனக்கிட்டு போனை போட்டு இதை சொல்லியிருக்கக் கூடாது. இந்த பெண்களுக்கு அப்படி என்ன புறணி பேசுவதில் இன்பமோ! தெரியவில்லை"
ஒட்டுமொத்த பெண்களையும் சாடிக்கொண்டிருந்தவனின் மனசாட்ச்சியோ! "நீ பாத்தியா? உன் பொண்டாட்டி பக்கத்து வீட்டிலாவது நின்னு பேசுறத நீ பாத்தியா?" என்று அவனை வசை பாட
"நின்னு பேச என்ன இருக்கு அதான் வீட்டு அழைத்து பேசட்டும் என்று கல்யாணமான கையோட கைல ஒரு போன வாங்கிக் கொடுத்தேனே! எனக்கிருக்கிறது! ரெண்டு தங்கச்சி அவங்க கூடயும் நல்ல விதமா பலகுமான்னுதானே! சொன்னேன். ஒருத்தியப்பத்தி இன்னொருத்திகிட்ட பேசி இருக்கா" பொருமினான் வாசன்.
அவன் அடித்த அடியில் முகம் வீங்கி அவன் கைத்தடம் கன்னத்தில் நன்றாகவே! பதிந்திருக்க, "யாரு இப்போ இவருக்கு மதியத்துக்கு கடைக்கு சாப்பாடு கொண்டு போவாங்கலாம். நான் கொண்டு போக மாட்டேன்" முறுக்கிக் கொண்டவள் இருவரும் அருந்த காபி டம்ளர்களை கொண்டு போய் மேசையில் சத்தம் வர வைத்து விட்டு வந்து மீண்டு வேலையை கவனிக்கலானாள்.
"சரி சரி இன்னைக்கி சாப்பாடு எடுத்து வர வேணாம். நான் கடையிலையே! ஏதாச்சும் சாப்பிடுகிறேன். நான் கடைக்கு போயிட்டு வாறன்" வாசன் சுவத்தை பாத்து கூறியவாறு கைகழுவியவன் வாசலுக்கு விரைந்திருக்க,,
வாசுகிக்கு அப்படியொரு கோவம். "இவருக்கு ஆக்கிப்போடவும், சாப்பாடு கொண்டு போகவும்தான் நான் இங்க இருக்கேனா?"
வாசுகியின் உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது. "அவர் எப்படி என்ன அடிக்கலாம். அதுவும் வீட்டுக்கு வந்ததும் வராததுமா? என்ன நடந்தது? நீ அப்படி பேசினியான்னு ஒரு வார்த்த கேக்கமாட்டாரா? இவரா முடிவு பண்ணிக்குவாரா? இன்னக்கி மாதிரி தனியாத்தான் தூங்கணும் அப்போதான் இந்த மனுசனுக்கு புரியும்" தன்னை அடித்ததில் கணவனை படுக்கையிலிருந்து விலக்கி வைப்பதென்ற முடிவோடு இருந்தாள் வாசுகி.
இது ஒரு கணவன் மனைவி குடும்ப கதைதான். இவங்களுக்குள்ள பிரச்சினையா? குடும்பத்தால் இவங்களுக்கு பிரச்சினையா? இல்ல ஏற்கனவே! குடும்பத்துல ஏகப்பட்ட பிரச்சினையா? கதையை படிச்சி தெரிஞ்சிக்கலாம்.
செவ்வானில் ஒரு முழு நிலவு epilogue இன்னும் ரெண்டு நாள்ல தந்துடுறேன்.