சாந்தி கவிதா
Well-Known Member
Hii friends..,
A new tamil kavidhai of me. Read and tell me whether ok or bad, with your likes and comments..
வல்லமை தாராயோ!
வல்லமை தாராயோ
வலிமிகு உலகிலே!
அர்த்தமின்றி நர்த்தனம் ஆடிடும் மானுடம்,
நர்த்தனமே அர்த்தமற்றது என உணரும் வரை
வல்லமை தாராயோ!
எளியோரை வலியோர் ஏய்த்திடும் காட்சியை கண்டு,
தனலாய் தகிக்கும் மனம் சாந்தி அடையும் வரை
வல்லமை தாராயோ!
எள்ளி நகைப்போரின் முன்னே எதிர்த்து நின்று,
அவர்களே வியக்குமாறு ஜெயிக்கும் வரை
வல்லமை தாராயோ!
மடிவார் என்று எண்ணி வீழ்த்த முயலுவோர் முன்னே ,
வீறுகொண்டு எழுந்து மடியேன் என கூறும் வரை
வல்லமை தாராயோ!
வாழ்க்கை எனும் பரந்த வனத்தில் வாழும் நாட்களில்,
முயலெது சிறுநரியெது என
அடையாளம் காணும் வரை
வல்லமை தாராயோ!!!!
- சாந்தி கவிதா